நேதாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நேதாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 செப்டம்பர் 2022

ஆண்ட பரம்பரையில் வந்த இங்கிலாந்த ராணி!






இந்திய மண்ணை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை எதிர்த்த நேதாஜிக்கு ஒரு பக்கம் சிலை திறக்கிறோம். மறுபக்கம் அந்த ஆங்கிலேய அரச வம்சத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்ததற்காக நாடு முழுதும் துக்கம் அனுசரித்து அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விடுறோம். இது இந்திய கொள்கை.

தமிழ்நாட்டிலோ, எல்லா சாதியிலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப்போரட்ட வீரர்களை, தேசபக்தி நாயகர்களை விழா எடுத்து கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களை சூழ்ச்சியால் வீழ்த்தி கொன்றொழித்த ஆங்கிலேய மன்னர் வம்சத்தை சேர்ந்த வயது முதிர்வால் இறந்து போன மூதாட்டிக்கும் இரங்கற்பா படிக்கின்றோம்.

இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?

தமிழ்நாட்டில் மன்னர் பரம்பரை, ஆண்ட பரம்பரை என சொல்பவர்களை கடுமையாக எதிர்க்கும் எல்லா குரூப்களும் இங்கிலாந்து ராணிக்கு ராஜவிசுவாசம் காட்டுகின்றனர். 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மட்டுமில்லாது அவர்களது குடிவழி உறவினர்கள் என திருப்பத்தூரில் 500க்கும் மேற்பட்ட தமிழர்களை, தேச பக்தர்களை, மண்ணின் மைந்தர்களை கொன்றொழித்தன் பின்னணியில் இந்த இங்கிலாந்து ராணியின் குடும்பமும் உண்டென என்பது கூடவா தெரியாது? இதையெல்லாம் கேட்டால், முரட்டு முட்டு தான் கொடுக்கிறார்கள். ஒருபோதும் நம் வரலாற்றை மறக்காதீர்கள். அது கடந்த காலத்தை மட்டும் நினைவு படுத்தவில்லை. எதிர்காலத்தை எச்சரிக்கை செய்யும் வல்லமையும் அதற்குண்டு.

- இரா.ச. இமலாதித்தன்


பிற்சேர்க்கை:

இந்த சாதி ஒளிப்பு போராளிகள், தலித்திய போராளிகள், பகுத்தறிவு போராளிகள், ஆண்டப்பரம்பரை எதிர்ப்பு போராளிகள், ஆணவக்கொலை என பெயர்மாற்றம் செய்த போராளிகள், கருஞ்சட்டை, நீலச்சட்டை, பச்சை சட்டை, சிவப்புசட்டை என வண்ணப்போராளிகளெல்லாம் சேர்ந்து, இந்தியா உள்பட நூற்றுகணக்கான நாடுகளை அடிமைப்படுத்திய அந்த மன்னர் பரம்பரையை சேர்ந்த ராணிக்கு விதவிதமா இரங்கல் பா படிச்சாட்டாங்க. இந்நேரம் அந்த மகாராணியின் ஆன்மா சாந்தி அடைஞ்சிருக்கணும்.

11 மார்ச் 2016

அரசியல் களத்தில், நேதாஜியின் பேரனும் - பசும்பொன் தேவரின் பேரனும்!


நேதாஜியின் பேரனுக்கு கூட நேதாஜி உருவாக்கிய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்காததால், இன்றைக்கு அவர் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக்க பட்டிருக்கிறார் என்பதுதான் சமகால அரசியல் நிலவரம்.

மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தற்போது ஓரளவுக்கு அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்படுகின்ற பார்வார்ட் ப்ளாக் கட்சியும், அ.இ.அ.தி.மு.க போல அகில இந்திய கட்சிதான் என்ற நிலைக்கு மாறி போய்விட்டது. அப்படிப்பட்ட பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக இருந்த பசும்பொன் தேவரின் பேரனுக்கும் கூட பார்வார்ட் ப்ளாக் கட்சி உரிய அங்கீகாரம் கொடுக்காததால் தனியாக பசும்பொன் தேசிய கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
ஆனால் இதையே சாதகமாக சொல்லக்கூடும். 'பார்த்தீர்களா, நேதாஜி பேரனோ, பசும்பொன் தேவர் பேரனோ யாராக இருந்தாலும், அவர்களை கட்சியில் இணைக்காமல் வாரிசு அரசியலையும் ஊக்குவிக்காத கட்சியாக பார்வார்ட் ப்ளாக் கட்சி விளங்குகிறது' என வாதத்திற்காக சொல்லிக்கொள்ளலாம்.

சாமானியனாக என் பார்வையில், இருபெரும் தலைவர்களின் பேரன்களும் அரசியல் பக்கமே வராமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அரசியலில் பயணிக்க விருப்பம் இருக்கும் போது, அதை பார்வார்ட் ப்ளாக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டதென்றே தோன்றுகிறது.

நேதாஜியும், பசும்பொன் தேவரும் வளர்த்தெடுத்த கட்சியில் அவர்களது பேரன்களை கூட உறுப்பினராக்க முடியவில்லை என்ற எதார்த்தமும் புரியாமல், சாதிக்கட்சி என்று முத்திரையும் குத்தப்பட்டதென்ற உண்மையும் உணராமல், இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள பார்வார்ட் ப்ளாக் கட்சி, குறைந்தது ஐந்து தொகுதிகளையாவது அதிமுக கூட்டணியில் வாங்கி, கட்சியை பலமாக்காட்டும்.

ஜெய்ஹிந்த்!

- இரா.ச. இமலாதித்தன்

25 ஜனவரி 2016

நேதாஜி சிலையும் - அகமுடையாரும்!




மருதுசீமையான சிவகங்கையில் பல எதிர்ப்புகளுக்கும் - இடையூறுகளுக்கும் - அச்சுறுத்தலுக்கும் அசராமல், உலகிலேயே முதன்முறையாக நேதாஜி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு சிலை வைத்த பெரும்புகழ் அகமுடையார் குலத்தோன்றல் ஐயா கே.சுந்தராஜன் சேர்வையையே சேரும். இன்று உலகெங்கிலும் ஊருக்கொன்றும் கூட நேதாஜியின் சிலையை திறக்கலாம்; ஆனால் அன்றைய காலச்சூழல் என்பது முற்றிலும் வேறு; அப்படியானதொரு காலவெளியான 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக, நேதாஜியின் சிலை சுதந்திரமடைவதற்கு முன்பாகவே சிவகங்கையில் நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23ம் தேதியன்று அவரது சிலையை கம்பீரத்தோடு திறந்து வைத்தார் கே.சுந்தர்ராஜன் சேர்வை!


நேதாஜி கட்டமைத்த தேசிய இராணுவத்தில் பணியாற்றிய எங்கள் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவரின் பிறந்தநாள் எதுவென தெரியாது; ஆனாலும், தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் வழிகாட்டியான நேதாஜியின் பிறந்தநாளில், வீரமிகு அ.பக்கிரிசாமித்தேவரையும், வீரமிகு கே.சுந்தர்ராஜன் சேர்வையையும் அவர்களது பேரனாக நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி.

தேச தந்தைக்கு புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

#நேதாஜி #சுந்தர்ராஜன்சேர்வை #அகமுடையார்

23 ஜனவரி 2016

நேதாஜி ஜெயந்தி வாழ்த்துகள்!

என்னோட பெரிய தாத்தா வீரமிகு. அ.பக்கிரிசாமி தேவரும், நேதாஜி வழிநடத்திய ஐ.என்.ஏ என்ற இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதில் எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் பெருமையே!

(அடைக்கலத்தேவர் வகையறா)

எம் அண்ணன் மேதகு வே.பிரபாகரனின் அரசியல் ஆசானான உலகத் தலைவன் நேதாஜி மட்டும் தான், இந்தியாவின் தேசத்தந்தை என்பதை அனைத்து தரப்பட்ட இளைஞர்களும் ஏற்கும் காலத்தில் தான் இந்தியா என்றொரு நாடு வல்லரசாக முடியும்.

நேதாஜி ஜெயந்தி வாழ்த்துகள்!

23 நவம்பர் 2015

நரேந்திர மோடிக்களால் நரேந்திரனாக முடியாது!



சிகோகோவில், அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! என புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்தி, இந்திய ஆன்மீகத்தை வெளியுலகிற்கு அடையாளப்படுத்திய விவேகானந்தரை, அங்கு அனுப்பி வைத்ததே பாசுகர சேதுபதி என்ற தமிழர் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தனக்கு வந்த அழைப்பை பெருந்தன்மையாக, என்னை விட விவேகானந்தர் சென்றால் பொருத்தமாக இருக்குமென எண்ணி அனைத்து பயண செலவுகளையும் செய்து வைத்தவர் பாசுகர சேதுபதி.

நேற்று, மலேசியாவில் விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, சகோதர சகோதரிகளே என உரையாற்றியதற்காக நரேந்திர மோடியை விவேகானந்தரோடு ஒப்பிட்டு புகழ்வதை ஏற்க முடியவில்லை. விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால், மோடியின் பெயரோடு மட்டும் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், எத்தனை பிறப்பெடுத்தாலும் மோடி விவேகானந்தர் ஆக முடியாது.

அரசியலில் நேதாஜியையும், ஆன்மீகத்தில் விவேகானந்தரையும் பின்பற்ற சொன்ன பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் உறவுகள் இந்த மாதிரியான, தவறான ஒப்பீடுகளையும் கண்டிக்க வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

18 செப்டம்பர் 2015

நேதாஜியின் ஆவணங்களை வெளியிட்டமைக்கு நன்றி!

என் பெரிய தாத்தா தெய்வத்திரு. அ.பக்கிரிசாமித்தேவர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர் என்ற வகையில், இதுநாள் வரை வெளியிடப்படாமலே மறைத்து வைத்திருந்த நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்ட மாண்புமிகு மம்தா பானர்ஜிக்கு எம் நன்றிகள்!

30 ஜனவரி 2015

காந்தி என்ன கடவுளா?


 
காந்தி என்ன கடவுளா? தேசத்தந்தைன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டத்துக்கே ஒரு மண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாய்ங்க. அப்பறம் என்ன மண்ணுக்கு வர்ணாசிரம எண்ணங்களை மனம் முழுக்க வைத்திருந்த காந்தியை கொண்டாட வேண்டும்? 1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை எதிர்த்து, தன்னுடைய ஆதரவு வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை காந்தி போட்டியிட வைத்தார். பெரும்பான்மை பலத்தோடு நேதாஜி வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமலும் உண்ணாவிரதம் இருந்த காந்தி, எப்படி மகாத்மாவாக இருக்க முடியும்? காந்தியின் மனபிறழ்வுக்காகவே தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார் நேதாஜி என்பது வரலாறு. மேலும் தன்னுடைய கடைசி காலம் வரையிலும் பெண்களின் அரவணைப்பிலேயே சுற்றி திரிந்த குஜராத்தியான காந்தி, சாதாராண ஆத்மா தான்! அவரது இறப்புக்கெல்லாம் இப்போது போலியாக நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் வேதனையான விசயம். பிறப்பால் வைசியராக இருந்தாலும் காந்தியும் ஒரு பார்பான சித்தாந்தவாதி, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவும் ஒரு பார்பானவாதி. அந்த இருவருக்காக, கருப்பு சட்டை போராளி(?)களெல்லாம், பார்பன சித்தாந்தவாதி காந்திக்கு ஆதரவாக, பார்பன கோட்சேவின் படத்தை எரிப்பது தான் உச்சக்கட்ட காமெடி.

23 ஜனவரி 2015

நேதாஜி விசயத்தில் பா.ஜ.க.!

தேர்தலுக்கு முன்னாடி ஒன்றை சொல்வது, வெற்றி பெற்றபின் ஒன்றை சொல்வது என வழக்கமான அரசியல்வாதியாக மாற முயற்சிக்கும் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு துணிவிருந்தால், அவர் தலைமை வகிக்கும் மத்திய சர்க்காரின் வசமுள்ள தேசத்தந்தை நேதாஜியின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடட்டுமே. தேர்தலுக்கு முன்பாக நேதாஜியின் ஆவணங்களை வெளிக்கொண்டு வருவேனென நேதாஜியின் குடும்பத்தினரிடம் மார்தட்டி உறுதிமொழி கூறிய, மோடி அவர்கள் இப்போது மட்டும் ஏன் பின்வாங்குகிறார். மற்ற நாடுகளுக்காக பயந்து, ஒரு தேசத்தந்தையின் மரணம் பற்றிய ரகசிய ஆவணங்களையே வெளியிட அஞ்சும் பாரதம், எப்படி மற்ற நாடுகளுக்கு தலைமையேற்கும் பண்பை வளர்த்து கொள்ள போகிறது? கடைசி வரை அடிமையாகவே வாழ பழகிக்கொள்ள வேண்டியது தான் நமக்கெல்லாம் எளிதாகிவிட்டது.

Narendra Modi ‪#‎DeclassifyNetajiFiles‬

ரத்தமும் சுதந்திரமும் தேசபக்தியானதே!

 
ஜனவரி 23ம் தேதியான இதே நாளில் தான் அமெரிக்காவின் பூர்வகுடி மக்களான செவ்விந்தியர்கள் என்றழைக்கப்படும் மண்ணின் மைந்தர்களை பெரும் எண்ணிக்கையில் இனவழிப்பு செய்தது வெள்ளை ஏகாகிபத்தியம். அதே வெள்ளை ஏகாதிபத்தியத்திடம் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்த பாரத சமூகம், அக்டோபர் 2ம் தேதியை மட்டும் ஞாபகமாக வைத்து கொண்டு ஜனவரி 23ம் தேதியை வசதியாக மறந்து விடுகிறது. ”இரத்தத்தை கொடுக்க துணியுங்கள், வெள்ளை ஏகாகிபத்தியத்திடம் அடிமைப்பட்ட தேசத்தை மீட்டெடுத்து சுதந்திரமடைய வைப்போம்!” என்று முழங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுடைய பிறந்த நாள் இன்று. வெள்ளை ஏகாதிபத்தியத்தால் செவ்வியந்தர்களின் இரத்தக்கறை படிந்த அதே நாளில் பிறப்பெடுத்த நமது தேசத்தந்தையின் அவதார தினத்தை, தேசிய தேசபக்தி தினமாக அனுசரிப்போம்!

ஜெய்ஹிந்த்

14 நவம்பர் 2014

நேரு மாமாவும் மவுண்ட் பேட்டனும்!

ஆங்கில ஆட்சியின் போது ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள் நேதாஜியும் தேவரும். அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றவுடன், அவரை ’ஆசிய ஜோதி’ என்று புகழ்ந்து உலகில் மாமனிதர்கள் பலரும் நேருவை சந்திக்க விரும்பினர். ஆனால் நேருவோ "நான் ஃபார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்து, அவருடன் கை குலுக்க விரும்புகிறேன்" என்றார்.

ஆனால் பசும்பொன் தேவரோ, "என் தலைவர் நேதாஜியைக் காட்டிக் கொடுத்தக் கையோடு நான் குலுக்க மாட்டேன்” என்று கூறி நேருவின் கையைத் தட்டி விட்டு சென்றார். என்பது கடந்தகால அரசியல் வரலாறு!

”இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி!” என அண்ணன் வே. பிரபாகரன் சொல்லியது போல, வரலாறு தான் நமக்கு வழிகாட்டியே. அப்படிப்பட்ட துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரர் நம்ம நேரு மாமா.


மேலும், மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்த நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேருவும் - தேவரும்!


1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை, நேரு தேவரிடம் தூது அனுப்பினார். பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தேவர் விரும்பும் எந்த பதவியையும் மத்தியிலோ - மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும், சீலபத்ரயாஜி தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை. மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார். உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார்.அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார்.

கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார். அதில், பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும், எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும், கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர, பார்வர்ட் பிளாக் கட்சியானது காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார்.

டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி, அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி, தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி, துணைத்தலைவர் ஆனார் தேவர். தேவரின் விருப்பத்திற்கு இணங்க ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார்.

காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து, அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.

- இரா.ச.இமலாதித்தன்

(இன்னைக்கு தான் அந்த மாமாவோட பிறந்தநாள்!)

05 நவம்பர் 2014

மூழ்கும் கப்பலில் கார்த்திக்!

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவே நேதாஜி தலைமையில் ’அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி’ உருவாக்கப்பட்டது. அந்த கட்சியின் மூலமாகவே தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் மு.கார்த்திக், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிலிருந்து விலகி ’அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை உருவாக்கினார். அதுவும் காலப்போக்கில் நாடாளும் மக்கள் கட்சியாக, பெயரளவிலும் - செல்வாக்கிலும் தேய்ந்து போனது.

இனிவரும் காலங்களில் சாதிக்கட்சியை நடத்த யார் விரும்பினாலும், அவர்கள் மருத்துவர் ச.ராமதாசிடமும் - தொல்.திருமாவளவனிடமும் தான் படிப்பினையை கற்க வேண்டும். ஒரு நடிகர் தனிக்கட்சியை தொடங்க விஜயகாந்தையும், அதே நடிகர் சாதிக்கட்சியை உருவாக்க சரத்குமாரிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மு.கார்த்திக்குடைய சாதி அரசியலானது, காங்கிரசில் சரணடைந்தது தான் வேதனையின்ம் உச்சம். 

அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேனென நேதாஜி சொல்லக் காரணமாக இருந்த, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழ் மாநில தலைமை பதவியை வழங்கிய கெளரவித்தனர். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் எட்டி உதைத்து உதாசினப்படுத்திருக்கும் மு.கார்த்திக் உடைய நிலைப்பாட்டை, நேதாஜி-தேவர் கொள்கைகளை கடைபிடிக்கும் யாராலும் ஏற்க முடியாது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

02 அக்டோபர் 2014

நேதாஜியின் ஆயுதமும்! காந்தியின் சுதந்திரமும்!

ஆயுதத்தின் மீது நம்பிக்கையில்லாத மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தநாள் அன்னைக்கு, இந்த ஆயுத பூஜை வந்திருப்பது கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருக்கு. அர்ஜீனன் உள்பட பாண்டவர்கள் அனைவரும் காட்டில் வசிக்கும் கடைசி ஒரு வருடகாலம் தங்களது ஆயுதங்களை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்து விட்டு, ஒரு வருடம் கழித்து இந்த புரட்டாசி மாதத்தில் திரும்ப எடுத்து பூஜை செய்த நாளை ஆயுதபூஜையாகவும், அதனை தொடர்ந்து போரில் வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாகவும் நாம் கொண்டாடி வருகின்றோம்.

ஆனால், காந்தியோ 1939ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தியும் நேதாஜியிடம் தோல்வியடைந்தார். இதனால், சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி.

அதன் பிறகு நேதாஜியின் ஆயுத போரட்டத்தால் மிகப்பெரிய சரிவை ஆங்கில ஏகாதிபத்தியம் அடைய நேரிட்டது. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியர்களின் வீரத்தை வெளி உலகக்கு வெளிப்படுத்திய ஆயுதமேந்திய நேதாஜியை தீவிரவாதி என்று காட்டி கொடுத்தது காந்தி & கோ. இதற்கு மேல் இந்தியாவில் சுரண்ட எதுவுமில்லை; மக்கள் அனைவரும் நேதாஜி வழி ஆயுத போரட்ட எழுச்சிக்கு தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்த வெள்ளையன், யாசகமாக கொடுத்த சுதந்திரத்தை தானே அடைந்தது போல் காட்டி கொண்டனர் காந்தி & கோ. மேலும், தலைமறைவாக இருந்த நேதாஜியை காட்டி கொடுத்தது மட்டுமில்லாமல் கைது செய்து பிடித்து உங்களிடம் ஒப்படைப்போம் என்று ஆங்கிலேயனிடம் உத்திரவாதமும் கொடுத்த இந்த காந்தி - மகாத்மாவாம், தேசத்தந்தையாம்!

இந்த ஒட்டுமொத்த தேசத்திற்கும் தந்தை என்ற பட்டத்தை  யார் கொடுத்தது? எதனால் கொடுத்தார்கள்? எப்போது கொடுத்தார்கள்? என்ற கேள்வியை உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற பத்து வயது மாணவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக  2011ம் ஆண்டு கேட்டபோது,  ”காந்திக்கு தேசத்தந்தை என்ற அடைமொழியானது எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.” என்றே பதில் வந்தது. இது தான் காந்தி. இவ்ளோ தான் காந்தி. பார்பனிய சிந்தனைக்கும் - பாகிஸ்தான் பிரிவினைக்கும் சொந்தகாரரான காந்தி, ஒருபோதும் மகாத்மாவும் கிடையாது; தேசத்தந்தையும் கிடையாது. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் வீரத்தை தட்டியெழுப்பி ஆயுதமேந்த வைத்து ஒட்டுமொத்த இந்தியர்களை தலை நிமிர வைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் எங்களுக்கு எப்போதுமே தேசத்தந்தை!

வீரமிக்க அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

13 ஆகஸ்ட் 2014

தேசபக்தி என்பது யாதெனில்...


தேசபக்தி என்பது வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ரெண்டாவது வாரமும், ஜனவரி மாதம் மூனாவது வாரமும் ஃபேஸ்புக்ல ப்ரோபைல் போட்டோவை மாத்துறதுனால மட்டும் வரப்போறதில்லை. அது உணர்வு சம்பந்தமானது. அந்த உணர்வை வெறும் லைக்குகளால் மட்டும் அளவிட முடியாது.

இன்னைக்கு பல பேருக்கு காந்தி நேருவை மட்டும்தான் அதிகமாக தெரியலாம். ஏன்னா, காந்திங்கிற பேரு தான் கடந்த  60 வருசங்களாக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்திருக்கு. அந்த காந்திக்கும் இப்போதுள்ள காந்திக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை காங்கிரசுக்கும் காந்திக்கும் கூட எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தான்.

இன்னும் சொல்லப்போனால் இந்த காங்கிரஸ் என்ற பெயர் கூட இந்தியன்’ன்னு சொல்லிக்கிற யாருக்கும் சொந்தம் கிடையாது. அந்த பேரையும் வெள்ளைக்காரன் தான் உருவாக்கி கொடுத்துட்டு போனான். நாம தான், நேரா கட்டுன வீடு வசதியா இருக்குமேன்னு அதுலயே ஈசியா இவ்ளோ வருசங்களா உட்கார்ந்து காலத்தை ஓட்டிட்டோம்.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

இங்குள்ள புரட்சியாளர்களுக்கு, காந்தி நேருவை தவிர இந்தியரான பகத்சிங்கையும், இந்தியரல்லாத சே குவேராவையும் கொஞ்சம் பேருக்கு நல்லாவே தெரியும். காரணம் என்னவென்றால், இவங்க ரெண்டு பேரையும்
(DYFI, SFI போன்ற பொதுவுடைமை அமைப்புகள்) கம்யூனிஸ்ட் கைப்பத்தி வச்சுக்கிட்டு புரட்சிங்கிற பெயரில் புடலங்கை வியாபாரம் செய்வதால், இவர்களை அறியக்கூடிய அந்த பாக்கியம் சிலருக்கு கிடைத்துள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு வெளியே சென்று இந்தியாவை காப்பற்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பலர் தெரிந்து கொள்ளவே விரும்புவதில்லை. புரட்சி செய்ய வாயளவில் சொன்ன அம்பேத்காரை உள்வாங்கி கொண்ட அளவுக்கு, அந்த புரட்சியை செயலலிலும் காட்டிய நேதாஜியை இவர்கள் துளிகூட நெருங்குவதே இல்லை. இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உள்வாங்கி அதை இந்தியாவுக்கு தகுந்தாற்போல ரிமேக் செய்த சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கார் போற்றப்படும் அளவுக்கு கூட இங்கே நேதாஜி போற்றப்படுவதில்லை என்பதே எதார்த்தம். போற்றுதல் கூட வேண்டாம் குறைந்தபட்சம் அவருக்குரிய அங்கீகாரத்தை கூட கொடுப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
 

“இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்”  என்ற உயரிய நோக்கோடு களம்கண்ட நேதாஜியின் மந்திரச்சொல்லாக, ”இரத்தத்தை தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன்!” என்ற ஒரு வரியே இருந்தது.  இந்த ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் பெரும்பான்மையான இடத்தை தமிழர்களே ஆக்கிரமித்து இருந்தனர். இத்தனை தமிழர்கள் ஐ என் ஏவில் சேர, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்ற மாமனிதர் மட்டுமே காரணமாக இருந்தார். இப்படியான பசும்பொன் தேவரின் அன்பையும், ஆற்றலையும், ஆன்மீக உணர்வையும், வீரத்தையும், விவேகத்தையும் கண்டு தன்னுடைய நெருங்கிய தோழனாக்கி கொண்டார் நேதாஜி. ஆனால் இன்றைய நிலைமையோ வேறு; தேசியத்தலைவரான பசும்பொன் தேவரையும் சாதியத்தலைவராக்கி அழகு பார்க்கிறது திராவிட கட்சிகள்.
 
தமிழர்களின் தேசபக்தி மிக்க தாய்நாட்டிற்கான அர்பணிப்பு குணத்தை கண்டு வியந்த நேதாஜி, ”அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்!” என சூளுரைத்தார் என்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பெருமை சேர்க்கும் விசயமாகும்.

பசும்பொன் உ.முத்துராமலிக்கத்தேவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இடையிலான அந்த பாசப்பிணைப்பினால் தான், தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை இன்று புத்தம் புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கும்,  போஸ், நேதாஜி, சுபாஷ் என்ற பெயர்கள் சூட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக ’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்கள்’ பெயரளவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழர்களுடைய தேசப்பக்தியின் கைமாறு.

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

மேலும்,

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" -
இது 15 ஆகஸ்ட் 1945ல் இந்திய தேசிய இராணவத்திற்காக அவர் வெளியிட்ட இறுதி அறிக்கையின் வரிகள். அந்த வரிகள் சரியாக இரண்டே வருடத்திற்குள் மெய்யாக்கப்பட்டது என்பது வரலாறு.

"ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம்; ஆனால் அவன் மாண்டபிறகு ஆயிரம் பேரை அந்தலட்சியம் பற்றிக்கொள்ளும்; ஒரு மனிதன் வாழ்ந்தான் - லட்சியதிற்க்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?” - இது நேதாஜி சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்.
 

இப்படிப்பட்ட தேசபக்திமிக்க மாபெரும் தலைவனுக்கு பல வருடங்கள் கழித்து 1992ல் ’பாரதரத்னா’ விருதை மத்திய சர்க்கார் கொடுத்தது. ஆனால், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பாலும், நேதாஜியின் இறப்பு பற்றிய சர்ச்சையினால் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் அந்த விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது போல ஒரு நிகழ்வு ஒருவார காலமாய் நடந்து கொண்டிருக்கின்றது. பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி இம்முறை நேதாஜிக்கு பாரத ரத்னா விருதை தந்துவிட ஆர்வமாய் இருக்கின்றார் போல.

ஆனால், தேர்தலுக்கு முன் மோடி தந்த வாக்குறுதிகளான, 'நேதாஜி பிறந்தநாள் தேசப்பக்தி தினமாக அனுசரிக்கப்படும். மேலும் நேதாஜி இறப்பு சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் வெளிக்கொண்டு வரப்படும்' என்றெல்லாம் சொன்ன வாக்குறுதிகள் கேள்விக்குறிகளாக மட்டும் எஞ்சி நிற்கின்றன. திரு நரேந்திர மோடி அவர்கள், நேதாஜி சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் அரசியல் விளம்பரம் செய்யாமல் சீக்கிரமே உலகே எதிர்பார்க்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கலாம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு. எது எப்படியோ, நேதாஜியின் தொண்டர்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது சுதந்திர தினமல்ல; உண்மையான சுதந்திர தினம் என்பது அக்டோபர் 21 தான்!

- இரா.ச.இமலாதித்தன்

10 ஜூன் 2014

எம்மோடு இருக்கின்றார் பிரபாகரன்!

அண்ணன் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. மருதுபாண்டியரோ, நேதாஜியோ, பசும்பொன்தேவரோ இன்றைக்கும் எம்மோடு இருக்கும்போது ஏன் அண்ணன் பிரபாகரன் எம்மோடு இருக்க மாட்டார்? என்றைக்குமே நவீன காலத்து தமிழனின் ஒட்டுமொத்த அடையாளம் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. ஆதிகால சேவற்கொடிக்கு அடுத்து, இனிவருங்கால தமிழனுக்கு சிவப்பு மஞ்சள் நிற புலிக்கொடி மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும்.

தமிழ்தேசியத்திற்கு திராவிடம், பார்பனியமென எது இடையூறாக வந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டிய கடமை, பள்ளர் - பறையர் - வன்னியர் - கவுண்டர் - தேவர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு தான் முழு உரிமை உண்டு. நமக்குள்ளாகவே இருபிரிவாக மோதிக்கொள்ளும் வரை, தமிழ்தேசியமும் மலராது. தமிழும் வளராது. தமிழ் சார்ந்த ஒவ்வொரு அடையாளமும் அழித்தொழிக்கப்படும். சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்படுவோம். உயிர்பலி சோதனைக்கூடங்களாக தாய்த்தமிழ்நாடு மாற்றியமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உருவாகும். எனவே அங்கு ஈழம் மலர, இங்குள்ள நமக்குள் ஈகோ மறையட்டும்.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

11 ஏப்ரல் 2014

திருமணம் என்ன பெரும்பிழையா?

மணமாகாத (மோடி)அவர் காமராஜர் போல கடைசிவரை தேசத் தொண்டு ஆற்றப் போகிறார் என எண்ணினோம்.

- திரு. மு.கருணாநிதி



18ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆண்ட மாமன்னர் மருது சகோதரர்களும் திருமணம் செய்து கொண்டவர்களே; பூமரங் என்ற வளரி வீச்சு, கொரில்லா போர்முறை போன்ற பல்வேறு யுக்திகளை கற்றுதேர்ந்து, வெள்ளையனுக்கு எதிராக உலகிலேயே முதன் முறையாக ஜம்புத்தீவு பிரகடனத்தை வீரசங்கம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் போர் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் தானே?

19ம் நூற்றாண்டில் என் தலைவன் தேசத்தந்தை நேதாஜி கூட எமிலி செனகலை காதல் திருமணம் தான் செய்து கொண்டார்; ஆனாலும், அவர் கொண்ட கொள்கைக்காக அந்நியனை விரட்டி தேசத்தை காப்பாற்ற இந்திய தேசிய ராணுவத்தையே கட்டியமைக்கவில்லையா?

20ம் நூற்றாண்டில் என் அண்ணன் பிராபகரன் கூட மதிவதனியை திருமணம் செய்து கொண்டார்; தமிழனின் புறநானூற்று வீரத்தை உலகளாவிய அளவில் வெளிக்காட்டி, உலகிலுள்ள போராளி இயக்கங்களில் முப்படையையும் உருவாக்கி எதிரிகளின் இனவழிப்பை எதிர்த்து தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை கட்டிமையக்கவில்லையா? 

படுக்கையறையை பற்றி பொதுமேடையில் பேச வேண்டியதன் அவசியம் என்ன? தாலி கட்டினாலே பிரம்ச்சர்யம் போய்டுமா என்ன? மோடி தனது திருமணத்தை முற்றிலுமாக மறைக்க வேண்டுமென்று நினைத்திருந்தால், தனிக்கட்டையென்றே சொல்லி இருந்தாலும் ஒன்றும் செய்திருக்க முடியாது தானே? தாலி கட்டினாலும் அவர் தனிக்கட்டையாகத்தானே வாழ்ந்திருக்கிறார்.

என் கேள்வி, அவர் ஏன் திருமணம் செய்ததை மறைத்தார் என்பதை பற்றியல்ல... அவரது திருமணத்தை காரணம் காட்டி கீழான அரசியல் செய்வது ஏன்? திருமணமான அடுத்தநாளே தனியாக போயிருந்த கதைகள இங்கே ஏராளம் உண்டு. அவர் கல்யாணம் செய்ததால் காமராஜ் மாதிரி ஆட்சி செய்ய முடியாதா என்ன? அன்றைய தமிழகத்தின் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் காமராஜருக்கும் இன்னொரு நடிகைக்கும் தொடர்பென்று சொன்னது இதே வாய் தானே?

திருமணத்தை மறைத்ததவர் இன்று ஒத்து கொண்டு விட்டார்; அதை வரவேற்க வேண்டுமே தவிர, அதையே சொல்லி அவருக்கு மனவருத்ததை ஏற்படுத்த கூடாது. மேலும் திருமணம் என்பது அவரது தனிப்பட்ட விசயம். அதை அரசியல் ஆக்குவது கேவலமான செயல் தானே? தனது தனிப்பட்ட திருமண வாழ்க்கையை பற்றி பேச இது சரியான தருணம் இல்லையென்று மோதி நினைத்திருக்கலாம். அவரது படுக்கையறையை விமர்சித்து என்னவாகி விட போகிறது? காங்கிரஸ் காரர்களுக்கும், காங்கிரஸோடு தான் தேர்தலுக்கு பின் கூட்டணி வைக்க போகிறோம் என்ற மனநிலையொடு இருக்கும் திரு கருணாநிதி போன்றோருக்கும், காமராஜர் ஓர் ஊறுகாய்... மற்றபடி சொல்வதற்கொன்றுமில்லை.

இந்த வயதிலும் மனைவி துணைவி யென்று குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் தந்து கட்சி மேடையிலும் தனக்கருகே அவர்களை அமர வைத்து கொண்டும், இவ்விருவர்களுக்கு முன்னாடி ஏற்கனவே ஒரு திருமணத்தையும் செய்த நீங்கள், சிறப்பாக ஆட்சி செய்யவில்லையா என்ன? மணமாகாதவர்கள் மட்டும்தான் தேசத்தொண்டு ஆற்ற முடியுமென்ற தொனியில் நீங்கள் சொல்லிருப்பது நகைப்புக்குரியதாகவே பொருள் கொள்ளப்படும் என்பது உங்களுக்கு தெரியாதா என்ன? அரசியலில் விமர்சனம் என்ற போர்வையில் படுக்கையறையை பற்றியெல்லாம் பொது இடத்தில் பேசுவது உங்களை போன்ற மூத்த அரசியல் தலைவருக்கு சரியான முறையா?

- இரா.ச.இமலாதித்தன்

23 ஜனவரி 2014

தேசத்தந்தை நேதாஜி!





தான் கொண்ட கொள்கையிலிருந்து கடைசிவரை விலகாத ஒரு தீவிரவாதி; விடுதலை வேட்கையை தன்னுள் கொண்டிருந்த ஒரு லட்சியபுருசன்; எதிரிகளை தகர்க்க யுத்தமொன்றே தீர்வாக இருக்குமென்று நம்பிய ஒரு போராளி; இரத்தத்தை கொடுத்து சுதந்திரத்தை அடையலாமென்ற நம்பிக்கையை விதைத்து களம்கண்ட ஒரு மாவீரன்; சாமானிய மக்களை பெரும்போர்படைகளாக கட்டமைத்த ஒரு மாபெரும் தலைவன்; காந்தி போன்ற சுயபுகழ் தேடியலைந்த நபர்களுக்கு மத்தியில் தன் சுயத்தை ஒருபோதும் இழக்காத எம் தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் இன்று. மேலும், நேதாஜியின் இறந்த தேதி அதிகாரபூர்வமாக யாருக்கும் இதுவரை தெரியாது. ஏனெனில், நேதாஜி இன்னும் இறக்கவில்லை; எம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நேதாஜி சொன்னது போல, உண்மையான சுதந்திரம் இன்னும் இந்தியாவிற்கு இதுவரை கிடைக்கவே இல்லையென்ற ஏக்கத்தோடு அடியேனின் தேசபக்தி தின வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த்!

என் அண்ணன் பிரபாகரனை பிடித்து போன அனைவருக்கும் கண்டிப்பாக, என் அண்ணனுக்கு பிடித்து போன நேதாஜியும் பிடிக்க வேண்டும் என்பதுதான் எதார்த்தம். ஆனால், இங்கே பிரபாகரனிசம் பேசும் பலரில் குறிப்பிடதக்க ஒருசாராருக்கு மட்டும் நேதாஜியை பிடிப்பதில்லை. காரணம் என்னவெனில், அந்த ஒருசாராருக்கு பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரை பிடிக்காது. அதுபோல ஸ்ரீ தேவரை பிடித்து போன சிலருக்கு, மாமன்னர் மருதுபாண்டியர்களை பிடிப்பதில்லை. ஆனால், எனக்கு மாமன்னர் மருதுபாண்டியரும், பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்கத் தேவரும் ஒன்றுதான். அதுபோல நேதாஜியும் - பிரபாகரனும் - விவேகானந்தரும் ஒன்றுதான். இதில் எந்த பாகுபாடும் கிடையாது. அரசியலிலும் ஆன்மீகத்தில் சாதியை பார்ப்பவன் இந்த இரண்டுக்குமே லாயக்கற்றவன்னு ஸ்ரீ தேவரே சொல்லிருக்கார். அதை ஏனோ நாம் இன்னும் புரிந்து கொள்ளாமலே இருக்கின்றோம்.

ஜெய்ஹிந்த்!
- இரா.ச.இமலாதித்தன்

09 டிசம்பர் 2013

அரசியல் பதிவுகளில் சில

ஜெயாடிவியில், வட மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததுன்னு மட்டும்தான் சொல்றாய்ங்களே தவிர, தப்பிதவறி கூட பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியதுன்னு சொல்ல மாட்றாய்ங்க.

நல்லா வருவீங்கடே

தாமரை மலர்வது நிச்சயம், தேசியம் காப்பது அவசியம்!

--------------------------------------------------------------------------------------------------

காவி ஆண்டால் உனக்கென்ன? மோடி ஆண்டால் உனக்கென்ன? அந்நியர் பிடியில் சிக்கி தவிக்கும் இந்நாட்டை இம்மண்ணின் மைந்தன் ஆளட்டுமே!

தேசியத்தையும் - தெய்வீகத்தையும் காக்கும் தகுதியுள்ள பா.ஜ.க. தான் மத்திய சர்க்காரை ஆள வேண்டும் என்பதே அடியேன் விருப்பம்.

--------------------------------------------------------------------------------------------------

டெல்லி தேர்தலில் தேமுதிக மொத்தம் 493 வாக்குகள் வாங்கிருப்பதை ஜெயாடிவி உள்பட இங்குள்ளவர்களும் ஏளனம் செய்து பதிவிடுகின்றார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள 39 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற திராணி இல்லாதபோதே, பிரதமர் கனவு காணும் ஜெயலலிதாவை விட விஜயகாந்த் எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில், அவர் டெல்லி முதல்வராக கனவு கண்டு தேர்தல் களம் காணவில்லை. மேலும், வெற்றியை தான் இழந்துள்ளார், களத்தை அல்ல!

தோற்போம் என தெரிந்த பின்பும், தனது கட்சியையும், கட்சி சின்னத்தையும், தன்னையும் டெல்லியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த திரு. விஜய்காந்தின் துணிச்சலை பாராட்டுகிறேன்.


--------------------------------------------------------------------------------------------------தேசத்தந்தை நேதாஜி போன்ற உண்மையான சுதந்திர போராட்ட மாவீரர்களுக்கு உரிய அங்கீகாரமும் - மரியாதையும் - கெளரவமும் வழங்க வக்கற்ற இந்திய (காங்கிரஸ்) அரசாங்கம், இன்னொரு நாட்டின் இன போராளியான நெல்சன் மண்டேலாவுக்காக ஐந்து நாள் துக்கம் அனுசரிப்பு யென்ற போலியான விளம்பரத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இங்குள்ள திடீர் சாதி ஒழிப்பு போராளிகளுக்கு சேகுவேராவை தெரிந்த அளவுக்கு கூட, நேதாஜியின் உண்மையான வரலாறு தெரியாது என்பதுதான் வெட்கக்கேடு.


--------------------------------------------------------------------------------------------------

திசம்பர் 6: தலித் - இசுலாமியர் எழுச்சிநாள்! ன்னு ஊரு முழுக்க திருமாவளவன் கட்சியினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அமாவாசைக்கும் அப்துல்லாவுக்கும் என்னய்யா சம்பந்தம்? அம்பேத்கார் பிறந்த தேதியும், பாபர் மசூதி இடிப்பு நாளும் ஒரே தேதியில் வந்தால் அந்தநாள் எழுச்சி நாளாக ஆகிவிடுமா? விடுதலைப்புலிகள் அமைப்பால் வரையறுக்கப்பட்ட தேசியவிலங்கான சிறுத்தையின் பெயரை வைத்து ஈழம் என்ற போர்வையில் சாதி அரசியல் செய்யும் உங்களது லட்சணம் ஊருக்கே தெரியும் போது, ஏனோ புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மட்டும் இன்னும் தெளிவாக தெரியவில்லையே.

அங்கே ஈழத்தில் பலநூறு இந்து கோவில்களையும், கிருஸ்துவ தேவலாயங்களையும் தரைமட்டமாக இடித்தொழித்தார்களே, அந்த சிங்களவனின் எழுச்சியை அடக்க என்ன செய்தீர்கள் என்பதை சற்று சுயநினைவோடு சிந்தித்துவிட்டு, இந்த எழுச்சி என்பதை பற்றி இங்கே பேசலாமே!

- இரா.ச.இமலாதித்தன்