21 அக்டோபர் 2014

தமிழுணர்வால் பாதிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

லைக்கா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எந்த தமிழ் அமைப்புக்காவுது, பாரத ரத்னா விருதை ராஜபக்சேவிற்கு கொடுக்க சொல்லிருக்கும் சுப்ரமணியசுவாமியை எதிர்க்க திராணி இருக்கா? அப்படி எந்தவொரு அறிக்கையும் வந்தமாதிரி தெரியலை. பணம் போட்டு படத்தை வெளியிடுறவனை மிரட்டினால் அடி பணிவான்; நமக்கும் இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறெந்த சமூக அக்கறையும் இருந்த மாதிரி தெரியவில்லை. தமிழகமெங்கும் சிங்களவர்களின் நிறுவனங்கள் எக்கசக்கமாய் இருக்கின்றது. அதை எதிர்த்து மூட வக்கில்லை. இந்த லட்சணத்துல அம்மாவிற்கு நன்றின்னு வெட்கமே இல்லாமல், அறிக்கை விட்டு சமாதானம் ஆகுறதுக்கு பேரு தான் இவர்களின் தமிழுணர்வு. 

அதெப்படி, லைக்கா என்ற பெயர் இல்லாமல் படம் வெளி வந்தால் எல்லாம் சரி ஆகிடுமா? எப்படி பார்த்தாலும், அந்த படத்தோட தயாரிப்பாளர் லைக்காவும் - ஐங்கரனும் தானே? அந்த படத்தின் லாப நஷ்டமும் இந்த இரு நிறுவனத்துக்கும் தானே? அப்பறம் எப்படிடா வெட்கமே இல்லாமல் நன்றின்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க? இனிமே தமிழ் தமிழுனர்வுன்னு எந்த போராட்டத்தை கையில் எடுக்காமல், நவ துவாரங்களையும் மூடிகிட்டு போங்கடா நொன்னைங்களா!

தந்தி - புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் இன்றைய (21.10.2014) சிறப்பு விவாதங்களும் தமிழ் அமைப்புகளின் கத்தி திரைப்பட எதிர்ப்பு தொடர்பாகவே இருந்தது. அங்கே நடத்தப்பட்ட இரு கருத்து கணிப்புகளிலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களின் பெரும்பான்மை கருத்தாக 'விஜய் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி' என்பதாக தான் இருந்தது. எது எப்படியோ, 'இளைய தளபதி' திரு.விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற சக தமிழனாய் அடியேனின் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக