11 அக்டோபர் 2014

மு..க. - ஜெ. - ஓ.பி..எஸ்.

# அனைத்திந்திய அ.தி.மு.கட்சி முதல் நேற்று தொடங்கிய லெட்டர்பேடு கட்சி வரைக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு (ஆதாயத்திற்காக) ஆதரவாக இன்னைக்கு தமிழ்நாடெங்கும் உண்ணாவிரதம் இருக்காய்ங்க. இவிய்ங்க எவ்ளோதான் பண்ணினாலும், தமிழீழ தனிநாட்டு விடுதலைக்காக திரு மு.கருணாநிதியின் மூனு மணி நேர உண்ணாவிரத ரெக்கார்டை எந்த கொம்பனாலயும் உடைக்கவே முடியாது.

# இந்த ’மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தையெல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடியே புதுச்சேரியில திரு.என்.ரெங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போதே பார்த்தாச்சு. புதுசா ஏதாவது சொல்லிருக்கலாம்.

# இறைவா, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்; நண்பர்களை நீ பார்த்து கொள்! - இது ரஜினியோட பஞ்ச் டயலாக். இப்போது செல்வி. ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துகிறது. சொந்த கட்சி காரய்ங்களே ஆர்வ கோளாறுல கவுத்து விட்டுருவாய்ங்க போலிருக்கு.

# தகுதி இல்லாதவரிடம் மிகப்பெரிய பதவி வந்தால், அந்த பதவியின் தகுதியும் ஏளனமாக்கப்படும் என்பதற்கு ஓ.பி.எஸ். உதாரணமாகிவிட கூடாது. மேலும், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் அதிமுக தலைமைக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைவரென்ற பொறுப்பில் இருக்கின்றார். பொறுமையாவே இருக்காமல் கொஞ்சமாவது முதல்வர் என்ற பொறுப்போடு இருக்கலாம்.

# போற போக்கை பார்த்தால் ஜெயா ப்ளஸ் சேனல் கூட செல்வி.ஜெயலலிதாவை மறுந்துடும் போலிருக்கு! திரு.ராமதாஸ், திரு.கருணாநிதி பற்றிய செய்திகள் தான் அதிகமா வருது.

# இலங்கையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட எங்க நாகை மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரும், "மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றி!ன்னு சொன்னதாக ஜெயாடிவில சொல்றாய்ங்க. ”ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே முடியலையாம்; அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்!”ன்னு சொல்ற சந்திரமுகி படத்துல வர வடிவேலு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.

# தற்போது திரு. ஓ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசின் சார்பில் வெளிவரும் வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சார்பில் முன்பு வெளிவந்த வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த 11 பேர் கொண்ட குழுக்கு வாழ்த்துகள்!

# உண்ணாவிரதம் இருக்குறதுக்கே, கையில பணம் கொடுத்து, வயித்துக்கு குவார்ட்டரும் - பிரியாணியும் கொடுக்குறாய்ங்க. இதுல எப்படி சுத்த பத்தமா விரதம் இருக்க முடியுமாக்கும்?

# இதுவரை திரு. மு.கருணாநிதியின் வயதை காரணம் காட்டி முதுமையை விமர்சித்து வந்த அ.இ.அ.தி.மு.க.வினர், இப்போது உச்சநீதிமன்றத்தில் வயதை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு காத்திருக்கும் செல்வி. ஜெ.ஜெயலலிதாவையும் விமர்சிக்க தி.மு.க.வினருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் என்பதுதானே உண்மை.

# திரு. மு.கருணாநிதியை விமர்சிக்கும் போதுதான் முறுக்கிய நரம்புகளோடு தெறிக்கும் பேச்செல்லாம் திரு. சீமானுக்கு வரும் போல! ஜாமீனுக்கு ஜால்ரா அடித்தால் தான் திரு. வைகுண்டராஜனுக்கு பிடிக்கும் என்பதால், அநேகமாக 2016 தேர்தலின் போதுதான் இனி களமாடுதல் இருக்கும்ன்னு நினைக்கிறேன். வருங்கால முதலமைச்சர் என்ற கனவில் இருப்பவருக்கே இந்த நிலைமையா?

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக