12 ஜனவரி 2015

கோபிநாத் என்ற ஜூனியர் மேஜர் சுந்தர் ராஜன்!

ஜனவரி 12ம் தேதி நாகப்பட்டினத்திலுள்ள தனியார் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்று பேசிய கோபிநாத்தின் பேருரையை லோக்கல் கேபிள் சேனல்ல தொடர்ச்சியா போட்டுக்கிட்டே இருக்காய்ங்க. அப்படி என்னதான் நம்மாளு பேசினாரு பார்த்தா, மேஜர் சுந்தர்ராஜனே தோத்து போற அளவுக்கு மொதல்ல ஆங்கிலத்திலும் அடுத்து தமிழிலும் என வரிக்கு வரி மொழிமாற்றம் செய்து இப்படியே பேசிக்கிட்டு இருந்தாப்ள. ”நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகை”ன்னு எங்க ஊரை பத்தி பெருமையா சொல்லுவாங்க. ஆனால் Gopinath அவர்களின் மேஜர் சுந்தர்ராஜன் சாயலில் அமைந்த அந்த பேச்சை சகிக்க முடியல, இனியாது மாத்திக்கிங்கண்ணே! கோபிநாத் என்ற ஜூனியர் மேஜர் சுந்தர் ராஜனாக மாறிவிட வேண்டாம்ண்ணே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக