10 பிப்ரவரி 2015

துடைப்பத்திற்கு வாழ்த்துகள்!

பாரத தலைநகரத்தின் தலையெழுத்து போர் வாளில்லாமல் கெஜ்ரிவால் என்ற தனிமனிதனால் திருத்தி எழுதப்பட்டுள்ளது. அதிகார பலம், ஆளும் பலம், ஆட்பலம், முக்கியமாக வாக்குக்கு பணம் கொடுத்து ஓட்டுரிமையை விலை பேசும் தந்திரம் போன்ற அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளையெல்லாம் தூள்தூளாக்கிய சாமானிய மக்களின் வெற்றியாகவே இதை பார்க்கின்றேன். இந்நாட்டிற்கான நல்லதொரு மாற்றம் ஏற்பட இது மீண்டுமொரு தொடக்கமாக இருக்கட்டும். வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக