02 ஆகஸ்ட் 2016

திருவள்ளுவர் சமணரா? திருக்குறள் சமண நூலா?!

”ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” - முதுமொழி

பல்லுக்கு உறுதி தரக்கூடியவைகளில், ஆலமர குச்சியும், வேப்பமர குச்சியும் எந்தளவுக்கு உண்மையோ, அதுபோலவே நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதியென சொல்லிருக்கிறார்கள். இங்கே ”நாலும் இரண்டும்” என்பதில், நாலும் என்பது நான்கு அடிகளை கொண்ட நாலாடியாரும், இரண்டும் என்பது இரண்டு அடிகளை கொண்ட திருக்குறளும் குறிப்பிடப்படுகிறது. மேலும், நாலடியாருக்கும் திருக்குறளுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதை என்னால் முடிந்தளவுக்கு சிறிய ஒப்பீடு செய்திருக்கிறேன். அவை;

01. இந்த இரண்டுமே பதினென் கீழ் கணக்கு நூல்களில் இடம்பெற்று இருக்கின்றன.

02. இந்த இரண்டிலுமே, பாடல்களெல்லாம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

03. இந்த இரண்டு அறநூல்களுமே, அறத்துப்பால் - பொருட்பால் - இன்பத்து பால் என்ற மூன்று பெரும்பிரிவுகளை கொண்டுள்ளன.

04. நாலடியாரில், அறத்துப்பால் - 13 அதிகாரங்களும், பொருட்பால் - 24 அதிகாரங்களும், இன்பத்துப்பால் - 3 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 40 அதிகாரங்களை கொண்டுள்ளது.

05. திருக்குறளில், அறத்துப்பால் - 38 அதிகாரங்களும், பொருட்பால் - 70 அதிகாரங்களும், இன்பத்து பால் - 25 அதிகாரங்களுமென ஆகமொத்தம் 133 அதிகாரங்களை கொண்டுள்ளது.

06. நாலடியார், மொத்தமாக 40 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 400 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. திருக்குறள், 133 அதிகாரங்களை கொண்டது; அதிகாரத்திற்கு 10 பாடல்கள் என்ற வீதத்தில் 1330 பாடல்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

07. இந்த இரண்டிலுமே, பொருளுக்கு அதிகமான பாடல்களும், அதற்கடுத்து அறத்திற்கு ஓரளவு மிதமான பாடல்களும், மூன்றாவதாக இன்பத்திற்கு குறைவான பாடல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

08. இதிலுள்ள, நாலடியார் என்ற நூலை இயற்றியது சமண முனிவர்கள் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. அதுபோலவே திருக்குறளை இயற்றியதும் சமண மதத்தை சார்ந்த திருவள்ளுவர் என்று அழைக்கப்படும் ஒரு சமணத்துறவி தான் என்பது என் அனுமானம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக