02 பிப்ரவரி 2015

தை பூச திருநாள்!

வாடிய பயிரை கண்டபோதல்லாம் வள்ளலார் வாடினார். தைப்பூச திருநாளான இன்னைக்கு நிலைமையே வேற, வாடி போன பயிரை கூட பார்க்க முடியல. விளை நிலங்களையெல்லாம், விலை நிலங்களா ஆக்கிட்டாங்க.

ஜோதிடப்படி விசாக நட்சத்திரத்திற்கான விலங்கு: புலி. மேலும், விசாக நட்சத்திரத்திற்கு உரியவரான எம்பெருமான் திருமுருகனுக்கான ஆதித்தமிழரின் வழிபாட்டு முறையில் காந்தள் மலர் (கார்த்திகை பூ) தான் முதலிடம் பிடித்திருந்தது. இந்த இரண்டுமே விடுதலை புலிகளுக்கு நெருக்கானவை.

விசாக நட்சத்திரத்தின் மொத்தமுள்ள் நான்கு பாதங்களில் முதல் மூன்று பாதங்கள் துலாம் ராசியிலும், மீதமுள்ள நான்காம் பாதம் விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது. ஜாதக்கப்படி என்னோட நட்சத்திரம் கேட்டை. அதுல பாதம் நான்கு. ஒருவேளை எம்பெருமான் திருமுருகனின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் பாதமானது நான்காம் பாதமாக இருக்குமானால், நானும் அவர் ராசி தான். விருச்சிகம்! தமிழ்தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனும் விருச்சிக ராசி தான். எப்படியெல்லாம் பெருமை பட்டுக்க வேண்டிருக்கு.


என் காதலன்
அவன் மாயவன்
பகலவன் சேயவன்
எம் தாயவன்
மன தூயவன்
தமிழ் ஆண்டவன்
யாரவன்
விசாகன் வேலவன்!
சேயோன் போற்றி!
மயிலோன் போற்றி!
சேவற்கொடியான் போற்றி!
வேலேந்தியோன் போற்றி!
செந்தமிழோன் போற்றி!
வெற்றிகொண்டான் போற்றி!


வெற்றி வேல்! வீர வேல்!

உறவுகள் அனைவருக்கும் தைப்பூசத்திருநாள் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக