அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

06 டிசம்பர் 2015

நான் நேரில் கண்ட சம்பவம்!



மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டியை இறக்கி விட்டு காரில் பறந்து விட்டார். காத்திருக்கிறோம் 2016 தேர்தலுக்காக! அவரை பதவியில் இருந்து பறக்க வைக்க...

- இரா.ச.இமலாதித்தன்.

30 மே 2015

அதிமுக அமைச்சர்களின் பதவிக்காலம் எதுவரை?

இன்னைக்கு எங்க ஊர் நாகப்பட்டினத்துல, "நாகையின் சூப்பர் சிங்கர்" என்ற நிகழ்ச்சியின் இறுதி சுற்று லலிதா மஹாலில் நடந்துச்சு. கொஞ்ச நேரம் பார்க்கலாமேன்னு போனோம். கடைசி ரெண்டு மூனு வரிசைக்கு முன்னாடி உள்ள சீட்ல உட்கார்ந்தோம். கொஞ்ச நேரத்துல அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் வேளாண் அமைச்சருமான திரு.ஜீவானந்தம் அவரது சகாக்கள் இருவரோடு அரங்கிற்குள் வந்தார். பெரும்பாலனோர் அவரை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. ஒருசிலர் எழுந்து வணக்கம் சொல்லிட்டு, அமர்ந்து விட்டனர். அவரும் எனது இருக்கைக்கு அருகிலேயே தான் அமர்ந்திருந்தார். கொஞ்ச நேரத்துல விழா ஏற்பட்டாளர்கள், அவரை கண்டுகொண்டு முதல் வரிசையிலுள்ள இருக்கையில் அமர வைத்தனர். பரிசு பெறணுமேன்னு உயிரை கொடுத்து ஒரு பொண்ணு பாட்டு பாடிட்டு இருந்துச்சு. எப்போ பாடி முடிக்கும்ன்னு காத்திருந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திரு. ஜீவானந்தத்தை வரவேற்றார். "அமைச்சர் ஜீவானந்தம் அவர்களை வரவேற்கிறோம்!" என இருமுறை அமைச்சரென கூறினார். ஆனால், திரு.ஜீவானந்தம் இன்று எம்.எல்.ஏ.வும் இல்லை, மா.செ.வும் இல்லை. அதை யாரும் மறுப்பேதும் சொல்லவில்லை. சொல்ல வந்தது அதைப்பற்றி இல்லை.

அதிமுக அரசில் யார் எம்.எல்.ஏ? யார் அமைச்சர்? என்பது கூட ஓட்டு போட்ட வாக்களனுக்கே தெரியாமல் போய்விடுகிறது. அது தான் ஜெயலலிதாவின் சாதனையென நினைக்கிறேன். யார் எத்தனை மாதம்? எந்தெந்த பதவியில் இருப்பாரென கூட தெரியாத நிலையில் எப்படி ஸ்திர தன்மையோடு செயலாற்ற முடியும்? பரவாயில்லை, இப்போதைய மா.செ.வும், மீன்வளத்துறை அமைச்சருமான திரு.ஜெயபால் அவர்கள் இத்தனை மாதங்கள் தாக்கு பிடித்திருக்கிறார் என்பது பெரும் சாதனை தான். அதற்கும் இடையூறுகளாக பல உண்மை செய்திகள் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது. இன்றைக்கு கூட நாகை நீலாயதாட்சி உடனுறை சிவன் கோவில் தேரோட்டத்தில் இரு மீனவ கிராம அமைப்புகளுக்கு இடையே பெரும் மோதல். இரு தரப்பிலும் பலருக்கு காயம். பத்திரிகையாளர்கள் கூட தாக்கப்பட்டிருக்கின்றனர். பார்க்கலாம், என்ன நடக்குமென்பதை...

- இரா.ச.இமலாதித்தன்