30 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

பல நாட்கள் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட "நமக்கு நாமே" படத்தை, ஒரே "த்தூ" வில் அனைத்து தியேட்டரிலிருந்து தூக்கி அடிச்சிருக்கும் விஜயகாந்த், அனைத்து மக்களையும் அவரைப்பற்றியே பேச வைத்திருக்கிறார்; அது நெகடிவாகவோ - பாசிடிவாகவோ, ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜயகாந்த்தான் என்ற மாயை உருவாக்கவே, தஞ்சையில் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்னதன் நோக்கமாக கூட இருக்கலாம். இது அந்தகால கருணாநிதியின் யுக்தி என்றாலும் அதை இப்போது செய்து கொண்டிருக்கும் விஜயகாந்த், 2016க்கான சட்டமன்ற தேர்தல் வியூகங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்.

#

வேளாண் விஞ்ஞானி திரு. கோ.நம்மாழ்வார், விண்வெளி விஞ்ஞானி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் போன்ற பெருந்தமிழர்களின் படங்களை கூட தங்களின் சுய பெருமைக்காகவும் - புகழுக்காகவும் தான் ப்ரோபைல் படமாக சிலர் வைத்துள்ளனர்; ஆனால், இருவரின் அடிப்படை வாழ்வியல் கொள்கையான சுய ஒழுக்கத்தை துளி கூட பின்பற்றாமலேயே!
த்தூ...

#

'ஐயா' என்ற சரியான பதத்தை மறைத்து, 'அய்யா' என தவறாக எழுதிக்கொண்டு, நான் தமிழனென பெருமைப்படுவதில் என்ன நியாயம்?

#

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனரும், மதுரை மீனாட்சி மருத்துவமனையின் நிறுவனருமான, மருத்துவர் திரு. ந.சேதுராமன் அகமுடையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (டிசம்பர்  30)

#

ஊடக தர்மத்தை தன் முதலாளிகளிடம் விற்றுவிட்ட பத்திரிகையாளர்கள், விஜயகாந்தின் அரசியல் நாகரீகத்தை பற்றி பேசவே தகுதியற்றவர்கள்!

29 டிசம்பர் 2015

சுமேரியர் என்ற தமிழர் நாகரீகம்!

சுமேரிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமென்ற ஆராய்ச்சிகளை பலர் செய்து, அதற்கான ஆய்வு காணொளிகளை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். சுமெரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் பல தொடர்புண்டு என பல தரவுகள் கிடைத்துள்ளன. இந்த சுமேரிய தமிழ் தொடர்பான ஆய்வு காணொளிகளை யூ ட்யூப்பில் கூட பல ஆவணமாக்க பட்டிருக்கின்றன.

தமிழில் ”சின்னையா தேவர்” என்பதை ஆங்கிலத்தில்
CHINNAYYA THEVAR, SHINNAYYA DEVAR என்று இரு மாதிரியாக எழுதலாம். இங்கே ச என்ற எழுத்தை SA, CHA என இருமுறையாக எழுதினால் ஒலியளவு ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கும். Thevar - Devar என எப்படி முதலெழுத்து THE , DE மாறினாலும் தே என்ற ஒலியோடு தேவர் என்ற ஒரே ஒலியைத்தான் நமக்கு தருகிறது.

A - Y
B - P
C - S
D - T
E - I

இப்படியாக இரு எழுத்துகள் மாறினாலும் ஒலியொன்று தான் என்று பல உதாரணங்களை சொல்லலாம். அப்படி பார்த்தால், SUMERIAN என்ற இந்த நாகரீகத்தை குமரியன் நாகரிகம் எனவும் சொல்லலாமே.

SUMERIAN - CUMERIAN - KUMARIAN

- இரா.ச.இமலாதித்தன்

27 டிசம்பர் 2015

திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டு துளிகள்!

01. அதிக பெரும்பான்மையாக உள்ள 62 தொகுதிகளில் அகமுடையாரை வேட்பாளராக நிறுத்தும் கட்சிக்கு மட்டுமே ஆதரவு. இல்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம்.

02. முக்குலம் தேவையில்லை; (அகமுடையார் என்ற) இக்குலம் போதும்!


03. அகமுடையார்கள் மற்ற தமிழ் சாதிகளிடம் நட்பு பாராட்டுவது போலவே, இனி கள்ளர் - மறவர்களிடம் நண்பர்களாகவே இருக்க விரும்புகிறோம். அகமுடையார்களுக்கு மாமன் - மச்சான் - மாப்பிள்ளைகளாக கள்ளரும், மறவரும் இருக்கட்டும்; ஆனால், பங்காளிகளாக அகமுடையார்களுக்குள் மட்டும் இருந்து விடுகிறோம். எங்களுக்கு முக்குலம் தேவையில்லை.

04. இராமநாதபுரத்தில் "அகமுடையார் பல்கலை கழகம்!" விரைவில் தொடங்கப்படும்.

- ஸ்ரீபதி செந்தில்குமார், நிறுவனத்தலைவர்,
தமிழக தலைமை அகமுடையார் சங்கம்.




திருவண்ணாமலை அகமுடையார் மாநாட்டில் கொடுக்கப்பட்ட நாட்காட்டி!


வேட்டவலம் அகமுடையாரின் ப்ளக்ஸ்!

திருக்கோவிலூர் தொழிலதிபர் திரு. டி.கே.டி.முரளி அவர்களால் அகமுடையார் மாநாட்டு கொடியேற்றம்!

அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டின் நிறுவனர் திருச்சி திரு. எம்.எல்.சதீஸ்குமார் அகமுடையார் அவர்களால் அகமுடையார் சங்கப்பாடல்களின் இரண்டாம் பாகம் மாநாட்டில் வெளியிடப்பட்டது.

அனைத்துலக அருணகிரிநாதர் அறங்காவலர் குழுத்தலைவரான ஐயா. தனுசு அகமுடையாரின் எழுச்சி உரை!

அகமுடையார் சங்க பாடல்கள் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது!

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அகமுடையார் மடத்தை மீட்ட, ஆதமங்கலம் லட்சுமணன் அகமுடையாருக்கு ரூ.10,000/- நன்கொடை அருணாச்சால முதலியாரால் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அகமுடையார் சங்க பொதுசெயலாளர் முனைவர் தி.அரப்பா அவர்களின் அரசியலுரை!

வருங்கால சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.செந்தில் அகமுடையாரின் எழுச்சி உரை!

நிறுவனத்தலைவர் திரு. ஸ்ரீபதி செந்தில்குமார் அவர்களின் சிறப்புரை!

அகமுடையார் மாநாட்டு மலர், தம்பிக்கோட்டை எம்.கே.செந்தில் அவர்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

அகமுடையார் மாநாட்டு விழா மேடையை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும், மருது பாண்டியர்கள் படம் பதித்த காலண்டர் வழங்கப்பட்டது.

கமுதி நாராயணமூர்த்தி அவர்களால் அகமுடையார் மாநாட்டு தீர்மான உரை!



தென் மண்டலத்தை பொறுத்தவரை 90%க்கும் மேற்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் முறையான மாநாட்டு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும், மதுரை - திண்டுக்கல் - தேனி - இராமநாதபுரம் - சிவகங்கை உள்ளிட்ட அனைத்து அகமுடையார் சங்கங்களின் பிரதிநிதிகளும் திருவண்ணாமலை மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்து சிறப்பித்தார்கள். குறிப்பாக மதுரை திருமங்கலம் கீழமண்டு - மேலமண்டு அகமுடையார் சங்கங்கள் சார்பாக அச்சங்கங்களின் பொறுப்பாளர்களான திரு.மருதுபாண்டியன் மற்றும் துர்கா தேவனுக்கு நேரடியாக அழைப்பு கொடுக்கப்பட்டது. இந்த மாநாட்டு அழைப்பிதழானது இம்முறை அனைத்து அகமுடையார் சங்கங்களுக்கு நேரடியாக கொடுக்கப்பட்டதே தவிர சங்க உறுப்பினர்களுக்கு என தனிப்பட்ட முறையில் அழைப்பிதழ் அளிக்கவில்லை. அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து தலைவர்களும் மேடையில் அமர இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வரமுடியாத சங்க பிரதிநிதிகள் தொலைபேசியிலும் கடிதம் மூலமாகவும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர். 90%க்கும் மேற்பட்ட அனைத்து அகமுடையார் சங்க தலைவர்களின் பெயர்கள், மாநாட்டு விழா அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடதக்க விசயம்.
இதில் இன்னும் சந்தேகம் இருந்தால் தெளிவு பெற அழைக்கவும்.

திரு. தி.அரப்பா (9943713797)



26 டிசம்பர் 2015

முக்குலத்திலா அகமுடையார்?

முக்குலம் என அடையாளப்படும் மூன்று சாதிகள், கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட இந்த மூன்று மட்டுமே. ஆனால், வல்லம்பர் என்ற நான்காவதாக ஒரு சாதியை முக்குலத்தில் யார் இணைத்தது? அப்படி இணைத்தால் அது முக்குலமா? சாதி சான்றிதழில் அகமுடையாரென இருக்கும் உடையார் - முதலியார் - பிள்ளை பட்டம் போடும் வடக்கத்திய அகமுடையாரை ஏற்க மனமில்லாத கள்ளரும் - மறவரும், சாதி சான்றிதழில் வல்லம்பர் என இருக்கும் இன்னொரு சாதியை முக்குலத்தில் இணைத்து கொள்ள முயல்கிறார்கள் என்பது வெட்கக்கேடு.

நத்தம் விஸ்வநாதன் கூட வல்லம்பர் சாதி தான். ஆனால் அவருக்கு பட்டம் சேர்வை என்பதால், நத்தம் விஸ்வனாதன் அகமுடையார் ஆகிவிட முடியுமா? இப்படி பல குழப்பங்கள் நிறைந்த முக்குலம் எங்களுக்கு வேண்டாம். நாங்கள் தனித்த அடையாளத்தோடு அகமுடையராகவே இருந்து விட்டு போகிறோம். இன்னும் எத்தனை காலம் தான் முக்குலம் என்ற பெயரில் கள்ளர் - மறவரான உங்களை முதுகில் சுமப்பது? இப்போது போதாகுறைக்கு வல்லம்பர் சாதியையும் சுமக்க அகமுடையாருக்கு சகிப்புத்தன்மை இல்லை. நீங்கள் வேண்டுமானால் அவர்களை நிரந்தரமாக உங்களோடு முக்குலமாக சேர்த்து கொண்டு, அகமுடையாரை விட்டு விடுங்கள். உங்கள் குலங்களுக்கு புண்ணியமாக போகும்.

- இரா.ச.இமலாதித்தன்

25 டிசம்பர் 2015

மூன்று தேசியங்களுக்குள் டிசம்பர் 25!

நாகை மாவட்டம் கீழ வெண்மணியில், கூலி உயர்வுக்காக ஆளும் வர்க்கத்திற்கு எதிராக குரலெழுப்பிய சக தமிழ்குடிகளான பள்ளர்-பறையர்களின் உரிமைக்குரல்வளையை ஒரே குடிசையில் வைத்து 44 உயிர்களை கொன்றொழித்த வடுக பண்ணையாரின் வஞ்சகம் நிறைந்த நாள் இன்று.

‪#‎தமிழ்தேசியம்‬

பல சிற்றரசுகளையும், பல மாகாணங்களையும், பல சமஸ்தானங்களையும், வல்லபாய் படேல் போன்றோரின் முயற்சியால் இந்தியம் என்ற ஒற்றைச்சொல்லில் கட்டமைக்கப்பட்ட இந்த நவீன தேசத்தின் அப்பழுக்கற்ற ஓர் உன்னத தலைமை அமைச்சராக விளங்கிய, முன்னாள் பிரதமரான உயர்திரு. அடல் பிகாரி வாஜ்பாயி அவர்களின் பிறந்தநாள் இன்று.

‪#‎இந்தியதேசியம்‬

உலகெங்கும் வணிகமும் மொழியும் உலகமயமாக்கல் ஆக்கப்பட்ட அதே நேரத்தில், தன் பங்கிற்கு உலகமாயாக்கப்பட்ட மதம் தான் கிருத்துவம். எங்கெல்லாம் இம்மதம் பரப்பப்பட்டதோ அங்கெல்லாம் அம்மக்களின் வாழ்வியல் கலச்சாரத்தோடு தன்னையும் உருமாற்றி கொண்டு, அம்மண்ணில் பேசப்பட்ட மக்களின் மொழியின் வாயிலாகவே எளிய மக்களையும் மனரீதியாக மதமாற்றம் செய்த மதமான கிருத்துவத்தின் அதிமுக்கியமான கிருஸ்துமஸ் நாள் இன்று.

‪#‎சர்வதேசியம்‬

துக்கமும் - மகிழ்ச்சியும் - வாழ்த்துகளும் என கலவையாக நிறைந்த நினைவேந்தல் அனுசரிக்கக் கூடிய மறக்க முடியாத நாள் இந்த டிசம்பர் 25!

- இரா.ச.இமலாதித்தன்

அகமுடையார் ஓட்டு, அந்நியருக்கு இல்லை!



திமுகவோ அதிமுகவோ தேமுதிகவோ, எந்த கட்சியாக இருந்தாலும் அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரையே நிறுத்திட வேண்டும். அப்படி பார்த்தால் குறைந்த பட்சம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அகமுடையார்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. காரணம் என்ன? முக்குலமென சொல்லி அகமுடையார் மிகப்பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளெல்லாம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

டெல்டாவிலோ, வடக்கிலோ மறவருக்கு வாக்கு வங்கி இல்லை. வடக்கிலோ, கடைகோடி தெற்கிலோ கள்ளருக்கு வாக்கு வங்கி இல்லை. ஆனால், அகமுடையாருக்கு தெற்கு - வடக்கு - டெல்டா - கொங்கு என எல்லா பக்கமும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய வாக்கு வங்கி உண்டு.
முக்குலமென சொல்லி அகமுடையாருக்கென கிடைக்க வேண்டிய பதவிகளையும் விழுங்கி ஆக்டோபஸ் போல அனைத்து பதவிகளையும் அனுபவித்து வருவதை இனியும் தட்டி கேட்காமல் இருக்க முடியாது. அந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய சொல்லி, ஆளும் - ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவே திருவண்ணாமலையில் அகமுடையார் திருப்புமுனை மாநாடு.

அகமுடையாருக்கான மாநாடு என்பது யாருக்கும் எதிரானதல்ல. எனவே மறுக்கப்பட்ட சமநீதியை நிலை நாட்ட 27.12.2015 அன்று திருவண்ணாமலையில் அகமுடையார்களாய் அணிதிரண்டு ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு அடையாளப்படுத்தி கொள்ளலாம், அகமுடையார் என்ற சாதி தமிழகமெங்கும் பெரும்பான்மையாக இருக்கின்றதென!

- இரா.ச.இமலாதித்தன்

24 டிசம்பர் 2015

பீப் பாடலுக்கெதிரான போராளிகள்!

தாய்மையின் அடையாளத்தையே பாடலின் வரிகளில் சேர்த்த சிம்பு கண்டனத்து உரியவர் தான். அதில் எந்த மாற்று கருத்துமில்லை. அதற்காக கைது - சிறை என்ற நிலையெல்லாம் தேவையேயில்லை. அந்த பீப் பாடலில் சம்பந்தப்பட்ட அனிருத் மட்டும் விதிவிலக்கா என்ன? அந்த பீப் பாடலை உருவாக்கியதில் பாதி பங்கு, இசையமைத்த அனிருத்துக்கும் உண்டு. ஆனால் அவரை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

மாதர் சங்கம் போன்ற பெண்ணுரிமை போராளி சங்கங்களெல்லாம் பீப் பாடலுக்கு கொடுக்கும் அதிமுக்கியத்துவத்தை பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகளுக்கு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் வாரமொருமுறை பாலியல் வன்புணர்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதையெல்லாம் செய்திதாள்களின் ஏதோவொரு மூலையில் போடப்பட்டுள்ளதை எளிதாக கடந்து விட்டு ஒரு நடிகனிடம் ஏன் இவ்வளவு மல்லுக்கட்டுகிறீர்கள்?

தான் செய்ததது தவறென உணர்ந்து மன்னிப்பு கேட்ட சிம்பு மற்றும் அவரது சார்பாக சிம்புவின் பெற்றோர்களும் ஊடகங்களுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரிய பின்னும், போராளிகள் சங்கங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதும் புரியவில்லை. விஜய் டிவியின் நீயா நானாவில் இதை ஒரு விவாத பொருளாக எடுக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள் என தெரிகிறது.
தன்னுடைய தவறை ஒப்பு கொண்டு பொதுவெளியில் மன்னிப்பு கேட்ட பின்பே அந்த தவறின் வீரியத்தை சிம்பு உணர்ந்திருப்பார். இனி ஒருபோதும் அவர் இதுபோன்ற தவறை செய்ய மாட்டார் என உறுதியாக நம்பலாம். தன் தவறுக்கு மன்னிப்பு கேட்ட பின்னும் தனிப்படைகள் அமைத்து கைது செய்வேனென மனரீதியான தாக்குதல்களை மதரீதியாகவும் சிலர் செய்கிறார்கள். அன்பும் கருணையும் தான் அனைத்து மதங்களின் அடிப்படை. எனவே, சிம்பு என்ற நபரை மன்னித்து விடுங்கள் மனிதர்களே!

- இரா.ச.இமலாதித்தன்.

19 டிசம்பர் 2015



தமிழர்களின் பாரம்பரிய கலச்சார பண்பாட்டு கூறுகளை அழித்தொழிப்பது தான் இல்லுமினாட்டிகளின் நோக்கமாக இருக்க கூடும். ஏனெனில் இல்லுமினாட்டிகளின் அடிப்படை தத்துவங்களே தமிழர்களிடமிருந்து திருடப்பட்டது தான்.

ஏற்கனவே என்னுடைய பதிவில் ஷங்கர் எடுத்த 'ஐ' படம் இல்லுமினாட்டிகள் சார்ந்த படம் என்பதை சொல்லிருந்தேன். அதன்படி பார்த்தால், ஐ படத்திற்காக மேற்கத்திய அந்நிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எமி ஜாக்சன் என்ற பெண் இல்லுமினாட்டி வகையறாவாக இருக்கலாமென்ற சந்தேகம் வலுக்கிறது.

காரணம் என்னவெனில், அரப்பா நாகரீகத்திலிருந்து தொடர்ந்து வரும் போர்க்குடிகளான தமிழர்களின் 'ஏறு தழுவதல்' என்ற ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க வேண்டுமென்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார் எமி ஜாக்சன் என்ற அந்நிய நாட்டு கூத்தாடி.

- இரா.ச.இமலாதித்தன்.

முக்குளத்தை முக்குலத்தோருக்கு தெரியுமா?


அகமுடையார் முதுகில் சவாரி செய்யும் முக்குலத்து அமைப்பினரே!

இந்த வீடு யாருடைய வீடு?
இங்கு யார் பிறந்தார்கள்?
இந்த வீடு எங்குள்ளது?

இதெல்லாம் தெரியுமா? அக்டோபர் மாதம் மட்டும் அரசியல் செய்யும் உங்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. இந்த புண்ணியபூமியில் உங்களது பாவப்பட்ட பாதங்கள் பட்டிருக்க வாய்ப்பே இல்லை.

இடம்: நரிக்குடி-முக்குளம்.

இங்குதான் மாமன்னர் மருது பாண்டியர்கள் அவதரித்தனர். அப்படிப்பட்ட பெருமைமிகு இந்த வீட்டை சீரமைக்கவோ, இங்கு மருது சகோதரர்களுக்கு மணிமண்டபம் கட்டவோ, அவர்கள் பிறப்பெடுத்த இவ்வீட்டை நினைவு இல்லமாக மாற்றக்கூட வக்கில்லை. கேட்டால் 'வாழும் மருது' என அடைமொழியை பெயருக்கு முன்னால் வெட்கமே இல்லாமல் போட்டுகொள்வீர்கள்.

வாழ்க முக்குலம்! ஒழிக முக்குளம்!

- இரா.ச.இமலாதித்தன்

17 டிசம்பர் 2015

ஆகவிதியும் அட்ராசிட்டியும்!

நல்ல நாள் அதுவுமா, கோவில் வாசல்ல ஐம்பது ரூபாய்க்கு அர்ச்சனை தட்டு வாங்கி, கோவில் அலுவலகத்துல பத்து ரூபாய்க்கு அர்ச்சனை சீட்டு வாங்கி, அர்ச்சகர் கிட்ட போய் நம்ம ராசி - நட்சத்திரத்தை சொன்னா, அதை காதுலேயே வாங்காம காணிக்கையை போடுங்கன்னு மிரட்டுற தொனியில சொல்ற அர்ச்சகரை தான் நூத்துக்கு தொன்னுத்தொன்பது இடத்துல பாத்துருக்கேன். இதெல்லாம் என்ன எழவு விதியோ? என்ன மானங்கெட்ட குலத்தொழிலோ?

#

குலதெய்வம் கோவில்களிலும், ஊர்புற அம்மன் கோவில்களிலும் எந்த ஆகமவிதிப்படி அர்ச்சனை நடக்கிறது? எந்த ஆகமவிதிப்படி கடவுள் பூசாரியின் உடலில் வந்து தெய்வ வாக்காக குறி சொல்கிறார்? பூசாரி மட்டுமல்ல, கோவிலுக்கு வந்த யார் மீது வேண்டுமானாலும் அந்த கடவுள் அடிக்கடி வந்து போகிறாரோ? எனக்கு ஆகமவிதியை புறந்தள்ளிய இந்த கடவுளே போதும்! இறக்குமதி செய்யப்பட்ட எந்த கடவுளும் தேவையில்லை.

#

நான் தீவிர கடவுள் நம்பிக்கையாளன். என் ஆன்மீகறிவுக்கு எட்டியபடி, ஆகம விதிப்படி தான் கடவுளை ஆராதனை பண்ணமுடியும்ன்னு எந்த கடவுளும் உட்சபட்ச நீதியை வழங்கவில்லை என்பதை அறிவேன். ஏனெனில், எந்த கடவுளும் பூநூலை போட்டுக்கொண்டு மேல்தட்டு சாதியவாதியாக இருக்கவில்லை.

#

'சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற காமெடி போலத்தான், இந்த ஆகமவிதியும்!

#

சங்கரராமன்களும், தேவநாதன்களும் தான் ஆகமவிதிக்கு உரிமை கொண்டவர்களா? கோவில் கட்டி மண்ணையே ஆண்ட பரம்பரை என வீர முழக்கமிடும் என் அகமுடையார் குடியில் பிறப்பெடுத்த இந்த இமலாதித்தன் போன்றவர்களுக்கு வெறும் தலைவிதி மட்டும் தானா சொந்தம்?

#

"சாதியும் - நிறமும் ஆன்மீகத்திற்கு சர்வ நிச்சயமாக கிடையாது!"
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

குலத்தொழிலில் போர்குடிகளை தவிர்த்த ஏனையர்களும் வீரம் செறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது கடந்தகால / நிகழ்கால வரலாறு. அதனால் குலத்தொழில் என்பதெல்லாம் ஒரு மாயை.
கோவில் கருவறையில் காம களியாட்டம் ஆடிய காஞ்சிபுரம் தேவநாதனின் குலத்தொழில் எது?

சித்தர்களில் - நாயன்மார்களில் - நால்வர்களில் - ஆழ்வார்களில் எத்தனை பேர் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள்? இவர்களில் எத்தனை பேர் ஆகமவிதியை பயின்றவர்கள்?

அனைத்து சாதியிலிருந்தும் முறையாக பயின்று வரும் நபர்கள் சரியான முறையில் ஆன்மீக சேவை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அன்று கோவில் கட்டிய தமிழ்குடிகளின் வருங்கால தலைமுறைகள், இன்று முறையாக பயின்ற பின்னால் கோவில் கருவறையில் நுழைய யாரும் தடை போட கூடாது. அப்படி இருந்தால் அந்த தடையை உடைப்போம் தமிழனாய்!

#

எங்க நாகப்பட்டினத்தில் மீனவனாய் பரதவர் குலத்தில் பிறந்த 'அதிபத்த நாயனார்' எந்த ஆகமவிதிப்படி வெறும் நாற்றம் பிடித்த மீனை கொடுத்து கடவுளை வணங்கி, அவரையே நேரில் வர வைத்தார் என்பதை சட்டமேதை என்ற அறிவுஜீவிகளால் பதில் சொல்ல முடியாது.
கடவுள் என்பது உணர்வு. அதுவொரு உட்சம் தொட்ட அறிவுநிலை. அது வேறுபாடற்ற அன்பின் நிறைவு. நான் யாரென்ற புரிதலோடு இயற்கை சூழ் இந்த உலகமடங்கிய ஒட்டுமொத்த பிரபஞ்சத்தை அணு அணுவாக அனுபவித்து, அணுவாகவே இடம் பெயர்ந்து அதுவாகவே ஆகிவிடும் பெரும்போதை. அதை இந்த ஆகம விதி, ஆகாத விதியென ஒப்பிட்டு இனியும் ஏமாற்றாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

13 டிசம்பர் 2015

11 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

மானை கொன்னா என்ன? மனுசனை கொன்னா என்ன? எல்லா கானும் நிதியை வைத்து நீதியை தான் தினமும் கொல்றாங்க.

‪#‎சல்மான்கான்‬

#

போர்குடிகளுக்கு அடையாளமான முறுக்கிய மீசையின் அழகும் கம்பீரமும், என் பாட்டன் பாரதிக்கும் கச்சிதமாய் பொருந்தியது என்பதுதான் தமிழின் வீரமிகு அடையாளம்! (டிச 11)

#

ஆக்கிரமிப்புகளை குடிசைகளிலிருந்து அகற்ற துவங்கி இருக்கிறீர்கள். துணிச்சலான விசயம். ஆனால், இதை குடிசைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிகாரர்களின் கல்லூரிகளையும் அகற்றுங்கள்! கூடவே, உங்களது ஆணைப்படியோ அல்லது உங்களது உத்தரவுப்படியோ குளம் குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்களையும் அப்புறப்படுத்துங்கள்.

செய்வீர்களா?!

#



குத்திக்காட்டுற நேரமா இது?

ஒட்டுமொத்த ஹிந்துக்களுமா, முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போன்னு சொன்னாங்க? முஸ்லீம் ஃப்ரெண்ட் இல்லாத ஹிந்துவோ, ஹிந்து ஃப்ரெண்ட் இல்லாத முஸ்லீமோ இங்கே கிடையாது. மாமன் மச்சான்களாகத்தான் நாங்கள் (ஹிந்து + முஸ்லீம்) பழகி வருகிறோம். இதெல்லாம் தேவையில்லாத ஒப்பீடு.

#

தமுமுக, TNTJ, PFI போன்ற இசுலாமிய அமைப்புகளின் அற்பணிப்பில் சற்றும் குறைந்தது இல்லை, RSS போன்ற ஹிந்து அமைப்புகளின் சேவையும்! ஹிந்து அமைப்புகளின் பெயர்களை சொன்னால் தமிழ் தேசியமோ, திராவிடமோ, கம்யூனிசமோ, பெரியாரியமோ, நடுநிலையோ கேள்விக்கு உள்ளாக்கப்படுமென்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள்.
‪#‎ChennaiRains‬

#

ஊருக்கே சோறு போட்ட சோழநாட்டுக்கும் சோதனையா? எங்க டெல்டா பகுதிகளில் தொடர்ச்சியாக கொட்டி தீர்க்கிறது மழை!

#

கேமரா மேன்கள், பாதுகாப்பு வீரர்கள், படைசூழ ஆட்கள், புதுப்புது உடைகள் என்ற எதுவுமே இல்லாமல் வெள்ள நிவாரண உதவிகளை செய்துவரும் இளைஞர்களின் சேவைக்கு பெயர் தான் உண்மையான 'நமக்கு நாமே'!

06 டிசம்பர் 2015

நான் நேரில் கண்ட சம்பவம்!



மிகப்பெரிய பதவியில் இருக்கும் அந்த அரசியல்வாதி, மழைவெள்ளத்தால் தேங்கிநின்ற தண்ணீரை வடியவைக்க நாற்பது அம்பது ஆட்களோடு வருகிறார். தன் சகாக்களின் வண்டியையெல்லாம் பக்கத்து தெருவில் வரிசையாக நிறுத்திவிட்டு கொஞ்சம் தூரம் நடக்கிறார். தூர்வாறும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே அருகில் வருகிறார். சட்டென தேங்கிருந்த நீரின் ஒருதுளி, அவரது சலவை செய்யப்பட்ட வெள்ளை சட்டையில் பட்டுவிடுகிறது. உடனே கோபம் கொப்பளித்து, தன் உதவியாட்களிடம் சொல்லி வாட்டர் பாட்டிலை கொண்டு வரச்சொல்லி, அந்த தண்ணீரையே தண்ணீரால் துடைக்கிறார். இதையெல்லாம் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் செல்போனில் போட்டோ பிடிக்கிறது. ஆனால், அவரின் எடுபிடிகளால் மிரட்டப்பட்டு எடுத்த போட்டோக்களையெல்லாம் டெலிட் செய்யப்படுகிறது. இதற்கிடையில், அவருக்கு அருகில் சென்ற அவருடைய கேமராமேன்கள் "அண்ணன்! இப்போ அந்த மம்வெட்டிய கையி் பிடிச்சு க்ளீன் பண்ணுங்க அண்ணன்..." ன்னு சொன்ன உடனேயே மூன்று போட்டோகிராஃபரின் கேமராக்களையும் பார்க்காமலேயே போட்டோவுக்கு வெகு இயல்பாக போஸ் கொடுத்து விட்டு, மடித்து கட்டிருந்த தன் கட்சிக்கரை போட்ட வெள்ளவேட்டியை இறக்கி விட்டு காரில் பறந்து விட்டார். காத்திருக்கிறோம் 2016 தேர்தலுக்காக! அவரை பதவியில் இருந்து பறக்க வைக்க...

- இரா.ச.இமலாதித்தன்.

03 டிசம்பர் 2015

சென்னை வெள்ளத்திற்கு பின்னால், மனிதமும் - வேசமும்!


மழை வெள்ளத்திற்காக மசூதிகள் இடம் கொடுத்து உதவுவதையும், மதம் பிடித்த சிலர் இசுலாமிய சார்பு துதி பாட ஆரம்பிக்கின்றனர். செய்த உதவியை சொல்லிக்காட்டி மனிதாபிமானத்தை மதமாக்கி அவமான படுத்தாதீர்கள்


நாட்டை ஆளும் முதல்வரின் வயது 67, பாட்டை ஆளும் இசைஞானியின் வயது 72!


வெள்ள நிவாரணத்திற்காக டிவிட்டர் மூலமாக ட்ரெண்ட் உருவாக்கி, நேரடியாக களத்திலும் உதவிகளை ஒருங்கிணைத்த, சித்தார்த் - RJ பாலாஜியை பார்க்கும்போது "ஆய்த எழுத்து" படம் தான், நினைவுக்கு வருகிறது! இனியாவது இளைஞர்கள் அரசியலை கைப்பற்ற வேண்டும்.


தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்



ராஜாதி ராஜ, ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க... த்தூ

(கன்னட + மராட்டிய) ரஜினி என்ற போலி தமிழனை விட, அல்லு அர்ஜுன் என்ற நிஜ தெலுங்கனுக்கு, தமிழனாக எம் நன்றி!

#

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு நாகையில் இருந்து கூட நூற்று கணக்கான பேரு போனாங்க. இது மாதிரி எல்லா மாவட்டத்திலிருந்தும் ஒன்றியம் வாரியாக தேர்தல் பணிக்கு ஆட்களை வர சொன்ன அதிமுகவின் ராஜ'தந்திரம்', இப்போதும் சென்னை மழைவெள்ள மீட்பு பணிக்கு பயன்பட்டிருந்தால் பெருமைப்படலாம். ஆனால்... இப்போதுதானே அது வெறும் தந்திரமென சாமானியனுக்கும் புரிகிறது.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வலது கை கொடுக்கிறதை, இடது கைக்கு கூட தெரியக்கூடாது!ன்னு சொல்லுவாங்க. ஆனால் இங்கே உதவியை கூட ஓட்டுக்களாக மாற்ற நினைக்கும் ஈனத்தனமான புத்தியை என்ன சொல்லி திட்டுவது? ஜெயலலிதா படம் போட்ட பை பிரிண்ட் அடிக்க நேரமானதால், நூற்று கணக்கான சாப்பாட்டு பொட்டலங்கள் வீணாகி போனதாகவும் செய்தி வருகிறது. ஜெயலலிதா படம் போடலைன்னா, தெய்வ குத்தமாவா ஆகிடும்? காங்கிரஸ் போலவே திராவிட அடிமைகள் நம்பியிருக்கும் இந்த இரண்டு கட்சிகளின் ஆட்சியும் தமிழ்நாட்டில் ஒழியணும்.

#

பெருமழை/புயல் உண்டுயென சொல்லப்பட்டிருந்த பஞ்சாங்கத்தை பழித்த பஹூத்தறிவு கி.வீரமணி எங்க இருக்காப்ள?

#

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், பாதியிலேயே பேட்டியை முடித்து கொண்டு அமைச்சர்கள் - அரசு அலுவலர்கள் ஓட்டம்.
இதுதான் "அம்மாவின் ஆணைக்கினங்க ஆட்சியின்" ஒர்த்!


#

மழை வெள்ளத்தை பயன்படுத்தி, அன்றாட பொருட்களின் விலையை பலமடங்கு விலையேற்றி விற்கும் வியாபாரிகளின் பணத்தையெல்லாம் கொள்ளையடிக்க ஒருத்தன் பிறக்காமலா போய்ட போறான்?!

#

இலங்கை இராணுவத்தால் மீனவன் சாகும் போதெல்லாம் கண்டுகொள்ளாத மக்களையெல்லாம், இன்று இந்திய இராணுவத்திற்கு முன்பாகவே தன் படகுகளை கொண்டு தானாகவே முன்வந்து காப்பாற்றி வருவபவனும் மீனவனே!

மீனவர் சூழ் நாகப்பட்டினத்து காரனாய் நான் பெருமை கொள்கிறேன்.

#


அனைத்து பள்ளிவாசல்களையும் திறந்துவிட சொல்லி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மத வேறுபாடின்றி அடைக்கலம் கொடுக்க சொன்ன ஜமாத்தை மறந்துவிட்டு, ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லும் மீரான் மாதிரியான இசுலாமியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"தண்ணீரில் தத்தளித்த தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய தரணி போற்றும் தாயே!"

#

பறையருக்கான அரசியல் கட்சியென்று அடையாளப்படுத்தி கொண்டு அரசியலுக்கு வந்த திருமாவளவனெல்லாம் இந்நேரம் என்ன செய்கிறார்? சென்னையில் குடிசை வீடுகளை இழந்த பெரும்பாலான விளிம்புநிலை மக்களை வைத்து அரசியல் செய்யும் திருமாவளவனுக்கு இந்த மழைவெள்ள பாதிப்பெல்லாம் தெரியாதா? அடங்க மறுக்க சொன்னவரே, இந்த மழைக்கு ஒரேயடியாக அடங்கி விட்டார் போல.

#

'மழைய பத்தி இன்னைக்காவது இந்தம்மா வாய தொறந்துச்சே!'ன்னு டீக்கடையில பெரியவர் ஒருத்தர் சொல்லிட்டு இருக்காரு. அவரு இன்னும் ஜெயா நியூஸ் பார்க்கலன்னு நினைக்கிறேன்.

#

இவ்ளோ மழை பேய்ஞ்சு மேடான ஏரியாவே குளமா மாறினதுக்கு அப்பறமும், வயல்வெளி - குளம் - குட்டை - ஏரியில வீட்டுமனை போட்டு ரியல் எஸ்டேட்ங்கிற பேர்ல விளம்பரம் பண்றவனெல்லாம் அடங்க மாட்றாய்ங்க.

#

இந்தியாவின் மெட்ரோ சிட்டி என சொல்லப்படுகின்ற சென்னையை தவிர்த்த டெல்லி - மும்பை - கொல்கத்தாவில் இந்த மாதிரியான மழை பொழிந்திருந்தால், இந்நேரம் நாடே மூழ்கி விட்டது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி ஒப்பாரி வைத்திருக்கும்!

#

எதற்கெடுத்தாலும் 'நான்' என்ற ஆணவத்தை இயற்கையாக மாற்றிக்கொள்ளாவிட்டால், இயற்கையே மாற்றும் என்பதை ஆள்பவர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும்.

#

இவ்வளவு நடந்து தலைநகரமே தண்ணியில மிதக்குது. இந்த மானங்கெட்டவனுங்க நான்காண்டு சாதனை பற்றிய செய்தியை வெட்கமே இல்லாமல் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க. த்தூ

#

ஜெயாடிவி அலுவலகத்துக்குள்ளயே மழை தண்ணீர் புகுந்தது தான் ஹைலைட்டே... பேச்சாடா பேசுனீங்க?! இனிமே நீச்சலடிச்சுக்கிட்டே, "அம்மாவின் ஆணைக்கினங்கே, ஜெயாடிவி அலுவலகத்தில் மழைநீர் புகுந்து புண்ணியம் தேடிக்கொண்டது" என வழக்கம்போல செய்தியை சொல்லிட்டா கணக்கு சரியாயிடும்.

#

சென்னைக்கு கடலூர் இளக்காரமா தெரிஞ்சது போலவே, டெல்லிக்கு சென்னை இளக்காரமா தெரியுது.

#

உலகம் முழுக்க சுற்றினாலும் தமிழக மழை வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டரில் வந்து நேரில் பார்த்து உடனடியாக ரூ.1940 கோடி ஒதுக்கிய மோடியிடமிருந்து, இந்த லேடி கத்துக்க வேண்டிய விசயம் நிறைய இருக்கு.
தங்களது கட்சி வேட்பாளர் ஊராட்சி மன்ற தலைவராக இல்லாத கிராமத்திற்கு அரசாங்க சலுகைகளை கொடுக்கக்கூட மனமில்லாத இந்த லேடியை விட, தன் கட்சி ஆட்சியை பிடிக்கவே வாய்ப்பில்லாத ஒரு மாநிலத்திற்கு நேரடியாக களத்திற்கே வந்த மோடி போற்றுதலுக்கு உரியவர்.
இனியாவது தமிழக மழை வெள்ள பாதிப்புகளை இந்திய ஊடகங்கள் பேசட்டும் நன்றி, பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி!
- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்!

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.