09 ஜனவரி 2015

ஆண்ட பரம்பரை!

இனியும் இந்த ’ஆண்ட பரம்பரை’ போன்ற வெற்று பெருமை பேச்சுகள் எடுபடாது. ஒழுக்கமா இரு, ஓரளவுக்கு படி, நிறையா சம்பாரி, முடிஞ்சா உன் ஆண்ட பரம்பரையிலேயே வறுமையில் வாடும் பத்து பசங்களுக்கான படிப்பு செலவை நீ பண்ணு. அது போதும், உன் பெருமையை உன் சந்ததி பேச. என்னைக்கோ, எவனோ ஆண்டதுக்கு நீ ஏன் இன்னைக்கு பெருமை பேசுற? இன்னைக்கு தமிழ்நாட்டோட முதலமைச்சரே நீ சொல்ற அதே ஆண்ட பரம்பரை தான். அதுனால நீ போய் ஓ.பி.எஸ் கிட்ட உரிமையா எதாச்சும் கேட்டு வாங்க முடியுமா? ஆண்ட பரம்பரைக்கு அடையாளமா மாத்தி வச்சு அரசியல் பண்ற பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு கூட அக்டோபர் 30 அன்னைக்கு தடையில்லாம போக முடியல. இதுல இந்த ஆண்ட பரம்பரை என்ற வீண்பெருமை எதுக்கு? ஆண்டபரம்பரை மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மத்த சாதி சனத்தோட அனுசரணை இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. எதார்த்தம் இது தான். எல்லாரையுமே சக மனுசனா பாரு. காலம் போக போக எல்லாம் மாறும். இப்போவே அரசு அலுவலங்களில் பெரிய பதவியில் இருப்பது அனைவரும் ஆண்டபரம்பரை இல்லையே. ஆனால், ஆண்டபரம்பரைன்னு சொல்லிக்கிற எல்லாரும் அந்த அரசு அலுவலர்களை ஏதோவொரு சந்தர்பத்தில் சாரு சாருன்னு கெஞ்சிக்கிட்டு தானே கிடக்க வேண்டிருக்கு. மொதல்ல நீ ஆள்றதுக்கான தகுதியை வளர்த்துக்க. அதுக்கப்பறமா இந்த ஆண்டபரம்பரை கோஷம் போடலாம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக