24 பிப்ரவரி 2015

அம்மாவின் பிறந்த நாள் தெரியுமா?

தன்னை பெத்த அம்மாவோட பொறந்தாளு என்னைக்குன்னு தெரியாதவய்ங்க தான், இன்னைக்கு யாருக்கு அம்மான்னே தெரியாத ஒருத்தருக்காக ஊரு முழுக்க அம்மா தாயேன்னு ராப்பிச்சை எடுக்குற மாதிரி ப்ளக்ஸ் அடிச்சு வச்சிருக்காய்ங்க. பத்து மாசம் வயித்துல சுமந்தவள கண்டபடி அடிச்சு உதைச்சு அவளே, இவளே, நாயே, பேயேன்னு சகட்டுமேனிக்கு பேசுறவனுங்கயெல்லாம், பதவிக்காகவும், பணத்துக்காகவும், ஓசியில சம்பாரிக்கிறதுக்காகவும் வாயுல தேனுறுற மாதிரி புகழ்ந்து ப்ளக்ஸ்ல அடைமொழி கொடுத்து இருக்காய்ங்க. இவிய்ங்கல்ல முக்காவாசி பேரு பெத்த தாயை புகழ வேணாம்; குறைந்த பட்சம் மரியாதையா கூட நடத்த வக்கில்லாதவய்ங்களா தான் நெசத்துல இருக்காய்ங்க. காசுக்காக கண்டவங்க காலை நக்கும் இவிய்ங்க கிட்ட இருந்து வேற என்னத்த எதிர்பார்க்க முடியும்? முதுகெலும்பில்லா முட்டாள்களுக்கு திராவிடம் தான் போக்கிடம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக