சாதி மறுப்பு திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதி மறுப்பு திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 டிசம்பர் 2017

சாதி மறுப்பு திருமணத்தின் மறுபக்கம்!

இந்த அரச கொலைக்கு எதிராக பதிவிட அவர்கள் குடும்பம் சார்ந்த குறிப்பிட்ட சாதியான கள்ளர் என்பது காரணமில்லை. பக்கத்து வீடு தீப்பற்றி கொண்டால் நம் வீடும் நாளை பற்றிக்கொள்ளும் என்ற அடிப்படையில் தான் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். இதில் அகமுடையார் மட்டுமல்ல; திருமணம் என்பதே குடும்ப கெளரவம் சார்ந்தது என்ற அடிப்படையில் வாழும் அனைத்து இனக்குழுக்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர். குடும்பமென்ற உயரிய அமைப்பின் கெளரவத்தை பாதிக்கும் பிரச்சனையாக பார்க்கும் பெற்றோர்களின் ஆதரவு இல்லாத சாதி மறுப்பு திருமணங்களை எதிர்க்கும் அனைவருமே இந்த நீதிமன்ற கொலையை எதிர்ப்பார்கள்; எதிர்க்கிறார்கள். இதில் முக்குலமும் இல்லை; அதில் அகமுடையாரும் இல்லை.
தானாடாவிட்டாலும் தன் சதை ஆடுமென்ற கணக்கீடெல்லாம் இதற்கு ஒத்து போகாது. அப்படி பார்த்தால், இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் வன்னியரும், நாடாரும் கூட இருக்கின்றனர். அவர்களுக்கும் கள்ளருக்கும் என்ன சதை உறவு இருக்கிறது? இதை குறிப்பிட்ட சாதியின் பிரச்சனையாகவோ, சில சாதி கூட்டமைப்புகளின் பிரச்சனையாகவோ பார்க்க வேண்டியதில்லை.
எல்லா சாதிகளிலும் பெரும்பான்மையானோர் சாதி மறுப்பு திருமணங்களை ஏற்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய சாதியை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்வதற்கே இங்கு எதிர்ப்பு தான் அதிகமாக இருக்கிறது. இதில் சாதி மட்டும் பிரச்சனை இல்லை; சாதியோடு சேர்ந்த பொருளாதார நிலையும் தான் ஒவ்வொரு திருமணங்களையும் முடிவு செய்கின்றன. இந்த விசயத்தில் சாதிக்கும் சதைக்கும் சம்பந்தமே இருப்பதில்லை. ஏனெனில் ஒரே இரத்தமும் சதையுமாக பிணைந்துள்ள அதே சாதியில் காதலித்து திருமணம் செய்வதும் கூட இப்போதெல்லாம் எளிதல்ல.

12 டிசம்பர் 2017

கெளசல்யா!

தன்னை பின்னாலிருந்து இயக்குபவர்களை பற்றி தன் வாயாலேயே இதே ஊடகங்கள் முன்பாக பச்சை பச்சையாக கிழித்தெறியும் நாளும் தொலைவில் இல்லை. அப்போ வந்து, ”பார்த்தீங்களா வீரத்தை; இவள் எங்க குல நாச்சியார்டா!”ன்னு எவனும் கம்பு சுத்திடாதீங்க.

சாதி மறுப்பு திருமணங்கள் தோல்வியே!

Image may contain: 2 people, text



சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொண்ட 99% பெண்கள், தங்களது பெற்றோர்களின் அருமை பெருமைகளை திருமணமாகி சரியாக ஆறு மாதத்திற்குள்ளாகவே தெரிந்து கொள்கிறார்கள். எத்தனையோ பெண்கள், வெளியே சொல்ல முடியாமலும் - வேற வழியில்லாமலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறன்றனர் என்பதே எதார்த்த கள நிலவரம். இது நாமாகவே தேர்ந்தெடுத்த வாழ்க்கை; அதனால் நடப்பவைகளை வெளியே சொன்னால் நம்மளோட முடிவை எல்லாரும் ஏளனம் செய்வார்களென்ற எண்ணத்தாலே போலியாக வாழும் பெண்களே இங்கு அதிகம். இந்த சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக இவ்வளவு பேச வேண்டியதே இல்லை. ஓர் ஆய்வுக்காக, சாதி மறுப்பு செய்த பெண்களின் தங்கைக்கோ - நெருங்கிய தோழிகளுக்கோ, தன்னைப்போலவே சாதி மறுப்பு திருமணத்தை செய்ய அறிவுரை கூற சொல்லுங்கள் பார்ப்போம்; கண்டிப்பாக ஒருபோதும் அப்படியோர் அறிவுரையை கூற மாட்டார்கள்.
குடும்ப கெளரவத்தை மீறி, தங்களின் சம்மதமின்றி சங்கரை திருமணம் செய்து கொண்டதை கேள்விபட்ட போதே கெளசல்யாவின் தந்தை இறந்திருப்பார்; இப்போது விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனையானது அவரது உடலுக்கு மட்டும் தான். என்னை பொறுத்தவரை, சங்கரை இவர்கள் ஒன்றும் செய்யாமல் விட்டிருந்தாலேயே, கெளசல்யாவே கதறிக்கொண்டு இவர்களை தேடி ஆறு மாதத்திற்குள் வந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இப்போதோ, மனம்பிறழ்ந்த நிலையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் கொல்ல வேண்டுமென்ற மூளை சலவை செய்யப்பட்டவராக உருவாக இவர்களே ஒருவகையில் காரணமாகி விட்டனர்.
ஐந்து வயது கூட நிரம்பாத விழுப்புரம் நந்தினியை பாலியல் கொலை செய்த ஜெயபிரகாஷிற்கு மரண தண்டனை கொடுத்தாகி விட்டதா? சமீபத்தில், கடலூர் ஆனந்தனை தீயிட்டு கொளுத்திய சாதிவெறி கும்பல்களுக்கு தூக்கு தண்டனை கொடுத்தாகி விட்டதா? சென்னையில் ஹாசினி என்ற பச்சிளங்குழந்தையை பாலியல் கொலை செய்து ஜாமீனில் வெளிவந்து, தான் பெத்தெடுத்த தாயையும் கொன்று விட்டு மும்பையில் கைதான பின், தன் தந்தையையும் கொல்லத்தான் திட்டமிட்டிருந்தேனென கெளரமாக சொன்ன ஆணவ கொலையாளி தஷ்வந்த் போன்றவர்கள் தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை காறி உமிழ சரியான நபர்கள். ஒரு கொலைக்காக, ஆறு கொலைகளை திட்டமிட்டு செய்ய தீர்ப்பு வழங்கிய சட்டமும் தீர்ப்புகளும் வாழும் இம்மண்ணில், இனி பல பாலியல் கொலைகளும் அரங்கேறிக்கொண்டே தான் இருக்க போகிறது... த்தூ

16 மார்ச் 2016

சாதி மறுப்பு காதல்!


சாகடிக்கும் வரை காத்திருந்து அவன் சாதி எதுவென ஆராய்ந்த பின்பே புரட்சியாளர்களாக உருவெடுக்கலாமா? வேண்டாமா? என்பதையே முடிவு செய்கிறார்கள், ஈனபுத்தி கொண்ட நடுநிலை முகமூடிகள்.

இன்றைக்கு இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுபவர்களில் எத்தனை பேர், சாதிவெறி பிடித்த அரசியல் பொறுப்பாளர்களின் பொதுமேடை பேச்சுக்களை கவனித்தது இருக்கிறீர்கள்? "கவுண்டனை வெட்டு; கவுண்டச்சியை கட்டு. தேவனை வெட்டு, படையாட்சியை வெட்டு, அவனுங்க வீட்டு பொண்ணை கட்டு." இப்படியாக ஊரூராக பேசி இளைஞர்களின் எண்ணத்தை சீர்குலைப்பதை பற்றி எந்த நடுநிலை பேசும் நபர்களாவது எதிர்ப்பு தெரிவித்து பேசியதுண்டா? இந்த மூன்று சாதி பெண்களை கட்டுவதால் இந்த மூன்று சாதிகளும் முற்றிலுமாக ஒழிந்துவிட போகிறதா என்ன? என்பது எனக்கு புரியவில்லை.

காதல் என்ற புனிதத்தை சீர்குலைக்கும் நோக்கில் சாதிவெறி பிடித்த நயவஞ்சகர்கள் பொதுமேடை அமைத்தும், வாராந்திர கூட்டம் ஒருங்கிணைத்தும் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். காதல் என்பது இயல்பாக ஆண் - பெண் இருவருக்குள் வரும் ஆழ்நிலை மனவோட்டத்தை சார்ந்தது. அதை குறிப்பிட்ட இந்த மூன்று சாதிகள் மீது மட்டும்தான் வர வைக்க சிலர் சாதி அமைப்புகள் நடத்துவதை ஆண்மையுள்ள எந்த நடுநிலைவாதியாவது வாயை திறந்தது உண்டா?

இரு குடும்பத்தாரின் சம்மதத்தோடு எத்தனையோ 'சாதி மாற்று காதல் திருமணங்கள்' இங்கே நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் இருபது வருடங்கள் ஆசையாசையாய் வளர்த்தெடுத்த பெண்ணை தன் குடும்ப சூழலுக்கு ஒத்துவராத யாரோவொரு பெயர் தெரியாத ஒருவனுக்கு மணம் முடிக்க எந்த தாய்தகப்பனும் விரும்புவதில்லை என்பதே உண்மை. மாறாக, பெற்றோரின் சம்மதம் வாங்காமல் காதல் திருமணம் செய்ய துடிக்கும் ஆர்வமும் அதன் பின்னாலுள்ள மர்மமும் என்ன?

காதல் கொண்ட ஆண் பெண் இருவருக்குள்ளும் ஒத்த மனநிலை வந்த பின்னால், அந்த பெண் வீட்டாரோடு நேரடியாக சென்று பெண் கேட்டு முறைப்படி திருமண செய்யாமலேயே, ஆசை வார்த்தை சொல்லி வீட்டை விட்டு அழைத்து வருவதால் யாருக்கு லாபம்? ஒரே சாதியில் காதல் செய்யும் ஏழை ஆணுக்கு பெண் தர, அதே சாதியை சேர்ந்த பெண் வீட்டார் மறுக்கும் பல சம்பவங்களை ஊரெங்கும் பார்த்துதானே வருகிறோம். எதார்த்தம் இப்படி இருக்கையில், ஒரு குறிப்பிட்ட மூன்று சாதி பெண்களின் கற்பை, காதல் என்ற பெயரில் சூறையாட சொல்லும் குறிப்பிட்ட சாதிவெறி அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருக்கும் பொறுக்கிகளை வெட்டி இருந்தால் மகிழ்ச்சியடைந்து இருக்கலாம். ஆனால், சாதிவெறியை ஏவிய 'வில்' பத்திரமாக நடுநிலை புரட்சி என்ற பெயரில் பிணத்தில் மீண்டுமொரு சாதி வன்மத்தை விதைத்து கொண்டிருக்க, அப்பாவி 'அம்புகள்' வீழ்த்தப்படுவது தான் வேதனையான விசயம்.

சாதிவெறியன் என்றும் காட்டுமிராண்டி என அறியப்படும் சாதிகளை சேர்ந்த தமிழ் சாதி உறவுகளே, தயவு செய்து அம்புகளை நோவாதீர்கள். முதலில் வில்லை உடைத்தெறியுங்கள். அதன்பிறகு எல்லாமும் சரியாகும்.
என்னதான் தமிழ் சாதிகளின் ஒற்றுமையையும், தமிழ் தேசியத்தையும் பேசினாலும், 'சாதிவெறி பிடித்த காட்டுமிராண்டி சாதி' என்று ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட சாதிசார் மக்களை அடையாளப்படுத்தி சமூகத்திலிருந்து அவர்களை தனிமைப்படுத்தி பிரித்தாழும் சூழ்ச்சியை செய்யும் போலி தமிழ்தேசிய முகமூடிகள் இருக்கும் வரை எதுவும் இங்கே சாத்தியமில்லை.

”இயற்கையாக
மனதில் எழாத அன்பை
திட்டமிட்டு உருவாக்கி
சாதி மறுப்பு என்ற பெயரில்
செய்யப்படும் காதல் திருமணங்கள்
நரகத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!”


- இரா.ச.இமலாதித்தன்

14 மார்ச் 2016

காதல் திருமணங்களுக்கு யார் காரணம்?

வெவ்வேறு சாதிகளை சேர்ந்த ஆண் பெண் இருவருக்குள் ஏற்படும் காதல் திருமணங்களுக்கு, டீ சர்ட் ஜீன்ஸ் பேண்ட்டோ - செல்போனோ - சாதிக்கட்சி அமைப்புகளோ காரணமில்லை. அப்பெண்ணை வளர்க்கும் விதமும், அந்த பெண்ணின் உடன்பிறந்த ஆண்கள் அப்பெண்ணிடம் அடக்குமுறையோடு பழகும் விதமும், பெற்றவர்கள் அந்த பெண்ணுக்கு கொடுக்கும் அளவுக்கு மீறிய கட்டுப்பாடுகளும், தன் குடும்ப சூழ்நிலையை பற்றி அந்த பெண்ணோடு வெளிப்படையாக பேசி புரிய வைக்காத ஒட்டுமொத்த பெண் வீட்டார்களே காரணம்; காதல் திருமணங்களுக்கு!

ஒரு பெண்ணோட கற்பில் தான், தங்களுடைய குலப்பெருமை காக்கப்படுகிறதென நினைத்தால், முதலில் அந்த பெண்ணை மதியுங்கள்; அந்த பெண்ணுக்கான அடிப்படை உரிமையை கட்டுப்படுத்தாதீர்கள்; அந்த பெண்ணின் சின்னசின்ன ஆசைகளை நிறைவேற்றுங்கள்; மனம் விட்டு அந்த பெண்ணோடு பேசுங்கள்; வெளியுலக நடப்புகளை வெளிப்படையாக சொல்லி புரிய வையுங்கள்; அந்த பெண்ணுக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்புங்கள்; அந்த பெண்ணுக்கு பிடித்த ஒருசில விசயங்களுக்காவது தடை சொல்லாதிருங்கள்;சினிமா, பார்க், பீச் என மாதம் ஒருமுறை அழைத்து செல்லுங்கள்; ஐஸ் க்ரீம், சாக்லெட் என தாராளமாக வாங்கி கொடுங்கள்.

கண்டிப்பாக உங்கள் வீட்டு பெண், யாரோ பெயர் தெரியாத ஒருவனோடு காதலிக்கிறேன் என்ற பெயரில் உங்களது குடும்ப கெளரவத்தை சீர்குலைத்து ஓடிப்போக மாட்டாள். இதுவரை இப்படி இல்லாவிட்டாலும், இனிமேலாவது மேலே சொல்லிருக்கும் விசயங்களை நடைமுறைப்படுத்தி பாருங்கள். நல்லதே நடக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்