31 மார்ச் 2016

வள்ளல் பச்சையப்பா முதலியார்!



சென்னை பெரியபாளையத்தில் பிறந்து, வேதாரண்யத்தில் மணமுடித்து, தஞ்சாவூரில் குடியேறி, பல ஆன்மீக-கல்வி சேவைகளை செய்து கடைசியாக தன் விருப்பப்படியே திருவையாறில் தன்னுயிரை 40வது வயதிலேயே விண்ணுக்கு கொடுத்து இறைவனடி சேர்ந்த, ஆன்மீக செம்மலும், கல்வி வள்ளலுமாகிய அகமுடையார் குலத்தோன்றலான பச்சையப்பா முதலியாரின் 222வது நினைவுநாள் இன்று.

ஏழ்மையான சூழலில் பிறந்த போதும், கொடை வள்ளலாய் இறந்து, இன்னமும் நம்மோடு நினைவில் வாழும் மாபெரும் மனிதருக்கு எளியவனின் வீர வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

ரமணன்!



இன்றோடு பணி நிறைவு செய்யும் பள்ளி மாணவர்களின் போற்றுதலுக்குரிய, 'எங்கள் சோழநாட்டு அகமுடையார் குலத்தோன்றல்' திரு ரமணன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

வீ மிஸ் யூ தேவரே!

30 மார்ச் 2016

மூவேந்தர்களின் எல்லை தெய்வம்!






திருச்சிராப்பள்ளி - உறையூரை தலைநகராக ஆண்ட சோழர்களின் குல தெய்வமும், பண்டைய சேர - சோழ - பாண்டியர்களின் எல்லை காவல் தெய்வமுமாகிய 'செல்லாண்டி அம்மன்' தரிசனத்தோடு இன்றைய நாள் கடந்தது.

28 மார்ச் 2016

இந்த வார அரசியல்!

# சுழலுமா?

'பம்பரம் டிவி' என்ற இணையதள தொலைக்காட்சியை மதிமுக சார்பில் தொடங்கியுள்ளனர். இந்த தேர்தலுக்கு பிறகு அந்த சின்னம் மிஞ்சாவிட்டால் கூட டிவியாவது மிஞ்சுமென நினைக்கிறேன்.

# திராவிட வடுகம்!

விஜயகாந்த் மனைவியின் தம்பி என்ற ஒரேவொரு தகுதி மட்டுமேயுள்ள எல்.கே.சுதீஷ் போன்றவர்களை கூட, விஜயகாந்த் முதல்வரானால், துணை முதல்வர் யார்? அமைச்சர்கள் பதவி யாருக்கு? என பேச வைத்திருக்கும் வைகோவின் திறமை போற்றுதலுக்குரியது!


# இசையின் இறைத்தூதர்!

கோடிக்கணக்கான இந்த தேசத்து மக்களின் விருதுகளை வாங்கிய இசைஞானிக்கு, தேசிய விருது என்பது ஒரு சிறிய அங்கீகாரம் மட்டுமே!



# தேர்தலும் சாதியும்‬!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு தருகிறோமென சொல்லும் அரசியல் கட்சிகளையும், அந்த ஒடுக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்யும் ரவுடிகளுக்கு துணை போகும் சட்டத்தையும்- காவல்துறையையும் கண்டுதான், இன்றைக்கு பிற்படுத்தப்பட்ட அனைத்து மக்களும் கலக்கத்தில் இருக்கின்றனர். தேர்தலில் கூட ஒடுக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளில் பெரும்பான்மையான வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு தான் போய் சேர்கின்றன. ஆனால் சட்டத்தாலும் ரவுடிசத்தாலும் நவீனமாய் மிரட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கட்சியென சொல்லிக்கொள்ளும் எந்த கட்சிக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கானது 1% கூட கிடைப்பதில்லை. மாறாக, அட்டவணை சாதி மக்களின் வாக்கும், இதர பிற்படுத்தப்பட்ட சாதி மக்களின் வாக்கும் 95% திராவிட கட்சிகளுக்கே போய் சேர்கின்றன.

# ஊழலுக்கு பின்னால் ஒளியும் சாதிக்காரன்!

கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி.க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதியரசர் மகேந்திர பூபதியை இடை நீக்கம் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?! முதலில், நீதித்துறைக்குள் ஒரு சில மாற்றம் வரணும். முக்கியமான ஊழல் கொலை கொள்ளை போன்ற வழக்குகளின் நீதிமன்ற வாதங்களையும், தீர்ப்புகளையும் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்ப செய்ய வழிவகை வேண்டும். கிராமப்புறங்களில் சட்டம் படிக்காத ஆளுங்க கூட பஞ்சாயத்து பேசும்போது 'நீதி' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க. இங்கே நீதிமன்றத்தில் 'காசு' பக்கம் தான் தீர்ப்பு சொல்றாங்க போல! த்தூ...


#  ஏர்டெல் என்ற ஏமாற்றுக்காரன்!
யாருமற்ற பனி மலையிலும், பாறைகள் நிறைந்த வெட்ட வெளிகளிலும், ஹிந்தியாவெங்கும் ஏர்டெல் 4ஜி நெட்வொர்க் கிடைப்பதாக தொடர்ச்சியாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். நாகப்பட்டினத்திற்கு உட்பட்ட செம்பியன்மாதேவி, வடுகச்சேரி, தேவூர், வெண்மணி, திருக்குவளையென எங்களது வயல்வெளியுள்ள வண்டலூர் கிராமத்திற்கு அருகேயுள்ள ஊரெங்கும் சுற்றி கொண்டிருந்தேன். ஒழுங்காக 2ஜி நெட்வொர்க் கூட கிடைக்கவில்லை. அதை சரி பண்ணவே வக்கில்லை; இந்த லட்சணத்துல 4ஜி...

# மக்களுக்காக பாலிமர்!

நக்கீரன், ஜூவி, குமுதம் ரிப்போர்ட்டர் போல, நேரில் பார்க்காத ஒரு விசயத்தை பக்கம் அமர்ந்து பார்த்தது போல திரைக்கதை அமைத்து ஐநூறு கோடி, ஆயிரம் கோடியென விஜயகாந்த் பற்றி ஊடகங்களில் உளறிய வைகோவை, அதே ஊடகம் 'ஆயிரத்து ஐநூறு கோடிக்கு அதிமுகவிடம் நீங்கள் விலை போனதாக சொல்கிறார்களே' என ஐயம் எழுப்பியது நூற்றுக்கு நூறு வீதம் சரி. எதிர்வினையென்றால் இப்படி தான் இருக்குமென வைகோவுக்கு புரிய வைத்த பாலிமர் தொலைகாட்சியின் 'மக்களுக்காக' நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்துகள்!

# சாதிய தலைமைகள்!

ஜெயலலிதாவிடமும், கருணாநிதியிடமும் மாறி மாறி இரு அணியாக பிரிந்து தன் சாதி மக்களின் தொகையை கணக்கில் காட்டி சாதியையே அடகு வைக்கிற சாதி அமைப்பின் தலைவர்களெல்லாம், இந்த 2016 தேர்தலில் ஒரேயடியாக ஜெயலலிதாவிடம் மட்டும் சரணாகதி அடைந்து விட்டனர்.
'வாழும் வேலுநாச்சியாரே!'ன்னு ஜெயலலிதாவுக்கு போஸ்டர் அடிச்சு, கீழே, 'வாழும் முத்துராமலிங்கத்தேவர்', 'அடுத்த பசும்பொன் தேவர்', 'தேவரின் வாரிசு', 'தேவரின பாதுகாவலர்'... இப்படியாக தங்களுக்கு தாங்களே தேர்தல் வரையிலும் விளம்பரப்படுத்தி கொள்வார்கள். தேர்தல் முடிந்த பிறகு, அடுத்து அக்டோபரில் ஆழ் உறக்கத்தை களைவார்கள்.
வீர வசனம் பேசி மீசை முறுக்கிக்கொண்டு போஸ்டர்ல போஸ் கொடுக்கிறவங்களையும் கூட, கையை கட்டி வாய்மூடி பேச வைக்கும் வல்லமையுள்ள ஜெயலலிதாவின் திறமை ஆச்சர்யபட தக்க ஒன்றுதான்!

- இரா.ச.இமலாதித்தன்

25 மார்ச் 2016

அறவழி வந்தோர் அகமுடையார்!



எனக்கு தெரிந்து நான் இதுவரையிலும் நூறுக்கும் மேற்பட்ட பழம்பெரும் சிவன் கோவில்கள் தரிசித்து இருக்கிறேன். தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் நான் பல கோவில்களில் 'சேர்வை' என்ற பட்டத்தோடும், பல பெயர்களோடு பின்னிணைப்பாக 'சேர்வை' பட்டம் போட்டுள்ள பலரது பெயர்களையும் கல்வெட்டில் பார்த்திருக்கிறேன். இது பற்றிய மேலதிக ஆய்வு செய்தால் அகமுடையாரின் ஆன்மீக பணியின் முக்கியத்துவம் புரியவரும்.
அறவழி வந்தோர் அகமுடையார்!

படம்: நாகை மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், திருத்தேவூர் மாடக்கோவில்.

23 மார்ச் 2016

நாம் தமிழரின் இலச்சினை!


நாம் தமிழர் கட்சியின் ஆட்சிக்காலத்தில், தமிழ்நாட்டு அரசின் இலச்சினையாக உருபெற போகும் சின்னத்தை வடிவமைத்த, எம் நாகை மண்ணின் மைந்தனும், உறவின்முறை சகோதரனுமாகிய சதீஷ் சிங்காரவேலுக்கு என் வாழ்த்துகள்!

17 மார்ச் 2016

இந்த வாரம்!

-01-

இந்த பக்கம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ல ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவுக்கு எதிராக 5 ஓவருக்கு 60 ரன் அடிக்கிறாங்க. அடிச்ச ஆளுக அவுட் ரெண்டு விக்கெட் விழுந்துடுச்சு. அந்த பக்கம், ஸ்டார் விஜய்ல 'இளையராஜா 1000'க்காக ஜானகி அம்மா இல்லாத மேடைகளில் அவரது பாடலை யாராரோ பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

-02-

முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா, 'தமிழக தலைமை செயலகம்' போனாலே ப்ளாஷ் நியூஸ்ல போடுவாங்க. அவரது வழித்தடத்தை பின்பற்றும் ஓ.பி.எஸ், 'அதிமுக தலைமை அலுவலகம்' போனதற்கும் கூட ப்ளாஷ் நியூஸ்ல போட்டுட்டாய்ங்க.
ஊஊஊ ஊடகம்!

-03-

சென்ற வாரங்களில் ட்விட்டர் ட்ரென்டிங்கில் முதலிடத்திலேயே இருந்த ஓ.பி.எஸ் என்ற தனிமனிதர் அல்லாது அவர் சார்ந்த சமூகம் மீதான பயத்தால் தான் போயஸ் கார்டனுக்கு அவரை ஜெயலலிதா அழைத்து சமாதானப்படுத்தி இருக்க வேண்டுமென தோன்றுகிறது. ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்து இருக்கும் வேளையில் தனிக்கட்சி போல ஓ.பி.எஸ் செயல் பட ஆரம்பித்தால் மேலும் தமக்கு செல்வாக்கு குறையும் என்பதால் தான் நேரடியாக சந்தித்து பேசிருக்கிறார் போல. அநேகமாக தேர்தல் முடிந்ததும், ஓ.பி.எஸ்.க்கும் அதிமுகவுக்குமான தொடர்பு முடிவடையடையலாம்.


-04-

"அட்டவணை சாதிக்கு தான் சட்டமென்றால்,
வீசும் காற்றில் விசம் பரவட்டும்!"

-05-

'ஐயா' என்பதை 'அய்யா' என தொடர்ச்சியாக பயன்படுத்தும் பா.ம.க.வினரை, எந்த தமிழ்தேசியவாதிகளும் கேள்வி கேட்பதே இல்லை என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டாலே போதும், இன்றைய தமிழ் தேசியத்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளலாம்.

-06-

சென்ற வருடம் எங்களது டெல்டா பகுதியான காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த வினோதினியை ஆசிட் வீச்சுக்கு ஆளாக்கியதும் கூட இந்த காதல் தான் என்பதையும் மறந்துவிட முடியாது.

-07-

தமிழ் சாதி உறவுகளான நான்கு பறையர்களை குறிஞ்சாக்குளத்தில் காந்தாரி அம்மன் கோவில் கட்டும் பிரச்சனையில் தெலுங்கு நாயக்கர்கள் வெட்டி கொன்றதை பற்றி இதுவரைக்கும் வாயையே திறக்காத திருமாவளவன், இப்போது காதலினால் ஏற்பட்ட இரு குடும்பத்தினரின் தனிப்பட்ட பிரச்சனையில் உயிரிழந்த ஒருவருக்காக வைகோவுடன் சேர்ந்து கொண்டு பல முறை கண்டனக்குரல் எழுப்புகிறார் என்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது.

-08-



- இரா.ச. இமலாதித்தன்



16 மார்ச் 2016

சாதி மறுப்பு காதல்!


சாகடிக்கும் வரை காத்திருந்து அவன் சாதி எதுவென ஆராய்ந்த பின்பே புரட்சியாளர்களாக உருவெடுக்கலாமா? வேண்டாமா? என்பதையே முடிவு செய்கிறார்கள், ஈனபுத்தி கொண்ட நடுநிலை முகமூடிகள்.

இன்றைக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுபவர்களில் எத்தனை பேர், சாதிவெறி பிடித்த அரசியல் பொறுப்பாளர்களின் பொதுமேடை பேச்சுக்களை கவனித்தது இருக்கிறீர்கள்? "கவுண்டனை வெட்டு; கவுண்டச்சியை கட்டு. தேவனை வெட்டு, படையாட்சியை வெட்டு, அவனுங்க வீட்டு பொண்ணை கட்டு." இப்படியாக ஊரூராக பேசி இளைஞர்களின் எண்ணத்தை சீர்குலைப்பதை பற்றி எந்த நடுநிலை பேசும் நபர்களாவது எதிர்ப்பு தெரிவித்து பேசியதுண்டா? இந்த மூன்று சாதி பெண்களை கட்டுவதால் இந்த மூன்று சாதிகளும் முற்றிலுமாக ஒழிந்துவிட போகிறதா என்ன? என்பது எனக்கு புரியவில்லை.

காதல் என்ற புனிதத்தை சீர்குலைக்கும் நோக்கில் சாதிவெறி பிடித்த நயவஞ்சகர்கள் பொதுமேடை அமைத்தும், வாராந்திர கூட்டம் ஒருங்கிணைத்தும் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். காதல் என்பது இயல்பாக ஆண் - பெண் இருவருக்குள் வரும் ஆழ்நிலை மனவோட்டத்தை சார்ந்தது. அதை குறிப்பிட்ட இந்த மூன்று சாதிகள் மீது மட்டும்தான் வர வைக்க சிலர் சாதி அமைப்புகள் நடத்துவதை ஆண்மையுள்ள எந்த நடுநிலைவாதியாவது வாயை திறந்தது உண்டா?

இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு எத்தனையோ 'சாதி மாற்று காதல் திருமணங்கள்' இங்கே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இருபது வருடங்கள் ஆசையாசையாய் வளர்த்தெடுத்த பெண்ணை தன் குடும்ப சூழலுக்கு ஒத்துவராத யாரோவொரு பெயர் தெரியாத ஒருவனுக்கு மணம் முடிக்க எந்த தாய்தகப்பனும் விரும்புவதில்லை என்பதே உண்மை. மாறாக, பெற்றோரின் சம்மதம் வாங்காமல் காதல் திருமணம் செய்ய துடிக்கும் ஆர்வமும் அதன் பின்னாலுள்ள மர்மமும் என்ன?

காதல் கொண்ட ஆண் பெண் இருவருக்குள்ளும் ஒத்த மனநிலை வந்த பின்னால், அந்த பெண் வீட்டாரோடு நேரடியாக சென்று பெண் கேட்டு முறைப்படி திருமண செய்யாமலேயே, ஆசை வார்த்தை சொல்லி வீட்டை விட்டு அழைத்து வருவதால் யாருக்கு லாபம்? ஒரே சாதியில் காதல் செய்யும் ஏழை ஆணுக்கு பெண் தர, அதே சாதியை சேர்ந்த பெண் வீட்டார் மறுக்கும் பல சம்பவங்களை ஊரெங்கும் பார்த்துதானே வருகிறோம். எதார்த்தம் இப்படி இருக்கையில், ஒரு குறிப்பிட்ட மூன்று சாதி பெண்களின் கற்பை, காதல் என்ற பெயரில் சூறையாட சொல்லும் குறிப்பிட்ட சாதிவெறி அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் பொறுக்கிகளை வெட்டி இருந்தால் மகிழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆனால், சாதிவெறியை ஏவிய 'வில்' பத்திரமாக நடுநிலை புரட்சி என்ற பெயரில் பிணத்தில் மீண்டுமொரு சாதி வன்மத்தை விதைத்து கொண்டிருக்க, அப்பாவி 'அம்புகள்' வீழ்த்தப்படுவது தான் வேதனையான விசயம்.

சாதிவெறியன் என்றும் காட்டுமிராண்டி என அறியப்படும் சாதிகளை சேர்ந்த தமிழ் சாதி உறவுகளே, தயவு செய்து அம்புகளை நோவாதீர்கள். முதலில் வில்லை உடைத்தெறியுங்கள். அதன்பிறகு எல்லாமும் சரியாகும்.
என்னதான் தமிழ் சாதிகளின் ஒற்றுமையையும், தமிழ் தேசியத்தையும் பேசினாலும், 'சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டி சாதி' என்று ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட சாதிசார் மக்களை அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியை செய்யும் போலி தமிழ்தேசிய முகமூடிகள் இருக்கும் வரை எதுவும் இங்கே சாத்தியமில்லை.

”இயற்கையாக
மனதில் எழாத அன்பை
திட்டமிட்டு உருவாக்கி
சாதி மறுப்பு என்ற பெயரில்
செய்யப்படும் காதல் திருமணங்கள்
நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!”


- இரா.ச.இமலாதித்தன்

14 மார்ச் 2016

காதல் திருமணங்களுக்கு யார் காரணம்?

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த ஆண் பெண் இருவருக்குள் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு, டீ சர்ட் ஜீன்ஸ் பேண்ட்டோ - செல்போனோ - சாதிக்கட்சி அமைப்புகளோ காரணமில்லை. அப்பெண்ணை வளர்க்கும் விதமும், அந்த பெண்ணின் உடன்பிறந்த ஆண்கள் அப்பெண்ணிடம் அடக்குமுறையோடு பழகும் விதமும், பெற்றவர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும், தன் குடும்ப சூழ்நிலையை பற்றி அந்த பெண்ணோடு வெளிப்படையாக பேசி புரிய வைக்காத ஒட்டுமொத்த பெண் வீட்டார்களே காரணம்; காதல் திருமணங்களுக்கு!

ஒரு பெண்ணோட கற்பில் தான், தங்களுடைய குலப்பெருமை காக்கப்படுகிறதென நினைத்தால், முதலில் அந்த பெண்ணை மதியுங்கள்; அந்த பெண்ணுக்கான அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தாதீர்கள்; அந்த பெண்ணின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்; மனம் விட்டு அந்த பெண்ணோடு பேசுங்கள்; வெளியுலக நடப்புகளை வெளிப்படையாக சொல்லி புரிய வையுங்கள்; அந்த பெண்ணுக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்புங்கள்; அந்த பெண்ணுக்கு பிடித்த ஒருசில விசயங்களுக்காவது தடை சொல்லாதிருங்கள்;சினிமா, பார்க், பீச் என மாதம் ஒருமுறை அழைத்து செல்லுங்கள்; ஐஸ் க்ரீம், சாக்லெட் என தாராளமாக வாங்கி கொடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் வீட்டு பெண், யாரோ பெயர் தெரியாத ஒருவனோடு காதலிக்கிறேன் என்ற பெயரில் உங்களது குடும்ப கெளரவத்தை சீர்குலைத்து ஓடிப்போக மாட்டாள். இதுவரை இப்படி இல்லாவிட்டாலும், இனிமேலாவது மேலே சொல்லிருக்கும் விசயங்களை நடைமுறைப்படுத்தி பாருங்கள். நல்லதே நடக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்!





'தனித் தமிழர் சேனை'யின் நிறுவனத்தலைவரும், தமிழ்தேசிய சிந்தனையாளரும், ஐயா அரப்பா தமிழன் அவர்களின் உடன்பிறந்தவரும், 'சுயமரியாதைச் சுடரொளி' சிவகங்கை இராமசந்திரன் சேர்வை அவர்களின் பெயரனுமான ஐயா நகைமுகன் அவர்களின் இழப்பானது அகமுடையார் சமுதாயம் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழ் இனக்குழுக்கே மிகப்பெரிய பின்னடைவு.

'தமிழக தலைமை அகமுடையார் சங்கம்' ஒருங்கிணைத்த அனைத்து பொது மேடைகளில் அவர் உடல்நிலையை கூட கவனத்தில் கொள்ளாமல் உணர்ச்சிமிகு பேச்சுகளால் அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்பதற்காகவே பல மணிநேரம் காத்திருந்திருக்கிறோம் என்பதே பெருமையான விசயம். அவரது கண்ணியமும், சொல்வன்மையும், அறிவார்ந்த சிந்தனைகளும், அடுத்தக்கட்ட இளம்தலைமுறையினருக்கு கண்டிப்பாக தேவையாக இருந்தது.

85 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையில் ஒருங்கிணைத்த அகமுடையார் மாநாட்டுக்கு பலவித எதிர்ப்பு வந்து, மாநாட்டு பந்தலுக்கு அனுமதிக்காத காவல்துறையின் அடக்குமுறையை தனி ஒருவனாக நின்று அனுமதி பெற்றுத்தந்த அப்படிப்பட்ட செயல்தலைவரை, இன்று இழந்து நிற்கிறோம்.
திருவண்ணாமலை மாநாடு முடிந்த பின்னால், மாநாட்டு பந்தலுக்கு அருகேயுள்ள பிரதான சாலையோரம் ஐயா அரப்பா அவர்கள் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அரைமணி நேரத்திற்கும் மேலாக அன்றிரவு அவரோடு உரையாடிய நிகழ்வை என்றைக்கும் மறக்கவே முடியாது.

அன்னாரது இறுதி நிகழ்வு நாளை 15.03.2016 செவ்வாய் திருப்பத்தூர் தெக்கூரில் நடைபெறும்.

தனிப்பெரும் தமிழருக்கு வீரவணக்கம்

- இரா.ச. இமலாதித்தன்

13 மார்ச் 2016

ஜெய் டாஸ்மாக்!



ஜெயலலிதா ஆகிய என்னுடைய தலைமையிலான என் அரசு என அடிக்கடி சொல்லிக்கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட தேர்வாணையம் நடத்தும் +2 பொது தேர்வின் ஆங்கில பாட கேள்வித்தாளில் ஐந்தாவது கேள்விதான் உட்சபட்ச ஹைலைட்!

A. வொயின் B. வொட்கா C.பீய்ர், D. ஜின்

ஜெய் டாஸ்மாக்!

12 மார்ச் 2016

திராவிட சறுக்கல்!

-01 -

'பாளையம்' அமைத்து கொடுத்த தெலுங்கு நாயக்க விசுவாசத்தின் நீட்சிதான், இன்றைய திராவிட பாசம்! மீசையை முறுக்கி கொண்டு காலில் விழும் வேசம். த்தூ!

-02-
குறைந்த பட்சம் 'ஐ' என்பதை 'அய்' என்றோ, 'ஒள' என்பதை 'அவ்' என்றோ பயன்படுத்தாமல் இருப்போமே?!
ஐயா என்பதே சரி; அய்யா என்ற பதம் தவறு. அதுபோல ஒளவையார் என்பதே சரி; அவ்வையார் என்ற பதம் தவறு.

(ஐயனார், ஐயா, ஐக்கியம், ஐந்து...)

11 மார்ச் 2016

அரசியல் களத்தில், நேதாஜியின் பேரனும் - பசும்பொன் தேவரின் பேரனும்!


நேதாஜியின் பேரனுக்கு கூட நேதாஜி உருவாக்கிய பார்வார்ட் ப்ளாக் கட்சியில் உரிய அங்கீகாரம் கொடுக்காததால், இன்றைக்கு அவர் பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக்க பட்டிருக்கிறார் என்பதுதான் சமகால அரசியல் நிலவரம்.

மேற்கு வங்கத்திலும், தமிழ்நாட்டிலும் மட்டும் தற்போது ஓரளவுக்கு அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்படுகின்ற பார்வார்ட் ப்ளாக் கட்சியும், அ.இ.அ.தி.மு.க போல அகில இந்திய கட்சிதான் என்ற நிலைக்கு மாறி போய்விட்டது. அப்படிப்பட்ட பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தேசிய தலைவர்களில் ஒருவராக இருந்த பசும்பொன் தேவரின் பேரனுக்கும் கூட பார்வார்ட் ப்ளாக் கட்சி உரிய அங்கீகாரம் கொடுக்காததால் தனியாக பசும்பொன் தேசிய கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார்.
ஆனால் இதையே சாதகமாக சொல்லக்கூடும். 'பார்த்தீர்களா, நேதாஜி பேரனோ, பசும்பொன் தேவர் பேரனோ யாராக இருந்தாலும், அவர்களை கட்சியில் இணைக்காமல் வாரிசு அரசியலையும் ஊக்குவிக்காத கட்சியாக பார்வார்ட் ப்ளாக் கட்சி விளங்குகிறது' என வாதத்திற்காக சொல்லிக்கொள்ளலாம்.

சாமானியனாக என் பார்வையில், இருபெரும் தலைவர்களின் பேரன்களும் அரசியல் பக்கமே வராமல் இருந்திருந்தால் பிரச்சனையே இல்லை. ஆனால், அவர்கள் இருவருக்கும் அரசியலில் பயணிக்க விருப்பம் இருக்கும் போது, அதை பார்வார்ட் ப்ளாக் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டதென்றே தோன்றுகிறது.

நேதாஜியும், பசும்பொன் தேவரும் வளர்த்தெடுத்த கட்சியில் அவர்களது பேரன்களை கூட உறுப்பினராக்க முடியவில்லை என்ற எதார்த்தமும் புரியாமல், சாதிக்கட்சி என்று முத்திரையும் குத்தப்பட்டதென்ற உண்மையும் உணராமல், இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ள பார்வார்ட் ப்ளாக் கட்சி, குறைந்தது ஐந்து தொகுதிகளையாவது அதிமுக கூட்டணியில் வாங்கி, கட்சியை பலமாக்காட்டும்.

ஜெய்ஹிந்த்!

- இரா.ச. இமலாதித்தன்

வாணாதிராயர்களின் வரலாற்று அழிப்பு!





அகமுடையார் வழித்தோன்றலான வாணாதிராய அரசமரபினர் தமிழகமெங்கும் கி.பி. 5ம் நூற்றாண்டு முதல் கி.பி. 15ம் நூற்றாண்டு வரை ஆண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆட்சிக்குட்பட்ட 'வாணாதிராய மதுரை'யே இன்றைக்கு 'மானாமதுரை'யாகி போனது.

மேலும், அழகர்கோவிலை தலைநகரமாக கொண்டு மதுரையையும் ஆண்ட வாணாதிராய அகமுடையார்கள், அழகர்கோவிலைச் சுற்றி 14ம் நூற்றாண்டில் நீண்டதொரு வெளிக்கோட்டையை காவல் அரணாக கட்டினார்கள். பகைவர்களின் தாக்குதலிலிருந்து அழகர்கோவிலை பலமுறை காப்பாற்றிய சிறப்பு வாய்ந்த கோட்டையை, தற்போது பழுதுபார்க்கிறோம் என்ற பெயரில் 'தொல்லியல் துறை' கோட்டைச்சுவர்களின் பழம்பெருமைகளை சிதைத்து கொண்டிருக்கின்றனர் என்பது வேதனையான விசயம்.

ஏற்கனவே, ஒவ்வொரு கோவிலிலும் உள்ள கல்வெட்டுகளையும் பழம்பெரும் சிற்ப ஓவிய வேலைப்பாடுகளை யெல்லாம் சீரமைக்கிறோம் என்ற பெயரில் சிமெண்ட் பூசி சிதைத்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இதுமாதிரியான கோட்டைகளின் பழமைதன்மையையும் பாறை கற்களை பெயர்த்தெடுத்து சிமெண்ட் பூசி சிதைக்கிறார்கள். வரலாற்றை பழைமை மாறாமல் காக்க வக்கில்லாத 'தொல்லியல் துறை' இங்கே இருந்தென்ன லாபம்? என்பதுதான் பலரின் ஆதங்கமாக இருக்கிறது.

மேலும், இந்த அழகர் கோவில், பெரும்பான்மையான அகமுடையார்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!

விஜயகாந்த் கிட்ட, அதிமுக என்ன மாதிரியான 'பேக்கரி டீலிங்' செய்ததென தெரியவில்லை. இது இப்படியே போனால், நிச்சயமாக அடுத்த தேர்தலில் 'முரசு' சின்னத்தின் நிலையும் 'பம்பரம்' போல ஆகிவிடும்.
விஜயகாந்த் மீதான விமர்சனத்தை அவர் இந்த முடிவால் தகர்த்தெறிந்திருக்கலாம். ஆனால் நட்டம் தேமுதிகவுக்கு தான் என்பதும், தனித்து களம் காண்பதென்பதால் நேரடியாகவே அதிமுகவுக்கு மட்டும் தான் மிகப்பெரிய லாபம் என்பதையும் விஜயகாந்தை இயக்கும் பிரேமலதா தேர்தல் முடிவுக்கு பின் புரிந்து கொள்வார்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட, இப்போதே நமஸ்காரம் செய்து கொள்ளலாம் சூரியனை! என்பதுதான் தேமுதிகவை சார்ந்த பல மாவட்ட செயலாளர்களின் ஏக்கமாக இருக்கிறது என்பதை பிரேமலதா புரிந்திருந்தால் இதுபோன்ற முடிவை விஜயகாந்த் அறிவித்திருக்க மாட்டார்.
நான்கில் இரண்டு திராவிட கட்சிகள் இந்த தேர்தலோடு ஓரம்கட்டப்படலாம் என்பது மட்டும் தான் ஒரே ஆறுதல். மேலும், இதனால் மறைமுக லாபம் அடைய போகும் நாம் தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

10 மார்ச் 2016

பாகிஸ்தான் வெல்லட்டும்!

பாகிஸ்தான் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிக்காமல் இருப்பதில் தான் தேசபக்தி இருக்கிறதா என்ன? பிசிசிஐ என்ற தன்னாட்சி நிறுவனம் இந்தியாவில் நடத்தும் உலகளாவிய போட்டியில் பிசிபி என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் விளையாடுவதில் என்ன தவறு? ரவிசங்கர் குருஜியின் விழாவிற்காக இராணுவ வீரர்களை பணியாட்களாக ஈடுபடுத்தும் போதே உங்களது தேசப்பற்று பல்லிளிக்க வில்லையா?

நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த மண்ணையும், கல்லையும், மலையையும், மரங்களையும், நதியையும், கடலையும் கடவுளாக வணங்கும் நாங்கள் தீவிர கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். இந்த தாய்மண்ணையே தன்னுயிர் போல நேசிக்கும் உண்மையான தேசபக்தி எங்களுக்கு உண்டு. ஆனால், எங்கள் தாய்மண்ணின் வளத்தையும், எங்கள் வரிபணத்தையும், அதானிகளும் - அம்பானிகளும் - மல்லையாக்களும் சுரண்டும் போது உங்களுக்கு வராத தேசபக்தி, இந்த கிரிக்கெட்டில் தான் வருகிறதா?
சென்றமுறையே டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்றிருக்க வேண்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இம்முறை உலக கோப்பையை இந்தியாவில் வெல்லட்டும்!

சோ கால்டு ஹிந்தியனாக என் வாழ்த்துகள்!

- இரா.ச. இமலாதித்தன்

விஜய் மல்லையாவும் தேசபக்தர் தான்!



விஜய் மல்லையா கூட தீவிரமான தேசப்பக்தியும் - ஆன்மீகப்பற்றும் உடையவர் தான். ’மேக் இன் ஹிந்தியா’ என்ற திட்டத்தின் முன்னோடியாக, உலக நாடுகளுக்கெல்லாம் தனது ’கிங்பிஷர்’ மதுபானத்தை ஏற்றுமதி செய்த பெருமைக்குரியவர். எனவே, அவருக்கு கொடுத்த கடனை ஸ்டேட் பேங்க் தள்ளுபடி செய்து, மேலும் சிலபல கோடிகளை நன்கொடையாகவும் வழங்க முன்வர வேண்டுமென்பது, அனைத்து தேசப்பக்தர்களின் விருப்பமாக உள்ளது.







விஜய் மல்லையா மட்டும் தான், வங்கியில் பல்லாயிரம் கோடி ரூபாய்களை கடனாக வாங்கிவிட்டு, பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய திருடன் என்பது போல பலர் கோபத்தோடு பேசுகிறார்கள்.

உண்மையில் கோபப்பட வேண்டியது, விஜய் மல்லையாவிடம் வாங்கி குடிக்கும் ஆளும் - ஆண்ட ஹிந்திய சர்க்காரையும், இத்தனை கோடிகளை கடன் கொடுக்க ஒத்துழைப்பு கொடுத்த வங்கியையும் தான்.

கல்விக்கும், விவசாயத்திற்கும் சில லட்சங்களை கடனாக தரவே, அறவே மறுக்கும் வங்கிகளையும் அதனை கண்டுகொள்ளாமல் அதற்கான விதிமுறைகளையும் தளர்த்தாமல் வேடிக்கை பார்க்கும் அரசாங்கங்களுக்கும், விஜய் மல்லையா தான் சரியான செருப்படி!

நீ கலக்கு சித்தப்பு...

- இரா.ச.இமலாதித்தன்

09 மார்ச் 2016

மலையாண்ட அள்ளியில் சிவராத்திரி விழா!



மகா சிவராத்தியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்துள்ள ’மலையாண்ட அள்ளி’யில், ’மூவேந்தர் இளைஞர் நற்பணி மன்றம்’ சார்பாக அன்னதானம் செய்து விழாவை சிறப்பித்த அகமுடையார் உறவுகளுக்கு வாழ்த்துகள்!

08 மார்ச் 2016

இனிய சர்வதேச பெண்கள் திருநாள் நல் வாழ்த்துகள்!

தன் கூட பிறந்த அக்கா தங்கச்சியை மதிக்காமல், அதட்டி - உருட்டி, அடக்கி - அடிச்சு வளர்க்க ஆசைப்படும் அண்ணங்களும் தம்பிகளும் தான், இன்றைக்கு பெண்கள் நாள் வாழ்த்துகளை பெருமையாக பகிர்ந்து கொள்கின்றனர்.
முதலில் தன்னை மாற்றி கொள்ள பழகி கொள்ளுங்கள். சக மனுசியாக வீட்டிலுள்ள பெண்களை பார்க்காமல், சகஜமாகவும் பேசாமல் இருக்கும் போக்கை முதலில் கைவிடுங்கள். இப்படிப்பட்ட அண்ணன் தம்பிகள் இருக்கும் வீட்டிலுள்ள பெண்களுக்கு தான், காதல் திருமணங்களும் அதிகமாக நடக்கின்றன என்பதையும் ஆழமாக புரிந்து கொள்ளுங்கள்.

இனிய சர்வதேச பெண்கள் திருநாள் நல் வாழ்த்துகள்!

06 மார்ச் 2016



கி.பி. 910ம் ஆண்டு சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து, கோட்டையாண்ட அரசியான செம்பியன்மாதேவியார், 'பெரிய பிராட்டி' என்றும் அழைக்கப்பட்டார். இவரின் கணவர் தான் கண்டாரதித்தன்.
மிக முக்கியமாக ஆதித்த கரிகாலன், ராஜராஜசோழன், குந்தவை நாச்சியார் உள்ளிட்ட தனது பெயர குழந்தைகளை சிறுவயது முதலே வளர்த்தெடுத்து, தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டச்சொல்லி அறிவுறுத்தி, மேலும் அனைத்து சிவன் கோவில்களையும் கற்றளியாக மாற்றச்சொல்லி தன் பெயரனுக்கு ஆன்மீக - அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் வாழ்ந்து ஆறு சோழ மன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

இவர் கட்டிய சிவன் கோவில் இன்றளவும் நாகை மாவட்டம் - கீழ்வேளூர் வட்டம் - செம்பியன் மகாதேவி என்ற அவரது பெயரிலேயே அமைக்கப்பட்ட ஊரில் பெரியகோவில் அமையப்பெற்றுள்ளது. அங்கே இவருக்கு தனிச்சிலையும் உண்டு. இவர் பிறந்த நாளான சித்திரை மாதம் கேட்டை நட்சத்திர நாளில், ஊர்மக்கள் சீர்வரிசை எடுக்கும் பெருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

செம்பியன்மாதேவியார் பிறந்த அதே கேட்டை நட்சத்திரத்தில் தான் அடியேனும் பிறந்தேன் என்பதிலும், அவரது கணவர் பெயரின் பின்பாதி தான் என் பெயரும் என்பதிலும், அவரது பெயர் கொண்ட 'செம்பியன்மகாதேவி' என்ற ஊருக்கு அருகிலேயே தான் நானும் படித்து வளர்ந்தேன் என்பதிலும் கூட எனக்கு பெருமையே.

- இரா.ச.இமலாதித்தன்

அறந்தாங்கியில் சிவராத்திரி விழா!




சிவராத்திரிக்காக திருவிழா ஏற்பாடு செய்திருக்கும், அறந்தாங்கி அகமுடையார்களுக்கு வாழ்த்துகள்!

05 மார்ச் 2016

கல்லணை கட்டிய இரும்பிடர்த்தலையன்!





'இரும்புத்தலை அகமுடையார்' வழித்தோன்றலான 'கரிகால சோழன்', ஆயிரம் அண்டுகளுக்கு முன் 'சோறுடைத்த சோழநாட்டு' விவசாய
பெருங்குடிகளின் நீர்மேலாண்மைக்காக உருவாக்கிய 'கல்லணை'யில் இன்றைய பொழுது கழிந்தது!

‪#‎இரும்புத்தலைஅகமுடையார்‬
‪#‎முற்காலசோழர்‬

04 மார்ச் 2016

+2 மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் எழுதும் அனைவருக்கும், குறிப்பாக வழக்கம் போல இம்முறையும் மாணவிகளுக்காக முதல் இடங்களையும், தேர்ச்சி சதவீதத்தையும் விட்டுகொடுக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

03 மார்ச் 2016

கடிதம் கொடுத்து, ஜட்டியை துவைக்க வைக்கும் அவலம். த்தூ!



ஓ.பி.எஸ் எனும் விசுவாசி!



கடலூர் நிவாரண பணிகளின் போது எடுக்கப்பட்ட இந்த ஒற்றைப்படம் போதும் ஓ.பி.எஸ். என்ற பச்சைத்தமிழனின் எளிமையை.

அனைத்து தரப்பட்ட மக்களாலும் அறியப்பட்ட, ஊழல் கறை படியாத ஓ.பி.எஸ் என்ற தமிழர் முதலமைச்சராக ஆவதை வரவேற்க காத்திருக்கிறது இந்த ஒட்டுமொத்த தமிழ்நாடும். தமிழகத்தில் எந்த தொகுதியில் சுயேட்சையாக நின்றாலும் கூட, மாபெரும் வெற்றி பெறும் வல்லமை அவருக்குண்டு.
வருங்கால தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ்க்கு சக தமிழ் வாக்காளனாக வாழ்த்துகள்!

ஓ.பி.எஸ் மீது என்ன தான் மாற்று கருத்து இருந்தாலும், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு அடுத்தது அவர்தான் என்பதில் துளி கூட சந்தேகமில்லை. ஓ.பி.எஸ் ஒருவர் மட்டும் தான் இருமுறை தமிழக முதலமைச்சராக இருந்த, படித்த பட்டதாரி தமிழர் என்பதும் யாரும் மறுக்க முடியாத சமகால அரசியல் வரலாறு.

Time to Lead!

அகமுடையாரை புறக்கணிக்கும் ஜெயலலிதாவிற்கு நன்றி!


உண்மையாகவே அதிமுகவை பொறுத்தவரை முக்குலம் என்றால், அது கள்ளர் - மறவர் - வல்லம்பர்.

மேலும், அகமுடையார் தனி தமிழ் இனக்குழு என்பதால் தான் அவர்களுக்கு முக்குலத்தோர் கோட்டாவில் எந்த அங்கீகாரத்தையும் ஜெயலலிதா கொடுப்பதில்லை.

ஜெயலலிதாவிற்கு நன்றி!

அதிமுக முக்குலத்தோர் கட்சி என மற்ற அனைத்து தமிழ்சாதி உறவுகளும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர். அது தவறு. உண்மையில் அது கள்ளரான சசிகலாவின் ஆளுமையில் இயக்கப்படுகின்ற கட்சி. மேலும் மறவரான ஓ.பி.எஸ்சின் பின்புலத்தில் செயல்படுகின்ற கட்சி. மேலும் அரசியல் ஆதாயத்திற்காக கள்ளரும், மறவரும் முக்குலத்தோர் என சொன்னாலும் கூட அகமுடையாருக்கு அங்கீகாரம் இல்லாத கட்சி.
நிலைமை இப்படி இருக்கையில் அது எப்படி முக்குலத்தோர் கட்சி ஆகும்? ஒன்று கள்ளர் கட்சியென்று சொல்லுங்கள்; இல்லையெனில் மறவர் கட்சியென்று சொல்லுங்கள். அதிமுக முக்குலத்தோர் கட்சியும் இல்லை; அது, அகமுடையார் கட்சியும் இல்லை.

ஏனெனில், மிக முக்கியமாக அகமுடையார், முக்குலத்தோரும் இல்லை!

02 மார்ச் 2016

'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த அகமுடையார்!'


முக்குலத்தோர் என்ற பெயரில் நடத்தப்படும் எந்த போராட்டத்தாலும் வெற்றி கிடைத்ததில்லை என்பதே கடந்தகால வரலாறு. இந்த மாதிரியான போரட்டங்களுக்கு பிறகு, புதுப்புது அமைப்புகளும், புதுப்புது தலைவர்களும் தான் உருவெடுப்பார்கள். அதுவும் இப்போதைய சூழல் என்பது தேர்தல் நேரமென்பதால், இந்த மாதிரியான போரட்டங்களால் சிலர் அதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்வார்கள். ஏதாவதொரு திராவிட கட்சிகளிடம் கூடிய கூட்டத்தை கணக்கு காட்டி, முக்குலத்தோர் இளைஞர்களெல்லாம் எங்கள் பக்கம். அதனால் இம்முறை உங்களுக்காக தேர்தல் பணியாற்றுகிறோம் என்று கூறி சாதியை ஓட்டு என்ற பெயரில் அடகு வைக்க கூடும்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட அகமுடையார் அமைப்புகள் மட்டும் போராட்டம் செய்வதுதான் சரியான நடைமுறை. மாறாக, முக்குலத்தோர் அமைப்புகளை வைத்து போராட்டம் செய்வதால் எந்த பயனும் கிடைக்க போவதில்லை.
ஏனெனில், இதே முக்குலத்தோர் அமைப்புகள் தான், சிவகங்கை சமஸ்தானத்தில் ஆட்சியாளர்கள் பட்டியலுள்ள கல்வெட்டில் மாமன்னர் மருதுபாண்டியர் பெயர்களை இடம்பெற செய்யாமல் விட்ட போதும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் வரலாற்றை திட்டமிட்டு அழித்தொழிக்கும் செயலுக்கு மறைமுகமாக ஆதரவும் தந்து கொண்டிருப்பவர்கள்.

நரிக்குடி பிரச்சனையை முதலில் அங்குள்ள அகமுடையார்களோடு கலந்து பேசி சரி செய்து, மணிமண்டபம் பற்றிய கோரிக்கையை அரசுக்கு நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லாமல், செய்யப்படுகின்ற இந்த மாதிரியான போராட்டங்களால் எந்த பயனுமில்லை என்று நிச்சயமொரு நாள் புரிந்து கொள்ளப்படும் அனைவராலும்.

- இரா.ச. இமலாதித்தன்

முக்குலதோர் என்பதே போலி கட்டமைப்பு!



முக்குலத்தோரும் இல்லை, தேவரினமும் இல்லை. தேவர் என்பது ஒரு பட்டமே, அது சாதி அல்ல.
- கள்ளர் பேரவை. (03.11.1994)

இதையே தான் அகமுடையார்களாகிய நாங்களும் சொல்கிறோம். அகமுடையார், முக்குலதோரும் இல்லை; தேவரினமும் இல்லை. பட்டமெல்லாம் சாதியாக முடியாது. எனக்கு தேவர் பட்டம்; ஆனால் சாதியால் நான் அகமுடையார்.

அனைத்து தமிழ் சாதிகளுடனும் இணக்கமாக நட்பாக இருக்கவே விரும்புகிறோம். ஆனால் அதுவே உறவென்றால், இனி அகமுடையார்களிடம் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்கும் முக்குலத்தோர் அமைப்புகள்!


1780 - 1801 வரை மாமன்னர் மருதுபாண்டியர் ஆண்ட சிவகங்கை சமஸ்தானத்தில் அவர்களது பெயரை பதியவே வக்கில்லை. இந்த லட்சணத்தில் திருவண்ணாமலையில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பெயரில் பல்கலைகழகமா?

விரைவிலேயே இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்" உருவாகும் என்று திருவண்ணாமலை அகமுடையார் திருப்புனை மாநாட்டில், திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் சொன்னாரே. அதற்கு போட்டியாகத்தான் இந்த வலியுறுத்தலா?!



ஒரு பக்கம் தெற்கில் உள்ள அகமுடையார்களிடம் தஞ்சாவூருக்கு அந்த பக்கம் உள்ளவங்களெல்லாம் அகமுடையாரே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டு, இன்னொரு பக்கம் வடக்கில் உள்ள அகமுடையார்களிடம் நாமெல்லாம் முக்குலத்தோரென ஆர்பாட்டம் பண்றாங்க.
என்னதான் உங்களுக்கு பிரச்சனை?

வடக்கோ - தெற்கோ - கொங்கோ - டெல்டாவோ நாங்கள் அகமுடையார் தான்; அகமுடையார் மட்டும் தான். அகமுடையார், முக்குலத்தோரே இல்லை. தேவர் என்பது சாதியும் இல்லை. அது பட்டம் தான்!


அவசரகதியில் தேர்தலுக்காக போடப்பட்ட 'அம்மா' சாலை!


01 மார்ச் 2016

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

என்றைக்குமே அகமுடையார் முக்குலத்தோர் இல்லை!

'தஞ்சை வரை உள்ள அகமுடையார்கள் மட்டுமே முக்குலத்தோர்; அதற்கு அடுத்துள்ள மாவட்டங்களில் உள்ள அகமுடையார் எல்லாம், முக்குலத்தோர் இல்லை' என அரைகுறை அறிவாளிகள் சிலர் கூறியதாக தெரிகிறது.
அகமுடையார்களை முக்குலத்தோர் என சொல்ல நீங்கள் யார்? உங்களுக்கு யார் அந்த உரிமையை தந்தது? அகமுடையார் என்பது தனி இனக்குழு.

அகமுடையாருக்கான தேவர் பட்டத்தை மற்றவர்கள் வைத்திருப்பதால் மட்டுமே அவர்களெல்லாம் முக்குலத்தோராக ஆகிவிட முடியுமா? உடையார் - பிள்ளை - முதலியார் - சேர்வை என்ற பல பட்டங்கள் அகமுடையாருக்கு உண்டு. அந்த பட்டங்களிலெல்லாம் தனித்தனி சாதியே இருக்கிறது. (உதாரணத்திற்கு, உடையார் - பார்கவ குலம், பிள்ளை - வெள்ளாளர், முதலியார் - செங்குந்தர்). பட்டங்களை மட்டும் வைத்துக்கொண்டு எல்லாரிடமும் உறவாட முடியுமா?

தஞ்சைக்கு அடுத்த மாவட்டத்திலுள்ள அகமுடையார் அனைவரும் வேறு என பொய் பரப்புரை செய்யும் அரைவேக்காட்டு ஜென்மங்களுக்கு ஒரு கேள்வி.
அகமுடையார் மட்டுமே வாழும் திருவண்ணாமலையில், அப்பறம் என்ன மண்ணுக்கு மதுரையில் இருந்து வந்து, முக்குலதோர் மாநாடு போட்டீங்க? சேலம் தருமபுரி திருவண்ணாமலை போன்ற தெற்கு வடக்கு கொங்கு டெல்டா என அனைத்து மாவட்டங்களிலும் முக்குலத்தோர் கட்சிகளுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க மட்டும் ஏன் அகமுடையார்களின் காலை பிடிக்கிறார்கள்? த்தூ...

என்றைக்குமே அகமுடையார் முக்குலத்தோர் இல்லை!