02 அக்டோபர் 2014

ஜீவா - நேர்மையான படம்!

'ஜீவா' படத்தை இன்னைக்கு தான் பார்த்தேன். படம் சூப்பர். இத்தனை வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பார்பனியத்தை தோலுரித்து காட்டிருக்கும் இயக்குனர் சுசீந்திரன் மிகச்சிறந்த கதாசிரியர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார். காதலும் - நட்பும் - கிரிக்கெட்டும் - கூடவே ஆழமான கருத்தையும் கதையோடு இணைத்திருக்கும் விதம் அருமை. வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்று போவது இந்தியாவில் மட்டும் தான்! என்பதை க்ளைமேக்ஸ் வசனத்தில் பஞ்ச் வைத்திருக்கின்றார். படத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பின் தலைவராக வரும் பார்த்தசாரதியை பார்க்கும் போது இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றார். மேலும் பார்த்தசாரதி & சகாக்கள் அனைவரும் நெற்றியில் நாமத்தோடு காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும், ’உங்க ஆளுக’ என பார்பனரை குறிவைத்து சொல்லும் வசனங்களிலும், ஸ்ரீராம்-சேஷபாலன் என பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் சில விசயத்தை நமக்கு புரிய வைத்திருக்கின்றார் சுசீந்திரன். இந்த படத்திற்கு பிறகு ஐ.பி.எல் மீதும், ஐ.பி.எல்.லுக்கு முன்னோடியான ஐ.சி.எல்.லை உருவாக்கிய கபில்தேவ் மீதும் ஒருபடி மரியாதை என்னுள் கூடி இருகின்றது. குறிப்பாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பற்றியும், இந்திய கிரிகெட் அணி தேர்வாளர்களின் பார்பன வெறி பற்றியும் உண்மையை மிக தைரியமாக சொல்லியுள்ள ஒரு தரமான படம் இந்த ’ஜீவா’! கண்டிப்பா பாருங்க; உங்க மனசையும் தொடும்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக