ஜக்கி வாசுதேவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜக்கி வாசுதேவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஏப்ரல் 2021

இந்து அறநிலையத்துறையும், ஜக்கி வாசுதேவும்!

        "ஜக்கி வாசுதேவ், திராவிடர். எதிர்ப்போம். பிரசாந்த் கிஷோர், ஆரியர். ஆதரிப்போம்." என பேசும் திராவிட அரசியல் பேசும் ஆட்கள் அனைவருமே மக்களை ஏமாற்றும் செயல்களையே செய்கின்றனர். இங்கே நடைபெறும் அனைத்து வணிகம் சார்ந்தது தான். அது, அரசியலோ, ஆன்மீகமோ, மருத்துவமோ, விளையாட்டோ, எதுவாகினும் அனைத்தும் வணிகமயமாகி விட்டன.

        கோவில்களை பற்றி ஜக்கி வாசுதேவ் பேசியதும் கொந்தளிக்கும் நபர்கள், இந்து அறநிலையத்துறையில் உள்ள ஊழல்களை பற்றி பேசுவதில்லை.
இந்து அறநிலையத் துறைக்கான அமைச்சர் உள்ளிட்ட அரசு ஊழியர்களால், கட்சி ஆட்களின் தலையீட்டால் கோவில்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆன்மீகத்தின் பெயரில் லஞ்சமே தலைவிரித்து ஆடுகின்றன. கிறிஸ்துவ மத பற்றாளருக்கு இந்து ஆலயத்தில் அரசு பணி வழங்கிய போக்கும் ஊழலின் நீட்சியே.
 
        கோவில் மூலவரை விரைவாக தரிசிக்க உருவாக்கப்பட்டிருக்கும் வி.ஐ.பி. தரிசனத்தில் அர்ச்சகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையேயுள்ள உடன்படிக்கையால் ஏற்படும் சிரமங்களெல்லாம் பாமர பக்தர்களின் மீது தான் விழுகின்றன. கோவிலுள்ள உண்டியல்களில் கூட அர்ச்சகர்களுக்கும், அறநிலையத்துறை ஊழியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு உண்டு. பணம் யாருக்கென்ற அடிதடி போட்டிகளும் ஆங்காங்கே நடைபெறுவதை பார்த்துக்கொண்டு தான் கடக்கின்றோம்.
 
        சிலை கடத்தலில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மிகப்பெரும் ஆன்மீக அடையாளமாய் இருக்கும் பெரியாட்களே முதன்மையாக இருக்கின்றனர். கோவிலுக்கு சொந்தமான சிலைகள் காணாமல் போவதும், மூலவருக்கான தங்க வைர நகைகள் பரவலாக எடைகுறைப்பு செய்யப்படுவதையும் அன்றாட செய்திகளாக பார்த்து வருகிறோம். பெரும்பாலான கோவில்களில் தட்சிணை வைக்கவில்லையென்றால் தரிசனமே கிடைக்காது. படியில் அமர்ந்திருக்கும் அர்ச்சகர், எழுந்து கூட தீபாராதனை தட்டை காட்டுவதில்லை. விபூதி குங்கும பிரசாதம் கூட தட்சினையை பொறுத்தே வழங்கப்படுகிறது. இவையெல்லாம் கோவிலுக்குள் நடைபெறும் கூத்துகள்.

        ஒவ்வொரு கிராமக்கோவில்களும் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வந்து விட்டன. அனைத்து கோவில்களிலும் உற்சவர் சிலைகள் உண்டு. பெரும்பாலும் அவையெல்லாம் ஐம்பொன் சிலைகளாக இருக்கும். ஒவ்வொரு மாதாந்திர வருடாந்திர திருவிழாக்களின் பொழுது, வீதிவுலா செய்யும் உற்சவர் சிலையை அந்தெந்த கோவிலில் வைக்க விடுவதே இல்லை. பாதுகாப்பு காரணங்களை காட்டி, பல மைல் தொலைவிலுள்ள இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் எடுத்து கொண்டு போய் விடுகின்றனர். கோவில் திருவிழாவின் பொழுது வசூல் செய்து வாங்கிய அந்த உற்சவர் சிலையை எடுத்து வர, இந்து அறநிலையத்துறை ஊழியர்களுக்கு முறைப்படி ஒருமாதம் முன்பே கடிதம் கொடுத்து, ஆயிரக்கணக்கில் லஞ்சம் கொடுத்தால் தான் உற்சவர் ஊருக்கு வருவார். இல்லையெனில் கெடுபிடிகள் தான். சில ஊர்களில் லஞ்சம் கொடுத்து சமாளிக்க முடியாததாலும், கெடுபிடிகள் அதிகமிருப்பதாலும் ஊர்க்காரர்களே வசூலித்து மற்றுமொரு உற்சவர் சிலையை வாங்கி வைத்து அறநிலையத்துறையின் கெஞ்சிக் கொண்டிருக்காமல் திருவிழாவை சிறப்பாக செய்து முடிக்கின்றனர்.
இதெல்லாம் நேரடியாக கண்ட, கேட்டுணர்ந்த நிகழ்வுகள். இந்து அறநிலையத் துறையை பற்றி சுட்டிக்காட்ட இதுமாதிரியாக பல செய்திகள் உண்டு.

அடுத்து கோவில்களுக்கு வெளியே நடைபெறும் சம்பவங்களை பார்த்தால், பெரும்பாலான சிறு நகரங்களிலும், பல கிராமங்களிலும் உள்ள பல வீட்டு மனைகள் கோவில் நிலங்களே. மேலும், நகர்புற வணிகவளாகங்கள், முக்கிய இடங்களெல்லாம் பிறரால் ஆக்கிரமிக்கப்பட்டு மிக சொற்பமான குத்தகை/வாடகை பணம் கூட சரிவர தரப்படுவதில்லை. இன்னும் ஒருபடி மேலாக போய், பல கோவில் இடங்கள் தனியாரின் சொத்தாகி கூட கை மாறியிருக்கின்றன. அதிலுள்ள உரிமையாளர்களில் மாற்று மதத்தினரும் உண்டு. கிராமப்புறங்களிலுள்ள எளிய மக்களை தவிர, பெரும்பாலான கோவில் நிலங்களின் உரிமையாளர்கள் அனைவருமே கட்சி ஆட்களாகவும், ஏதாவதொரு கட்சியின் உள்ளூர் தலைவர்களுக்கு வேண்டிய ஆட்களாகவுமே இருக்கின்றனர்.
 
        இந்து அறநிலையத்துறையை திமுகவும், அதிமுகவும் மாறிமாறி தங்களது கட்சியின் சொத்துகளாக்கி ஆக்கிரமித்த கதையெல்லாம் ஒவ்வொரு தனிநபருக்கும் தெரியாமல் இல்லை. நமக்கு ஏன் வம்பு என ஒதுங்கி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதால் தான், கர்நாடகத்தில் இருந்து இங்கே வந்து ஆன்மீகத்தை மூலதனமாக்கி கார்ப்ரேட் நிறுவனம் போல கட்டமைத்து தொழில் செய்யும் ஜக்கி வாசுதேவ் போன்றோர் கோவில்களை கைப்பற்ற களமிறக்கப்பட்டிருக்கின்றனர். நாம் எதிர்க்க வேண்டியது ஜக்கி வாசுதேவை மட்டுமல்ல; அவரை எதிர்க்கும் கட்சி ஆட்களையும் தான். இரு தரப்புக்குமே இங்குள்ள கோவில்கள் மீது அக்கறையெல்லாம் இல்லை. கோவில்களை சார்ந்திருக்கும் அனைத்து சொத்துகளையும் கையகப்படுத்த நினைக்கும் வணிக சண்டையே இவர்களுக்கு முதற் நோக்கமாக இருக்கிறது.
 
- இரா.ச. இமலாதித்தன்

10 மார்ச் 2016

விஜய் மல்லையாவும் தேசபக்தர் தான்!



விஜய் மல்லையா கூட தீவிரமான தேசப்பக்தியும் - ஆன்மீகப்பற்றும் உடையவர் தான். ’மேக் இன் ஹிந்தியா’ என்ற திட்டத்தின் முன்னோடியாக, உலக நாடுகளுக்கெல்லாம் தனது ’கிங்பிஷர்’ மதுபானத்தை ஏற்றுமதி செய்த பெருமைக்குரியவர். எனவே, அவருக்கு கொடுத்த கடனை ஸ்டேட் பேங்க் தள்ளுபடி செய்து, மேலும் சிலபல கோடிகளை நன்கொடையாகவும் வழங்க முன்வர வேண்டுமென்பது, அனைத்து தேசப்பக்தர்களின் விருப்பமாக உள்ளது.







விஜய் மல்லையா மட்டும் தான், வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கிவிட்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய திருடன் என்பது போல பலர் கோபத்தோடு பேசுகிறார்கள்.

உண்மையில் கோபப்பட வேண்டியது, விஜய் மல்லையாவிடம் வாங்கி குடிக்கும் ஆளும் - ஆண்ட ஹிந்திய சர்க்காரையும், இத்தனை கோடிகளை கடன் கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்த வங்கியையும் தான்.

கல்விக்கும், விவசாயத்திற்கும் சில லட்சங்களை கடனாக தரவே, அறவே மறுக்கும் வங்கிகளையும் அதனை கண்டுகொள்ளாமல் அதற்கான விதிமுறைகளையும் தளர்த்தாமல் வேடிக்கை பார்க்கும் அரசாங்கங்களுக்கும், விஜய் மல்லையா தான் சரியான செருப்படி!

நீ கலக்கு சித்தப்பு...

- இரா.ச.இமலாதித்தன்

13 ஜனவரி 2016

ஜல்லிக்கட்டு தடையும் இல்லுமினாட்டிகளும்!

சல்லிக்கட்டு நடக்கும் ஊர்களுக்கு நேரடியாக சென்று அங்கே வாடி வாசலில் கூடி இருப்பவர்களோடும், அங்குள்ள ஊர் பெரியவர்களோடும், நேரில் கலந்து பேசி ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமானுக்கு நன்றி! வேறெந்த அரசியல் கட்சிகளும் நேரடியாக ஆதரவு தெரிவிக்காத நிலையில், மாடுபிடி வீரர்களையும், சல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களையும் சந்தித்து புது உத்வேகம் தரும் இம்முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறுமென நம்புகிறேன். ஏனெனில், திரு. சீமானின் உணர்ச்சி மிகு பேச்சுக்கு ஓர் அதிர்வு கண்டிப்பாக இருக்கும்.

#

தமிழ் தேசியம் பேசும் பள்ளர் சாதி நண்பர்கள், "ரெட்டி" என சொல்லப்படுகின்ற 'புதிய தமிழகம் கட்சி'யின் தலைவரான மருத்துவர். கிருஷ்ணசாமி பேசிய சல்லிக்கட்டு தடை பற்றிய கருத்தை ஏற்பார்களா? என்பதில் தான், தமிழ் தேசியத்தின் வெற்றி அடங்கிருக்கிறது.

#

ஆண்ட பரம்பரை - ஷத்ரியர் - மீண்டெழும் பாண்டியர் என திமிரி எழுந்து திருப்பி அடிக்கும் வீரத்தமிழர்களின் வீரத்தை சோதிக்கும் வல்லமை PETA என்ற பீப் அமைப்புக்கு இருக்கிறது. ஆனாலும் இந்த விசயத்துல் வீரம் என்ற ஒன்று எந்த தமிழ் சாதிகிட்ட இருக்குன்னு தான் இன்னும் தெரியல.

#

சென்னை - கடலூர் வெள்ளத்திற்கு, தெக்கத்திக்காரன் கூட பதைபதைத்து நிவாரணம் அனுப்பினான். ஆனால், தெக்கத்திக்காரனின் வாழ்வியல் விழாவான சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒரு அடையாள போராட்டம் நடத்தினானா சென்னைவாசி? ஆதரவு போரட்டம் கூட வேணாம். ஆனால் சல்லிக்கட்டுக்கு எதிர்குரல் அல்லவா கொடுக்குறான். பாரம்பரியம் மட்டுமல்ல, பாசம் கூட கிராமத்தான் கிட்ட தான் இருக்கு.

#

ஒட்டுமொத்த தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு தடைக்கு எதிராக குரல் கொடுத்து, களத்தில் நிற்கும் 'வீரகுல அமரன் இயக்கம்' தலைவர் திரு. கி.இரா. முருகன் அகமுடையாருக்கு எம் வாழ்த்துகள்!

#

'கன்னட மராட்டியன்' ரஜினியோட மனைவி 'ஆரிய பார்பன' லதா, இந்த இருவர்களின் மருமகன் தான், 'வந்தேறி வடுகன்' தனுஷ்!
இவர்களுக்கு எப்படி தமிழனின் பாரம்பரிய சல்லிக்கட்டு மேல் பற்று இருக்கும்? தமிழில் பேசினால் மட்டும், தமிழனாகிட முடியாது என்பதற்கு இந்த மாதிரியான கோடாரி காம்புகளும் ஓர் உதாரணம்.

#

உலகிலேயே மிக அதிக அளவிலான மாட்டுக்கறியை உணவுக்காக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தை பெற்றுள்ள நாடான ஹிந்தியாவில் தான், "PETA - தி.க." போன்ற இல்லுமினாட்டிகளின் எடுபிடி பீப் அமைப்புகளும் இருக்கின்றன.

#

சத்குரு ஜக்கி வாசுதேவ், இந்த சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிருப்பது ஆச்சர்யமாக இருந்தாலும் அவரது பேச்சின் ஒவ்வொரு வரியோடும் உடன்பட வேண்டி இருக்கிறது. இதனால் அவரது மேலிடத்திலிருந்து என்ன பாதிப்புக்கு உள்ளாக போகிறாரோ அவர்?!



சல்லிக்கட்டை எதிர்க்கும் PETA என்ற பீப் அமைப்புக்கும், அமெரிக்க வேளாண்துறைக்கும், இல்லுமினாட்டிகளுக்கும் சம்பந்தம் இருக்கா? இல்லையா?ன்னு இதன் மூலமாக கூட தெரிஞ்சிக்கலாம்.

#

இல்லுமினாட்டிகளை அழித்தொழித்தால், இவ்வுலகில் போரும், வறுமையும், ஆட்க்கொல்லி நோயும், பொருளாதார வீழ்ச்சியும், கலச்சார சீர்கேடும் கண்டிப்பாக வராது. ஆனால் அவர்களை நாம் நெருங்கவே முடியாது. அதற்கு ஒரு சின்ன உதாரணம், சல்லிக்கட்டுக்கு அவசர அவசரமாக தடை வாங்கிய, அந்த இல்லுமினாட்டி வகையறாவான PETA என்ற அமைப்பும் தான்.

#

PETA என்ற அமைப்பின் தலைமைகம் எது? அவர்களின் நோக்கம் என்ன? உலகெங்கும் கிளைகள் வைத்து உள்ளதன் காரணம் என்ன? அவர்களை வழிநடத்துவது யார்? அந்த அமைப்பின் உறுதுணையோடு செயல்படும் துணை அமைப்புகள் எதெது? உலகின் எங்கேயோ தலைமையகத்தை கொண்டுள்ள அவர்கள் தென்தமிழ்நாட்டில் நடக்கும் சல்லிக்கட்டை தடை கேட்கும் பின்னணி என்ன? என்ற பல கேள்விகளுக்களான பதில்களை தேடிப்பாருங்கள். இல்லுமினாட்டிகளை பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.

#

இந்த தேர்தல்ல ஜெயலிதா ஜெயிக்க முடியுமா?ன்ன்னு விஜயகாந்த் கிட்ட கேள்வி கேட்ட பத்திரிகை காரங்க, "மோடி பொங்கல், மோடி சல்லிக்கட்டு" என பெயர் வைக்க சொன்ன, பொன்.ராதாகிருஷ்ணன் கிட்ட இன்னும் கேள்வி கேட்கலயா?

கோவில்களின் அர்ச்சகராக ஆகமவிதி, பசு வதை தடை, கோவில்களில் ஆடை கட்டுப்பாடு... என்ற அனைத்திலும் பார்பனர்களின் விருப்பம் தான் அரசியல் சட்டமாகி, நீதிமன்ற தீர்ப்பானது. மேலோட்டமாக பார்க்கும் போது, இவையெல்லாம் பெரும்பான்மை ஹிந்துக்களின் பாரம்பரியமாக தெரியும். மேலும் இது போன்ற தீர்ப்புகளில் ஹிந்துக்களின் பாரம்பரியம் காக்கப்பட்டதாக தெரிந்தாலும், உண்மையில் அங்கே வெற்றி பெற்றது ஆரிய பாரம்பரியமே. அதே ஹிந்து என அடையாளப்படும், தமிழர்களின் ஆதிவழிபாட்டு முறைகளில் ஒன்றான, நாட்டார் வழிபாட்டு குலதெய்வ கோவில்களில் பன்நெடும் காலம் காலமாக ஆடு-கோழி பலியிட்டு வந்ததை தடைவிதித்தது கூட அதே ஆரிய பாரம்பரியம் தான் என்பதும் குறிப்பிட தக்க விசயம். மேலும், தமிழர்களுக்கென இருக்கும் ஒவ்வொரு சமகால வரலாற்று பாரம்பரிய கூறுகளை அழித்தொழிப்பது தான் ஹிந்திய நீதிமன்றங்களில் தீர்ப்பாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்பதற்கு சல்லிக்கட்டும் ஓர் உதாரணம்.

#

ஒட்டுமொத்த தமிழர்களின் விளையாட்டான சல்லிக்கட்டை, முக்குலத்தோரின் வீர விளையாட்டு என பெருமை பேசும் எந்த சாதி அமைப்புக்காவது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து போராட துணிவிருக்கிறதா? அதற்கான செயல்முறை திட்டம் ஏதாவது இருக்கிறதா? உங்களது திட்டமெல்லாம் வருடத்தில் அக்டோபர் மாதம் பசும்பொன் போவது மட்டும் தானே. அதற்கடுத்து, தேர்தல் சமயத்தில் திராவிட கட்சிக்கு காவடி எடுப்பது. இன்னும் ஒருபடி மேலே சென்று, "வாழும் வேலுநாச்சியாரே!" ன்னு ஜால்ரா போஸ்டர் அடித்து, ஜெயலலிதா காலில் விழுவது; அப்போதும் கூட உங்களது முறுக்கிய மீசையில் மண் ஒட்டுவது உங்களுக்கு தெரிவதில்லை.

#

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக வந்த தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது? சல்லிக்கட்டை இந்த வருசம் எப்படி நடத்துவது? இனி வரும் வருடங்களிலும் தடை இல்லாமல் சல்லிக்கட்டை நடத்த என்ன மாதிரியான செயல்பாட்டு அணுகுமுறைகளை கையாளுவது? இது மாதிரியான அத்தியாவசிய விசயங்களை பலதரப்பட்ட தமிழ் அமைப்புகளும் போட்டியரசியல் இல்லாமல் ஓரிடத்தில் ஒன்றுகூடி விவாதித்து நிரந்தர தீர்வை எட்ட முன்வர வேண்டும். ஆனால் யார் ஒருங்கிணைப்பது? அவர்கள் எங்களை விட சிறிய அமைப்பு; நாங்கள் அவர்களை விட பழைமையான அமைப்பு; அவர்கள் ஊடக புகழுக்காக செய்கிறார்கள்; இப்படி ஏதாவதொரு காரணத்தை குறையாக சொல்லி தனித்தனி அணியாக பயணிப்பார்கள், கேட்டால் இலக்கு ஒன்றுதான் என கைகளை உயர்த்துவார்கள். த்தூ!

#

இந்த வார ’நீயா நானா’வில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய திரு. சேனாதிபதியுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் நச்! ரொம்ப நாளுக்கு பிறகு நீயா நானாவில் ஒரு நல்ல விவாதமாக அமைந்தது.

#

நான் சொல்றது கற்பனையாகவும் தெரியலாம்; உண்மையாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வையை பொறுத்தது.

விசயம், இல்லுமினாட்டி மற்றும் சல்லிக்கட்டு பற்றியது தான்.
இயக்குனத் ஷங்கர் ஓர் இல்லுமினாட்டி ஆதரவாளர் என்று வைத்து கொள்வோம். அதனால் தான், "ஐ" என்ற இல்லுமினாட்டி படத்தை பல கோடி செலவில், உலகின் அதிகபட்ச மொழிகளில் மொழிபெயர்த்து அந்த "ஐ" படத்தை வெளியிட்டார்.

இங்கே ஐ என்பது Eye என்ற கண்ணை குறிக்கலாம். அல்லது I For Illuminati என்றும் குறிக்கலாம். இங்கு கண் என்பதுதான் இல்லுமினாட்டிகளின் அடையாள சின்னம்.

அந்த "ஐ" படத்தின் நாயகி 'எமி சாக்சன்' கூட அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இல்லுமினாட்டிகளின் ஆதரவாளராக இருக்கலாம். இந்தியரும் அல்லாத தமிழரும் அல்லாத இந்த எமி ஜாக்சன் தான் முதன்முதலாக சல்லிக்கட்டை தடை செய்ய ட்விட்டரில் வலியுறுத்திய திரை நட்சத்திரம்.
இன்றைக்கு சல்லிக்கட்டுக்கு தடை வாங்கியிருக்கும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் "PETA" என்ற இல்லுமினாட்டிகளின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அமைப்பின் ஆதரவாளர்களில் எமி ஜாக்சனும் ஒருவர்.

அப்படிப்பட்ட இல்லுமினாட்டிகளின் ஆதரவாளரான எமி ஜாக்சன் நடித்த 'தங்கமகன்' என்ற திரைப்படத்தின் கதாநாயகன் தனுஷ் தான், இன்றைக்கு சல்லிக்கட்டை முற்றிலுமாக தடை செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
நான் மேலோட்டமாக சொல்லிருக்கும் இந்த விசயம் பலருக்கு புரியுமாயென தெரியவில்லை. ஆனால்,

நான் சொல்றது கற்பனையாகவும் தெரியலாம்; உண்மையாகவும் இருக்கலாம். அது அவரவர் பார்வையை பொறுத்தது.

- இரா.ச.இமலாதித்தன்