24 டிசம்பர் 2014

இயக்குனர் சிகரத்தின் இழப்பு



பத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது, பிலிம்பேர் விருது என பல தரபட்ட விருதுகளை பெற்ற இயக்குனர் திரு கே.பாலச்சந்தர் திருவாரூரிலுள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர் என்பதில் டெல்டா பகுதியை சார்ந்தவன் என்ற முறையில் என்னைப்போன்ற பலருக்கும் பெருமைக்குரிய விசயம். உலக வரலாற்றிலேயே மேடை நாடகம் - வெள்ளித்திரை - சின்னத்திரை என மூன்று வித பரிமாணங்களிலும் கால் பதித்து வெற்றி கண்ட ஒரே படைப்பாளி திரு கே. பாலச்சந்தர் மட்டுமே. மேலும், உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உள்பட மேஜர் சுந்தரராஜன், சார்லி, எஸ்.வி.சேகர், மெளலி, ஒய்.ஜி. மகேந்திரன், நாசர், பிரகாஷ்ராஜ், ராதாரவி, சரத்பாபு என பல்வேறு கேரக்டர் ஆர்டிஸ்ட்களை அறிமுகப்படுத்திய பெருமையும் திரு கே.பாலச்சந்தரையே சாரும். அவர் திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது சமூகத்தில் பெருமளவு அதிர்வுகளை உருவாக்கக்கூடிய திரைக்கதைகளை உருவாக்கி சினிமாத்துறையில் தனக்கான ஒரு தனித்துவத்தை கடைசிவரையிலும் கையாண்டு வந்தார். அப்படிப்பட்ட இயக்குனர் சிகரத்தின் மரணமானது கலையுலகுக்கு மாபெரும் இழப்பை கொடுத்திருந்தாலும், வயது மூப்பு காரணமான ஏற்படும் இறப்பு என்பது இயல்பான ஒரு நிகழ்வு என்பதால் அவரது ஆன்மா இறைவனிடத்தில் இளைப்பாறட்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

23 டிசம்பர் 2014

சாதிப்பெயரை நீக்கினால் சாதி ஒழிந்து விடுமா?


 கடந்த ஞாயிறு (21.12.2014)அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய TNPSC குரூப் 4 தேர்வில் சுமார் பத்து லட்சம் பேர் தேர்வெழுதியுள்ளனர். அந்த தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பற்றிய இரு கேள்விகளும் கேட்கப்பட்டிருந்தன.

001. ’தேசியம் காத்த செம்மல்’ - எனத் திரு.வி.க. வால் புகழப்பட்டவர்

A. பசும்பொன் முத்துராமலிங்கர்
B. காந்தியடிகள்
C. திருப்பூர் குமரன்
D. வீரபாண்டிய கட்டபொம்மன்

002. “வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்” - என எடுத்துரைத்தவர்

A. சுபாஷ் சந்திர போஸ்
B. பசும்பொன் முத்துராமலிங்கர்
C. வீரபாண்டிய கட்டபொம்மன்
D. வேலுத்தம்பி

இந்த இரு கேள்விகளுக்கும் விடையானது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பது தான். ஆனால் அவரது முழு பெயரையே சுருக்கி பசும்பொன் முத்துராமலிங்கர் என குறிப்பிட பட்டுள்ளது. இதைத்தவிர மேலும் சில கேள்விகளில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை கீழே பதிவிட்டுள்ளேன்.

01. இராமலிங்கம் பிள்ளை
02. கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
03. எஸ். வையாபுரிப்பிள்ளை
04. அ. சிதம்பரநாத செட்டியார்
05. வேங்கட ராஜூலு ரெட்டியார்
06. வைத்தியநாத சர்மா
07. வெ.சாமிநாத சர்மா
08. சி.வை. தாமோதரம் பிள்ளை
09. வேதநாயகம் பிள்ளை
10. வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
11. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
12. ஆளுடைய பிள்ளை
13. வ.வே.சு. ஐயர்

இந்த பெயர்களிலுள்ள் பிள்ளை, செட்டியார், ரெட்டியார், ஐயர் என்பதெல்லாம் சாதிப்பெயர் இல்லையா? அதையெல்லாம் அனுமதித்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ’தேவர்’ என்ற பெயரை மட்டும் புறக்கணித்திருப்பதன் உள்நோக்கம் என்ன? சட்டமோ விதியோ அது அனைவருக்கும் பொதுவானதாக தானே இருக்க வேண்டும்? அப்பறம் ஏன் ஒரு சாரருக்கு மட்டும் எதிரானதாக இருக்கின்றது? ஒரு தேசிய தலைவரின் பெயரை சுருக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? மேலும், அதே வினாத்தாளில் நேரு, படேல், போஸ் என்ற பெயர்களை கொண்ட தேசியத்தலைவர்களின் துணைப்பெயர்களான சாதி / பட்டப்பெயர்களை நீக்காமல் விட்டது ஏன்? தேவர் பற்றாளர்கள் இதற்கெல்லாம் நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுக்க முடியாதா? தகவல் உரிமை சட்டத்தின் மூலம் இதைப்பற்றி விளக்கம் கேட்க முடியாதா? குறைந்தபட்சம் TNPSC அலுவலகத்தையாவது இதற்கான காரணத்தை கேட்டு கண்டனத்தை பதிவு செய்யலாமே? அதை விட்டுவிட்டு இணையத்தில் ”தேவன்டா” என்ற வெற்றுக்கூச்சல்களால் என்ன சாதிக்க போகிறோம்? களத்திற்கு போராட வராதவரை, இன்று பசும்பொன் பெருமகனாரின் பெயரை சுருக்கியவர்கள் நாளை எதை வேண்டுமானாலும் துணிச்சலாக செய்வார்கள்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக கேள்வி கேட்க துணிவும் உணர்வும் உள்ளவர்கள் கீழே உள்ள தொடர்பு எண்களை பயன்படுத்தலாம்.

Phone: +91- 44 - 25300300

மின்னஞ்சல் மூலமாகவும் கேள்வி கேட்க விருப்பமிருந்தால் coetnpsc.tn@nic.in , contacttnpsc@gmail.com இந்த இரு மின்னஞ்சலையும் பயன்படுத்தலாம். வெறும் தேவன்டா என சொல்லிக்கொண்டு திரியும் நபர்கள் இந்த பதிவை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு கடந்து செல்லலாம். ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்

16 டிசம்பர் 2014

சனி பகவானே வருக!

இரண்டரை வருடங்களுக்கு முன்பாகவே ஏழரையை ஆரம்பித்த போதிலும், இன்று முதல் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு விருச்சிக ராசிக்குள் முழுமையாக கால் பதித்திருக்கும் சனி பகவானை வருக வருகயென வரவேற்கிறோம்!

- விருச்சிகராசி விழுதுகள்

05 டிசம்பர் 2014

ஆரியம் - திராவிடம் - தலித்தியம்!

கேள்வி:

தமிழர்களுக்கு ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்தானதா?

பதில்:


அந்நியன் படத்துல ஒரு வசனம் வரும். தப்பு என்ன பனியன் சைஸா? மீடியம், லார்ஜ், எக்சல், டபுள் எக்சல்ன்ன்னு... அது போலத்தான் இந்த கேள்வியும் இருக்கு.ஆரியத்தை விட தலித்தியம் ஆபத்துன்னு சொல்றதோ, தலித்தியத்தை விட ஆரியம் ஆபத்துன்னு சொல்றதோ, சரியான ஒப்பீடு கிடையாது. ஆரியமும், திராவிடமும் சம விகிதத்தில் தமிழனுக்கு ஆபத்தானவை தான். ஆரியம், தமிழனின் தேசியத்தை வீழ்த்துகிறது; தலித்தியம், தமிழனின் தெய்வீகத்தை வீழ்த்துகிறது. ஆனால், ஆரியம் - திராவிடம் என்ற இந்த இரண்டிற்கும் இடையில் திராவிடத்தின் சூழ்ச்சியும் இருக்கின்றது என்பதை தமிழன் புரிந்து கொண்டு, ஆரியம் - திராவிடம் - தலித்தியம் இந்த மூன்றையும் புறந்தள்ளும் காலம் வந்த பிறகு, தமிழன் உலகையே ஆள்வான்!

- இரா.ச.இமலாதித்தன்

தென் தமிழகத்தில் நடந்தேறும் தொடர்ச்சியான படுகொலைகளுக்கு தீர்வு என்ன?

01. அஜீத் பட டீசருக்கான அதிக லைக்குகளால் மகிழ்ச்சி.

02. ஈ.வெ.ரா. விசயத்தில் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு.

03. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கு கொள்ளும் முதல் சட்டபேரவை என்பதால் பெருமிதம்.

04. மு.கருணாநிதிக்கு இருக்கை தரவில்லை என்ற கோபம்

இப்படியாக தேவரின இளைஞர்கள் அரசியல்-சினிமா என ஈர்க்கப்பட்டு கிடக்கும் வேளையில், நேற்று(05.12.2014) 20 வயதுடைய எம்.முத்துராஜா என்ற தேவர் சாதியை சேர்ந்த ஓர் இளைஞனை 20 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், கோடாறியால் தலை, உடல் என கோராமாக வெட்டி படுகொலை செய்துள்ளது. காரணம் என்னவெனில் 2012ம் ஆண்டின் நடைபெற்ற தேவர் ஜெயந்தி அன்று தேவரின இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய கொலை செய்தவனை, விசாரணைக்கு அழைத்து வரும்போது பழிக்கு பழியாக கொலை செய்தனர். அந்த பழிக்கு பழியான கொலை நடந்த அதே நாளில், யாராவது ஒரு தேவர் சாதியை சேர்ந்த ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்ற குரூர நோக்கத்தோடு நேற்று இந்த படுகொலை நடந்தேறியுள்ளது.


இதே மாதிரி தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டால் லட்ச கணக்கில் உடனடியாக நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையென அரசாங்கம் உடனடியாக பட்டுவாடா செய்யும். கூடவே, வினவு போன்ற நக்சல்பாரி இணையங்களும், நடுநிலைவாதியென்ற முகமூடிகளுடன் உலவும் எழுத்தாளர்களும், பக்கம் பக்கமாக கண்டனங்களை தொடர்ச்சியாக பதிவு செய்வார்கள். செய்தி சேனல்களும் ஃப்ளாஷ், ஸ்க்ரோலிங் என லைவ் ரிப்போர்ட்டை கொலை களத்திலிருந்து போட்டிப்போட்டு கொடுக்கும். மேலும், உண்மை அறியும் குழு, மனித உரிமைகள் அமைப்பு, தலித் சாதி அமைப்புகள், தேசிய தலித் வாரியம் என பலரும் களத்தில் சாதிவெறியென கூச்சலிட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

ஆனால், வழக்கம் போல விபச்சார ஊடகங்கள் மெளனித்திருக்க, சமூக ஊடகங்களில் தேவர் சாதி இளைஞர்கள் மட்டும் உணர்ச்சி பொங்க பதிவிட்டு பகிர்வார்கள் என்பது இந்த சம்பவத்தின் பின்னாலும் உணர முடிகின்றது. ஆனால் முக்குலத்து சாதி அமைப்புகள் ஒவ்வொரு ஊருக்கும் தெருவுக்கு தெரு இருந்தாலும், அக்டோபர் மாதம் மட்டும் வாடகைக்கு வண்டி பிடித்து பசும்பொன் வந்து போவது தான் அவர்களின் கொள்கை என்பதால், இந்த சம்பத்தின் பின்பும் எந்தவொரு பெரிய சாதி அமைப்பும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. இதுவும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் என்பதால் எந்தவித சலனமும் தேவர் சாதி அமைப்புகள் மீது எழவில்லை.


தென் தமிழகத்தில் பழிக்கு பழி, கொலைக்கு கொலை என தொடர்ச்சியாக அரங்கேறினால், பல அப்பாவி இளைஞர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுவதை யாராலுமே தடுக்க முடியாது. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யாராவது ஒருவரால் கொலைக்கு சம்பந்தபட்டவர்கள் பழி தீர்க்கப்பட்டு கொண்டே இருப்பர்கள். இதற்கான நிரந்தர தீர்வை திராவிட தலைமை கொண்ட எந்த அரசாங்கமும் நிச்ச்யமாக எடுக்காது. ஏனெனில் இதை வைத்து தானே, அவர்களால் தென்னகத்தில் அரசியல் செய்ய முடியும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் - பார்வார்ட் ப்ளாக் மோதலானது கட்சிகளை தாண்டி, இன்று தேவர் - பள்ளர் மோதலாக சாதிவெறியாக உருமாறி நிற்கின்றது. எனவே இந்த சாதிய மோதலுக்கான நிரந்தர தீர்வை தேவர் மற்றும் பள்ளர் சாதியை சேர்ந்த இளைஞர்களால் மட்டும் தான் எட்ட முடியும். மற்றபடி எல்லா சாதி அரசியல் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தான் தேட முயல்வார்களே தவிர, நிரந்தர தீர்வை நிச்சயம் எடுகக் விட மாட்டார்கள். இதை வருங்கால இளைய தலைமுறையினர் புரிதல் கொண்டால் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே கொலை செய்யப்படும் அப்பாவிகளை இனியாவது காப்பாற்ற முடியும். ஜெய்ஹிந்த்

- இரா.ச.இமலாதித்தன்

04 டிசம்பர் 2014

நாம் தமிழரின் சாதி ஒழிப்பு!



நீதியரசரான கிருஷ்ணய்யரை பெயருக்கு பின்னால் அய்யர்ன்னு சேர்த்து சொல்றதை தப்புன்னு சொல்லல. ஆனால், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்கி முத்துராமலிங்கனார்ன்னு சொல்லும்போது தான் உங்க சாதி ஒழிப்பு கொள்கையில் காறி துப்ப தோணுது. அட த்தூ!

தந்தி டிவியின் அதிமுக ஆதரவு!

அ.தி.மு.க.வுக்கு வக்காலத்து வாங்கி ஊடகம் நடத்த கூடாது! - ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., தி.மு.க.
தந்திடிவி விவாதத்தில் ரெஙக்ராஜ் பாண்டேவிடம் ஜெ.அன்பழகன் பின்னி பெடலெடுக்கிறார்.
J Anbazhagan Mla

பொதுவாக நேர்காணல், விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் Rangaraj Pandeyவை எனக்கு பிடிக்கும். ஆனால் Thanthi TVயின் அ.தி.மு.க. ஆதரவு கொள்கைக்காக ரெங்கராஜ் பாண்டேவும் சுயமிழந்து தடம் மாறுகிறாரே என்ற வருத்தமும் என்னுள் உண்டு. எந்த சார்புமின்றி நடுநிலையின் பக்கம் மாறுங்க பாஸூ!

பங்காளிகளுக்காக!

பங்காளி பங்காளின்னு உயிரையே கொடுக்கிற மாதிரி பாசத்தை பொழியிற பாதி பேரு தன்னோட கல்யாணதுக்கு கூட அழைப்பு கொடுக்க மாட்டாய்ங்க. அப்பறம் என்ன மயிருக்கு இவிய்ங்கள நான் நம்பணும்? ஆர்குட் முதல் ஃபேஸ்புக் வரை பல பேரை பல வருசமா பார்த்து கடந்தாச்சு.

ஒரு பங்காளி என்ன பண்ணினாருன்னா, நாகை டவுன்ல உள்ள என் வீட்டையெல்லாம் வசதியாக கடந்து 20 மைல்களுக்கு அப்பாலுள்ள, ஓர் அரசியல் தலைவருக்கு தன்னுடைய கல்யாண பத்திரிகையை கொண்டு போய் கொடுத்தாரு. பிறகு எனக்கு போன்ல கூப்பிட்டு கல்யாணத்து அழைப்பு கொடுத்தாரு. அவர் கல்யாணத்துக்கு நான் போகல. ஏன் போகலைன்னு சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்ல. நாகையில உள்ள எளியவனான என வீட்டுக்கு நேர்ல வந்து பத்திரிகை கொடுத்தால் தனக்கு அவமானம் என நினைத்த அவர், என் ஏரியாவை கடந்து டவுனுக்கு வெளியே உள்ள அரசியல் தலைவருக்கு நேரில் சென்று பூ பழமெல்லாம் கொடுத்து பத்திரிகை வைத்து வந்தார். அந்த பங்காளிக்கு, காசு பணம் பேரு புகழெல்லாம் வரும் போகும் என்பதும், உண்மையான நட்பு எல்லாரிடமும் வருவதில்லை என்பதும் தெரியாமல் போய்டுச்சேன்னு நினைச்சேன்; சிரிச்சேன்.

இலவச அறிவுரை:

ஃபேஸ்புக் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற மொத்த பேருல வெறும் 10%க்கும் குறைவான ஆளுங்க கிட்ட மட்டும் தான் நம்ம வாழ்க்கையில நடக்குற நல்லது கெட்டதுக்கு உரிமையோட கூப்பிட முடியுமும். மத்ததெல்லாம் சும்மா அண்ணே, தம்பி, பங்காளி, சகோ, ப்ரோ, ஜி, பாஸுன்னு வாயால வடை சுடுற கேஸ் தான். அதுனால சோசியல் நெட்வொர்க் பழக்க வழக்களை வச்சு நட்பின் தரத்தையும், உறவின் தரத்தையும் எடை போட கூடாது.

- இரா.ச.இமலாதித்தன்

03 டிசம்பர் 2014

வைகோ எனும் வைராக்கியமான அரசியல்வாதி!


கருணாநிதிக்கு அரசியலில் துரோகம் செய்திருக்கட்டும்; பிறப்பால் தெலுங்கராக இருக்கட்டும். வாக்கர் என்றும், நடிகனென்றும், ராசியில்லாத ஆளென்றும் இந்த மாதிரியான பல விமர்சனங்களை திரு. வைகோ மீது வைத்தாலும், அவர் மாதிரியான ஒரு நேர்மையான போராட்ட குணமுள்ள, பதவி - பணம் ஆசையற்ற, கொள்கைக்காக சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ச்சியாக தமிழ் - தமிழர் சார்ந்த பிரச்சனையில் யார் வந்தாலும் வராவிட்டாலும் முதல் எதிர்ப்பை பதிவு செய்து போராடும் குணமுள்ள ஒரு தலைவரை என் சமகாலத்தில் திரு வைகோவை தவிர வேறு யாரையும் பார்த்ததில்லை.

தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக யாராலும் மறக்க முடியாத, மறுக்க முடியாத அரசியல் தலைவர்களில் திரு வைகோவும் ஒருவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரான வைகோவை தமிழகத்தை விட அண்டை மாநிலங்களும், அண்டை நாடும் தான் தங்களின் எதிரியாக பாவிக்கின்றது. ஆனால் இங்கே என்னவென்றால், அவரை அவதூறாக பேசி சிற்றின்பம் அடைகிறார்கள்.

“உன் இனத்தில் யாருடைய பெயரை சொன்னால் உன் இனத்தின் எதிரி குலைநடுங்குகிரானோ அவனே உன் இனத்தின் உண்மையான தலைவன்.”

உயிரோட இருக்கும் போது யாரையும் மதிக்க மாட்டாய்ங்க. இறந்த பின்னால் காலம் முழுவதும் நீலிக்கண்ணீர் வடிப்பாய்ங்க. இந்த தமிழனை எவனாலும் புரிஞ்சிக்கவே முடியாது.

- இரா.ச.இமலாதித்தன்

02 டிசம்பர் 2014

ஈ.வெ.ரா. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரா?

எப்போதோ ஈ.வெ.ரா.வை அவதூறாக பேசிவிட்டதாக ஹெச்.ராஜா மீது இரு பிரிவுகளில் இப்போது வழக்கு போட்டிருக்கின்றனர். ஆனால் சமீபத்தில் வைகோ பற்றி பேசியதற்கான எதிர்வினையா இதுவென தெரியவில்லை. ஆனால் இதிலுள்ள ஒற்றுமை என்னவெனில் ஈ.வெ.ரா.வும், வைகோவும் நாயக்கர் சாதியை சார்ந்தவர்கள் என்பது தான். மேலும், திராவிடர் கழகம் என்ற பெயரில் ஊர் ஊராக மேடை போட்டு சகட்டு மேனிக்கு இவனே, அவனேன்னு ஹிந்து மத கடவுளையே (மட்டும்) இழிவு படுத்தும் போது அப்போதெல்லாம் யாரும் இவர்கள் மீது வழக்கு கொடுத்த மாதிரி தெரியவில்லை. தமிழை காட்டுமிராண்டி மொழியென்றும், தமிழனை முட்டாள், அயோக்கியன், தகுதியற்றவன் எனவும் பேச்சிலும் - எழுத்திலும் விசத்தன்மையான அவதூறுகளை தெளித்த ஈ.வெ.ரா. ஒன்னும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லையே. இந்த ஈ.வெ.ரா விசயத்தில் ஹெச்.ராஜா மீது தவறேதுமில்லை. அப்படி அவர் மீது தவறென்றால் காலம் காலமாக ஹிந்து மத கடவுள்களை மட்டும் ஒருமையில் பேசி வரும் ஈ.வெ.ரா.வை பின்பற்றும் அனைத்து திராவிடர் கழகங்களையெல்லாம் தமிழகத்திலிருந்து ஹிந்து மத உணர்வாளர்கள் தான் காலி செய்ய வைக்க வேண்டும்.

30 நவம்பர் 2014

அரச கொலை 30.11.2012


பிரபு - பாரதி என்கவுன்டர் :(
ஜெயலலிதா பதவி பறிப்பு  :)
ஆண்டு இரண்டானாலும் அகம்படியனாய் அரசக்கொலையை மறக்கவோ, மன்னிக்கவோ முடியவில்லை.

எம் குல மாவீரர்களுக்கு வீர வணக்கம்

28 நவம்பர் 2014

வாசனுக்கு வாழ்த்துகள்!

ஏற்கனவே உள்ள பழைய பெயரை கட்சிக்கு வைத்தாலும் கூட சோழ நாட்டிலிருந்து ஒருவர், மாநில கட்சிக்கு தலைமை வகிப்பது சோழநாட்டானாக எனக்கு பெருமையே. மாநில கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மாநில தலைவராக பொறுப்பேற்கும் திரு. ஜி.கே.வாசனுக்கும், மேலும் சோழ நாட்டிலிருந்து தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு மாநிலத்துணை தலைவராக பதவி வகிக்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கும் தமிழக வாக்களனாக என் வாழ்த்துகள்!

ஃபேஸ்புக் போன்ற சமூக இணைய பக்கங்களில் பின்னி பெடலெடுக்க பதினோறு பேர் கொண்ட ஒரு குழுவை ஜி.கே.வாசன் ஏற்கனவே நியமிச்சிட்டாருன்னு நினைக்கிறேன். முகநூல் உள்ளிட்ட இணையபக்க நண்பர்களுக்கும் நன்றின்னு மாநாட்டு மேடையிலேயே சொல்கிறார். டெல்டா காரய்ங்களான்னா வெவரம் தான்!

G.K.Vasan GK Vasan Tamil Maanila Congress

தி.மு.க. தலைவரான நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையின் திரு மு.கருணாநிதி, த.மா.க. முன்னாள் தலைவரான தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தின் திரு ஜி.கே.மூப்பனார், பா.ஜ.க. மாநில துணைத்தலைவரான திருவாரூர் மாவட்டம் ஜாம்பனோடையின் திரு கருப்பு மு.முருகானந்தம் உள்ளிட்ட இம்மூன்று தலைவர்களுக்கு பிறகு டெல்டாவிலிருந்து உருவெடுத்திருக்கும் அடுத்த மாநில தலைவரான திரு ஜி.கே.வாசனுக்கு வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

மிகப்பெரும் தமிழர் அடையாளம்!



சிங்களத் தீவோ, ஈழ மண்டலமோ, இலங்கையோ அல்லது சேது நாடோ, சின்ன மறவர் நாடோ, சிவகெங்கையோ இந்த பெயரிலுள்ள வேறுபாட்டை விட, பகுதி சிறியது என்றாலும் உயிர்கொடை கொடுக்கும் படை வீரர்கள் - சாதி மத வேறுபாடில்லா மக்களின் பலம் - அம்மக்களுக்கான உயரிய கொள்கையுடன் கூடிய நேர்மையான ஆட்சி - எதிரிகளுக்கு எதிரான அதிகார பகிர்மானம் - தொலைநோக்கு பார்வை என மேம்பட்ட ஆட்சி செய்த ’தமிழீழ விடுதலைப்புலிகள்’ இயக்கத்தின் ’தமிழ் தேசிய தலைவர்’ பிரபாகரனும், ’மாமன்னர்’ மருதுபாண்டியர்களும், எதிரிகளும் - துரோகிகளும் கூட மறுக்க முடியாத மாட்சிமை பொருந்திய மிகப்பெரும் தமிழர் அடையாளமாய் திகழும் வரலாற்று பொக்கிசம்.

- இரா.ச.இமலாதித்தன்

26 நவம்பர் 2014

முக்குலத்து அரசியல்வாதிகளின் கவனத்திற்கு

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் இருந்தாவது முக்குலத்து அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளட்டும். ஆண்ட பரம்பரை, தேவன்டா, எக்குலமும் வாழனும் முக்குலமே ஆளனும் - இப்படியான வார்த்தை ஜாலங்களால் மட்டும் அரசியலில் நிலையான ஓரிடத்தை பிடிக்க முடியாது. மாறிக்கொண்டிருக்கும் காலத்திற்கு தகுந்த தெளிவான அரசியல் பாதை வேண்டும். எல்லாரையும் பகைத்து கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும்? அனைத்து தமிழ்சாதிகளையும் அரவணைத்து புதிய அரசியலை கட்டியெழுப்புவதை பற்றியெல்லாம் இனியாவது யோசிக்கட்டும்.

புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் இப்பயிலரங்கதில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான அரசியல் சூழ்நிலைகள், புதிய தமிழகம் கட்சியை மாநில அளவில் முதன்மை அரசியல் கட்சியாக முன் எடுத்து செல்வது, தமிழகத்தில் தற்பொழுது நிலவக்கூடிய சமூக சிக்கல்கள், சட்டங்கள், ஆட்சி மாற்றங்கள், சுகாதாரம், சுயஒழுக்கம், கட்சியை விரிவாக்கம் செய்தல், ஊடகங்கள் தோற்றுவித்தல் என பல தரப்பட்ட விசயங்களும் இப்பயிலரங்கதில் விவாதிக்கப்பட போகிறார்கள்.

”வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்”

இப்படி சொன்ன பசும்பொன் தேவரின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி அரசியல் செய்யும் முக்குலத்து அமைப்புகளே, இனியாவது இப்படியான முன்னெடுப்புகளை எடுங்கள். "நீ யாரு எங்களுக்கு சொல்றது? நாங்க அக்டோபர் மாசம் வாடகைக்கு பத்து பதினைஞ்சு வண்டி எடுத்து பசும்பொன் பக்கம் போனாலே எங்க அரசியல் முழுமையாகி விடும்!" என நினைக்கும் உங்களை போன்றோர்களால் என்றைக்கும் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாது. வழக்கம்போல சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கில் காட்டி(கொடுத்து) திமுக - அதிமுகன்னு மாறி மாறி ஒரிரு சீட்டுக்காக கையேந்தி நிற்கத்தான் முடியும். தமிழக அரசியலில் கால் பதித்திருக்கும் எல்லா சாதி அமைப்புக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் இருக்கு. ஆனால் முக்குலத்தோருக்குன்னு ஒரு பத்திரிகை, தொலைக்காட்சின்னு ஏதாவது ஓர் ஊடகம் இருக்கா? இனியாவது உருப்புடியா ஏதாவது பண்ணுங்கய்யா. மீசையை மட்டும் வச்சிக்கிட்டு ஒரு மயிரும் புடுங்க முடியாது. மூளையும் வேணும்.

- இரா.ச.இமலாதித்தன்

சுட்டி:
https://www.facebook.com/DrKrishnasamy/photos/a.322228447945154.1073741827.322218957946103/393972464104085

அண்ணன் வே.பிரபாகரனுக்கு அகவை 60!



அண்ணன் வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம் இது. அண்ணனை போலவே இந்த தம்பிக்கும் அதே விருச்சிக ராசி, அதே கேட்டை நட்சத்திரம். கேட்டை நிச்சயம் ஒருநாள் கோட்டையை ஆளும்! என்ற எதிர்பார்ப்போடும் - நம்பிக்கையோடும் அகவை 60ல் அடியெடுத்து வைக்கும் என் அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்! சேவற்கொடி ஏந்திய தமிழின போர்க்கடவுளான எம்பெருமான் திருமுருகனை இதுவரை நேரில் பார்த்ததில்லை. பார்த்தேன், சம காலத்தில் முருகவதாரமாக புலிக்கொடி ஏந்திய என் அண்ணனான வே.பிரபகரனை...

இனிய அகவை 60 வாழ்த்துகள் அண்ணா!

25 நவம்பர் 2014

பசும்பொன் தேவரின் குருவான சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி!


தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. நீதிபதி அனந்த நாராயணன், சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

"தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்" என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, "முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க" என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, அன்று இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, "சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?" என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், "உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவீர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்" என்று கூறினார். பிறகு, சுவாமிகள் முன்னரே தான் குறிப்பிட்ட தேதியில் ஆடுதுறைக்கு அருகிலுள்ள காவிரி ஆற்றங்கரைக்கு மேற்கே ஓரிடத்தை தேர்வு செய்து, அந்த இடத்தை தன் பக்தரான செட்டியார் ஒருவரிடம் சொல்லி அதை வாங்க சொன்னார். பிறகு சொன்னது போலவே குறிப்பிட்ட தேதியில் அங்கே சுவாமிகள் ஜீவசமாதி ஆனார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர்.

ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் இந்த ஜீவசமாதிக்கு செல்வதற்காக மூன்று முறை முயற்சித்தும் தரிசிக்க முடியாமல் போனதால், நான்காவது முறையாக நேற்று (24.11.2014) மாலை இந்த ஜீவசமாதிக்கு சென்று வந்தேன். தேவர் மீது பற்றுள்ள அனைவரும், நேரமிருந்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

செல்லும் வழி:

தஞ்சை மாவட்டம் ஆடுதுறையிலிருந்து சூரியனார்கோவில் செல்லும் சாலையில் அரை மைல் தொலைவில் காவிரியாற்றின் மேம்பாலம் ஒன்றுள்ளது. அதற்கு முன்பாகவே இடபக்கமுள்ள அம்மன் கோவிலின் பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலிலுள்ள விநாயகர் சிலைக்கு கீழாகவே ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகளின் ஜீவசமாதி உயிர்துடிப்புடன் இருந்து வருகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

24 நவம்பர் 2014

என் பெற்றோர்களின் தமிழ்முறை திருமண பத்திரிகை!




இது என் பெற்றோர்களின் (1984ம் ஆண்டில் நடைபெற்ற) தமிழ்முறை திருமண பத்திரிகை! உறவினரல்லாத நண்பர்களுக்காக அச்சடிக்கப்பட்டது...

‪#‎பொக்கிசம்‬

என் தாத்தாவின் கடிதம்




'வண்டலூர் கிராம முன்னேற்ற சங்கம்' கூட்டத்தை கூட்ட சொல்லி, 04-04-1966 ம் ஆண்டு என் தாத்தா உயர்திரு அ.இராமாமிர்ததேவர் எழுதிய கடிதம். மேலும், என் பெரிய தாத்தாவான உயர்திரு அ.பக்கிரிசாமித்தேவர் அவர்கள் நேதாஜி படையில் இருந்தவர். அவர் என் தந்தைக்கு எழுதிய கடிதத்தை அடுத்த வாரம் பதிகின்றேன்.

‪#‎பொக்கிசம்‬

கீழ வெண்மணியும் - வரலாறும்!

விவசாய அறுவடை கூலியாக தரும் ஒரு படி நெல்லிலிருந்து இரு படி நெல் தரவேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டதால் ‘நெல் உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இருந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அடியாட்களால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் துயர சம்பத்திற்கு பிறகு 'கீழ வெண்மணி' என்ற கிராமம் தமிழக கம்யூனிசத்தின் ஆணிவேராக மாறிபோனது. 36க்கு 12 என்ற நீள அகலம் கொண்ட ஒரு சிறிய வீட்டுக்குள் வைத்து 44 பேரும் தீ வைத்து கொளுத்தப்பட்டனர். இறந்தவர்களில் இரண்டு கர்ப்பிணிகள் உள்பட 20 பெண்கள்; 13 வயதிற்கும் குறைவான 19 சிறுவர்கள்; 70 வயது பெரியவர் உள்பட 5 ஆண்களென மொத்தம் 44 அப்பாவிகள் கொல்லப்பட்ட பிறகும், தன் சாதியை சார்ந்த ஒருவரால் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதை அறிந்திருந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கடைசி வரையிலும் எந்தவித பெரிய எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதும் துரோக வராலாற்றுக்கு ஒரு சான்று. அப்படிப்பட்ட கீழ வெண்மணிக்கு மூன்று மைல் தொலைவில் தான் வண்டலூர் எனும் கிராமமும் உள்ளது.

டெல்டாவில் பெரும்பாலான விவசாயம் சார்ந்த கிராமங்களிலெல்லாம் கம்யூனிசம் மிக வலுவாக கால் பதித்திருந்த நிலையில், கீழவெண்மணிக்கு மிக அருகிலுள்ள வண்டலூரில் கிளை செயலாளர் என்ற மிகச்சிறிய பதவியில் இருந்த என் தந்தை இரா.சம்பந்தம் அவர்களின் தீவிர முயற்சியால், தீவிர கம்யூனிசத்தொண்டர்களை திராவிட கட்சியான அ.இ.அ.தி.மு.க.வில் இணைத்தார் என்பது கடந்த கால வரலாறு. இங்கே திராவிடம் - கம்யூனிசம் என்று ஒப்பிட்டு பேசி எது சரி? எது தவறு? என்பதையெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால், எளியவனுக்கும் நேர்மையான மனத்திடத்துடன் கூடிய ஆளுமை திறனிருந்தால், எந்தமாதிரியான களத்திலும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை சொல்லவே இந்த பதிவு. மேலும், கம்யூனிசம் பரவியிருந்த மண்ணில் திராவிடத்தை திணித்திருக்கும் போது, திராவிடம் பரவியிருக்கும் இக்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாதா என்ன? முடியும்.

வரலாறு என்பது மன்னர் என்று நிறுவுவதில் மட்டுமல்ல; மண் சார்ந்த புது மாற்றத்திலும் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

19 நவம்பர் 2014

சின்ன கலைவாணருக்கு வாழ்த்துகள்!


கலவரத்துக்கு பெயர் போன தென்தமிழகம் தான் இவரது பூர்வீகமென்றாலும் கலகலப்புக்கு சொந்தக்காரர்.

வேலையிலிருந்த பட்டதாரிகள் நிறைந்த அந்த காலத்திலேயே இவர் எம்.காம் முதுகலைப் பட்ட தாரி.

தமிழ்நாடு தலைமை செயலகத்தின் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்த முன்னாள் அரசு ஊழியர்.

சிவ கார்த்திக்கேயன், மதுரை முத்துக்கு முன்பாகவே ஸ்டேன்ட்-அப் காமெடியை முதன்முதலில் பிரபல படுத்திவர்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், ரஜினி காந்த, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களை பேட்டியெடுத்தவர்.

ரஜினி, கமலை போலவே இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் இவரை அறிமுக படுத்தினார்.

1987ல் ”மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தார்.

1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார்.

சினிமாவில் சமூக மூடநம்பிக்கைக்கு எதிரான பல சீர்திருத்த கருத்துகளை மிக ஆழமாக பதிவு செய்து வரும் இவரின் மனதுக்கு மிகவும் நெருங்கியவர் ஷீரடி சாய்பாபா.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றவர்.

'உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் நான்கு மாநில விருது அரசு விருகளை பெற்றவர்.

மேலும், ‘எடிசன் விருது’, ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’, ‘ஐ.டி.எஃப்.ஏ விருது', ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றவர்.

குறிப்பாக இந்திய அரசால் ’பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றவர்.

”நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்” எனக்கூறி ’க்ரீன் கலாம்’ திட்டத்தினால் பல லட்சம் மரக்கன்றுகள் ஊன்றி பசுமை புரட்சி செய்து வருபவர்.

இயற்பெயரான விவேகனாந்தனிலிருந்து, சினிமாவால் விவேக் ஆனவர்.

அகவை 54ல் அடியெடுத்து வைக்கும் ”சின்ன கலைவாணர்”, ”ஜனங்களின் கலைஞன்” அண்ணன் திரு. விவேக் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எம்பெருமான் திருமுருகன் அருளோடு வாழ்க வளமுடன்!

- இரா.ச.இமலாதித்தன்

18 நவம்பர் 2014

வீரமும் வீரம் சார்ந்த இடமும்!



”வீரமும் வீரம் சார்ந்த இடமும்!” - தைத்திங்கள் ஆயத்த ஆடை பட்டறை மூலமாக இந்த டீசர்ட் (வாசகம்) உருவாக அடியேனும் ஒரு காரணம்.

இதை #சுயபெருமை ன்னு கூட வச்சிக்கலாம்.

17 நவம்பர் 2014

ரஜினியெனும் மாபெரும் நடிகன்!


ஓரளவுக்கு பெரிய எதிர்பார்ப்பு அதிகமில்லாத தன்னுடைய படங்கள் வெளிவரும் போதெல்லாம், ”அரசியலுக்கு வருவேன்!” யென கீழ்த்தரமான விளம்பர யுக்திகளை பயன்படுத்தி, படத்தை பாமர ரசிகனுக்கு கொண்டு செல்லும் ஈனத்தனமான புத்தியை இந்த ரஜினி என்னைக்கு தான் விட்டு தொலைக்கப்போறாரோ தெரியவில்லை. கோடி கோடியாய் சம்பாரித்த பிறகும் ”வசூல் நாயகன்” என்ற புகழ் போதைக்காக ஆண்டவனை ஊறுகாய் போல தொட்டுக்கொள்ளும் ரஜினி, திராணி இருந்தால் அரசியலுக்குள் வந்து பார்க்கட்டுமே. இந்த 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை எத்தனை நாள் தான் தன்னந்தனி ஆளாக சுமந்து கொண்டிருப்பார்? பாவம்.

“எதுவாக இருந்தாலும் சரி அதை கடவுள் தான் முடிவு செய்வார். அது என்னவென்று எனக்கு தெரியாது. எதுவாக இருப்பினும் மக்களுக்கு நல்லதையே செய்வேன்!” இப்படி பேசியுள்ள ரஜினி, தன்னுடைய கதைகளில் உருவான வள்ளி - பாபா போன்ற படங்கள் ஓடாதென்று அவருக்கு கடவுள் சொல்லவில்லையா? ஏற்கனவே வெளிவந்த மாற்று மொழி திரைப்படத்தை ரிமேக் செய்து வடிவேலுவையும் - ஜோதிகாவையும் நம்பி சந்திரமுகியால் ரீ எண்ட்ரி கொடுத்த போதும் கூட, ”இனி படம் நடிப்பதை நீ நிறுத்திக்கொள்” என கடவுள் ஏதும் சொல்லவில்லையா? சரி அது போகட்டும். ஏதோ மக்களுக்கு நல்லது செய்வாதாக கூறியுள்ள ரஜினி, இது வரையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது என்ன செய்தார் என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இதுவரையில் அப்படி எந்தவொரு ஆணியையும் அவர் பிடுங்கவில்லை, இனியும் பிடுங்கி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஒருவேளை தன்னுடைய இரு மகளுக்காக நல்லது செய்திருக்கலாமே ஒழிய, மக்களுக்காக ஒன்றும் செய்துவிடவில்லை என்பது தான் நிதர்சனம்.

”ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாத்த முடியாது” யென்று சொன்ன ரஜினியை, அந்த ஆண்டவன் எப்படி காப்பாத்துவார்? ஏனென்றால் அவர் இப்படி ஆண்டவனை அடிக்கடி சொல்லும் போதெல்லாம் அது தோல்வியில் தானே முடிந்திருக்கிறது என்று அந்த ஆண்டவனுக்கு தெரியாதா? தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாதுன்னு ரஜினி சொன்ன பிறகும் ஜெயலலிதா இரு முறை முதலமைச்சர் ஆனார் என்பதும், அதே ஜெயலலிதா சமீபத்தில் ஆட்சியிலிருக்கும் போது கைதாகி ஜாமீனில் வந்த போது, இதே ரஜினி வாழ்த்துகள் சொல்லி கடிதம் எழுதிய போதும், அந்த கடவுளுக்கே ரஜினியின் கோமாளித்தனங்கள் கோபத்தை ஏற்படுத்திருக்காதா?

அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு என்பது ஒரு மனிதனின் வாழ்வியல் படிநிலை. அப்படி பார்த்தால், சராசரி மனிதனின் கடைநிலை என்பதுஆன்மீகமே. அந்த கடைநிலையில் இருக்கும் ரஜினி, ஆண்டுக்கொரு முறை இமயமலை பக்கம் போனால் மட்டும் இறைவனாகவா ஆகிவிட போகிறார்? எந்த இறை அவதாரம், தன் படம் வரும் போதெல்லாம் புகழ் போதைக்காக அரசியலுக்கு வருவேனென ஊரை ஏமாற்றி இருக்கிறது? ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும் தான் நிற்க்கும் ஒரு எம்.எல்.ஏ தொகுதியை வெற்றி பெறுவதற்கே மிகவும் சிரமப்பட வேண்டிருக்கும் என்பது தான் எதார்த்தம்.

தன்னுடைய படங்கள் வரும்போதெல்லாம் தன் ரசிகர்களை உசுப்பேற்றி கேவலமானதொரு அரசியலை அரங்கேற்றும் இந்த ரஜினிக்கு, திரையில் நடிக்க வருகிறதோ இல்லையோ நிச்சயமாக திரைக்கு வெளியே நன்றாகவே நடிக்க வருகின்றது. அரசியலுக்கும் இந்த நடிப்பு தான் தேவையென்பதால் கண்டிப்பாக ரஜினி அரசியலுக்கு வரலாம், ஏனென்றால் தமிழர்கள் ஏமாற காத்து கொண்டிருக்கின்றார்கள். எது எப்படியோ, எம்பெருமான் திருமுருகா! இந்த லிங்கா படம் ப்ளாப் ஆக வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

14 நவம்பர் 2014

பதவியேற்பு வாழ்த்துகள்!

தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் பணி சிறக்க எம்பெருமான் திருமுருகன் அருள் புரியட்டும்! டெல்டாவிலிருந்து தேசியக்கட்சியின் மாநிலத்துணை தலைவரென்ற பெரிய பதவியை அலங்கரிக்கும் உங்களுக்கு உறவுக்காரனாக என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேரு மாமாவும் மவுண்ட் பேட்டனும்!

ஆங்கில ஆட்சியின் போது ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள் நேதாஜியும் தேவரும். அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றவுடன், அவரை ’ஆசிய ஜோதி’ என்று புகழ்ந்து உலகில் மாமனிதர்கள் பலரும் நேருவை சந்திக்க விரும்பினர். ஆனால் நேருவோ "நான் ஃபார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்து, அவருடன் கை குலுக்க விரும்புகிறேன்" என்றார்.

ஆனால் பசும்பொன் தேவரோ, "என் தலைவர் நேதாஜியைக் காட்டிக் கொடுத்தக் கையோடு நான் குலுக்க மாட்டேன்” என்று கூறி நேருவின் கையைத் தட்டி விட்டு சென்றார். என்பது கடந்தகால அரசியல் வரலாறு!

”இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி!” என அண்ணன் வே. பிரபாகரன் சொல்லியது போல, வரலாறு தான் நமக்கு வழிகாட்டியே. அப்படிப்பட்ட துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரர் நம்ம நேரு மாமா.


மேலும், மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்த நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேருவும் - தேவரும்!


1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை, நேரு தேவரிடம் தூது அனுப்பினார். பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தேவர் விரும்பும் எந்த பதவியையும் மத்தியிலோ - மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும், சீலபத்ரயாஜி தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை. மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார். உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார்.அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார்.

கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார். அதில், பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும், எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும், கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர, பார்வர்ட் பிளாக் கட்சியானது காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார்.

டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி, அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி, தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி, துணைத்தலைவர் ஆனார் தேவர். தேவரின் விருப்பத்திற்கு இணங்க ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார்.

காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து, அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.

- இரா.ச.இமலாதித்தன்

(இன்னைக்கு தான் அந்த மாமாவோட பிறந்தநாள்!)

13 நவம்பர் 2014

சுய பெருமைக்கு பின்னாலுள்ள கோபம்!

தொலைக்காட்சி பிரபலம் ஒருவரின் கவிதை புத்தகத்தை படித்த போது தான் தெரிஞ்சது, அவரை விட என் எழுத்துகள் பன்மடங்கு மேம்பட்டதென்று. நானும் 2009 லிருந்து கவிதைங்கிற பேருலயும், கட்டுரைங்கிற பேருலயும் கண்டதையும் கிறுக்கி வச்சிருக்கேன். புகழ் போதைக்கு இங்கே பலரும் அடிமை என்றாலும் புகழுக்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஓர் அங்கீகாரத்திற்காகவாது என்னுடைய நூறுக்கும் மேற்பட்ட கிறுக்கல்களை தொகுத்து ஒரு கவிதை நூலை வெளியிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. அதற்கான வாய்ப்பு தான் இதுவரையிலும் உருவாகவில்லை. அடுத்து பாரபட்சமில்லாத ஒரு நேர்மையான வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பதும் இன்றைய நாள் வரை வெறும் கனவாகவே இருந்து வருகின்றது. இறைருள் இனியாவது கிடைக்குமென நம்பிக்கையோடும், ஆறுமுகனின் அருளோடும் ஆறாவது ஆண்டில் நுழைகின்றேன். வாண்ட்டடா வண்டியில ஏறுற என்னைய நம்புங்கய்யா, சத்தியமா நானும் கவிஞன் தான், எழுத்தாளன் தான்!


இன்னைக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் வந்ததும் நெட் கார்டு ரீசார்ஜ் செய்து கொண்டு வீரவசனம் பேசும் பலருக்கும், ஆறெழு வருடங்களுக்கு முன்பு நடந்த பல ப்ளாஸ்பேக் தெரிய வாய்ப்பில்லை. அன்றைக்கு ஆக்டிவா இருந்த பல பேரு இன்னைக்கு பொண்டாட்டி பிள்ளைன்னு தடம் மாறி விட்டார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே நிலைதான், இன்றைக்குள்ள வீரவசனங்களுக்கும் உருவாகும். அது தெரியாமல் ஒட்டு மொத்த இனத்தையே தன் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாய் பிரம்மை பிடித்து நிற்பதை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்பார் யாருமில்லை!

இன்னைக்கு தேவர் தளம் என்ற இணையதளம் இருக்கிறதென்றால் அதில் என்பங்கும் கணிசமாக உண்டு. www.thevarthalam.blogspot.com என்ற வலைப்பதிவிலுள்ள பதிவுகளைத்தான் thevarthalam@mail.com என்ற மெயில் ஐடி உருவாக்கி பிறகு காப்பியெடுத்து அதை பின்னாட்களில் www.thevarthalam.com க்கு அப்லோட் செய்தோம். பண உதவி ஒரு பைசா கூட என்னுடையது இல்லையென்றாலும் லோகோ, இணையதள பெயர், டெம்ப்ளேட் டிசைன், பேஜ்/டேப் தலைப்புகளென அனைத்திலும் அடியேனுக்கும் பங்குண்டு என்பதை சொல்வது காலத்தின் தேவையாகிறது.

#‎
சுய_பெருமை‬
!ன்னு கூட வச்சிக்கலாம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் முக்குலத்தோரான கள்ளருக்கும், மறவருக்கும் தனித்தனி பக்கங்கள் இருந்தாலும், அகமுடையாருக்கு என்ற தனிப்பக்கம் ஏதுமில்லாமல் இருந்த போது, 25 டிசம்பர் 2010ம் ஆண்டு அந்த குறையை போக்கி, அகமுடையாருக்கென தனி பக்கத்தை அடியேன் தான் உருவாக்கினேன்.

இதை ‪#‎சுய_பெருமை‬!ன்னு கூட வச்சிக்கலாம்.

http://ta.wikipedia.org/w/index.php…



நாளைக்கே ஒரு லெட்டர் பேடு கட்சி உருவாக்கி மாநில தலைவராக கூட வரலாம். குறைந்த பட்சம் ஆளில்லா டீக்கடை போன்றதொரு அமைப்பில் வட்ட செயலாளராக கூட வரலாம். ஆனால், ஒருநாளும் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது. அது தான் டிசைன்.

 - இரா.ச.இமலாதித்தன்

12 நவம்பர் 2014

இந்த வார தமிழக அரசியல்!

-001-

அரசியலில் நுழைவதை வெளிக்காட்டி கொள்ளாத கமலஹாசனுக்கு க்ளீன் இந்தியாவில் பொறுப்பும், தன் படம் வரும்போதெல்லாம் அரசியலில் நுழைவதை பற்றி ஊடகங்களை பேசவைக்கும் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரமுகர் விருதும் கொடுக்கும், ஆளும் பா.ஜ.க. சர்க்காரின் நகர்வை பார்க்கும் போது தமிழ்நாடு தான் அடுத்த இலக்கு போல. தமிழகத்திலும் தாமரை மலரட்டும்!

-002-

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவும் புதுப்புது தடுப்பணைகளை கட்ட போகிறார்களாம். அன்று, சோழநாட்டின் விவசாயம் பாதிக்கப்படுவதை எண்ணி கர்நாடகத்தில் போர் தொடுத்து, அங்குள்ள அணையை தரைமட்டமாக்கி விட்டு திருச்சியிலே கல்லணையை கட்டியெழுப்பிய முற்கால சோழமன்னன் இளஞ்செட்சென்னியின் மகனான கரிகாலசோழ பெருவளத்தான் போலொருவன் மீண்டுமிங்கே பிறப்பெடுத்தால் ஒழிய, விவசாயிகளுக்கு அதிசயம் ஒன்றும் நடந்துவிட போவதில்லை.

- இரா.ச.இமலாதித்தன்

11 நவம்பர் 2014

இணைய பிரபலம் என்ற அற்பத்தனம்!

மனசுல உள்ளதை மறைக்காமல் நேர்மையான பதிவை தரும் பதிவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் மிக குறைவு. தனிப்பட்ட செயல்பாட்டுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் பதிவிடும் நபர்களின் போலி பிம்பம் அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். மனசுல ஒன்னு; செயல்ல ஒன்னு; பேச்சுல ஒன்னு; எழுத்துல ஒன்னு; இப்படி பல முகங்களில் முகமூடியிட்டு போலியாக பதிவிடும் நபர்களே இங்கே அதிகம். இதுல ஏன் பிரபலம் என்ற பிதற்றல்? இங்கே வழங்கப்படும் லைக்குகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கடன் கூட வாங்க முடியாது. இது தான் எதார்த்தம். அதை விட்டுவிட்டு பிரபலம் - லைக் போன்ற அற்பதனத்துக்காக அக்கப்போர் தேவையில்லாதது. பிரபலமான பதிவர்கள், அந்த பிரபலத்தை பயன்படுத்தி திரைத்துறையிலோ - எழுத்துத்துறையிலோ, டிவி/பத்திரிகை போன்றதோர் ஊடகத்திலோ தனக்கானதொரு முத்திரையை பதித்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த லைக்குகளெல்லாம் வெறும் போலி பெருமை பட்டியலில் தான் சேரும். ஒரு பிரபலமான பதிவர் ஓரிரு மாதம் பதிவிடாமல் இருந்துவிட்டால், அதன் பிறகு அந்த பிரபல பதிவரை சீண்ட கூட ஆளிருக்காது. இதை சொல்வதனால், ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற இயலாநிலையில் நானில்லை. எதார்த்தம் இது தான்.

- இரா.ச.இமலாதித்தன்

08 நவம்பர் 2014

வண்ணங்களும் வணக்கத்துக்குரியவையே!

அனைத்து வண்ணங்களிலும் ஓர் அழகு ஒளிந்திருந்தாலும், பசுமைக்கு நிகரான அழகு வேறேதுமில்லை. என் சிறு வயது முதலே மிகவும் பிடித்து போன நீலம், பச்சைக்கு பிறகு சிவப்பும் பிடித்துப்போய் விட்டது. RGB என்ற இந்த மூவண்ணங்கள் தான் மற்ற அனைத்து விதமான வண்ணங்களுக்கும் மூலாதாரமாக இருக்கின்றதென்றாலும், இந்த மூன்று வண்ணங்களுக்கு பின்னால் பல அறிவியலும் ஆன்மீகமும் கூட நிறைந்திருக்கின்றன. உதாரணமாக பச்சையை பெருமாளுக்கும், கருநீலத்தை இராமனுக்கும், சிவப்பை சிவன் மற்றும் எம்பெருமான் திருமுருகனுக்கும் உரிய நிறமாக சொல்வார்கள். மேலும், நவக்கிரங்களான புதனுக்கு பச்சையையும், சனிக்கு - நீலத்தையும், செவ்வாய்க்கு - சிவப்பையும் வஸ்திரங்களாக அணுவித்தும் வணங்குவார்கள். இது ஆன்மீகம். அதன் தொடர்ச்சியாக, குளோரினுக்கு - பச்சை, நைட்ரஜனுக்கு - நீலம், ஆக்சிஜனுக்கு - சிவப்பு என்றும், மேலும் எலக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான் போன்ற அணுக்களுக்குள்ளும் இந்த பச்சை - நீலம் - சிவப்பு வண்ணக்குறியீடுகள் மூலமும் அறிவியலிலும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். நிச்சயம் ஒருநாள், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒற்றைப்புள்ளியில் சங்கமித்து, அறிவியலும் ஆன்மீகத்தோடு இணையும். அதன் பெயர் தான் இறைவன் என்று அப்போது புரியும்.

- இரா.ச.இமலாதித்தன்

கொசுறு:

சேனைக்கிழங்கு - நாக்கை அறிக்கும்; வள்ளிக்கிழங்கு - நாக்கில் இனிக்கும். இதுல இருந்து என்ன புரியுது? முதல்ல இருக்கிறத விட இரண்டாவதா வரதுதான் இனிக்கும். அதுனால தான் தெய்வசேனை இருக்கும்போதே வள்ளி மீதும் எம்பெருமான் திருமுருகன் காதல் வசப்பட்டுட்டாரு போல.

07 நவம்பர் 2014

06 நவம்பர் 2014

குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை!

பெரும்பான்மை சாதியை சார்ந்தவன் என்ற முறையில் தானே தைரியமாக ஒரு சாதிக்கட்சியை உருவாக்கின்றனர். அந்த பெரும்பான்மை சாதியின் ஓட்டுகளுக்காக தானே திராவிட கட்சிகளும் ஒட்டுமொத்த 234 தொகுதிகளில் யாசகம் போல ஓரிரு தொகுதிகளை ஒதுக்குகின்றன. அந்த சாதிக்கட்சியை யாரை நம்பி, யார் பெயரை சொல்லி, யாருடைய படத்தை போட்டு, எந்த கொள்கைக்காக உருவாக்கினார்களோ, அதையெல்லாம் வெகு எளிதாக மறந்துவிட்டு தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைக்காக எதிரியிடம் சரணாகதி அடையும் சுயநலவாதிகளின் கீழ்த்தரமான போக்கை, அந்த சாதியை சார்ந்தவன் என்ற முறையில் சுட்டிக்காட்டுவது சரியான முறையே. அதற்காக நீ அந்த அமைப்பில் இருக்கிறாயா? இல்லை நீ எந்த சாதிக்கட்சியில் இருக்கின்றாய்? நீ ஏதாவது கட்சியை நடத்தி பார்த்திருக்கியா? என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாத ஒன்று. அப்படி பார்த்தாலும், ஒரு சாதி அமைப்பில் உள்ளவன், அடுத்த அமைப்பை விமர்சிப்பதும் தவறு தானே? தன் சுயநலத்திற்காகவும் - புகழுக்காகவும் - பணத்திற்காகவும் ஒட்டுமொத்த சாதியையும் அடகு வைக்கும் நபர்களை, அந்த சாதியை சார்ந்தவனே சுட்டிக்காட்ட கடமைப்பட்டவனாகிறான். மாறணும்!

- இரா.ச.இமலாதித்தன்

05 நவம்பர் 2014

மூழ்கும் கப்பலில் கார்த்திக்!

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவே நேதாஜி தலைமையில் ’அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி’ உருவாக்கப்பட்டது. அந்த கட்சியின் மூலமாகவே தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் மு.கார்த்திக், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிலிருந்து விலகி ’அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை உருவாக்கினார். அதுவும் காலப்போக்கில் நாடாளும் மக்கள் கட்சியாக, பெயரளவிலும் - செல்வாக்கிலும் தேய்ந்து போனது.

இனிவரும் காலங்களில் சாதிக்கட்சியை நடத்த யார் விரும்பினாலும், அவர்கள் மருத்துவர் ச.ராமதாசிடமும் - தொல்.திருமாவளவனிடமும் தான் படிப்பினையை கற்க வேண்டும். ஒரு நடிகர் தனிக்கட்சியை தொடங்க விஜயகாந்தையும், அதே நடிகர் சாதிக்கட்சியை உருவாக்க சரத்குமாரிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மு.கார்த்திக்குடைய சாதி அரசியலானது, காங்கிரசில் சரணடைந்தது தான் வேதனையின்ம் உச்சம். 

அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேனென நேதாஜி சொல்லக் காரணமாக இருந்த, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழ் மாநில தலைமை பதவியை வழங்கிய கெளரவித்தனர். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் எட்டி உதைத்து உதாசினப்படுத்திருக்கும் மு.கார்த்திக் உடைய நிலைப்பாட்டை, நேதாஜி-தேவர் கொள்கைகளை கடைபிடிக்கும் யாராலும் ஏற்க முடியாது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

02 நவம்பர் 2014

ராஜராஜசோழனின் சதயவிழா!



அருண்மொழித்தேவன் என்கிற உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவரின் 1029வது சதயவிழா வாழ்த்துகள்!

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான
ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு!


- இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி.

01 நவம்பர் 2014

யுவனுக்கு தாய் மதத்தானின் வாழ்த்துகள்!



மதம் மாறினால் பேரும் மாத்திருப்பாய்ங்க. புதுப்பேரு என்னன்னு தெரியல. அதுவரையில் யுவன் சங்கர் ராஜா என்ற பெயரில் அறியப்பட்ட யுவனுக்கு மூன்றாம் திருமணநாள் வாழ்த்துகள்! சீனா - மலேசியா - இலங்கை ன்னு உலகம் முழுவதும் சுற்றும் போது அங்குள்ள பெண்ணின் மீது காதல் கொண்டு, பெளத்தனாக மதம் மாறாமல் இருந்தால் மகிழ்ச்சி. தாய் மதத்திலிருந்து என் வாழ்த்துகளும், எம்பெருமான் முருகனின் அருளும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

நாகை மைந்தர் தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார்!



எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1944ம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் தொடர்ச்சியாக மூன்று வருடஙகள் ஓடியது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. மேலும், திரையுலகில் 1934ம் ஆண்டு நுழைந்ததிலிருந்து மொத்தமாகவே 14 படங்களில் மட்டுமே நடித்த எம்.கே.பாகவதரின் பெரும்பாலான படங்கள் வருடகணக்கில் ஓடி தொடர் சாதனைகளை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் - எங்க நாகப்பட்டின மாவட்டத்து காரருமான எம்.கே. தியாகராஜ பாகவதர் (Mayavaram Krishnamurthy Thyagaraja Bhagavathar) நினைவு நாளான (01 நவம்பர் 1959) இன்று, நாகப்பட்டினத்து காரனாய் பெருமையோடு அவரை நினைவுகூறுகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் பொறுக்கீஸ்!

எனக்கென்னமோ, இந்த ஐந்து மீனவர்கள் மீதான சிங்களவாத இலங்கை நீதிமன்றம் கொடுத்த மரணதண்டனை தீர்ப்பிற்கு பின்னால், சுப்ரமணிய சுவாமிதான் இருப்பாரென தோணுது. ”பாத்தீங்களா, டமில் டமின்னு பேசினவா யாராலயும் இந்த தூக்குதண்டனையை தடுக்க முடியல. நான் தான் அந்த டெத் பெனாலிட்டிய ஸ்டாப் பண்னேன். நான் ராஜபக்சா கிட்ட சொல்லலைன்னா, இந்நேரம் இவா அஞ்சு பேரும் செத்து போயிருப்பா... ” நாளடைவில் இப்படி ஒரு கெத்தான பேட்டியை கொடுக்கவே சு.சுவாமி இதை செய்திருக்க கூடும். ராஜபக்சேவுக்கு ’பாரதரத்னா’ விருது கொடுக்க சொன்னதும் கூட, இது மாதிரியான ஓர் அரசியலுக்காகத்தான் இருக்கும்.

இப்படிக்கு,
தமிழ் பொறுக்கி
இரா.ச.இமலாதித்தன்

31 அக்டோபர் 2014

தேசியம் என்பது வடக்குக்கு மட்டும் தானா?

இந்தியாவின் இரும்பு மனிதரென வர்ணிக்கப்படும் திரு சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதியை, தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கொண்டாட சொல்லும் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், தெய்வத்திருமனார் - தென்னாட்டு சிங்கம் - தென்னாட்டு திலகர் - தென்னாட்டு போஸ் என்று பலவாறாக வர்ணிக்கப்படும் தேசியத்தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பிறந்த தேதியான அக்டோபர் 30ம் தேதியை தேசியமயக்கமாட்ட நாளாக அறிவிக்க தயக்கம் ஏன்? ஒருவேளை பசும்பொன் தேவரவர்கள் தமிழகத்தில் பிறக்காமல், குஜராத்தில் பிறந்திருந்தால் மோடியின் கடைக்கண் பார்வை பட்டிருக்குமோ என்னவோ?

வாயரசுக்கும் வல்லரசுக்கும் வித்தியாசம் உண்டு.

- இரா.ச.இமலாதித்தன்

இதுக்கு பேரு கூட காப்பிகேட் தான்!


நாகப்பட்டினத்தில் தேவர்சிலை தேவர் சமுதாயக்கூடம் திறப்புவிழா






எங்க நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்து அருகிலேயே தேவர் சமுதாயக்கூடமும், கூடவே பசும்பொன் தேவர் சிலையும் நேற்றைய (அக்டோபர் 30, 2014) தேவர்ஜெயந்தி அன்று திறந்தாச்சு! சமுதாயக்கூடமும் - தேவர்பெருமகானரின் சிலையும் அமைய முழு முயற்சி எடுத்த திமுக நகர செயலாளர் திரு. போலீஸ் பன்னீர் அண்ணன் உள்ளிட்ட அனைத்து சமுதாய பெரியோர்களுக்கும் என் நன்றி!

- இரா.ச.இமலாதித்தன்

30 அக்டோபர் 2014

செபஸ்டியன் சைமனின் தேவர் சாதி ஒழிப்பு!

தான் பிறந்த நாளிலிருந்து தனது இறுதி நாள் வரை உ.முத்துராமலிங்கத்தேவர் என்றே சமகால மக்களால் அறியப்பட்டவரின் கையெழுத்து கூட, 'மு.உ.தேவர்' தான். இந்திய அரசியலை தாண்டி, உலகத்தமிழர்களுக்காக ஹிந்து அல்லாத பெளத்தம் உள்ளிட்ட  பல ஆன்மீக சொற்பொழிவாற்ற பல நாடுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். உள்ளூர் பள்ளி முதல் உலக நாடுகளுக்கு பயணிக்க தேவைப்படும் கடவு சீட்டு வரை பயன்படுத்திய அவரது பெயரும் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். அந்த திருப்பெயரை 107 ஆண்டுகள் கழித்தும் இன்றும் உலகெங்கும் பல அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதும் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று தான்!

ஆனால் நேற்றைய மழையில் முளைத்த காளான் போல தமிழக அரசியலில் உருவெடுத்திருக்கும் ’நாம் தமிழர் கட்சி’ மட்டும், தெய்வத்திருமனாரை முத்துராமலிங்கனார் என சுருக்கி தமிழகமெங்கும் போஸ்டர் அடித்திருப்பது கண்டனத்துக்குரியது. பெருந்தமிழனரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை. பெற்றோர் வைத்த ’செபஸ்டியன் சைமன்’ என்ற பெயரை சுருக்கி, தனக்கு தானே ’சீமான்’ என வைத்து கொண்டவரின் தலைமையில் கீழ் இயங்கும் கட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

திரு செபஸ்டியன் சைமன் அவர்களே, நீங்க வழக்கம் போல, உங்க சாதிக்கார முதலாளி திரு வைகுண்டராஜனோடும், உங்க சாதிக்கார தொலைக்காட்சி தந்திடிவியோடும், உங்க சாதிக்காரர் திரு. ஆதித்தனார் அன்று உருவாக்கிய நாம் தமிழர் கட்சி என்ற பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்கனவே தெருவுக்கொரு கட்சி - அமைப்பு -  சங்கம் - பாசறை - கழகம்- இயக்கம்ன்னு எக்கசக்கமா இருக்கு. ஆனாலும் எங்க சாதி கட்சி தேர்தலில் வெற்றி பெறாது. ஏனென்றால் அதிமுகவுக்கு போட்ட முக்குலத்தோரின் ஓட்டு அக்ரிமெண்டே இன்னும் முடியிற மாதிரி தெரியல. அதுனால எங்க ஓட்டு உங்க மாற்று அரசியலுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


எனவே, உங்கள் வீட்டு சமையலறையில் மட்டும் இனி களமாடுங்கள். தயவு செய்து, எங்கள் தெய்வத்தின் பெயரோடு விளையாட வேண்டாம். மேலும், நரகாசூரனுக்கும். -, சூரபத்மனுக்கும் வீர வணக்கம் வைப்பதோடு உங்களது தமிழ்தேசியப்பற்றை நிறுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு உங்களோட உங்க பொங்கச்சோறும் வேண்டாம்; உங்க சங்காதமும் வேண்டாம்!

- இரா.ச.இமலாதித்தன்

அக்டோபர் 30, 2014 - ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்!

இந்த அக்டோபர் 30, 2014க்கு தான் எத்தனை வரலாற்று குறிப்புகள்?

01. முதல் முறையாக தமிழரொருவர் முதலமைச்சராக இருந்து, அரசு விழாவான தேவர்ஜெயந்திக்கு அரசு சார்பில் பசும்பொன்னில் மரியாதை.

02. காங்கிரஸில் இருந்து தமிழக தலைவர் ஞானதேசிகன் விலகல்.

03. இலங்கை - மலையக மண் சரிவு விபத்தில் 350 பேர் பலி.

04. இலங்கை நீதிமன்றத்தால் ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு.

05. மதிமுக, பாமக உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்கும் கருணாநிதி.

06. நீதிமன்ற உத்தரவால் வீட்டிலிருந்த படியே பசும்பொன் தேவர் நிழற்படத்துக்கு செல்வி ஜெயலலிதா மலர் தூவி மரியாதை.

07. திரு. சுப்ரமணிய சுவாமி மீதான செல்வி ஜெயலலிதாவின் அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடை.

08. வைகுண்டராஜனின் நியூஸ் 7 தமிழ் என்ற செய்தி சேனல் அதிகாரபூர்வமாக தொடக்கம்.

இந்த எல்லா செய்திகளும் தனித்தனி செய்தி போல காணப்பட்டாலும், பின்புலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

- இரா.ச.இமலாதித்தன்.

29 அக்டோபர் 2014

தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

சுதந்திர போராட்ட வீரரும் - ஆன்மிக வாதியும் - பொதுவுடைமை சித்தாந்தத்துடன் கூடிய தேசியத்தலைவருமான, தெய்வத்திருமகனார் பெருந்தமிழர் ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை என்ற ஆன்மீக விழாவிற்கு, தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கும் அதே தமிழ் சாதியை சேர்ந்த சக தமிழரான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர் செல்வத்தின் பசும்பொன் வருகை என்பது, தமிழ் வரலாற்றில் முதல் முறையாகவும் - மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைய போகின்றது. இந்த (அக்டோபர் 30, 2014 என்ற) வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில், அனைத்து தமிழர்களுக்கும் அடியேனின் 'தேவர் ஜெயந்தி' வாழ்த்துகள்!

நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையிலிருந்து,
தமிழனாய்...
இரா.ச.இமலாதித்தன்.

சூரசம்ஹாரத்திற்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்பு!

இன்னைக்கு எம்பெருமான் முருகனின் சூர சம்ஹாரம்! அதைப்பற்றி எனக்கு தோன்றிய சிறு ஆய்வு. நாகப்பட்டினமும் கடல் நகரம். திருச்செந்தூரும் கடல் நகரம். மேலும், முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே பிரசித்தி பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது. இந்த விசயத்தை மையமாக வைத்தே இந்த பதிவு அமைய உள்ளது. மாற்று கருத்துகள் இருந்தால் கூறவும்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் வதம் செய்யும் நிகழ்வு தான் சூரசம்ஹாரம். சிக்கல் கோவிலுக்கு அருகேயே அரை மைல் தொலைவில் பொரவச்சேரி என்ற பொருள்வைத்தச்சேரி இருக்கு. அங்கு தான் எம்பெருமான் முருகனின் கல்லினால் ஆன மூலவர் சிலையும் இருக்கு. ஆனால், சிக்கல் கோவிலுனுள் ஐம்பொன்னினால் ஆன உற்சவர் மட்டுமே உள்ளது. ஆனால், அந்த உற்சவருக்கும் சூரசம்ஹார நாளில் வேர்வை வியர்க்கும் என்பது காலம் காலமாக நடந்து வரும் அதிசய நிகழ்வு. சிக்கல் - பொரவச்சேரி இது இரண்டு ஊர்களுமே கடலுக்கு அருகே இல்லை. மேலும், நாகப்பட்டினதில் கூட ஆறுமுகனுக்காக தனி ஆலயமாக குமரன் கோவில் நகரத்தின் மைய பகுதியில் இருக்கின்றது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு முருகன் கோவில் சாமாந்தான் பேட்டை என்ற கடலோர கிராமத்தில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகில்தான் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகமும் இருக்கின்றது.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கிய அந்த கோவிலுக்கும், சிக்கலுக்கும் ஏறத்தாழ 10 மைல் தொலைவு இருக்கும். அந்த கோவிலில் வள்ளி-தெய்வானை இல்லாமல் எம்பெருமான் திருமுருகன் தனியே போர்கோலத்தில் தான் காட்சியளிக்கின்றார். என் கணிப்பின் படி, சிக்கலில் வேலும் ஆசீர்வாதமும் வாங்கியவுடன் பொருள்வைத்தச்சேரியில் ஆயுத தடவாளங்களை கட்டமைத்து, அப்படியே தரை மார்க்கமாக சாமந்தான்பேட்டைக்கு வந்து அங்கு தங்கிருந்து, பிறகு கடல்வழியாக திருச்செந்தூருக்கு போர்கலங்களோடு எம்பெருமான் முருகனின் கடற்படையினர் பயணித்திருக்க வேண்டும்.

மேலும், எம்பெருமான் முருகன், யாரிடம் வேல் வாங்கினார் என்பது எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக பார்வதி என தெரிந்திருக்கும். ஆனால், சிக்கல் கோவிலிலுள்ள பார்வதியின் திருப்பெயர் வேல்நெடுங்கன்னி அம்மன். அந்த வேல்நெடுங்கன்னி அம்மன் தான் காலப்போக்கில் முடவனுக்கு கடலோரத்தில் காட்சியளித்த வேளாங்கன்னி மாதாவாக விளங்கி வருகிறார். இங்கே மதமாற்றம் மனிதனுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் தான் என்பது மாரியம்மன் - மரியே என மருவி விட்ட இந்த விசயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேல்நெடுங்கன்னி என்ற வேளாங்கன்னி மாதாவுக்கும் கடலோரத்தில் தான் சர்ச் என்ற மாதா கோவில் இருக்கின்றது. இந்த முறையில் யோசித்தால், ஒருவேளை சாமந்தான்பேட்டையிலிருந்து வேல் உள்ளிட்ட ஆயுத தடவாளங்களுடன் கிளம்பி, வேளாங்கன்னி என்ற இந்த கடல் வழி மார்க்கமாகவே எம்பெருமான் முருகனின் கடற்படை திருச்செந்தூருக்கு பயணித்திருக்க வேண்டும், அப்போதும் அங்கு பார்வதி காட்சியளித்து எம்பெருமான் முருகனுக்கு ஆலோசனைகளையும், ஆசிகளையும் வழங்கிருக்க கூடும்.

இதுபோலவே, சிக்கலிலுள்ள எம்பெருமான் முருகனின் திருப்பெயர் சிங்கார வேலன் ஆகும். இந்த சிங்கார வேலனுக்கும் ஒரிசாவுக்கும் ஒரு தொடர்புண்டு. அந்த தொடர்பும் போர் சம்பந்தப்பட்டது தான். அதுபோல திருச்செந்தூர் முருகனுக்கும், குன்று இருக்குமிடமெல்ல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கிணங்க, திருப்பதியிலுள்ள வேல்கொண்ட ஈசனுக்கும் கூட ஒரு தொடர்புண்டு. அதுவும் போர் ஆயுதமான வேல் சம்பந்தப்பட்டது தான். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட அனுமானங்களே. இவை பொய்யாக கூட போகலாம். எல்லாம் உண்மைகளும் எம்பெருமான் முருகனுக்கே தான் வெளிச்சம்!

வீர வேல்! வெற்றி வேல்!

- இரா.ச.இமலாதித்தன்

28 அக்டோபர் 2014

சாதி அரசியலிலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா!

அக்டோபர் மாசம் வந்தாலே, ”கேடி பில்லா கில்லாடி ரெங்கா” படத்துல வர இந்த சீன் தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. பதவிக்காகவும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தான், சாதிக்கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்களுக்கு பயன்படுகிறார்கள். அந்த இழவுக்காக என்னா பில்டப் கொடுக்குறாய்ங்க? இதுனால தொண்டர்களுக்கும் விளம்பரம், தலைவருக்கும் விளம்பரம்! மற்றபடி ஒட்டுமொத்த சமுதயாத்துக்கு ஒரு புண்ணாக்கும் கிடைக்க போறதில்லை.

மருதுபாண்டியர்களை புறக்கணிக்கும் சீமான்!



இந்த நாம் தமிழர் கட்சி காரய்ங்க, நரகாசுரனுக்கெல்லாம் வீரவணக்கம் ஃப்ளக்ஸ் அடிச்சு சொன்னாய்ங்க. ஆனால், தமிழ் தேசியத்தின் முன்னோடியான மாமன்னர் மருதுபாண்டியருக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட நடத்துன மாதிரியே தெரியல. இதுதான் தமிழ் தேசிய மாற்று அரசியலா? தீபாவளியே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டே நிரூபணம் செய்ய முடியாத நரகாசுரனுக்கு வீரவணக்கம் சொல்வீங்க. ஆனால், 500க்கும் மேற்பட்ட அனைத்து சாதி/மத மக்களும் மன்னர்களுக்காக தங்களுயிரையே தந்த அக்டோபர் 24ம் தேதியை வசதியாக மறந்து விடுவீர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க, 200 வருடங்களுக்கு முன்பான காலத்திலேயே ’வீரசங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியரை மறந்து விட்டதா நாம் தமிழர் கட்சி? தமிழீழ விடுதலைப்புலிகளின் கொரில்லா போர்முறையை, 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தி காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை புறக்கணித்ததன் உள்நோக்கம் தான் என்ன?

27 அக்டோபர் 2014

அக்டோபர் 24க்கு பின்னாலுள்ள குழப்பங்கள்!

தமிழ் தேசியம் காத்த மாமன்னர் மருதுபாண்டியரின் 213வது நினைவேந்தல் நாளை அனுசரித்து கொண்டிருக்கும் அனைவரும் காளையார்கோவில் நினைவிடத்திற்கும், திருப்பத்தூர் நினைவிடத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும்.

01. காளையார்கோவிலில் யாருடைய உடல் உள்ளது?

02. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிட்ட பிறகு தலைகள் துண்டிக்கப்பட்டனவா?

03. காளையார்கோவிலில் உடலே இல்லையா?

04. காளையார்கோவிலில் வெறும் தலை மட்டும் தான் உள்ளதா?

05. காளையார்கோவிலில் ஆசாரியின் உடல் என சிலர் சொல்வதின் உண்மை என்ன?

06. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்கள் யாருடையது?

07. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்களில் தலைகள் இருந்ததா?

08. அக்டோபர் 24க்கும் அக்டோபர் 27க்கும் உள்ள தொடர்பு என்ன?

09. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிடப்பட்ட நாளான அக்டோபர் 24ம் தேதியை தானே நாம் அனுசரிக்க வேண்டும்?

10. அக்டோபர் 27ம் தேதியை அனுசரிப்பதன் உள் அரசியல் என்ன?

இந்த பத்து கேள்விகளுக்கும் சரியான விடை தெரியாமல் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து மட்டும் என்ன பயன்?

- இரா.ச.இமலாதித்தன்

25 அக்டோபர் 2014

பாலுக்கும் பால் ஊத்தியாச்சு!

பால் விலையை லிட்டருக்கு பத்து ரூபாய் ஏற்றியுள்ள தற்போதைய தமிழக முதல்வரும், முன்னாள் டீக்கடை காரருமாகிய திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒரு நாளைக்கு சராசரியாக இருமுறை டீ குடிக்கும் குடிமகனான அடியேனின் நன்றி!

டீக்கடைக்காரனாகவே வாழ்க்கையை ஓட்டியிருந்தால் இந்நேரம் பால் விலை உயர்வுக்கு ஆளும் வர்க்கத்தை சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்திருப்பார் திரு. ஓ.பி.எஸ். அவர் நேரம், பரணி தரணியை ஆண்டு கொண்டிருக்கின்றது. பிறந்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கிடைக்காமல் பாக்கெட் பாலை நம்பி வாழும் தமிழ் சமூகத்திற்கு, இந்த பால் விலை உயர்வு பெரும்சுமையாக இருக்கும். கண்டிப்பாக இது வரும் தேர்தலிலும் எதிரொலிக்கும்.

நடுத்தர எளிய மக்களின் ஒரு வேளை உணவாகவே இருந்து வரும் இந்த டீ/காபியின் மூலப்பொருளான பால் விலையை 24 ரூபாயிலிருந்து 34 ரூபாய்க்கு ஏறத்தாழ 50% விலையேற்றத்தால் பாதிக்கப்படுவதும் பெரும்பாலும் ஏழை மக்கள் தான். போற போக்கை பார்த்தால் சாவுக்கு கூட மூன்றாம்நாள் பால் தெளிக்க மாட்டாங்க போலிருக்கு. அந்த நிலை ஏற்படும் முன்னரே மக்கள் விரோத அரசுக்கும் தேர்தலில் பால் ஊத்திடுவாய்ங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, நம்மாளுகளும் ரோசக்காரய்ங்க* தான்...

*200 ரூபாய் வாங்காத வரைக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

24 அக்டோபர் 2014

எஸ்.எஸ்.ஆர் என்ற லட்சியம்!

மாமன்னர் மருதுபாண்டியரின் புகழை உலகறிய செய்யும் விதமாக, ’கவியரசர் கண்ணதாசன்’ தயாரித்த 'சிவகங்கமை சீமை' என்ற திரைக்காவியத்தில் ’முத்தழகு சேர்வை’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ’இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ராஜேந்திரன்’ அவர்கள், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 213வது நினைவேந்தலில் நாளான இன்று (24.10.2014 மரணத்தை தழுவியுள்ளார். மேலும், அவருடைய மகன்களில் ஒருவரது பெயர் ”மருதுபாண்டியன்” என்பதும் குறிப்பிடதக்க ஒன்று.

மருதுபாண்டியர் நினைவேந்தல்!




எதிரிகளின் வஞ்சகத்தாலும், துரோகிகளின் சூழ்ச்சியாலும், தங்களது மன்னனை காட்டிக்கொடுக்க மனமில்லாத சாதி/மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்ட சிவகங்கை சீமை மக்களும் ஒரே நாளில் தாய்த்தமிழ் மண்ணுக்காக தன்னுயிரை கொடுத்த நாளான, அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 213ம் ஆண்டு நினைவேந்தல்!

வீர வணக்கம்!


(படம்:  01.பெரிய மருது, 02.காளையார்கோவில் கோபுரத்தை கொழுத்திய அதிமுகவினர், வட்டமிட்ட உள்படத்தில் மருதுவின் உருவம்)

23 அக்டோபர் 2014

ஒரு சமூகத்தின் தலைக்கு மேலே கத்தி!

"ஐயாயிரம் கோடி கடன் வாங்கினவன், பணத்தை கட்ட முடியலைன்னு மீடியா முன்னாடி கையை விரிக்கிறானே தவிர தற்கொலை பண்ணிக்கல. அந்த கடனை கொடுத்த பேங்க் காரனும் தற்கொலை பண்ணிக்கல. ஆனால், வெறும் ஐயாயிரம் ரூபாய் கடனை கட்ட முடியாத விவசாயி அவமானம் தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்கிறான்” - இது கத்தி படத்தில் திரு.விஜய் பேசும் வசனம். அச்சு அசலாக இந்த வசனத்தை ரொம்ப நாளுக்கு முன்னாடியே திரு.சீமான் பல மேடைகளில் பேசி இருக்கார். ஆனால் கத்தி படத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரு ஏ.ஆர்.முருகதாஸ் பேருதான் வருது. எனக்கென்னமோ பல வசனங்களை திரு. சீமான் தான் எழுதி கொடுத்திருப்பாருன்னு தோணுது. அதுனால தான் லைக்கா பிரச்சனையில கத்திக்கு எதிராக சீமான் குரல் கொடுக்கலை போல.

”மக்களின் முதல்வர்" என்பதை போன மாசத்துல இருந்து கேள்வி பட்டிருப்பீங்க. ஆனால் "மக்களின் சூப்பர் ஸ்டார்" என்பதை இனிமே எப்போதும் கேட்பீங்கன்னு நினைக்கிறேன். எங்க ஊரு நாகப்பட்டினம் தியேட்டர் வாசல் முழுக்க ஃப்ளக்ஸ் போர்டுகளில் இப்படித்தான் இருந்துச்சு.
மக்களின் சூப்பர் ஸ்டார் விஜய் நடிக்கும் கத்தி!

கோலா கோலா என எல்லாரும் கொக்கரிப்பதை பார்க்கும் போது ஒரேவொரு சந்தேகம் தான் வருகின்றது. என்னமோ திரு. விஜய் சொல்லித்தான் இவர்களெல்லாம் பெப்சி/கோலா குடிக்கவே ஆரம்பித்தது போல அலப்பறை செய்கிறார்கள். அப்படியென்றால், இன்று அதே திரு.விஜய் தானே, விவசாயம் பார்க்க சொல்கிறார். அதை செய்ய முயற்சி செய்ய வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு, விஜய் விஜய் என ஏளனம் செய்வது நேர விரயம் தான். ஒரு காலத்தில் இதே திரு.ரஜினியை பைத்தியமென சொன்னதும் உங்களை போன்ற ஓரு கூட்டம் தான். ஆனால் தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாக, அதே திரு.ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு இருந்ததும் உங்களை போன்ற ஒரு கூட்டம் தான். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கை என்பது நேர் கோடு அல்ல. அது மிகப்பெரிய ஒரு வட்டம்! இங்கே ஏளனம் செய்யப்படுவையெல்லாம் எட்டமுடியா உயரத்தில் உச்சம் தொட்டு விட்டது என்பதே கடந்த கால வரலாறு.

கத்தி திரைப்படம் மூலம், நாகப்பட்டினம் - தஞ்சாவூர் - திருவாரூர் உள்ளிட்ட டெல்டாவிலுள்ள விவசாய நிலங்களில், மீத்தேன் வாயு எடுத்து காவிரி படுகையை பாலைவனமாக மாற்ற முயலும் அந்நிய பன்னாட்டு நிறுவனத்தின் சதியை, கடைகோடி பாமரனுக்கும் சென்றடைய வைத்துள்ள நடிகர் திரு. விஜய் அவர்களின் மக்கள் இயக்கத்தினர் உள்பட அனைவரும் சமூக களத்திலும் போராட்ட குணத்தோடு கால் பதிப்பார்கள் என நம்புகிறேன். மீத்தேன் எதிர்ப்பு இளையோர் குழுவோடு இணைய தொடர்பு கொள்க.
Ganesa Moorthy : 9500796349 | Sabari Nivas : 9865713466


- இரா.ச.இமலாதித்தன்

கத்தி - விமர்சனம்

கத்தி, சமூக விழிப்புணர்வு படம். விவசாயத்தையும் - கிராமத்தையும் மையப்படுத்திய கதைக்களத்தில், முதல் பாதி மனதை கவரும் கமர்சியல் என்றாலும், இரண்டாம் பாதி மனதை சுடும் சோசியல். இது திரு.விஜய் படமாகவும், திரு.முருகதாஸ் படமாகவும் இருக்க இந்த இரண்டும் தான் காரணமாக இருக்கின்றது. மேலும், துப்பாக்கி - தேசியத்தின் மீதான சாடல் என்று சொன்னால், கத்தி - தமிழகத்தின் சாடல் என்றே சொல்லலாம். படத்தின் பல இடங்களில் சோசியல் பஞ்ச் இருக்கு. கூடவே, எங்க ஊரு நாகப்பட்டினத்தையும் டெல்டாவையும் சொல்லி, மிக முக்கியமாக மீத்தேன் பிரச்சனையை சுட்டிக்காட்டி திரு.விஜய் பேட்டி கொடுக்கும் காட்சி நச்.

வெறும் தண்ணி தானே? அப்படின்னு நிருபர் கேட்கும் போது, 2ஜிங்கிறது வெறும் காத்து தான். அதுல பல லட்சம் கோடி ஊழல் பண்ணலைன்னா? பதில் கேள்வி கேட்பாரு திரு.விஜய். அது போலவே ஐயாயிரம் கோடி ஊழல்ன்னு அழுத்தம் திருத்தமாக எல்லா தரப்பு அரசியல் ஊழலையும் காட்டமாக பதிவு செய்திருக்கின்றது இந்த கத்தி.

மேலும், நீயா நானா, மானாட மயிலாட போன்ற ரியாலிட்டி ஷோக்களின் தில்லுமுல்லுவையும், கூடவே செய்தி சேனல் - பத்திரிகைகளின் ஊடக விபச்சாரத்தையும் தோலுரித்து காட்டிருக்கும் விதம் அருமை. திரையரங்கினுள் பல வசனங்களுக்கு கைத்தட்டலும் விசில் சத்தமும் காதை கிழிக்கின்றது. படத்தில் வரும் பெரும்பாலான வசனங்கள், விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயி மகனான எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதே உண்மை. வைகை ஆற்றில் ஒரு நாளில் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தென் தமிழகத்தின் வறட்சிகளில் ஒரு காரணமாக இருந்து வரும் பெப்சி / கோலா கம்பெனி உள்ளிட்ட அனைத்து பன்னாட்டு நிறுவனங்களின் கோரமுகத்தை பதம் பார்த்திருக்கும் இந்த கத்தி, கண்டிப்பாக விஜயின் ஹிட் லிஸ்டில் இணைய போகின்றது. தாராளமாக பார்க்கலாம். கத்தி, நல்லாருக்கு.

- இரா.ச.இமலாதித்தன்

22 அக்டோபர் 2014

தீபஒளி வாழ்த்துகள்!

தீபாவளியை கொண்டாட வேண்டாம் ! - சீமான்.

அண்ணன் சீமான் அவர்களே,

தீபாவளி வேண்டாம்ன்னு சொன்னீங்க மகிழ்ச்சி. அப்படியே உங்க மதப் பண்டிகையான கிருஸ்துமஸ் உள்ளிட்ட ரம்ஜான் - மெஹரம், பக்ரீத் பண்டிகைகளையும் கொண்டாட வேண்டாம்ன்னு சொல்றதுக்கு உங்களுக்கு வக்கு இருக்கா? அது இல்லைன்னா மூடிக்கிட்டு உங்க வீட்டு கிச்சன்லேயே களமாட வேண்டியது தானே? அப்பறம் என்ன மசிருக்குண்ணே எங்க காலுல வந்து விழுறீங்க?

தீயத்தன்மை யாருக்குள் இருந்தாலும் அது அசுரகுணம்; அவன் அசுரன் தான். அதில் தமிழன் - ஆரியன் என்ற வேறுபாடில்லை என்பது என் யூகம். ஆகையால் ஆரிய அசுரர்களின் இருள் நிறைந்த எண்ணமெல்லாம் இந்த தீப ஒளியால் ஒழியட்டும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த தமிழனின் தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

21 அக்டோபர் 2014

தமிழுணர்வால் பாதிக்கப்படுகிறதா தமிழ் சினிமா?

லைக்கா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எந்த தமிழ் அமைப்புக்காவுது, பாரத ரத்னா விருதை ராஜபக்சேவிற்கு கொடுக்க சொல்லிருக்கும் சுப்ரமணியசுவாமியை எதிர்க்க திராணி இருக்கா? அப்படி எந்தவொரு அறிக்கையும் வந்தமாதிரி தெரியலை. பணம் போட்டு படத்தை வெளியிடுறவனை மிரட்டினால் அடி பணிவான்; நமக்கும் இலவசமாக விளம்பரம் கிடைக்கும் என்பதை தவிர வேறெந்த சமூக அக்கறையும் இருந்த மாதிரி தெரியவில்லை. தமிழகமெங்கும் சிங்களவர்களின் நிறுவனங்கள் எக்கசக்கமாய் இருக்கின்றது. அதை எதிர்த்து மூட வக்கில்லை. இந்த லட்சணத்துல அம்மாவிற்கு நன்றின்னு வெட்கமே இல்லாமல், அறிக்கை விட்டு சமாதானம் ஆகுறதுக்கு பேரு தான் இவர்களின் தமிழுணர்வு. 

அதெப்படி, லைக்கா என்ற பெயர் இல்லாமல் படம் வெளி வந்தால் எல்லாம் சரி ஆகிடுமா? எப்படி பார்த்தாலும், அந்த படத்தோட தயாரிப்பாளர் லைக்காவும் - ஐங்கரனும் தானே? அந்த படத்தின் லாப நஷ்டமும் இந்த இரு நிறுவனத்துக்கும் தானே? அப்பறம் எப்படிடா வெட்கமே இல்லாமல் நன்றின்னு சொல்லிட்டு வெள்ளையும் சொள்ளையுமா அலையுறீங்க? இனிமே தமிழ் தமிழுனர்வுன்னு எந்த போராட்டத்தை கையில் எடுக்காமல், நவ துவாரங்களையும் மூடிகிட்டு போங்கடா நொன்னைங்களா!

தந்தி - புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் இன்றைய (21.10.2014) சிறப்பு விவாதங்களும் தமிழ் அமைப்புகளின் கத்தி திரைப்பட எதிர்ப்பு தொடர்பாகவே இருந்தது. அங்கே நடத்தப்பட்ட இரு கருத்து கணிப்புகளிலும், பாதிக்கும் மேற்பட்ட மக்களின் பெரும்பான்மை கருத்தாக 'விஜய் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி' என்பதாக தான் இருந்தது. எது எப்படியோ, 'இளைய தளபதி' திரு.விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற சக தமிழனாய் அடியேனின் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்