16 அக்டோபர் 2014

கல்யாணம் சீக்கிரம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்: பகுதி -1


01. சாயுங்காலம் ஆறு மணிக்கு சேவக்கோழி மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சிடணும்.

02. பலவருட உயிர் நண்பன்கிட்ட போன்ல பேசும் போது கூட வெயிட்டிங் கால் வராத மாதிரி எச்சரிக்கையா இருக்கணும்.

03. சம்பளம் போடுற ஏடிஎம் கார்டோடு பின் நம்பரையும் ஒரு மாசத்துக்குள்ள மறந்துட வேண்டிருக்கும்.

04. இந்த மாதிரி ஃபேஸ்புக்ல ரொம்ப நேரம் வெட்டியா மொக்கை போட முடியாது.

05. ஈமெயில், ஃபேஸ்புக் போன்ற இணையம் சார்ந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் பொதுவுடைமையாக்கப்படும்.

06. நம்ம நல்ல சம்பளத்துல வேலை பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கு மச்சான் முறையில் உள்ள அரியரே கிளியர் பண்ணாத படிப்பாளிக்கு நல்ல சம்பளத்துல வேலை வாங்கி கொடுத்திடணும்.

07. பெத்தெடுத்த அம்மா-அப்பாவையெல்லாம் சண்டைக்காரன் மாதிரி பகையாளியாக்க தயாரா இருக்கணும்.

08. காய்கறி கட் பண்ண தெரிஞ்சா மட்டும் போதாது, ருசியா சமைக்க தெரியணும், கூடவே சமையல் பாத்திரமும் கழுவ தெரிஞ்சிருக்கணும்.

09. வாரத்துக்கு ரெண்டு நாளு பொண்டாட்டி துணிமணியெல்லாம் துவைச்சு கொடுத்துடணும்.

10. பொண்டாட்டியோட ஒன்னுவிட்ட சித்தப்பனோட பெரியப்பன் பேத்திக்கு வேலைநாளுல கல்யாணம் வச்சாலும் ரெண்டு நாளு முன்னாடியே லீவு போட்டு கல்யாணத்து போய்டணும், முக்கியமா மணமக்களுக்கு மோதிரம் போடணும்.

தொடரும்...

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக