சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 டிசம்பர் 2017

சட்டம் ஒரு சார்பானது!

"பொம்பள புள்ளைகள ஆசையாசையா பெத்தெடுத்து வளர்த்தவனெல்லாம், இனிமே பேசாம எவன் கூட வேணும்னாலும் கூட்டி கொடுத்துட்டு போய்டுங்க!"ன்னு இதன் மூலம் புரிஞ்சிக்கலாமா?
இப்படித்தான் பாமரனின் கேள்விகளும் இருக்கும். நான் அப்படியல்ல; ஒரு கொலைக்கு எதிர்வினையாக ஆறு பேரையல்ல, ஆயிரம் பேரை கூட கொலை செய்யலாமென்று நீதிமன்றம் சொன்னால் அதையும் ஏற்றுக்கொள்ளும் சாமானியர்களில் நானும் ஒருவன். காலம் முழுக்க பொய்யையே முதலீடாக்கி வாதாடிய வக்கீல் திடீரென கணம் நீதிபதியாகும் உயரிய நடைமுறை பற்றி எம்.ஆர்.ராதா அன்று சொன்ன வார்த்தைகள் ஒருபுறம் இருந்தாலும், இவ்வேளையில் நினைவுக்கு வருவது 'கடுப்பேத்துறார் மை லார்ட்' என்ற வார்த்தைகள் மட்டும் தான்!
(இதுபோன்ற எக்கசக்கமான காமெடி வார்த்தைகள் கொண்ட பல மீம்களுக்கு பஞ்சம் ஏற்பட்டதற்கான காரணமே கீழே படத்திலுள்ள இருவரின் மோதல்களால் தான்)

24 மார்ச் 2015

66 ஏ சட்டம் ரத்து!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தனி நபர்களின் கருத்துகளை வைத்து, கைது - சிறையென அச்சமூட்டி கொண்டிருந்த 66-ஏ சட்டத்தை உச்சநீதிமன்றம் இன்று தடைவிதித்துள்ளது. “தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.” எனவே அதை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் சொல்லியுள்ளதை வரவேற்றும் அதே சமயம், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வரையறையே இல்லாமல் அவதூறு பரப்புவதை நாம் மறுபரிசீலனை செய்து சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியதும் இனி அவசியமாகிறது. ஆதாரமே இல்லாமல், யாரை வேண்டுமானாலும் அவன், இவளென்று ஒருமையில் பேசி தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கருத்து சுதந்திரம் என்ற வகையில் வெளிப்படுத்துவதையும் இங்கு ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரம் என்பதிலும் ஒருவித கட்டுப்பாடு இருக்க வேண்டும். அப்போதுதான் அது நமக்கு நிலையாக கிடைக்கும். தவறு எங்கிருப்பினும் தயக்கமில்லாமல், அதை வெளிப்படையாக சுட்டிக்காட்டுவது தான் கருத்து சுதந்திரம். ஆனால், நமக்கு வேண்டாதவர்களை அனுமானத்தின் அடிப்படையில் எதை வேண்டுமானாலும் சொல்வது என்பதெல்லாம் கருத்து சுதந்திரம் என்ற வரைவுக்குள் வருவதில்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கும் நாம், நாகரீகமான முறையில் யார் மீதான தவறையும் சரியான வழியில் வெளிப்படுத்துவோம். அதுதான் ஜனநாயக மக்களின் சரியான எதிர்வினையாக அமையக்கூடும்.

ஒருகாலத்தில், நேற்றைய செய்திகளை இன்றைய தேதியில் கொடுத்து கொண்டிருந்த அச்சு ஊடகங்களை, அன்றைய செய்திகளை அன்றைக்கே தந்த தொலைக்காட்சி ஊடகங்கள் ஏற்கனவே அசைத்து பார்த்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை விட நொடிக்கு நொடி நேரடியாக செய்திகளை சுடச்சுட தரத்துவங்கிய சமூக வலைதளங்களால், தொலைக்காட்சி ஊடகங்களும் தற்பொழுது ஆட்டம் கண்டு கிடக்கின்றன. இப்போதெல்லாம் சமூக ஊடகங்களில் எந்த தலைப்பு அதிக அளவில் பகிரப்படுகின்றதோ, அதையே தான் தொலைக்காட்சி ஊடகங்களும் பேச வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி வெகுநாட்கள் ஆகிவிட்டது. நெட் பேக்குடன் கூடிய ஓர் ஆண்ட்ராய்டு செல்போன் இருந்தால் போதும், அனைவருடனும் எல்லாவிதமான செய்திகளையும் உடனுக்குடன் பகிரமுடியுமென்ற நிலை வந்த பின்னால், மக்களாட்சியின் நான்காம் தூணான ஊடக சக்தியே ஓரளவுக்கு நம் பின்னால் வந்து விட்டது எனலாம். எனவே, அதன் தன்மையையும் - அத்தியாவசியத்தையும் உணர்ந்து பொறுப்போடு இயங்குவது நம் ஒவ்வொருவரின் கடமை. ஜெய்ஹிந்த்!

- இரா.ச.இமலாதித்தன்