25 அக்டோபர் 2017

மெர்சல் - ஒரு பார்வை!



நடிக்கிறது மட்டும் தான் என் வேலை; நடித்து கொடுத்த அந்த படத்தின் இசை வெளியீடு உள்ளிட்ட எவ்வித ப்ரோமோஷன்களுக்கும் வராமல், அந்த படம் ரிலீஸானால் என்ன? ரிலீஸ் ஆகாமல் போனால் என்ன? அந்த தயாரிப்பாளர் எவ்வளவு சிரமப்பட்டால் எனக்கென்ன? என அந்த படத்தில் பின்புலமாக பணியாற்றிய நூற்றுக்கணக்கான கலைஞர்கள் உள்ளிட்ட யாரைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சம்பள பணத்தை மட்டும் கறாராக வாங்கி கொண்டு ஒதுங்கி கொள்ளாமல், தான் நடித்த படத்திற்கு பல சிக்கல்களும், இடையூறுகளும் - தடைகளும் பல்வேறு திசைகளிலிருந்து வரும் போது, அதை வேடிக்கை மட்டும் பார்க்காமல் தன்னை நம்பியவர்களுக்காக ஆளும் வர்க்கத்திடமும் இறங்கி போய் பேசுறதுக்கு கூட, நல்லெண்ணமும் மனசும் வேணும். இந்த விசயத்தில் விஜய், தளபதி அல்ல; தலைவன்!





விமர்சனம்:

இல்லுமினாட்டி என்ற சொல் சிலருக்கு நகைப்புக்குரியதாக மாறிவிட்டது. இந்த இல்லுமினாட்டி என்பவர்கள் வேற்று கிரக வாசிகள் அல்ல; நம்மோடு கலந்துவிட்ட பின்னாலும், நம்முளிலிருந்து விலகி நிற்கும் உலகையாளும் அந்த கூட்டத்திற்கு ஏதாவதொரு பெயர் இருந்துவிட்டு போகட்டும். என்னளவில், எம்.என்.சி.களே நவீனகால உலகை ஆளும் வர்க்கத்தினர்; அவர்களை பற்றி கத்தியில் தோலுறித்திருக்கிறார். அந்த வகையில், இன்னொரு மிகப்பெரும் மர்மங்கள் நிறைந்த உலகெங்கும் கிளைகள் வைத்திருக்கும் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துமனைகளின் மற்றுமொரு கோர முகத்தை மெர்சலில் கிழித்திருக்கிறார் தளபதி விஜய்.


ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் ஹிந்தியா, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு, சிசேரியன் பிரசவம், இறந்த தன்னுடைய மகளை தன் தோளில் சுமந்து சென்ற தந்தை, மிக்சர் அரசியல்வாதிகள் என யாரும் சொல்ல தயங்குகிற பல விசயங்களை பற்றி எதிர்வினையாற்றி இருக்கிறார். இலவச மிக்சர் - டிவி - கிரையண்டர்களை தரும் அரசு, ஏன் இலவச மருத்துவம் தரவில்லையென்ற கேள்வியும், பெண்களின் தாலியறுக்கும் சாரயத்திற்கு ஏன் ஜி.எஸ்.டி. வரி இல்லையென்ற கேள்வியும் புரட்சியின் அடையாளம். இது தவிர, தமிழ் சார்ந்த பாரம்பரியத்தையும், (கருப்பு உள்ளிட்ட) குலதெய்வம் வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் காட்சி படுத்திருக்கும் விதம் உள்ளிட்ட பல விசயங்களில் கலக்கிருக்கிறார் அட்லி.

என்னை கவர்ந்த காட்சிகளில் சில... தொடக்க காட்சியிலும் - இறுதி காட்சியிலும் சைகை மூலமும் விஜய் காட்டிருக்கும் கருட முத்திரையும், இதை தவிர முக்கியமான பல இடங்களில் காட்டப்பட்டிருக்கும் கருடன் குறியீடும் தான்!

மெர்சல் உண்மையாவே மிரட்டல். செந்தமிழன் சீமான் விதைத்த வினையெல்லாம் காட்சிகளாக அட்லியின் மூலம் பிரதிபலித்திருக்கிறது. ரசிகனாக மட்டுமில்லாமல் தமிழனாக எனக்கு மெர்சல் பிடித்திருக்கிறது.

#Mersal




தலைவா படத்தின் டைட்டிலில் வரும் "Time to Lead" இப்போதுதான் மெர்சலின் மூலம் தொடங்கிருக்கிறது. தளபதியாக இருக்கும் ஒருவரை, தமிழனாக தலைமையேற்க ஆரியர்கள் ஆசைப்படுகிறார்கள் போல. மதவெறியை சாமானியர்களிடம் திணிப்பதற்காக ஜோசப் விஜய் என்றோ, யூசுப் விஜய் என்றோ எப்படி வேண்டுமானாலும் ஷர்மாக்கள் மெர்சலின் மூலம் மிரண்டு போய் உளறினாலும், விஜயை தமிழனாக ஆதரிக்க ஆன்ட்டி ஹிந்தியன்கள் பலரும் இங்கிருக்கின்றனர்.

மதவெறியர்கள், அட்லியின் சாதி மதம் வரைக்கும் அலசி ஆராய ஆரம்பித்துவிட்டனர். அட்லி, திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஹிந்து - அகமுடையார். அது மட்டுமில்லாமல் ஜோசப் என திசைதிருப்பப்படும் விஜயின் அம்மா ஷோபாவும் ஹிந்து - அகமுடையார் தான். திலிப்குமாராக பிறந்த ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பாவான சேகரும் ஹிந்து - அகமுடையாரே. இம்மூவரின் தாய்மார்களும் பிறப்பால் ஹிந்துதான் என்பதை பாரத மாதவை வணங்கும் ஹிந்துத்துவ வெறியர்கள் உணர வேண்டும்.

#Mersal


எந்த கடவுளை வணங்க வேண்டும்? எந்த மார்க்கத்தை பின்பற்ற வேண்டும்? என்பதெல்லாம் தனிநபர் உரிமை. அதை வைத்து பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் இவர்களால் எப்படி அகண்ட பாரதத்தை உருவாக்க முடியும்? ஒரே பெயரில் இருக்கிற கூட்டாட்சி நாட்டையே துண்டு துண்டாக துண்டிக்கத்தானே இவர்கள் துடிக்கின்றனர். ஜோசப் மட்டுமல்ல; யூசுப்பும், இமலாதித்தனும் சேர்ந்து வாழ்ந்திருப்பது தானே மக்களாட்சி நாடு. ஹிந்துக்களை தவிர மற்ற அனைவரையும் நாடு கடத்த விரும்புகிறார்களா இவர்கள்? கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு; விமர்சனம் சொல்பவரையெல்லாம் தனிநபர் தாக்குதல் நடத்தி, அவ்வளவு எளிதாக ஒதுக்கி விட முடியாது. ஜோசப் விஜயை, ஹிந்துவான நான் ஆதரிக்கிறேன். என்னைப்போல் இன்னும் எத்தனையோ சோ கால்டு ஹிந்துக்களும் ஜோசப் விஜயை ஆதரித்து கொண்டுதான் இருக்கின்றனர்; இருப்பார்கள்.


#Mersal




தளபதியாக இருந்தவரை அனைத்து வடக்கத்திய செய்தி ஊடகங்கள் மூலமாக சூப்பர் ஸ்டார் ஆக்கிய அனைவருக்கும் நன்றி!

#Mersal #SuperStarVijay






இந்த ஆட்சியின் குளறுபடிகளை பற்றி பாஜகவை சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு பதில் இருக்கா? என்பதை பற்றியும், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனுடைய நிறுவனத்தின் சொத்தானது ரூ 50,000லிருந்து ஒருசில வருடங்களிலேயே பல்லாயிரம் கோடிகளை தொட்டது எப்படி என்பதை பற்றியும் அண்ணன் சீமான் கேட்க வேண்டும்.

#Seeman #NTK #Mesal


மெர்சலில் வரும் ஒரு காட்சிக்காக மதவெறியோடு திசை திருப்பி பொங்குவது ஏன்? மெர்சலில் சொல்லப்படும் சங்கிலி கருப்பனுக்கு கோவில் கட்ட வேண்டுமா? வேண்டாமா? என்பது குலதெய்வ (நாட்டார்) வழிபாட்டை செய்யும் வழக்கமுள்ள தமிழர்களின் பிரச்சனை. சர்ச்சைக்குரிய பகுதியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனையை கட்டியதாகவா மெர்சலில் அட்லி சொல்லிருக்கிறார்? பெரும்பாலான குலசாமி கோவில்கள் இன்றைக்கும் வெட்டவெளியின் ரகசியத்தை வெளிக்காட்டுவது போலவே, கோபுரமெல்லாம் இல்லாமல் தானே இருக்கிறது; கோபுரம் எழுப்பிய குலசாமி கோவில்கள் கூட, பெருங்கோவிலின் பாதிப்பால் ஏற்பட்ட சமீபத்திய மாற்றம் தானே? கல்லையும், வேலையும், சூலத்தையும், மரத்தையும் வணங்கியது தானே தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டின் அடிப்படை. இயற்கையோடு இயைந்த வழிபாடாக கோவில் சுவரே இல்லாத எங்களுக்கு, கோவிலும் கோபுரமும் ஒரு விசயமே இல்லை. ஷர்மாக்கள் போன்ற ஆரிய பிராமணர்கள் மட்டுமே பெருங்கோவில் கருவறைக்குள் சென்று பூசை செய்யலாமென இத்தனை வருடங்கள் நாட்டாமை செய்தவர்களுக்கு கேரள அரசாங்கம் தந்த பேரடி போதாதா? தென்னகத்தில் மகான் வைகுண்டரால் 'அய்யா வழி' என்ற மார்க்கம் ஏன் உருவானது என்பதை பற்றி கொஞ்சம் யோசித்தாலே இதன் பின்னாலுள்ள உண்மை புரியும்.




#Mersal




கேஷ்லெஸ் எக்கானமிக்காக டிஜிட்டல் ஹிந்தியாவாக வளர்ச்சியடைந்த காலகட்டமான 2017லேயே கோவில்களை விட கழிவறை தான் முக்கியமெனில், மெர்சல் படத்தில் 70களில் வருகின்ற அப்பா விஜய் கேரக்டர் பார்வையில் கோவிலை விட மருத்துவமனை தானே முக்கியமாக தெரிந்திருக்கும்?

#Mersal






மிக அதிகளவிலான வாக்குகளை தமிழ்நாடு சாரணர் தலைவர் தேர்தலில் பெற்றவரும், பல ஆன்ட்டி ஹிந்தியன்களை உருவாக்கியருமான மரியாதைக்குரிய ஹெச்.ராஜா சர்மா அவர்கள், மெர்சல் படத்தை நெட்டில் (தமிழ்ராக்கர்ஸ்) பார்த்ததாக 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் 'அக்னி பரீட்சை' விவாதத்தில் சொல்லிருக்கிறார். இதைப்பற்றி, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் அன்பிற்குரிய இணையப்போராளி 'புரட்சி தளபதி' விஷால் ரெட்டி அவர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்?

#Mersal




மெர்சலுக்காக #MersalVsModi என்றிருந்த ட்விட்டர் ட்ரெண்ட் தற்போது, #TamiliansVsModi ஆகி விட்டது. அஜித்-விஜய்-சூர்யா என்ற ரசிக வேறுபாட்டை கடந்து தமிழராக ஒன்றிணைந்திருக்கிறார்கள்; மிகச்சிறப்பு. இதே ஹாஷ்டேக்கில் ஹிந்திக்காரனுங்களும் ஏதேதோ ஹிந்தியிலேயே கதறிகிட்டு இருக்கானுங்க. என்னதான் கூட்டாட்சியாக இருந்தாலும், தமிழ்நாடு எப்போதுமே தனிநாடு தான்.

தமிழன்டா எந்நாளும்; சொன்னாலே திமிறேரும்! காற்றோடு கலந்தாலும், அதுதான் நம் அடையாளம்!

#Mersal






மெர்சலுக்காக ராகுல்காந்தியையும் தமிழில் ட்விட் செய்ய வைத்த சார்ந்தோர் அனைவருக்கும் நன்றி!

#Mersal






குறியீடுகளை வார்த்தையில் வைத்த 'அருமைபிரகாசம்' கருணாகரனின் ட்வீட்டும் அருமை!

#Mersal






நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உனை கேட்கும்!

#Mersal





சிபிஐ, இன்கம்டாக்ஸ், ரிபப்ளிக் டிவி, வரிசையில் போட்டோஷாப் அப்ளிகேசனும்...

#Mersal






வேறுவழியே இல்லாமல், 'காலா'வதியான சூப்பர்ஸ்டார் பட்டத்தை வைத்திருப்பவரும் மெர்சலுக்கு வாயை திறந்திருக்கிறார்.

சிறப்பு.

#Mersal





சூப்பர் ஸ்டார் விஜயின் #Thalapathy62 படத்திற்கான டைட்டிலாக "ஜோசப் விஜய் எனும் நான்" என்று கூட ஏ.ஆர்.முருகதாஸ் வைக்கலாம்.

#MyOpinion

- இரா.ச. இமலாதித்தன்

24 அக்டோபர் 2017

மாமன்னர்களுக்கு புகழ் வணக்கம்!




ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பாகவே, ஐரோப்பிய ஏகாபத்தியத்திற்கு எதிராக ஐநூற்று தமிழர்களை பலிகொண்ட கொலைக்களம் எம் தமிழ்மண்ணான திருப்பத்தூர். காரணம் ஒன்றே; அது இன விடுதலையுடன் கூடிய மண்ணுரிமை தான். ஆங்கிலேயனுக்கு எதிராக, அனைத்து சிற்றரசர்களையும் ஒருங்கிணைத்து "வீர சங்கம்" என்ற மாபெரும் புரட்சி கூட்டணியை உருவாக்கி, ஜம்புத்தீவு போர் பிரகடனத்தை வெளியிட்ட எம் தமிழினத்தின் தலைமகன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம், துரோகிகளாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தப்பட்ட மாதமிது. எனக்கான முன்னுதாரணம் இவர்கள்; மாபெரும் வீரம்பொருந்திய இம்மண்ணின் மைந்தர்கள்; புறநானூறு சொன்ன அகத்தமிழர்கள்; ஆதித் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளங்களாகி போன மாமன்னர்கள், எங்கள் மருதுபாண்டியர்கள்!
எம் முப்பாட்டன்களான மருதரசர்களுக்கு புகழ் வணக்கம்!

20 அக்டோபர் 2017

ராஜாளி - 2.O




ஒரு படத்திலுள்ள பாடல்கள் அனைத்தையும் ஒரே பாடகரை கொண்டே பாட வைக்கப்பட்ட 99% படங்களின் பாடல்கள் சூப்பர்ஹிட்டானாலும், படம் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. 2.Oவிலும் சித்ஸ்ரீராமே இரு பாடல்களையும் பாடியிருக்கிறார். ஒரு பாடல் யுவன் + வெங்கட் பிரபு ரகம்; இன்னொரு பாடல் தமன் + சிம்பு ரகம். சரியாக மூன்று வருடங்கள் முன்பாக, இதே சுபாஷ்கரனின் லைக்கா தயாரிப்பில் வெளிவந்த கத்தி படத்திற்கு அதிக எதிர்ப்பு வந்தது. இப்போது அதே லைக்காவின் பிரமாண்ட தயாரிப்பில் 2.O பெரும் எதிர்பார்ப்போடு வந்திருக்கிறது. காலம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விடுமென்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு. அந்த வகையில், ராஜாளி காலியா? ரஜினி காலியா?யென ஒப்பிட்டால், நிச்சயமாக படமே காலிதானென படுகிறது. சிஷ்யன் - அட்லி, ஒரு பக்கம்; குரு - ஷங்கர், மற்றொரு பக்கம். அருமை! ;)

(பி.கு: போஸ்டரில் ரஜினியை ரோபோவாக்குவதற்கு பதிலாக, வேறு யாராகவோ ஆக்கிருக்கிறார்கள்)

14 அக்டோபர் 2017

அகமுடையார் குலத்தில் உதித்த ஆற்காடு சகோதரர்களின் பிறந்த நாள் இன்று!


ஆற்காடு இராமசாமி முதலியார்:

ஆற்காடு இலட்சுமணசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர்; நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார். 1920 லிருந்து 1934 வரை தொடர்ச்சியாக சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். சென்னை மாநகரத்தின் தலைவராய் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார். ஐதராபாத் பிரச்சினையைக் கையாள அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்து சென்று அங்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் சார்பில் வாதாடி ஐதராபாத் நகரத்தை இந்தியாவுடன் இணைத்த பெருமை இவருடையதே. பிறகு மத்திய அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு சிறந்த பணி ஆற்றினார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தின. மேலும், இந்திய அரசு சார்பில் பத்மவிபூஷன் பட்டம் அளிக்கப்பட்டது.

ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார்:

ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவர் 1983 ஆண்டு எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் இந்திய மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார். இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலட்சுமணசாமி முதலியார் சிறந்த கட்டிடக் கலை நிபுணரும் ஆவார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், அங்குள்ள பட்டமளிப்பு மண்டபம் (இப்போது தொலைதூரக் கல்வி இயக்கமும், பல பெரிய அரசு விழாக்களும் அங்கு நடத்தப்படுகிறது.) ஆகியவைகள் இவரால் கட்டப்பெற்றன.

சென்னை தரமணியில் இயங்கிவரும் ஐ.ஐ.டி. நிறுவனமும் இலட்சுமணசாமி முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு இன்றும் உலகளாவிய புகழ்பெற்று வருகிறது. அந்நிறு வனத்தில் இலட்சுமணசாமி முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அகில இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆங்கிலத்தில் தென்னிந்திய மக்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் இவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பெருமைக்குரியவர்களான வழக்குரைஞர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் மற்றும் மருத்துவர் சர் ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார் என்ற ஆற்காடு இரட்டையர்களுக்கு 130 வது பிறந்த நாளில் புகழ் வணக்கம்!

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Mudaliar

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மீதான வரலாற்று களங்கம்! (மறுப்பு கட்டுரை)





அக்டோபர் மாதத்திற்கும் வேலுநாச்சியாருக்கும் என்ன தொடர்பிருக்கிறதென தெரியவில்லை. ஐயா மு.ராஜேந்திரன் அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த திடீர் அக்கறையென்று புரியவுமில்லை. கரடி கருத்தான் என்ற துரோகியால் காட்டிக்கொடுக்கப்பட்டு, காளையார்கோவிலை தகர்த்தெறிவோமென மிரட்டி திருப்பத்தூரில் தூக்குமேடையேற்றி சதிகாரர்களான ஐரோப்பிய இழிபிறவிகளால் அக்டோபர் 24, 1801ம் ஆண்டில் மாமன்னர் மருதுபாண்டியர்களை சூழ்ச்சியால் மரணமடைய வைத்த மாதம் இது. மருதுபாண்டியர்களின் விசுவாசிகள் என்ற காரணத்திற்காக சாதி மத வேறுபாடின்றி ஐநூறுக்கும் மேற்பட்ட பல்வேறு தமிழினக்குழுக்களை சேர்ந்தவர்களையும் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மாதமான இந்த அக்டோபரில் வேலுநாச்சியாரை நினைவூட்டியது ஏன் என்பது ஐயா மு.ராஜேந்திரனக்கே தெரிந்திருக்க கூடிய வியப்பான ரகசியம். மேலும், உலக வரலாற்றிலேயே குடிவழி ஆண் வாரிசுகளையும், சின்னஞ்சிறு குழந்தைகளையும் தேடித்தேடி கொன்ற மாபெரும் கொலைக்களம் திருப்பத்தூராக மட்டுமே இருக்க முடியும். இப்படியான வீரம்செறிந்த பெருஞ்சோக வரலாற்றை தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த அக்டோபர் மாதத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்களை இழிவுபடுத்தியது ஏன்?

”வேலுநாச்சியார் மீதான வரலாற்றுக் களங்கம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை 12.10.207 அன்று தி இந்து தமிழில் அவசரகதியில் மிகவும் பதற்றத்தோடு ஐயா மு.ராஜேந்திரன் எழுதிருக்கிறார். “வரலாற்று ஆசிரியர்களும், வரலாற்று ஆசிரியர்களாகத் தங்களைத் தாங்களே புனைந்துகொள்பவர்களும், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அவ்வப்பொழுது வரலாற்றை எழுதிச் சென்றுவிடுவார்கள். அந்த வரலாறு உண்மையாகவும் இருக்கலாம். பெரும் அபத்தமாகவும் இருக்கலாம்.” இப்படியாக அவரது கட்டுரையை ஆரம்பித்து, ‘சோழர் கால செப்பேடுகள்’ என்ற நூலின் வரலாற்று ஆசிரியராக தன்னை முன்னிலைப்படுத்தி முடித்திருக்கிறார். இவரும் தங்களைத் தாங்களே வரலாற்றை முற்றுமுழுதாக கரைத்து குடித்தவர்கள் போல வரலாற்று ஆசிரியாக புனைந்து கொண்டிருக்கிறார் என்பதை இக்கட்டுரையை படித்து முடிக்கும் போது வெகுஎளிதில் புரிந்து கொள்ளலாம்.

“ஒரு பெண் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதில் உள்ள பலவீனத்தைக் கொண்டு அரசியின் வழியினரான நாலுக் கோட்டை குடும்பத்தின்மீதும் அக்குடும்பத்தின் பங்காளிகள் மீதும், சிவகங்கை பகுதி மக்கள் மீதும் அவர்கள் கொடுங்கோன்மையும் யதேச்சதிகாரத்தையும் பிரயோகித்தார்கள்” என சென்னை மாகாண ஆளுநர் எட்வர்ட் கிளைவ் 06.07.1801-ல் வெளியிட்ட பிரகடனத்தை ஆதாரமாக சொல்லும்போதே ஐயா. மு.ராஜேந்திரனின் வரலாற்றறிவை புரிந்துகொள்ள முடிகிறது. எப்படியென்றால், வேலுநாச்சியார் 1796லேயே இறந்து விடுகிறார் என்பது ஊரறிந்த விசயம். ஆனால், இந்த கிளைவ் அறிக்கையில் 1801ம் ஆண்டிலும் பெண் ஆட்சிப்பொறுப்பில் இருக்கிறாரென்ற தொனியில் சொல்லப்பட்ட பொய் பரப்புரையை ஆவணமாக சொல்லிருக்கிறார், நம் ஐயா மு.இராஜேந்திரன். அடுத்து, எட்வர்ட் கிளைவ்க்கு 1796லிருந்து 1801 வரை ஐந்தாண்டுகள் கோமாவிலிருந்து பிழைந்த வந்தவன் போல சொல்லிருக்கும் இந்த அறிக்கையை எப்படி ஒரு மாபெரும் வரலாற்று அறிவையுடைய ஐயா.மு.ராஜேந்திரன் ஏற்றுக்கொண்டார் என்பது அவர் மனசாட்சிக்கே விட்டுவிடலாம்.

அதிலும் உட்சபட்ச கோமாளித்தனம் என்னவென்றால் சிவகங்கை மக்கள் மீது கொடுங்கோன்மையும், யதேச்சதிகாரத்தையும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிரயோகித்தார்கள் என்று சொல்லிருப்பது தான். ஒருவேளை இப்படி அவர்கள் நடந்திருந்தால் தன் மன்னனுக்காக தன்னுயிரையே நூற்றுகணக்கானோர் அக்டோபர் 24ம் தேதி உயிர்கொடை கொடுத்திருப்பார்களா என்ன? ”தன்னாட்டு மக்கள் யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்கலாம்; எப்போதும் மூடப்படாமல், திறந்தே இருக்கும் மருதுபாண்டியர் அரண்மனையின் வாசற்கதவுகள்” என்று சொன்னதும் கூட எட்வர்ட் கிளைவோடு பணியாற்றிய ஆங்கில தளபதிகளில் ஒருவர் தானே? கி.பி. 1772 முதல் கி.பி. 1780 வரையிலான எட்டு ஆண்டுகள் திண்டுக்கல் - விருப்பாட்சியில் யாரிடம் அடைக்கலம் புகுந்தார் வேலுநாச்சியார்? நாலுக்கோட்டை குடும்பத்தினரிடமா? பங்காளிகளிடமா? இல்லையே; அவர் நம்பிக்கை முழுவதும் மாமன்னர் மருதுபாண்டியர்களிடம் தானே இருந்தது? ஏன் மாமன்னர் மருதுபாண்டியர்களோடு வேலுநாச்சியார் கை கோர்த்தாரென ஐயா மு.இராஜேந்திரன் சிந்தித்திருந்தால், எட்வர்ட் கிளைவின் உளறலை உதாரணமாக சொல்லிருக்க மாட்டார். அப்போதுள்ள சூழலில் எப்படியாவது சிவகங்கையை தன் வசமாக்க வேண்டுமென நினைத்திருந்து, உள்ளுக்குள்ளாகவோ அல்லது உள்நாட்டிற்குள்ளவோ பகையை ஏற்படுத்த ஐரோப்பிய இழிபிறபிகள் தீட்டிய திட்டங்களில் இந்த அறிக்கையும் ஒன்று என்பதை சின்னக்குழந்தைக்கு கூட புரியக்கூடும். ஆனால், இதை வரலாற்று ஆசிரியர் ஐயா மு.இராஜேந்திரன் தான் வலுக்கட்டாயமாக அறிய மறுக்கிறார்.
மாமன்னர் மருதுபாண்டியர்களில் மூத்தவரான பெரியமருதுவின் இயற்பெயர் வெள்ளை மருது; இளையவரின் பெயர் சின்ன மருது. இதில் மருது என்பதற்கான பின்புலம் அவர்களின் தாய் - தந்தை வழி குலதெய்வங்களான வாணியங்குடி மருதப்ப ஐயனார் மற்றும் மருதங்குடி மருதாருடையார் என்பதன் நினைவாக மருது என்ற பெயர் வைக்கப்பட்டது. அடுத்து வெள்ளை என்பதற்கு வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் படைப்பிரிவில் இருந்ததன் காரணமாக வெள்ளை மருது என பெயர் சூட்டப்பட்டது. சரி; சில சந்தேகங்களை இங்கே வைக்கிறோம். இவற்றிற்கெல்லாம் ஐயா மு.இராஜேந்திரனிடம் மட்டுமல்ல; அவரைப்போன்ற உள்நோக்கம் கொண்ட யாரிடமும் பதில் இருக்காது.

வேலுநாச்சியார் பெற்றெடுத்த மகளுக்கு ஏன் வெள்ளச்சி நாச்சியார் என பெயர் சூட்டப்பட்டது?

வெள்ளச்சி நாச்சியர் பிறந்த ஆண்டிற்கான ஆதாரம் இருக்கிறதா?

கி.பி.1793 லேயே வெள்ளச்சி நாச்சியார் ஏன் திடீரென இறந்தார்?

கி.பி.1796ல் இறந்த வேலுநாச்சியாருக்கு முன்பாக வெள்ளச்சி நாச்சியார் இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன?

வேலுநாச்சியார் பெரியமருதுபாண்டியரை திருமணம் செய்து கொண்டதாக பலரும் தங்களது நூல்களில் குறிப்பிட்டு இருக்கின்றனர். அவர்களில், 1944ம் ஆண்டில் ’குமரிமலர்’ இதழில் திரு. தி.நா. சுப்ரமணியன், ’மருது சகோதரர்’ என்ற தலைப்பிலான கட்டுரையில் திரு. எம்.எஸ். சுப்பிரமணிய ஐயர், ’பஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்’ என்ற நூலில் திரு. ஜெகவீரபாண்டியனார், ’ஊமைத்துரை’ நூலில் வித்வான் திரு. ந.சண்முகம், ’வீராங்கனை வேலுநாச்சியர்’ என்ற நூலில் திரு. சிரஞ்சீவி, ’தென்னிந்திய வரலாறு’ கி.பி.1356 முதல் கி.பி 1983 என்ற நூலில் டாக்டர் ஏ.சுவாமிநாதன், பேராசிரியர் வானமாமலை உள்ளிட்ட ஏராளமானோர் வேலுநாச்சியார் பெரியமருதுபாண்டியரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக நிரூபணம் செய்திருக்கின்றனர். ஜெ.ஹெச்.நெல்சன் எழுதிருக்கும் ’THE MADURA COUNTRY - A MANUAL’ என்ற நூலில் கூட வேலுநாச்சியாரை Mitress என்ற வார்த்தையிலுள்ள உள்ளார்ந்த அர்த்ததை ”மருதுபாண்டிய மன்னர்கள்” வரலாற்று நூலில் வரலாற்று ஆசிரியர் மீ.மனோகரனார் புரிய வைக்கிறார். இவற்றையெல்லாம் தொகுத்து வரலாற்று ஆவணமாக ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கும் போற்றுதலுக்குரிய வரலாற்று ஆய்வாளர் மீ.மனோகரனார் அவர்களுக்கு இந்நாளில் நன்றியை காணிக்கையாக்குகிறோம். மேலும்,

வேலுநாச்சியார் நாலுக்கோட்டை குடும்பத்தை சேர்ந்த முத்துவடுகநாதருக்கு வாழ்க்கைப்பட்டவர். அந்த நாலுக்கோட்டையினர் யாராவது இந்த மறுமணத்தை எதிர்த்து மறுப்பு தெரிவித்ததாக ஆதாரம் ஏதும் இருக்கிறதா? ஆனால் நாலுக்கோட்டை வழியினரான சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவர், தன்னுடைய கடைசி காலம் வரை மாமன்னர் மருதுபாண்டியர்களோடு தான் அவர்களுக்கு ஆதரவாக நின்றார்; இது தான் வரலாற்று உண்மை. இதைப்பற்றி, மலேசியத்தமிழரும் வரலாற்று ஆசிரியருமான திரு. ப.சந்திரகாந்தம் எழுதிய ’ஆளப்பிறந்த மருது மைந்தன்’ என்ற நூலில் கடைசி அத்தியாத்தில், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும் - படமாத்தூர் கெளரி வல்லப தேவருக்கும் இடையேயுள்ள உட்பகையையும், சக்கந்தி வெங்கண் வேங்கை பெரிய உடையணத் தேவருக்கும், மாமன்னர் சின்ன மருதுபாண்டியரின் வாரிசான துரைச்சாமி சேர்வைக்கும் உள்ள பாசப்பிணைப்பையும் விவரிக்கும் சில செய்திகள் இந்த பக்கங்களில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. இதை வைத்தே மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கும், ஒருசில துரோகிகளை தவிர வேற யாருக்கும் எவ்வித பகையும் இல்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

மேற்சொன்னவர்களின் கருத்தையெல்லாம், ஆதாரத்தோடு இல்லையென்று மறுக்க ஐயா மு.இராஜேந்திரனுக்கு திராணி இருக்கிறதா? 1772 - 1780 வரையிலான இக்கட்டான சூழலில் வேலுநாச்சியாரை காத்து, இழந்தை நாட்டை மீண்டும் கைப்பற்றியது மாமன்னர் மருதுபாண்டியர்களால் தானே? இழந்த சீமையை மீட்ட வரலாறு வேறெங்கும் உண்டா? அப்படியான புகழை உருவாக்கி கொடுத்த மாமன்னர் மருதுபாண்டியர்களை போற்றாமல் கூட இருந்திருக்கலாமே ஐயா மு.இராஜேந்திரன்? ஏன் இப்படி தூற்றிருக்கிறீர்கள்? வரலாற்று பிழை செய்தது நீங்கள் தான்; மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆன்மா உங்களைப் போன்றோரை ஒருபோதும் மன்னிக்காது.; நிச்சயம் ஒருநாள் இதற்காக வருந்துவீர்கள். அன்றைய நாட்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை பற்றி அவதூறாக எழுதுவதற்காக, அதே மறவர் இனக்குழுவை சேர்ந்த தினகரன் தேவர் என்பவர் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டார். அதே போல, இன்றும் எங்கள் விரல்களை கொண்டே எம் கண்கள் காயப்படுத்தப்படுகிறதென்பதை எங்களாலும் அறிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற எந்தவொரு சூழ்ச்சிகளையும் இளந்தலைமுறையினர் எளிதாக கடந்து, ஒற்றுமையாக செயல்படுவோம் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்க முடியாது. ஓங்கட்டும் மாமன்னர் மருதுபாண்டியர் புகழ்! பெருகட்டும் அகமுடையார் ஒற்றுமை!

மறக்க முடியுமா மாமன்னர் மருதுபாண்டியரை!?அடக்க முடியுமா அரசாண்ட அகமுடையாரை?!


- இரா.ச.இமலாதித்தன்

(படங்கள்: மீ.மனோகரனாரின் ‘மருதுபாண்டிய மன்னர்கள்’ பக்: 161, 162, ப.சந்திரகாந்தத்தின் 'ஆளப்பிறந்த மருது மைந்தன்' பக்: 706, 707)

11 அக்டோபர் 2017

சித்தர் குணங்குடியார்!




சித்தர்களில் ஒருவரான 'குணங்குடி மஸ்தான் சாகிபு'டைய எழுத்துகளும் - கருத்துகளும் ஆன்மீகத்தில் நமக்கு வேறொரு பரிமாணத்தை காட்டும்.

10 அக்டோபர் 2017

சரவெடி வடிவேலு!





ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல வருகின்ற விசயத்தை ஒரு படம் சொல்லிவிடும். அதனால் தான் இணையமெங்கும் மீம்ஸ் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என அனைத்தையும் விமர்சிக்க இந்த மீம்ஸ் தான் இன்றைய ட்ரெண்ட். அப்படி பார்த்தால், இன்றைய நிலவரப்படி வடிவேலு நடித்த கதாப்பாத்திரங்களையோ, பெயர்களையோ, அவரது உடலியல் அசைவுகளையோ, அவரது வார்த்தைகளையோ பயன்படுத்தாத தமிழ் மீம்ஸ்களே இல்லை; இதை மீம்ஸ் கிரியேட்டர்கள் அனைவருமே ஒத்துக்கொள்வார்கள். அரசியல் சாயங்களால் திரைப்படங்களில் இடைப்பட்ட காலங்களில் அவர் நடிக்காமல் போயிருந்தாலும் கூட, மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு இன்னும் அதிகமாகவே இருந்தது; அதிலும் குறிப்பாக இணையத்தில் இயங்கும் இளைஞர்கள் மத்தியில், வடிவேலு புறக்கணிக்க முடியாத இடத்தில் இருந்தார். காரணம், மீம்ஸ்.


ஆஹான்...
வட போச்சே...
முடியல்ல...
ஆணியே புடுங்க வேணாம்
வேணாம் வலிக்குது...
பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மட்டம் வீக்கு
இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு?
உனக்கு வந்தா ரத்தம்; எனக்கு வந்தா தக்காளி சட்னியா?
ஏரியாவுக்கு வாடா...
கிணத்தை காணும்...

இப்படியாக இன்னும் எத்தனையோ தனித்துவ வார்த்தைகளை நம்முள் ஆழமாக விதைத்து நம்மை மகிழ்வித்து மகிழும் 'வைகை புயல்' வடிவேலுவின் 57வது பிறந்தநாள் இன்று!

- இரா.ச. இமலாதித்தன்

(பி.கு: வடிவேலுவிடன் உங்களுக்கு பிடித்த காமெடியோ, ஸ்டில்லோ, காட்சியோ, வசனமோ இருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.)

#HBDVadivelu #Vadivelu

09 அக்டோபர் 2017

என் ஆளுமைகள்!



என்னை போன்ற பலரை ஆளுமை செய்யும் தமிழர்கள், செந்தமிழ்த்தலைவன் சீமான் -
தளபதி விஜய்!
#Seeman #Vijay #Thamizhar

சுய விளக்கம்!

இது என் டைம்லைன். என் நேரத்தையும், என் பணத்தையும் ஒதுக்கி தான் இங்கே செலவிடுகிறேன்; செயல்படுகிறேன். பெரும்பாலான நேரங்களில் மொபைலிலேயே டைப் செய்ய வேண்டிருக்கிறது கூட சிரமமாகத்தான் இருக்கிறது. என் வாழ்க்கை / பணி சுமைக்கு இடையே எனக்கு தோன்றியதை, என் எண்ணங்களின் ஊடாக எழுத்துகளாக்கி இங்கே பதிகிறேன். அரசியலில் சீமானையும், சினிமாவில் விஜயையும் ஆதரிப்பேன். தமிழ் தேசியம் பேசுவேன். நான் பிறப்பெடுத்த அகமுடையார் இனக்குழு சார்ந்த சமகால / வரலாற்று ஆர்வலன். பிக்பாஸ், ஓவியா ஆர்மி, கிரிக்கெட், சித்தரியல், இசை என கலவையான ரசனை எனக்குண்டு. ஆன்மீகத்தில் தீவிர நாட்டமும், அதன் மீதான ஆழ்ந்த பார்வையும் இருக்கிறது. சோழம், சொந்த ஊர் நாகை, வேதை, குலசாமி என பழம்பெருமை பேசுவேன். கவிதைகளை கிறுக்குவேன். எந்த வரையறைக்குள்ளும் அடைக்க முடியாத, இதுபோல எனக்கான அடையாளங்கள் இன்னும் நிறையவே இருக்கிறது. அதனால் என்னை மாற்றவோ, எனக்கு அறிவுரை கூறவோ முயல வேண்டாம். உங்கள் விருப்பங்களை மட்டுமே பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல நான்; என் எண்ணங்களும், என் அடையாளங்களும் வேறு. விருப்பமிருந்தால் நட்பு பட்டியலில் இணைந்திருங்கள். கட்டாயப்படுத்தி யாரையும் வைத்திருக்கவில்லை. விலகி பயணிப்பவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கிறது.
புரிதலுக்கு நன்றி

08 அக்டோபர் 2017

தலைவன் உருவாக யுகம் தேவைப்படலாம்!

("ஒரு தலைவன் உருவாக ஒரு யுகமே தேவைப்படுகிறது!" - தளபதி விஜய், மெர்சல் டீசரிலிருந்து...)
உண்மை தான்.
தலைவனாகும் தகுதி ஒரு சிலருக்கு பிறப்பிலேயே இயல்பாக அமைந்து விடுகிறது. வேறு சிலருக்கு பிறந்ததற்கு பின்னால், அத்தகுதியை சூழல்கள் உருவாக்கி கொடுக்கின்றன. ஆனால், இந்த இரு வகையினருமே பெரும்பாலும் தன்னையறிந்து கொள்ளாமலேயே ஆளுமைமிக்க அந்த தகுதியை பயன்படுத்துவதில்லை; சரியான நேரத்தில் முடிவெடுக்க தெரியாமல், தகுதி இருந்தும் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களும் இங்குண்டு. வரலாற்று நிகழ்வுகளை ஆழ்ந்து கவனிக்கும் போது, விரல் விட்டு எண்ணுமளவிற்கு வெகு சிலருக்கு தான், தலைவனாகும் தகுதியை, பிறப்பும் - சூழலும் - நேரமும் உருவாக்கி கொடுத்திருக்கிறது. எனக்கு தெரிந்து இவையனைத்தும் சரியாக பொருந்தி வரலாற்றில் நிலை நிறுத்திக்கொண்டது, மாமன்னர் மருது பாண்டியர்கள் தான்!

06 அக்டோபர் 2017

டெங்கு - சித்த மருத்தமே தீர்வு

டெங்கு காய்ச்சலில் இருந்து தற்காத்து கொள்ள, ஆங்கில மருத்துவம் உச்சத்தில் இருக்கும் இந்நாளிலும் கூட வேற வழியே இல்லாமல், நிலவேம்பு கசாயம் குடிக்க சொல்லி அரசாங்கமே ஊரெங்கும் பரப்புரை செய்கிறது. சித்தர்களின் மருத்துவம், வலியோருக்கு மட்டுமில்லாது எளியோருக்கும் மகத்துவம் தந்து கொண்டிருக்கிறது.
பாம்பாட்டி சித்தர் பீடம் - திருக்கடவூர் மயானம், நாகை சார்பாக புண்ணிய ஆத்மாக்களுக்கு நன்றி!

04 அக்டோபர் 2017

அரசியல் களத்தில் ரஜினியும் கமலும்!



அரசியலுக்குள் வரத்துடிக்கும் ரஜினி - கமல் என்ற இரு நடிகர்களையும், கருணாநிதி - ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் - சிவாஜி என இந்த கூட்டணிகளோடு ஒப்பிட்டு, சில ஒற்றுமைகளை மட்டும் பார்ப்போம்.

01. இறை நம்பிக்கை:

அ. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா, ரஜினி
ஆ. கமல், கருணாநிதி,


02. மொழி:

அ. சிவாஜி
ஆ. எம்.ஜி.ஆர், கமல்
இ. கருணாநிதி
ஈ. ரஜினி, ஜெயலலிதா

03. இனம்:

அ. ஜெயலலிதா, கமல்
ஆ. எம்.ஜி.ஆர்., ரஜினி, கருணாநிதி, சிவாஜி

04. மண்ணுரிமை:

அ. சிவாஜி
ஆ. ரஜினி, கமல், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா

05. மக்கள் செல்வாக்கு:

அ. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினி
ஆ. சிவாஜி, கமல்

06. பேச்சு

அ. கருணாநிதி, ஜெயலலிதா, கமல்
ஆ. எம்.ஜி.ஆர்., ரஜினி, சிவாஜி

07. வசீகரம்:

அ. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கமல்
ஆ. கருணாநிதி, சிவாஜி, ரஜினி

- இது போல கலவையான பல ஒப்பீடுகள் இவர்களுக்குள் உண்டு. இவர்களில் இருவரும் நேரடியாக அரசியலுக்கு வந்தால், இழப்பு இருவருக்கும் ஏற்படும்; ஆனால், இருவருமே பண விசயத்தில் விசயாதிகள் என்பதால், இவர்களை நம்பி தேர் இழுப்பவர்கள் அடையாளமற்று போகவே வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை வருங்கால ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக, கருணாநிதிக்கு மாற்றாக கமலும், ஜெயலலிதாவுக்கு மாற்றாக ரஜினியும் உலகாளும் மேலிடத்தினரால் களமிறக்கப்பட்டிருப்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கமல் மட்டுமே கடைசியில் களத்தில் நிற்பார்.

- இரா.ச. இமலாதித்தன்

அகமுடையார் ஆய்வுகளில், ஐயா ஒரிசா பாலு!


அகமுடையார் உறவுகளுக்கு
வணக்கம்,
மற்றுமொரு மகிழ்வான செய்தி. கடலியல் ஆய்வாளரும், தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணரும் நோக்கில் பழந்தமிழர்களின் வாழ்வியலை பற்றிய ஆய்வில், இத்தனை ஆண்டுகளான பலதரப்பட்ட களப்பணியில் மாற்று தமிழ் இனக்குழுக்களை பற்றிய நீண்ட ஆய்வை செய்து வந்த நம் உறவினர் ஐயா ஒரிசா பாலு அவர்கள், இனி தன்னுடைய இனக்குழுவான அகமுடையார் பற்றிய ஆய்வுகளையும் தொடங்கி இருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலாக அகமுடையார் சார்ந்த வரலாற்று தேடலில் தான், ஐயா இருப்பாரென நம்புகிறோம். சேர்வை - உடையார் - முதலியார் - நாயக்கர் - பிள்ளை - தேவர் உள்ளிட்ட பல்வேறான பட்டப்பெயர்களோடு பழந்தமிழ்நாடங்கெங்கும் பரவி வாழும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட அகமுடையார் பேரினத்தை பற்றிய தெளிவான வரலாற்று புரிதல், இனி ஐயா ஒரிசா பாலு அவர்களாலும் விரிவடையட்டும்.
மகிழ்ச்சி.
நன்றியும் - வாழ்த்துகளும்!

03 அக்டோபர் 2017

அகமுடையார்கள் தொலைத்த அடையாளங்கள்!


புதுக்கோட்டைக்கு எப்போதுமே எனக்குள் தனித்த இடமுண்டு. என் (தாய் வழி) தாத்தா செய்த அறியாமையில் செய்த பாவ விமோசனத்திற்கான இடமாக கூட, என் குடும்ப உறவுகள் இன்றளவும் புதுக்கோட்டையை பார்க்கின்றனர். இவையெல்லாம் தனிப்பட்ட கதை. பொதுவாக புதுக்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது, தொண்டைமானும், காட்டிக்கொடுத்த சம்பவமும் தான். அடுத்து நினைக்கு வருவது, தமிழ்ச்சினிமாவின் முதல் சூப்பர் ஆக்டர் மற்றும் முதன்முதலாக இரட்டை வேடம் தரித்த அகமுடையார் குலத்தோன்றல் பி.யூ.சின்னப்பா அவர்களை தான். இவற்றை ஒப்புநோக்கையில், இருவிதமான வரலாற்று அரசியல் தொடர்புகள் அடிக்கடி நினைக்கு வரும்.

ஒன்று,

புதுக்கோட்டையை இன்றைய தொண்டைமான்களுக்கு முந்தியே தொண்டை நாட்டுக்கு தொடர்புடைய தொண்டைமான் / பல்லவராயன் என்ற பட்டங்களுள்ள அகமுடையார்களே ஆட்சி செலுத்தினர். இன்றைக்கும் கூட அவர்களின் நீட்சி அறந்தாங்கியில் உள்ள அகமுடையார்களிடம் காணலாம். இந்த அறந்தாங்கி தொண்டைமான்களே, இன்றைய அறந்தாங்கி அகமுடையார்கள் என்பதற்கான நிகழ்கால சான்றுகளும் அங்குண்டு. இந்த தொண்டைமான் பட்டமானது அகமுடையாருக்கானதா? என்பதிலுள்ள குழப்பத்தை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பிலான 210/2013 கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தி கொள்ள முடியும். அடுத்து, பல்லவராயர் என்ற பட்டத்தோடு இன்றைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அகமுடையார் குடும்பங்கள் திருச்சி-திருவெறும்பூருக்கு அருகே இருக்கின்றனர் என்பதும் வரலாற்று தொடர்புடைய விசயமே. மேலும், இந்த முற்கால புதுக்கோட்டை ஆட்சியாளர்களின் சிறப்புமிக்க கடைசி அரசனாக சிவத்தெழுந்த பல்லவராயன் என்ற அகமுடையார் இனக்குழுவின் முன்னோன் அறியப்படுகிறார். இவரது அரசாட்சி வீழ்ச்சியடைந்து பின்னரே மறவர்களான சேதுபதியின் கட்டுப்பாட்டில் புதுக்கோட்டை வந்தது. அதன் பின்னரே, பெண் எடுத்த சம்பந்தி வீட்டின் நிலையை உயர்த்துகின்ற நோக்கத்திலேயே புதுக்கோட்டை சமஸ்தானமானது, கள்ளர்களுக்கு கொடுக்கப்பட்டது. இன்று அவர்கள் தங்களை 'கள்ளர் குல தொண்டைமான்' என தனித்து அடையாளப்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

இரண்டு,

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து, 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் மாநில அளவிலான மாநாடுகள் நடந்தது. அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மறவர் இனக்குழுவை சேர்ந்த, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது. இன்றைக்கு அந்த முக்குலத்தோர் சங்கமானது கள்ளர் இனக்குழுவை சேர்ந்த ஶ்ரீதர் வாண்டையாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இரு நிகழ்வுகளிலும் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் ஒன்றுதான்; அது, அகமுடையாருக்கான வரலாற்றை நாம் தொலைத்து விட்டோம் என்ற உண்மையை மட்டுமே. இது போன்ற நிகழ்கால எடுத்துக்காட்டுகள் மூலம், மறவர் - கள்ளர் ஆதிக்கத்தாலும், முக்குலத்தோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பாலும், அகமுடையார் பேரினமானது பல வரலாற்று தொன்மங்களை தொலைத்து விட்டு, எவ்வித அடையாளமுமின்றி கிடக்கிறது என்பதை உணர முடியும். அகமுடையாருக்கான வரலாற்றை, வெறும் இருநூறு ஆண்டுகளுக்குள் சுருக்கவே இந்த அரசியல் நடத்தப்படுகிறது என்பதை கூட அறியாத எம்மவர்கள், குறைந்தது இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்திய வரலாற்று சான்றுகளை கொண்டுள்ள அகமுடையார் வரலாற்றை மீட்டெடுக்காமலும், அதன் மீதான எவ்வித அக்கறையுமின்றி கண்டுகொள்ளாமலும் முக்குலத்தோர் என்ற சிறு வட்டத்திற்குள் அடைபட்டு கிடக்கின்றனர் என்பதுதான் பெரும்வேதனையான விசயம்.

- இரா.ச. இமலாதித்தன்

#Agamudayar #Pudukottai #Thondaiman #Pallavarayar