19 டிசம்பர் 2015

முக்குளத்தை முக்குலத்தோருக்கு தெரியுமா?


அகமுடையார் முதுகில் சவாரி செய்யும் முக்குலத்து அமைப்பினரே!

இந்த வீடு யாருடைய வீடு?
இங்கு யார் பிறந்தார்கள்?
இந்த வீடு எங்குள்ளது?

இதெல்லாம் தெரியுமா? அக்டோபர் மாதம் மட்டும் அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்த புண்ணியபூமியில் உங்களது பாவப்பட்ட பாதங்கள் பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இடம்: நரிக்குடி-முக்குளம்.

இங்குதான் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவதரித்தனர். அப்படிப்பட்ட பெருமைமிகு இந்த வீட்டை சீரமைக்கவோ, இங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டவோ, அவர்கள் பிறப்பெடுத்த இவ்வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூட வக்கில்லை. கேட்டால் 'வாழும் மருது' என அடைமொழியை பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் போட்டுகொள்வீர்கள்.

வாழ்க முக்குலம்! ஒழிக முக்குளம்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக