25 ஜனவரி 2016

நேதாஜி சிலையும் - அகமுடையாரும்!




மருதுசீமையான சிவகங்கையில் பல எதிர்ப்புகளுக்கும் - இடையூறுகளுக்கும் - அச்சுறுத்தலுக்கும் அசராமல், உலகிலேயே முதன்முறையாக நேதாஜி உயிரோடு இருக்கும் போதே, அவருக்கு சிலை வைத்த பெரும்புகழ் அகமுடையார் குலத்தோன்றல் ஐயா கே.சுந்தராஜன் சேர்வையையே சேரும். இன்று உலகெங்கிலும் ஊருக்கொன்றும் கூட நேதாஜியின் சிலையை திறக்கலாம்; ஆனால் அன்றைய காலச்சூழல் என்பது முற்றிலும் வேறு; அப்படியானதொரு காலவெளியான 1944 யில் இந்திய தேசிய இராணுவம் மணிப்பூரில் இம்பால் வழியாக இந்தியாவில் நுழைந்ததன் வெற்றியைக் குறிப்பதற்காக, நேதாஜியின் சிலை சுதந்திரமடைவதற்கு முன்பாகவே சிவகங்கையில் நிறுவப்பட்டது. 1946யில் நேதாஜி பிறந்தநாளான ஜனவரி 23ம் தேதியன்று அவரது சிலையை கம்பீரத்தோடு திறந்து வைத்தார் கே.சுந்தர்ராஜன் சேர்வை!


நேதாஜி கட்டமைத்த தேசிய இராணுவத்தில் பணியாற்றிய எங்கள் பெரிய தாத்தாவான அ.பக்கிரிசாமித்தேவரின் பிறந்தநாள் எதுவென தெரியாது; ஆனாலும், தமிழ் தேசிய தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் வழிகாட்டியான நேதாஜியின் பிறந்தநாளில், வீரமிகு அ.பக்கிரிசாமித்தேவரையும், வீரமிகு கே.சுந்தர்ராஜன் சேர்வையையும் அவர்களது பேரனாக நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி.

தேச தந்தைக்கு புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

#நேதாஜி #சுந்தர்ராஜன்சேர்வை #அகமுடையார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக