30 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

பல நாட்கள் சிரமப்பட்டு எடுக்கப்பட்ட "நமக்கு நாமே" படத்தை, ஒரே "த்தூ" வில் அனைத்து தியேட்டரிலிருந்து தூக்கி அடிச்சிருக்கும் விஜயகாந்த், அனைத்து மக்களையும் அவரைப்பற்றியே பேச வைத்திருக்கிறார்; அது நெகடிவாகவோ - பாசிடிவாகவோ, ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்து விஜயகாந்த்தான் என்ற மாயை உருவாக்கவே, தஞ்சையில் ஜெயலலிதா படத்தை கிழிக்க சொன்னதன் நோக்கமாக கூட இருக்கலாம். இது அந்தகால கருணாநிதியின் யுக்தி என்றாலும் அதை இப்போது செய்து கொண்டிருக்கும் விஜயகாந்த், 2016க்கான சட்டமன்ற தேர்தல் வியூகங்களில் தெளிவாகத்தான் இருக்கிறார்.

#

வேளாண் விஞ்ஞானி திரு. கோ.நம்மாழ்வார், விண்வெளி விஞ்ஞானி திரு. ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் போன்ற பெருந்தமிழர்களின் படங்களை கூட தங்களின் சுய பெருமைக்காகவும் - புகழுக்காகவும் தான் ப்ரோபைல் படமாக சிலர் வைத்துள்ளனர்; ஆனால், இருவரின் அடிப்படை வாழ்வியல் கொள்கையான சுய ஒழுக்கத்தை துளி கூட பின்பற்றாமலேயே!
த்தூ...

#

'ஐயா' என்ற சரியான பதத்தை மறைத்து, 'அய்யா' என தவறாக எழுதிக்கொண்டு, நான் தமிழனென பெருமைப்படுவதில் என்ன நியாயம்?

#

அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவனரும், மதுரை மீனாட்சி மருத்துவமனையின் நிறுவனருமான, மருத்துவர் திரு. ந.சேதுராமன் அகமுடையாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! (டிசம்பர்  30)

#

ஊடக தர்மத்தை தன் முதலாளிகளிடம் விற்றுவிட்ட பத்திரிகையாளர்கள், விஜயகாந்தின் அரசியல் நாகரீகத்தை பற்றி பேசவே தகுதியற்றவர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக