21 ஜனவரி 2016

அதிமுகவை அகமுடையார்கள் ஆதரிக்கலாமா?

அகமுடையார்கள் ஏன் அதிமுகவை ஆதரிக்க கூடாது என்பதற்கான ஒரு சின்ன உதாரணத்தை இன்னும் கொஞ்ச நாளில் தெரிந்து கொள்ளலாம். இன்றைக்கு தானே, விருப்ப மனுவை வாங்கி தொடங்கி இருக்கிறார் ஜெயலலிதா. இதன் பின்னால், சசிகலாவின் சாதியான கள்ளர்களுக்கே அதிக பட்ச தொகுதிகள் வழங்கப்படும். ஆனால் கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்ட அந்த தொகுதிகளெல்லாம் முக்குலத்தோர் வேட்பாளர்கள் என ஊடகங்கள் மூலம் சொல்ல வைப்பார்கள். முக்குலத்தோரில் மூன்றில் இரண்டு பங்கு இருக்கும் அகமுடையாருக்கு, ஒருசில தொகுதிகள் சசிகலாவின் கருணையால் கிடைக்க கூடும். அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் கள்ளர்களும், மறவர்களும் வேட்பாளர் ஆவார்கள். இது தான் ஜெயலலிதாவின் திராவிட அரசியல். இதுதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் முக்குலத்து அரசியல்.

உதாரணமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுகவின் மாவட்ட செயலாளர் பட்டியலை கவனித்து பார்த்தால் ஒன்று புரியும்; சசிகலாவின் கருணையால் எத்தனை கள்ளர்கள் மா.செ. பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதும் புரிய வரும். ஓர் அகமுடையாரை மாவட்ட செயலாளராக கூட ஆக்க மனமில்லாத சின்னம்மா சசிகலாவா, எம்.எல்.ஏ. ஆக்க போகிறார்? கள்ளர்கள் சிறுபான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் - அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் மாவட்டத்திலும் கூட, கள்ளரே மா.செ. ஆக நியமிக்கப்பட்டதன் உள்ளரசியல் புரிகிறதா? கள்ளருக்கும் - மறவருக்கும் பதவியை கொடுத்துவிட்டு, அகமுடையாருக்கு அல்வா கொடுத்து கொண்டிருக்கும் அதிமுகவை நிச்சயம் சொரணைவுள்ள அகமுடையார்கள் இந்த தேர்தலில் புறக்கணிப்பார்களென நம்புகிறேன். பார்க்கலாம்...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக