04 டிசம்பர் 2014

பங்காளிகளுக்காக!

பங்காளி பங்காளின்னு உயிரையே கொடுக்கிற மாதிரி பாசத்தை பொழியிற பாதி பேரு தன்னோட கல்யாணதுக்கு கூட அழைப்பு கொடுக்க மாட்டாய்ங்க. அப்பறம் என்ன மயிருக்கு இவிய்ங்கள நான் நம்பணும்? ஆர்குட் முதல் ஃபேஸ்புக் வரை பல பேரை பல வருசமா பார்த்து கடந்தாச்சு.

ஒரு பங்காளி என்ன பண்ணினாருன்னா, நாகை டவுன்ல உள்ள என் வீட்டையெல்லாம் வசதியாக கடந்து 20 மைல்களுக்கு அப்பாலுள்ள, ஓர் அரசியல் தலைவருக்கு தன்னுடைய கல்யாண பத்திரிகையை கொண்டு போய் கொடுத்தாரு. பிறகு எனக்கு போன்ல கூப்பிட்டு கல்யாணத்து அழைப்பு கொடுத்தாரு. அவர் கல்யாணத்துக்கு நான் போகல. ஏன் போகலைன்னு சொல்லித்தான் தெரியணும்ன்னு இல்ல. நாகையில உள்ள எளியவனான என வீட்டுக்கு நேர்ல வந்து பத்திரிகை கொடுத்தால் தனக்கு அவமானம் என நினைத்த அவர், என் ஏரியாவை கடந்து டவுனுக்கு வெளியே உள்ள அரசியல் தலைவருக்கு நேரில் சென்று பூ பழமெல்லாம் கொடுத்து பத்திரிகை வைத்து வந்தார். அந்த பங்காளிக்கு, காசு பணம் பேரு புகழெல்லாம் வரும் போகும் என்பதும், உண்மையான நட்பு எல்லாரிடமும் வருவதில்லை என்பதும் தெரியாமல் போய்டுச்சேன்னு நினைச்சேன்; சிரிச்சேன்.

இலவச அறிவுரை:

ஃபேஸ்புக் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கிற மொத்த பேருல வெறும் 10%க்கும் குறைவான ஆளுங்க கிட்ட மட்டும் தான் நம்ம வாழ்க்கையில நடக்குற நல்லது கெட்டதுக்கு உரிமையோட கூப்பிட முடியுமும். மத்ததெல்லாம் சும்மா அண்ணே, தம்பி, பங்காளி, சகோ, ப்ரோ, ஜி, பாஸுன்னு வாயால வடை சுடுற கேஸ் தான். அதுனால சோசியல் நெட்வொர்க் பழக்க வழக்களை வச்சு நட்பின் தரத்தையும், உறவின் தரத்தையும் எடை போட கூடாது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக