30 ஜனவரி 2015

காந்தி என்ன கடவுளா?


 
காந்தி என்ன கடவுளா? தேசத்தந்தைன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு? தகவல் அறியும் உரிமை சட்டத்துல கேட்டத்துக்கே ஒரு மண்ணும் இல்லைன்னு சொல்லிட்டாய்ங்க. அப்பறம் என்ன மண்ணுக்கு வர்ணாசிரம எண்ணங்களை மனம் முழுக்க வைத்திருந்த காந்தியை கொண்டாட வேண்டும்? 1938ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜி சுபாஸ் சந்திரபோஸை எதிர்த்து, தன்னுடைய ஆதரவு வேட்பாளராக பட்டாபி சீதாராமையாவை காந்தி போட்டியிட வைத்தார். பெரும்பான்மை பலத்தோடு நேதாஜி வெற்றி பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமலும், தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமலும் உண்ணாவிரதம் இருந்த காந்தி, எப்படி மகாத்மாவாக இருக்க முடியும்? காந்தியின் மனபிறழ்வுக்காகவே தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார் நேதாஜி என்பது வரலாறு. மேலும் தன்னுடைய கடைசி காலம் வரையிலும் பெண்களின் அரவணைப்பிலேயே சுற்றி திரிந்த குஜராத்தியான காந்தி, சாதாராண ஆத்மா தான்! அவரது இறப்புக்கெல்லாம் இப்போது போலியாக நீலிக்கண்ணீர் வடிப்பதெல்லாம் வேதனையான விசயம். பிறப்பால் வைசியராக இருந்தாலும் காந்தியும் ஒரு பார்பான சித்தாந்தவாதி, காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவும் ஒரு பார்பானவாதி. அந்த இருவருக்காக, கருப்பு சட்டை போராளி(?)களெல்லாம், பார்பன சித்தாந்தவாதி காந்திக்கு ஆதரவாக, பார்பன கோட்சேவின் படத்தை எரிப்பது தான் உச்சக்கட்ட காமெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக