30 ஜனவரி 2015

தமிழன் ஹிந்துவா?

தைப்பூசம் அன்னைக்கு இந்தியாவெங்கும் சேயோன் திருமுருகனின் ஊர்வலம் நடைபெற இந்துத்துவா அமைப்புகள் நடவடிக்கை எடுக்குமா? குறைந்த பட்சம் ஊர்வலம் எடுக்கச்சொல்லி குரலாவது கொடுக்குமா? நம்ம தாய்மொழி தமிழை பேசின முப்பாட்டான் முருகனுக்கு ஊர்வலம் எடுக்க வக்கில்ல. ஆனால், உடலிலுள்ள நாபிக்கமலத்தை உருவகப்படுத்திய கதாப்பாத்திரமான விநாயகருக்கு இந்தியா முழுக்க ஊர்வலம் எடுக்குறாய்ங்க. அந்த ஊர்வலத்துல ஏற்படும் கலவரத்துல அடிச்சிக்கிட்டு போலிஸ்கிட்ட மாட்டி கேஸ் ஃபைல் ஆவுறதெல்லாம் பார்பனர் அல்லாதவன் தான் என்பதையும், இங்கே எந்த தமிழனும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியல.

தமிழுக்கு சமமான மொழியென்று சமகிரத மொழியை பெரும்பாலான தமிழர்கள் ஏற்றுக்கொண்ட பிறகும், உலகின் மூத்த செம்மொழியான தமிழை விட சமகிருத மொழிதான் உலகின் மூத்த மொழியென்று எப்படியாவது நிறுவினால் தான் ஹிந்துத்துவா ஆட்களின் வெறி அடங்குமென நினைக்கிறேன். மேலும், சமகிருதத்தை ஹிந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் தான் ஆரிய தாகம் அடங்கும் போலிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக