30 அக்டோபர் 2014

அக்டோபர் 30, 2014 - ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்!

இந்த அக்டோபர் 30, 2014க்கு தான் எத்தனை வரலாற்று குறிப்புகள்?

01. முதல் முறையாக தமிழரொருவர் முதலமைச்சராக இருந்து, அரசு விழாவான தேவர்ஜெயந்திக்கு அரசு சார்பில் பசும்பொன்னில் மரியாதை.

02. காங்கிரஸில் இருந்து தமிழக தலைவர் ஞானதேசிகன் விலகல்.

03. இலங்கை - மலையக மண் சரிவு விபத்தில் 350 பேர் பலி.

04. இலங்கை நீதிமன்றத்தால் ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு.

05. மதிமுக, பாமக உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்கும் கருணாநிதி.

06. நீதிமன்ற உத்தரவால் வீட்டிலிருந்த படியே பசும்பொன் தேவர் நிழற்படத்துக்கு செல்வி ஜெயலலிதா மலர் தூவி மரியாதை.

07. திரு. சுப்ரமணிய சுவாமி மீதான செல்வி ஜெயலலிதாவின் அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடை.

08. வைகுண்டராஜனின் நியூஸ் 7 தமிழ் என்ற செய்தி சேனல் அதிகாரபூர்வமாக தொடக்கம்.

இந்த எல்லா செய்திகளும் தனித்தனி செய்தி போல காணப்பட்டாலும், பின்புலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக