06 டிசம்பர் 2015

நான் நேரில் கண்ட சம்பவம்!



மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டியை இறக்கி விட்டு காரில் பறந்து விட்டார். காத்திருக்கிறோம் 2016 தேர்தலுக்காக! அவரை பதவியில் இருந்து பறக்க வைக்க...

- இரா.ச.இமலாதித்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக