24 அக்டோபர் 2017

மாமன்னர்களுக்கு புகழ் வணக்கம்!




ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பாகவே, ஐரோப்பிய ஏகாபத்தியத்திற்கு எதிராக ஐநூற்று தமிழர்களை பலிகொண்ட கொலைக்களம் எம் தமிழ்மண்ணான திருப்பத்தூர். காரணம் ஒன்றே; அது இன விடுதலையுடன் கூடிய மண்ணுரிமை தான். ஆங்கிலேயனுக்கு எதிராக, அனைத்து சிற்றரசர்களையும் ஒருங்கிணைத்து "வீர சங்கம்" என்ற மாபெரும் புரட்சி கூட்டணியை உருவாக்கி, ஜம்புத்தீவு போர் பிரகடனத்தை வெளியிட்ட எம் தமிழினத்தின் தலைமகன்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம், துரோகிகளாலும் சூழ்ச்சியாலும் வீழ்த்தப்பட்ட மாதமிது. எனக்கான முன்னுதாரணம் இவர்கள்; மாபெரும் வீரம்பொருந்திய இம்மண்ணின் மைந்தர்கள்; புறநானூறு சொன்ன அகத்தமிழர்கள்; ஆதித் தமிழினத்தின் பெருமைமிகு அடையாளங்களாகி போன மாமன்னர்கள், எங்கள் மருதுபாண்டியர்கள்!
எம் முப்பாட்டன்களான மருதரசர்களுக்கு புகழ் வணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக