பார்பனியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்பனியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 மே 2015

ஐ.ஐ.டி. அம்பேத்கார் பெரியார் வாசகர் வட்டத்திற்கு பின்னால்...



ஐ.ஐ.டி.,யில் அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருப்பது மிகவும் கேவலமான அடக்குமுறை. எது 'தேச விரோதம்' என்பதை யார் வரையறுப்பது? பார்பன - பாசிச - ஹிட்லரிய - ஹிந்துத்வ சித்தாந்தங்களை எதிர்க்கும் வார்ணாசிரம அடிப்படையில் அடையாளப்படும் எளிய கூட்டத்தையெல்லாம், தேச துரோகியென சொல்லி விடுவது தான் இங்கே எளிதாக போய்விட்டது. மேலும், பார்பன சித்தாந்தங்களை ஹிந்து என்று பொது புத்தியில் ஓர் அணி திணிப்பதும், அதற்கு எதிராக இன்னொரு அணி பார்பன எதிர்ப்பு என்பதை பார்பனர்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த ஹிந்துக்களையே எதிர்ப்பதும் என இங்கே நடக்கும் பெரும் குழப்பங்களுக்கு இந்த புரிதல் இல்லாத நிலையே காரணமாக அமைந்து விட்டது.

படிப்பு மட்டுமன்றி அரசியலை பேசும் உரிமையும் தகுதியும் மாணவ சமுதாயத்திற்கு உண்டு. அவர்கள் தான் வருங்கால அரசியலை கட்டியெழுப்ப கூடியவர்கள். அப்படிபட்ட அந்த மாணவர்களின் கூட்டமைப்பிற்காக எந்த பெயரிலும் இணையலாம். அது தனி மனித உரிமை. அந்த அமைப்பின் பெயரால் ஒரு கருத்தை சொல்வதோ, பரப்புவதோ முற்றிலும் சட்டத்திட்டத்திற்கு உட்பட்ட ஒன்றே. மேலும், "தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்து பேசுவது கூட தவறில்லை!"யென ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ள நிலையில், நரேந்திர மோடியின் தவறான செயல்திட்டங்களை விமர்சிப்பதும் கூட தனி மனித கருத்து/பேச்சுரிமையே. நரேந்திரமோடியோ, பா.ஜ.க.வோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. தவறை சுட்டிக்காடும் உரிமையானது, ஹிந்திய குடிமகனாக வர்ணாசிரம தமிழனுக்கும் உண்டு என்பதை பார்பன சித்தாந்தவாதிகள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஐ.ஐ.டி.யிலும் இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டம் தான் நடந்ததுள்ளது. ஆனால். முன்னறிவிப்போ, எச்சரிக்கையோ இல்லாமல் நரேந்திர மோடிக்கு ஆதரவாக விழிப்புணர்வு கூட்டத்தை ரகசியமாக இல்லாமல் பொது அரங்கில் நடத்திய காரணத்திற்காகவே, அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்திருக்கிறது பார்பன சித்தாந்த கூட்டம்.

அது தொடர்பாக இன்றைய தந்திடிவி விவாதத்தில் கலந்து கொண்ட மாணவர் அமைப்பு சார்பாக பங்கேற்ற 'மருது' மிகத்தெளிவாக கருத்துகளை பகிர்ந்தார். மேலும் அவர் சொன்ன, "ஐ.ஐ.டி., என்றாலே அது, ஐயர் ஐயங்கார் இன்ஸ்ட்டியூட்" என்ற ஒற்றை வரிதான் என்னை மிகவும் கவர்ந்தது. மருது என்ற அவரின் பெயரிலேயே தெரிந்து விட்டது அவரது அரசியல் தெளிவும், போராட்ட குணமும்! மருது போன்ற இளம் அரசியல்வாதிகள் தான் இனி காலத்தின் தேவை. வாழ்த்துகள் மருது!

- இரா.ச.இமலாதித்தன்

02 அக்டோபர் 2014

ஜீவா - நேர்மையான படம்!

'ஜீவா' படத்தை இன்னைக்கு தான் பார்த்தேன். படம் சூப்பர். இத்தனை வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பார்பனியத்தை தோலுரித்து காட்டிருக்கும் இயக்குனர் சுசீந்திரன் மிகச்சிறந்த கதாசிரியர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார். காதலும் - நட்பும் - கிரிக்கெட்டும் - கூடவே ஆழமான கருத்தையும் கதையோடு இணைத்திருக்கும் விதம் அருமை. வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்று போவது இந்தியாவில் மட்டும் தான்! என்பதை க்ளைமேக்ஸ் வசனத்தில் பஞ்ச் வைத்திருக்கின்றார். படத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பின் தலைவராக வரும் பார்த்தசாரதியை பார்க்கும் போது இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றார். மேலும் பார்த்தசாரதி & சகாக்கள் அனைவரும் நெற்றியில் நாமத்தோடு காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும், ’உங்க ஆளுக’ என பார்பனரை குறிவைத்து சொல்லும் வசனங்களிலும், ஸ்ரீராம்-சேஷபாலன் என பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் சில விசயத்தை நமக்கு புரிய வைத்திருக்கின்றார் சுசீந்திரன். இந்த படத்திற்கு பிறகு ஐ.பி.எல் மீதும், ஐ.பி.எல்.லுக்கு முன்னோடியான ஐ.சி.எல்.லை உருவாக்கிய கபில்தேவ் மீதும் ஒருபடி மரியாதை என்னுள் கூடி இருகின்றது. குறிப்பாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பற்றியும், இந்திய கிரிகெட் அணி தேர்வாளர்களின் பார்பன வெறி பற்றியும் உண்மையை மிக தைரியமாக சொல்லியுள்ள ஒரு தரமான படம் இந்த ’ஜீவா’! கண்டிப்பா பாருங்க; உங்க மனசையும் தொடும்.

- இரா.ச.இமலாதித்தன்

09 டிசம்பர் 2013

சாதிய ஊடகமும் எதிவிர்வினையும்!

பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த கொலைகார கும்பலில் ஒருவன் கொல்லப்பட்டதற்காக, அரசாங்கம் சார்பில் அவசரகதியில் ஐந்து லட்சங்கள் கொடுப்பதன் உள்நோக்கம் என்ன? அன்றே தீர்க்கதர்சி திரு. சு.ப.வீரபாண்டியன் சொன்னது போல இது பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை தானே? தமிழ்நாட்டில் சராசரியாக மாதம் 20 எதிர்வினைகள் நடந்துகொண்டே தான் இருக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒவ்வொரு எதிர்வினைக்கும் லட்சகணக்கில் அரசாங்க பணத்தையா வீணடிக்க முடியும்? குடிமக்களின் வரிப்பணமான அரசாங்க பணத்தை எடுத்து, இந்தமாதிரியான எதிர்வினைக்காக பல லட்சங்கள் செலவழிக்க காத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஐந்து லட்சங்கள் கொடுத்து உயிர் பறிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாயைத்தான் அடைக்கலாம். ஆனால், அந்த உயிரிழப்பு காரணம் எதுவென்பதை ஆராய்ந்தால்...

ஏன் அந்த உயிர் பறிக்கப்பட்டது?
எதனால் இந்த எதிர்வினை?
சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் எப்படி இருக்கிறது?
144 தடையால் மட்டும் எல்லாம் சரியாகி விடுமா?
அரசியல் எதிரிகளை ஒடுக்க மட்டும்தான் காவல்துறை இருக்கிறதா?

இப்படி பல கேள்விகள் எழும்.

#எதிர்வினை

 ---------------------------------------------------------------------------------------------------

அஞ்சு லட்சம் பத்தாது. அஞ்சு கோடி கொடுங்க!ன்னு உண்மை அறியும் குழுன்னு ஒரு சாதிவெறி கும்பல் கூப்பாடு போடும்ன்னு எதிர்பார்க்கிறேன்.

ஏய் யாரங்கே, மதுரைக்கு ஒரு 144 பார்சல்!

#எதிர்வினை


 
---------------------------------------------------------------------------------------------------

இன்று பெட்ரோல் குண்டு வீச்சில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா உத்தரவு
- செய்தி

போன வருடம் பெட்ரோல் குண்டு வீசினப்போ, உங்க சட்டம் எவன் கூட ஓடி போனுச்சு?

#எதிர்வினை


---------------------------------------------------------------------------------------------------

ஏழுக்கு ஒன்று ஈடாக முடியாது.

சற்று ஆறுதலோடும் - நிறைய நம்பிக்கையோடும் காத்திருப்பேன்...

#எதிர்வினை
 
---------------------------------------------------------------------------------------------------

சிறையில் இல்லாத நாட்கள் தவிர மற்ற வருடங்களில் நடைப்பெற்ற அனைத்து தேவர்ஜெயந்தியை தரிசிக்க பசும்பொன் வருவேன்னு வாய்கிழிய அடிக்கடி பேசும் திரு வைகோவிற்கு, 2012ல் தேவர்ஜெயந்தியின் போது பெட்ரோல் குண்டுவீசியும், கல்லால் அடித்தும், ஒளிந்திருந்து தாக்கி பசும்பொன்னுக்கு சென்ற அப்பாவி இளைஞர்களை கொன்ற தலித் பயங்காரவாதிகளை கண்டித்து வாய் உள்பட எந்தவொரு துவாரத்தையும் திறக்காத நீங்கள், இப்போது மட்டும் திறப்பதன் உள்நோக்கம் என்ன? ஒருநாள் கலிங்கப்பட்டிக்கும் இதே பாதிப்பு அவர்களால் வரலாம். அப்போது துணை நிற்க நாங்கள் மட்டும்தான் இருப்போம். ஏனெனில், பசும்பொன் தேவரை வணங்கும் அனைவருக்கும் நாங்கள் அரணாய் இருப்போம். துரோகம் செய்ய வைகோ அல்ல நாங்கள்!

--------------------------------------------------------------------------------------------------- 
நாமயெல்லாம் ஒன்றே!ன்னு சொல்லிக்கிட்டே, கூட இருக்கிறவனை அழிக்க பணத்தையும் - நேரத்தையும் செலவழித்து உள்ளடி வேலைகள் செய்யும் துரோகிகள், ஊடகத்துறையை கைப்பற்றும் முயற்சியில் இறங்கலாம்.

ஏனென்றால் யாரை வீழ்த்தவும் ஊடக பலம் தேவை.


--------------------------------------------------------------------------------------------------- 
பரம எதிரிகளான தலித்தியமும் - பார்பனீயமும் ஊடகத்துறையில் ஒன்று சேர்ந்து நம்மை அழிக்க போராடிக் கொண்டிருக்கின்றன.

களம் காண வலுவான ஓர் ஊடகம் நமக்கில்லை
 
 


- இரா.ச.இமலாதித்தன்