தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

05 செப்டம்பர் 2020

சித்த மருத்துவத்தை புறக்கணிக்கும் அரசு!

Ayurveda, 
Yoga and Naturopathy,
Unani,
Siddha,
Homeopathy. 

மேலுள்ள இந்த ஐந்து மருத்துவமுறைகளுடைய முதலெழுத்துகளின் கூட்டே AYUSH என்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால், சித்த மருத்துவத்தை வட ஹிந்தியர்கள் ஏற்பதில்லை. சித்தர்கள் கண்டறிந்த மருத்துவமுறைகளை பெரும்பாலும் தமிழிலேயே ஆவணப்படுத்தி இருப்பதால் கூட, சித்தர் மருத்துவமே மட ஹிந்தியர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். நீதிமன்றமே சொன்னது போலவே, AYUSH என்பதிலுள்ள S என்ற எழுத்தை நீக்கிவிட்டு, AYUH அமைச்சகமாக்கி விடலாம். 

AYUSH அமைச்சக கலந்துரையாடல் நிகழ்வில், ஹிந்தி தெரியாதவர்கள் வெளியேறலாமென சொல்லும் உயர் பதவிகளிலிருக்கும் மட ஹிந்தியர்களுக்கு ஹிந்தியை தவிர வேறொரு மொழியும் சரளமாக பேசத் தெரிவதில்லை. ஆங்கிலத்தை கூட ஹிந்தி போலவே பேசும் இயல்புடையவர்களுக்கு தமிழர் உட்பட தென்னகத்தாரை கண்டாலே தாழ்வுமனப்பான்மையால் தவிக்கின்றனர். அந்த தாழ்வான உளவியல் சிக்கலை, தங்களது அதிகாரத்தை கொண்டு, தமிழர்களை பழி தீர்த்து கொள்கின்றனர்.

பேஸ்புக் உள்பட அனைத்து சமூக இணைய தளங்களிலும், ஆளும் பாஜக அரசாங்கத்தின் அழுத்தத்தால் ஹிந்தியையே ஹிந்தியாவின் ஒற்றை மொழி போன்றதொரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்நாட்டின் பிரதமரான மோடி, மேடைக்கு மேடை தமிழிலக்கியங்களின் பாடல்களை சொல்லி பேசுவதால் மட்டுமே தமிழுக்கு பெருமை சேரப்போவதில்லை. சொல்வதொன்று செய்வது வேறொன்று என்பது போல, மீண்டும் மீண்டும் இந்நாட்டிலுள்ள பல தேசிய இனங்களின் மொழிகளை அழித்தொழித்து, ஹிந்தியை திணிக்கும் அணுகுமுறை கேவலமாக இருக்கிறது.

ஒரு மொழி உயிர்ப்போடு இருக்கும் வரையில் தான், அந்த மொழி பேசும் இனமும் வரலாற்றிலும் இருக்கும். தமிழர் என்ற இனமும், முன்பு போலவே இனிவரும் காலத்திலும் தனித்த அடையாளத்தோடு தாக்குப்பிடிக்க வேண்டுமெனில், தமிழ் மொழியும் உயிர்ப்போடு இருக்க வேண்டும். ஹிந்தியால் தமிழை அழிக்க முடியாது. ஆனால், ஹிந்தி பேசும் வட ஹிந்தியர்களால் தமிழ் ஒடுக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அதிகாரம் முழுக்க அவர்களிடமே இருக்கிறது.

ஹிந்தியா முழுக்க செயல்படுத்த துடிக்கும் புதிய கல்விக்கொள்கை, தேசிய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையென எதையுமே மாநில மொழிகளில் கூட சொல்ல முடியாதென சொல்லும் திமிர்த்தனமும், ஒருசில மாநிலங்களை தவிர வேறாருக்கும் ஹிந்தி தெரியாத போதும், ரயில்வே நிலையம், ஊர்ப்பெயர்ப்பலகைகள் உள்பட எல்லாவற்றிலும் ஹிந்தியை திணிக்கும் போக்குகள் கூட ஓர் எடுத்துக்காட்டு தான்.

எங்கள் தாய் தகப்பனின் இனிசியலை போடவிடாமல், எவனோ ஓர் ஆண்மையற்றவனை அப்பனாக்க முயற்சி செய்வதில் என்றைக்கும் பலன் கிடைக்க போவதில்லை. ஹிந்தியை படிப்பதோ, படிக்காமல் இருப்பதோ அவரவர் விருப்பம். அதை பற்றி இங்கே பேசவே இல்லை. ஹிந்தி திணிப்பையே சுட்டிக்காட்டிருக்கிறேன். ஹிந்தியல்ல, ஆங்கிலமே உலக மொழி. என்னளவில், உலகளாவிய உச்சம் தொட, தாய்மொழி தமிழைத் தவிர ஆங்கிலம் போதும் என்பது என் நிலைப்பாடு. தேவையில்லாமல் ஹிந்திக்கு முட்டு கொடுத்து நேர விரயமாக்க வேண்டாம்.

- இரா.ச. இமலாதித்தன்
22 ஆகஸ்ட் 2020

#ஹிந்தி #AYUSH #தமிழ் #சித்தமருத்துவம் #தமிழர் #ஹிந்தியா

01 ஜனவரி 2018

தமிழ்நாட்டை தமிழன் ஆளக்கூடாது!

Image may contain: 1 person, smiling

இதையே நாங்க சொன்னால், கண்டவனுக்கு பிறந்தவனெல்லாம் தமிழனை கன்னடனோ - தெலுங்கனோ - மலையாளியோ - மரட்டியனோ தான் ஆள வேண்டுமென அவனின் காலை நக்குவார்கள். ஆன்மீக அரசியலென்ற வேதம் சொல்லி ஆளத்துடிக்கும் பூதங்களின் கனவை கலைத்து, ஆண்மையான அரசியலை - ஆளுமையான அரசியலை நாம் தமிழராக எழுந்து செய்ய வேண்டும். "நல்லவன் வாழ்வதும், வல்லவன் ஆள்வதும் தான்!" காலம் நமக்கும் உணர்த்தும் உண்மை. காலம் நம் பக்கம் சிறகுகளை விரித்து காத்துக் கொண்டிருக்கிறது; இம்மண்ணை நாமே ஆள்வோம்!

27 டிசம்பர் 2017

இரகசியமென்று எதுவுமில்லை!

Image may contain: plant

அ - உ - ஐ - கண் - அகரம் - உகரம் - தமிழ் - உயிர் - உடல் - 12 - 18 - 2+8 - 10 - சூரியன் - சந்திரன் - வாலை - வாசி - சிவ - சிவசக்தி - முக்கோணம் - 1+2 - 3 - 5 - ஐங்கோணம் - 5+3 - 8 - எண்கோணம் - எண் - எண்ணம் - 6 - அறுகோணம் - ஆறு - வழி - மார்க்கம்... இப்படியாக பல தொடர் முடிச்சுகள் ரகசியமாகவே கடத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் குருவருளின் துணையோடும் நாமே தான் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, மற்றவர்களின் அரைகுறையான அனுமானங்களை வைத்து எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது; வரவும் கூடாது. பார்வையின் கோணத்தை மாற்றுங்கள். இப்பிரபஞ்ச ரகசியமே தானாய் உங்கள் கண்களுக்கு தென்படும்.


இல்லுமினாட்டி என்றால் என்ன அர்த்தம்? இல்லுமினாட்டி என்பவர்கள் யார்? இல்லுமினாட்டி என்பது ஓர் இனக்குழுவா அல்லது ஒரு பெருங்கூட்டத்தினரா அல்லது ஒருசில குடும்பங்களா? அவர்கள் எங்கிருக்கின்றனர்? அவர்களின் நோக்கம் என்ன? வணிகத்தை கட்டுபடுத்துபவர்களா அல்லது மக்கள்தொகையை கட்டுப்படுத்துபவர்களா அல்லது அரசாள துடிப்பவர்களா? யார் அவர்கள் என்பதை பற்றிய தெளிவேயில்லாமல் கண்டதையெல்லாம் பரபரப்பாக சொல்லி, குழப்பி விட்டு சுயஇன்பம் தேடுபவர்களிடம் இதற்கான தெளிவான பதில்கள் இருக்குமா? என்று தம்பி ஒருவர் நேற்று என்னிடம் கேட்டார்; சிரித்து கொண்டே அவரிடமிருந்து விடைபெற்றேன்.

17 நவம்பர் 2017

வாய்மேட்டின் வரலாறான சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!





”தமிழில் பேசுக! தமிழில் எழுதுக! தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!” என்னும் நான்கு செயல் திட்டங்களை முன்வைத்து மதுரையை அடுத்த திருநகரில் 6.8.1962 ஆம் நாள் ”தமிழ்மொழி வாழ்ந்தால் தமிழகம் வாழும்!” என்னும் நோக்கத்தையும் முன்வைத்து தமிழ்க் காப்புக் கழகத்தை தொடங்கினார்.
தமிழ் வகுப்புகளில் மாணவர்கள் தங்களது வருகைப் பதிவை ‘யெஸ் சார்’ Yes sir என்று ஆங்கிலத்தில் கூறிவந்ததை மாற்றி, ‘உள்ளேன் ஐயா’ என்று கூறவைத்தவர் இவரே. இதுதான் பின்னர் தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் பரவியது.
குமரி முதல் சென்னை வரை இவருக்குத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்தன. ஒரு பேராசிரியர் முனைவர் பட்டம் பெற்றமைக்காகத் தமிழ்நாடெங்கும் பாராட்டுவிழாக்கள் நடந்த நிகழ்வு இதற்கு முன்புமில்லை:பின்புமில்லை.
மு. கருணாநிதி திருவாரூரில் பள்ளி இறுதி வகுப்புப் பயின்றபோது அவரது ஆசிரியராகத் திகழ்ந்தவர். "தமக்குத் தமிழுணர்வுடன் சுயமரியாதைப் பண்பையும் ஊட்டியவர்" என்று இவரைப் பற்றித் தமது தன்வரலாற்று நூலாகிய 'நெஞ்சுக்கு நீதி'யில் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
1944-இல் இவர் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவரிடம் தமிழ் பயின்ற, இன்றைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர்களில் ஒருவராகிய தோழர் நல்லகண்ணு இவரது அஞ்சா நெஞ்சத்தையும் தமிழுணர்வையும் சிறப்பாகப் பாராட்டுகிறார். ”அன்றைய தமிழ் வகுப்புகளில் வருகைப்பதிவை ஆங்கிலத்தில் மாணவர்கள் கூறிவந்த நிலையை மாற்றி உளேன் ஐயா எனக் கூறவைத்தவரும் பிற்காலத்தில் தமிழகமெங்கும் இம்மாற்றம் ஏற்படவும் காரணமாக இருந்தவர்!” என நல்லுகண்ணு அவர்கள் கூறுகிறார்.
1944 முதல் 1947 வரை இவர் நடத்திய 'சங்க இலக்கியம்' வார இதழ் புலவருக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டுவந்த சங்க இலக்கியங்களை மக்களிடையே பரவ வழிவகுத்தது. சிறுகதை வடிவிலும் ஓரங்க நாடகங்களாகவும் சங்கப்பாடல்களை அறிமுகம் செய்த இலக்குவனாரின் முயற்சியே பின்னாளில் மு. வரதராசன், மு. கருணாநிதி ஆகியோரின் முயற்சிகளுக்கு முன்னோடி என்பது வரலாறு.
வள்ளுவர் நெறியில் வையகம் வாழ்க என்னும் குறிக்கோளோடு 'குறள்நெறி' என்னும் இதழையும், Dravidan Ferderation, Kurnlneri என்னும் இரண்டு ஆங்கில இதழ்களையும் நடத்தினார். விருதுநகரில் இருந்தபோது ’இலக்கியம்’ (மாதமிருமுறை), தஞ்சாவூரில் இருந்தபோது ’திராவிடக்கூட்டரசு’ போன்ற இதழ்களையும் நடத்தினார்
பின்னாளில் பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற பலர் சி. இலக்குவனாரிடம் தமிழ் பயின்று உள்ளார்கள். அவர்களில் சிலர்: மு. கருணாநிதி, முனைவர் கி. வேங்கடசுப்பிரமணியன், நல்லகண்ணு, முனைவர் க. காளிமுத்து, நா. காமராசன், பா.செயபிரகாசம், இன்குலாப், முனைவர் பூ. சொல்விளங்கும் பெருமாள்.
இத்தகைய பெருமைக்குரிய சி.இலக்குவனாரின் நூல்கள் பட்டியல்கள்:-
எழிலரசி அல்லது காதலின் வெற்றி (செய்யுள்) (1933) மாணவர் ஆற்றுப்படை (செய்யுள்)
துரத்தப்பட்டேன் (1952) (செய்யுள்)
தமிழிசைப் பாடல்கள் (செய்யுள்)
என் வாழ்க்கைப் போர் (ஆராய்ச்சி) (1972)
அமைச்சர் யார்? (ஆராய்ச்சி) (1949)
அம்மூவனார் (ஆராய்ச்சி)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 1 (ஆராய்ச்சி) (>1956)
எல்லோரும் இந்நாட்டு மன்னர் – பகுதி 2 (ஆராய்ச்சி) (>1956)
திருக்குறள் எளிய பொழிப்புரை (விளக்கவுரை)
தொல்காப்பிய விளக்கம் (விளக்கவுரை)
மாமூலனார் காதற் காட்சிகள் (விளக்கவுரை) (>1956) வள்ளுவர் வகுத்த அரசியல் (ஆராய்ச்சி)
வள்ளுவர் கண்ட இல்லறம் (ஆராய்ச்சி)
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (ஆராய்ச்சி)
கருமவீரர் காமராசர் (வரலாறு)
அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து (செய்யுள்)
தமிழ் கற்பிக்கும் முறை (ஆராய்ச்சி)
தொல்காப்பிய ஆராய்ச்சி (1961) (ஆராய்ச்சி)
சங்க இலக்கியச் சொல்லோவியங்கள் (1990)
Tholkappiyam in English with Critical Studies
Tamil Language (1959)
The Making of Tamil Grammar
Brief Study of Tamil words
சோழநாட்டிலுள்ள நாகை மாவட்டத்தின் திருமறைக்காட்டிற்கு அருகேயுள்ள வாய்மைமேட்டில் மு.சிங்காரவேலத்தேவருக்கும் - அ.இரத்தினம் அம்மையாருக்கும் பிறப்பெடுத்த பெருந்தமிழர் முனைவர் சி.இலக்குவனாருக்கு புகழ் வணக்கம்!
#இலக்குவனார் #அகமுடையார் #Agamudayar
(நன்றி: அகமுடையார் அரண்)

31 ஜூலை 2017

கூகிள் மேப்ஸ் - தமிழ் ஊர்ப்பெயர்கள்!



ஹிந்தியா முழுமைக்கும் ஹிந்தியை திணிக்க முயல்கின்ற வேளையில், கூகிள் மேப்ஸ் நிறுவனமானது தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப்பெயர்களை தமிழ் மொழியிலேயே கொடுத்திருப்பது மகிழ்ச்சியான விசயம் தான். இது மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும்; ஏனெனில் ஹிந்தியா முழுமைக்குமான பகுதிகளிலுள்ள ஊர்ப்பெயர்கள் அனைத்துமே ஆங்கிலம் மற்றும் அந்தெந்த வட்டார மொழியிலேயே கொடுத்திருக்கிறது கூகிள். இதற்கிடையில், மொழி வழியே உள்ள பிழைகளையும் சுட்டிக்காட்டி வேண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக எங்கள் டெல்டாவை எடுத்துக்கொண்டால், இங்குள்ள கணிசமான ஊர்ப்பெயர்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.


(எ-டு)

மணக்கரை - மன்னரை
பாலக்குறிச்சி - பலக்குறிச்சி
கச்சநகரம் (கச்சனம்) - கட்சணம்
ஆலத்தம்பாடி - அளத்தம்பாடி
கொருக்கை - கோரிக்கை
தலைஞாயிறு - தலைநயர்

இப்படி பலப் பெயர்கள் திருத்தப்பட வேண்டிருக்கிறது. இதுபோலவே மற்ற மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான ஊர்ப்பெயர்களும் பிழையோடுதான் இருக்கக்கூடும். அதையும் சரி செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

- இரா.ச. இமலாதித்தன்

#Google #GoogleMaps

24 மே 2017

பொதுவெளியில் நாம் தமிழராக இருப்போம்!


தமிழ், தமிழரென பேசும் திரு.சீமானை அந்த தமிழர்களே ஏற்கவில்லையென தமிழரல்லாத கே.டி.ராகவன் சொல்லிருக்கிறார். சினிமா இயக்குனர் என்பதுதான் திரு.சீமானின் அடையாளமென்றும் சொல்லிருக்கிறார்; பூநூல் மட்டுமே அரசியல் அடையாளமாக இருக்க வேண்டுமென நினைக்கும் பொதுபுத்தியில் செருப்பால் அடித்து, களம் காணும் திரு.சீமான் எத்தனையோ இளந்தமிழர்களை நாம்தமிழராக இயக்கி கொண்டிருக்கும் தமிழ் இயக்குனர் தான் என்பதில் எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சியே. வா, போ என பேசுவதுதான் தமிழ் கலாச்சராமாயெனவும் கே.டி.ராகவன் கேட்டிருக்கிறார். அன்பு அதிகமுள்ள உறவுமுறைகளுக்குள் வா, போ மட்டும் தான் இருக்கும். இந்த ஆண்டான் அடிமை தன்மையை உருவாக்கிய ஆரிய வந்தேறிகளின் வர்ணாசிரமம் இங்கே இல்லாமல் இருந்திருந்தால், இதே வா,போ என்ற ஒருமைதான் இம்மண்ணில் இன்றும் உயிர்ப்போடு அன்பின் அடையாளமாய் மாறியிருக்கும்.

தென் தமிழகத்திலுள்ள தன் சொந்த ஊருக்குட்பட்ட தொகுதியை விட்டுவிட்டு, வட தமிழகத்திலுள்ள மேனாள் அமைச்சர் தொகுதியில் ஒரு வோட்டுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய்கள் பட்டுவாடா செய்யப்பட்ட சூழலில், தன் மக்களிடமே பணம் வசூலித்து களம் கண்ட திரு.சீமான் தோற்றதில், அவருக்கு எந்த இழப்புமில்லை. தமிழனுக்காக போராடிய திரு.சீமானை, அந்த தமிழர்களே ஏற்றுக்கொள்ளாமல் தோற்கடித்து விட்டனர் என தொலைக்காட்சி விவாதங்களில் கண்டவனெல்லாம் பேசும் நிலைக்கு ஆளாக்கி விட்டோமேயென நினைத்து அத்தொகுதியின் வாக்களர்கள் தான் வருத்தப்பட வேண்டும்; ஏனெனில் இது அவர்களுக்கான தோல்வி. திரு.சீமான் பேச்சுக்காகவே கூட்டம் கூட ஆயிரக்கணக்கான பேர் இங்குண்டு. ஆனால் ராகவன் போன்றோர்களின் பேச்சைக்கேட்க கூட இம்மண்ணில் ஆளில்லை என்பதே எதார்த்த களநிலவரம். மாற்றுக்கருத்துகளும், விமர்சனங்களும் கூட திரு.சீமான் மீது சிலருக்கு இருக்கலாம். ஆனால் பொதுவெளியில் தமிழர் போலவே இயங்கி கொண்டிருக்கும் தமிழரல்லாதவர்களிடம் எப்போதுமே அண்ணன் சீமானை விட்டுக்கொடுக்க கூடாது; நாம் தமிழர்!

- இரா.ச. இமலாதித்தன்

02 ஏப்ரல் 2017

தமிழகத்தை ஆளப்போகும் விஷால் ரெட்டிக்கு வாழ்த்துகள்!



தமிழ் திரைத்துறைக்கு சம்பந்தப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளராக தெலுங்கரான விஷால் ரெட்டி ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டார்; இப்போது தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் விஷால் ரெட்டியே வெற்றி பெற்று தலைவராகவும் ஆகிவிட்டார். அடுத்து வழக்கம்போல தமிழர் பெயரிலோ, திராவிடர் பெயரிலோ ஒரு கட்சியை ஆரம்பித்து வருங்கால தமிழக முதலமைச்சராக வேண்டியதுதான் மிச்சமிருக்கிறது. புரட்டாசி தளபதி, புண்ணாக்கு தளபதியென ப்ளக்ஸ் பேனர் வைத்து காலில் விழுந்துகிடக்க காத்திருக்கிறது அடிமைகளின் பொதுபுத்தியை கொண்ட தமிழினம்.

தமிழர்களுக்கு தலைவனாக தமிழனுக்கு தகுதி இல்லையென்ற பெரும்பான்மை சாமானியர்கள் கருத்துருவாக்கத்தை உடைக்கவே வெள்ளையாக இருக்கிற தமிழரல்லாத அந்நியர் வேறு யாரோ சொன்னால் தான் எடுபடும் நிலை இங்குள்ளது. அதுபோலவே சண்டக்கோழி, திமிரு, மருது போன்ற தென் தமிழகம் சார்ந்த கதையில் நடித்த ஒரே காரணத்தினாலே விஷால் ரெட்டி கூட, இங்குள்ளவர்களுக்கு தெக்கத்திக்காரனாகி விடுகிறார். மேலும், மலையாளியையும், கன்னடனையும் தலைவனென தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் இந்த மாதிரியான செம்மறியாட்டு அடிமைகளை அரசாள விஷால் ரெட்டி போன்ற தெலுங்கன் தான் லாயக்கு.

வாழ்த்துகள் விஷால்!

10 மார்ச் 2017

இசுலாம் என்பது மொழியின் அடையாளமா?




எப்படி பார்த்தாலும் தாய்மொழி தமிழ்தான்; வந்தேறிய தந்தையின் மொழி தான், உருதுவாகவோ - அரபியாகவோ இருக்க முடியும். உண்மையான வரலாற்றை தெரிந்த எவனும் மதத்தை தூக்கி வைத்து கொண்டாடவே முடியாது. இந்த மாதிரியான அரை கிறுக்குகளுக்கு, ஆப் கீ பார் குரூப் தான் லாயக்கு.

25 ஆகஸ்ட் 2016

ஹிந்து எனும் போலி அடையாளம்!

அஷ்டமி - நவமி ஆகாதென்று சொல்வார்கள். ஆனால், ஆரிய நிறமான சிவந்த நிறத்தை கொண்டில்லாத கருமை நிற கண்ணன்/கிருஷ்ணன் - கோகுலாஷ்டமி என்ற அஷ்டமியிலும், கருமை நிற ராமன் - ராமநவமி என்ற நவமியிலும் அவதரித்ததாக சொல்வதிலுள்ள சூட்சமம் என்னவென்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெளிவாகிறது; அனைத்தையும் தன்வசம் படுத்தி ஏப்பமிடும் ஆக்டொபஸ் போல, ஆரியமும் காலம்காலமாக இம்மண்ணில் பலவற்றை ஏப்பமிட்டு வருகிறது.

சீதையால் கோழை என தூற்றப்பட்ட ராமனை கடவுளாக்கிய கம்பரை விட வால்மீகி நேர்மையாளர் என்பதை தெரிந்து கொள்ள கூட வடக்கத்திய மொழியறிவு தேவையாகிறது. நேர்மையற்ற முறையில் பல சூழ்ச்சிகளால் துரியோதனனை வீழ்த்திய கிருஷ்ணனுக்கும், வாலியை மறைந்திருந்து தாக்கிய ராமனுக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. தான் வாழ பிறரை கெடுப்பதுதான் இறைமொழியாயென்று சந்தேகம் எழுவதை தவிர்க்கவும் முடியவில்லை. கடவுள் போல தம் மக்கள் போற்றிய மாவலி மன்னனை, அந்தனனாய் போலி வேடம் தரித்து பிச்சை கேட்டு படுகொலை செய்த வாமனனுக்கும், கர்ணனிடம் யாசகம் கேட்டு இறப்பில்லா வரம்பெற்ற கவச குண்டலத்தை களவாடிய கிருஷ்ணனுக்கும் வித்தியாசமொன்றுமில்லை.

ஆரிய அகராதிகளில் துரோகம் தான், தர்ம புண்ணியமாக கணக்கிடப்படுகிறது. தமிழனெல்லாம் அரக்கனாக சித்தரிக்கப்படுகிறான். இந்த ஆரிய அட்டூழியங்களை ஒழிக்க வந்த 24ம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் இறப்பை தீபாவளி ஆக்கியதோடு மட்டுமில்லாமல், அவரையே நரகாசுரனாக்கி நயவஞ்சக தீயை மூட்டி குளிர் காய்வதும் இதே ஆரியம் தான். இன்னும் எவ்வளவோ இருக்கு ஆரிய சூழ்ச்சி. வேற வழியில்லை. சிக்குண்டோம், ஹிந்து, ஹிந்தியா, ஹிந்தியென... உலக மொழிக்களுக்கெல்லாம் தகப்பன் மொழியான எம் தாய்மொழி தமிழை நீஷபாஷையென சொல்லி அழிக்க காலம்காலமாய் போராடும் தேவபாஷை சமஸ்கிருதமும் இம்மண்ணில் வாழ்ந்துவிட்டு போகட்டும், துரோகத்தின் எச்சமாய்!

- இரா.ச. இமலாதித்தன்

24 ஏப்ரல் 2016

சூறையாடப்படும் தமிழ்!




அன்று, யாழ் நூலகத்தை 'சிங்களவன்' தீயிட்டி சூறையாடினான். இங்கு, திருக்குறள் மன்ற நூலகத்தை 'திராவிடன்' சூறையாடுகிறான்.
'நாம் தமிழர்' என உணராத வரை, நாம் இனவழிப்பு செய்யப்பட்டு கொண்டே இருப்போம்...

12 மார்ச் 2016

திராவிட சறுக்கல்!

-01 -

'பாளையம்' அமைத்து கொடுத்த தெலுங்கு நாயக்க விசுவாசத்தின் நீட்சிதான், இன்றைய திராவிட பாசம்! மீசையை முறுக்கி கொண்டு காலில் விழும் வேசம். த்தூ!

-02-
குறைந்த பட்சம் 'ஐ' என்பதை 'அய்' என்றோ, 'ஒள' என்பதை 'அவ்' என்றோ பயன்படுத்தாமல் இருப்போமே?!
ஐயா என்பதே சரி; அய்யா என்ற பதம் தவறு. அதுபோல ஒளவையார் என்பதே சரி; அவ்வையார் என்ற பதம் தவறு.

(ஐயனார், ஐயா, ஐக்கியம், ஐந்து...)

01 மார்ச் 2016

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் நிலை!



செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் அலுவலக முத்திரையில் கூட தமிழ் இல்லை என்பதுதான் ஹிந்தியத்தின் வெற்றி!

'மெல்ல தமிழி இனி சாகும்!' என அன்று பாரதி சொன்னதை, இன்று நினைவாக்கி கொண்டிருக்கும் ஹிந்திய பா.ஜ.க - காங்கிரஸ் போன்ற மத்திய சர்க்காருக்கு ஆழ்ந்த நன்றி! ஆரியமும் - திராவிடமும் ஹிந்தியத்தின் இரு கண்கள் போன்றது. அது இரண்டும் வளரும் வரை, தமிழ் தன் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டே வரும்.

(படம்: திரு. மறைமலை இலக்குவனார்)

02 பிப்ரவரி 2016

அகமுடையாரும் தமிழும்!


ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் அகரம் - உகரம் - மகரம் என்ற இந்த மூன்றும் அடங்கியுள்ளது.

இதே போல, சேர்வை - முதலியார் - தேவர் என்ற முப்பெரும் பட்டங்களோடு சேர்த்து பல்வேறு பட்டங்களால் அடையாளப்படும் தனிப்பெரும் தமிழ்குடியான அகமுடையார் என்பதற்குள்ளும், அகரம் - உகரம் - மகரம் அடங்கியுள்ளது.

‪#‎அகமுடையார்‬

29 டிசம்பர் 2015

சுமேரியர் என்ற தமிழர் நாகரீகம்!

சுமேரிய நாகரிகம் தமிழர்களின் நாகரிகமென்ற ஆராய்ச்சிகளை பலர் செய்து, அதற்கான ஆய்வு காணொளிகளை ஆதாரமாக வெளியிட்டுள்ளனர். சுமெரிய மொழிக்கும், தமிழ் மொழிக்கும் பல தொடர்புண்டு என பல தரவுகள் கிடைத்துள்ளன. இந்த சுமேரிய தமிழ் தொடர்பான ஆய்வு காணொளிகளை யூ ட்யூப்பில் கூட பல ஆவணமாக்க பட்டிருக்கின்றன.

தமிழில் ”சின்னையா தேவர்” என்பதை ஆங்கிலத்தில்
CHINNAYYA THEVAR, SHINNAYYA DEVAR என்று இரு மாதிரியாக எழுதலாம். இங்கே ச என்ற எழுத்தை SA, CHA என இருமுறையாக எழுதினால் ஒலியளவு ஏறத்தாழ ஒன்றாகத்தான் இருக்கும். Thevar - Devar என எப்படி முதலெழுத்து THE , DE மாறினாலும் தே என்ற ஒலியோடு தேவர் என்ற ஒரே ஒலியைத்தான் நமக்கு தருகிறது.

A - Y
B - P
C - S
D - T
E - I

இப்படியாக இரு எழுத்துகள் மாறினாலும் ஒலியொன்று தான் என்று பல உதாரணங்களை சொல்லலாம். அப்படி பார்த்தால், SUMERIAN என்ற இந்த நாகரீகத்தை குமரியன் நாகரிகம் எனவும் சொல்லலாமே.

SUMERIAN - CUMERIAN - KUMARIAN

- இரா.ச.இமலாதித்தன்

18 செப்டம்பர் 2015

முதல் ஹிந்தி எதிர்ப்பு, பாம்பன் சுவாமிகளுடையது!

இந்தியை முதன் முதலில் எதிர்த்தவர் 'தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார்
சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். இந்த ஆண்டில் தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 50ஆம் ஆண்டு விழாவும் தொடங்க உள்ளது. 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.

இந்த உண்மைகளை மூடிமறைத்து இந்தி எதிர்ப்பு உணர்வை முதன் முதலில் தோற்றுவித்தவர் ஈ.வெ.ரா.பெரியார் என்றும், அவரே சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 7.3.1926இல் தனது குடியரசு இதழில், "தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் ரகசியமும்" என்ற தலைப்பில் கட்டுரை தீட்டினார் என்றும் வரலாறு எழுதுவோர் ஆராய்ச்சி செய்யாது நுனிப்புல் மேய்வோராய் எழுதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.
பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:
பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.
(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

எனவே, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோர் இனியாவது ஈ.வெ.ரா.பெரியாருக்கு முன்னரே இந்தி எதிர்ப்புக்கான விதை ஊன்றிய பாம்பன் அடிகளாரை இந்தி எதிர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

(தகவல்: மு.வலவன் எழுதிய "முருகனைப் பாடிய மூவர்" நூலிலிருந்து.)
நன்றி: Kathir Nilavan

28 மே 2015

எதையுமே தலைகீழாக செய்யும் அரசாங்கம்?!

மாஸ்ன்னு ஆங்கிலத்துல படத்துக்கு பேரை வச்சுட்டு, கடைசி நேரத்துல தமிழ் மொழியில வைத்தால் வரிவிலக்கு கிடைக்குமேன்னு மாசு என்கிற மாசிலாமணின்னு மாத்திக்கிறதெல்லாம் இங்க மட்டும் தான் நடக்கும். ஏற்கனவே மாஸ் என்ற பெயரை அனைவரது மனதிலும் பதிய வைத்து விட்டு, இப்போது மாசுன்னு மாத்தினால் எல்லாம் சரியாகிடுமா என்ன? இந்த திரைப்படத்து தலைப்புல தான் தமிழ்மொழி வாழுதா என்ன? முதலில் இந்த வரிவிலக்கு கண்றாவியையெல்லாம் எடுத்து தொலைங்கய்யா... பள்ளிக்கூடங்களில் வளர்க்க வக்கில்லாமல், திரைப்பட தலைப்புகளில் வளர்க்கிறார்களாம் தமிழை?!


 ஆரம்பத்தில்,  ”மாஸ்”

 பிறகு வரிவிலக்குக்காக...  “மாசு என்கிற மாசிலாமணி”

15 மார்ச் 2015

தமிழும் மோடியும்!

உலகெங்கும் "தமிழர்கள்" என்ற அடையாளத்தை மொழியால் அடையாளப்படுத்தி கொண்டிருக்கும், ஈழ மண்ணின் பழம்பெருநகரமான ஆசியாவின் மிகப்பெரிய தமிழ் நூலகம் இருந்த யாழ்பாணத்தில் ஹிந்தியில் பேசிய மோடி, இலன்கையின் சிங்கள நாடாளுமன்றத்தில் மட்டும் ஏன் ஆங்கிலத்தில் பேசினார்? ஹிந்திக்காரய்ங்க யாழ்பாணத்துலயா பானிபூரி விக்கிறாய்ங்க? தமிழன் கிட்ட ஓட்டு கேட்க சிங்கள இனவெறியனான மகிந்த ராஜபக்சாவே எழுதி வைத்து தமிழில் பேசினான். குறைந்தபட்சம், சிங்களவனிடம் பேசியது போலவே, தமிழனிடமும் உலகின் பொது இணைப்பு மொழியான ஆங்கிலத்திலேயே பேசி இருக்கலாமே. இதை கேட்டால், மோடியின் தாய்மொழியே குஜராத்தி தானே? அவர் தன் தாய்நாட்டின் மொழியாக தானே ஹிந்தியை பேசினார்ன்னு யாராவது வக்கனையா ஜால்ரா அடிப்பாங்க. ஹிந்தி மட்டும் தான் இந்தியாவின் தேசிய மொழியா என்ன? தமிழும் தான் அதில் அடக்கம். உலகில் பலருக்கும் வெவ்வேறு மொழிகள் தாய் மொழியாக இருக்கலாம். ஆனால், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழ் மொழிதான் தகப்பன் மொழி. மோடியோ, காவியோ எந்த கும்பலும் சமகிருதத்தை வைத்து தமிழை அழித்து விட முடியாது. ஆயிரம் ஹிந்து கோவில்களை இடித்து தரை மட்டமாக்கிய பெளத்த சிங்கள பயங்கரவாதிகளிடம், விடுதலைபுலிகளை பயங்கரவாதிகளென சொல்லி, அவர்களை அழித்ததை பற்றியெல்லாம் பெருமையாக பேசி வந்திருக்கலாம். இந்த தமிழ்நாட்டிலும் அப்படியொரு பயங்கரவாதம் ஏற்படாது என்பதற்கு யார் உத்திரவாதம் தருவார்கள்? எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லியே தீரும்.

30 ஜனவரி 2015

தமிழன் ஹிந்துவா?

தைப்பூசம் அன்னைக்கு இந்தியாவெங்கும் சேயோன் திருமுருகனின் ஊர்வலம் நடைபெற இந்துத்துவா அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா? குறைந்த பட்சம் ஊர்வலம் எடுக்கச்சொல்லி குரலாவது கொடுக்குமா? நம்ம தாய்மொழி தமிழை பேசின முப்பாட்டான் முருகனுக்கு ஊர்வலம் எடுக்க வக்கில்ல. ஆனால், உடலிலுள்ள நாபிக்கமலத்தை உருவகப்படுத்திய கதாப்பாத்திரமான விநாயகருக்கு இந்தியா முழுக்க ஊர்வலம் எடுக்குறாய்ங்க. அந்த ஊர்வலத்துல ஏற்படும் கலவரத்துல அடிச்சிக்கிட்டு போலிஸ்கிட்ட மாட்டி கேஸ் ஃபைல் ஆவுறதெல்லாம் பார்பனர் அல்லாதவன் தான் என்பதையும், இங்கே எந்த தமிழனும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல.

தமிழுக்கு சமமான மொழியென்று சமகிரத மொழியை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொண்ட பிறகும், உலகின் மூத்த செம்மொழியான தமிழை விட சமகிருத மொழிதான் உலகின் மூத்த மொழியென்று எப்படியாவது நிறுவினால் தான் ஹிந்துத்துவா ஆட்களின் வெறி அடங்குமென நினைக்கிறேன். மேலும், சமகிருதத்தை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் தான் ஆரிய தாகம் அடங்கும் போலிருக்கிறது.