அம்பேத்கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பேத்கார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல் 2017

பீம்ராவ் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்!



"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக்கப்பட்ட மனோன்மணீயம் நூலிலுள்ள நீக்கப்பட்ட பாடல் வரி இது. வழக்கொழிந்த ஆரியம் என்ற உண்மையை சொன்னதற்கே அவ்வரி தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இப்படி கோலோச்சிக்கொண்டிருந்த அப்போதைய ஆரிய பார்ப்பனீய அரசியல் சூழலில் கூட, "நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கவலை. அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பது அல்ல!" என அழுத்தம் திருத்தமாக சொல்லி தனது கொள்கையிலிருந்து கடைசிவரை மாறாமல் அரசியலில் பயணித்து இன்றளவும் உயிர்ப்போடு அடையாளப்பட்டு கொண்டிருக்கும் பிராமணரல்லாத பீமராவ் அம்பேத்கர் அவர்களுக்கு பிராமணரல்லாதவனாய் புகழ் வணக்கம்!

14 ஏப்ரல் 2016

அம்பேத்கர் ஜெயந்தி!



சாதிய - அரசியல் - சமூக காரணங்கள் பல பின்புலமாக இருந்தாலும் கூட, பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இந்தியாவெங்கும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே தலைவரின் சிலையாக அம்பேத்கார் இருக்கிறாரென்பதை உணர்கையிலேயே அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடியும். எந்த அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்க முடியாத பெருந்தலைவராக சமகாலத்திலும் விளங்கி வரும், 'அம்பேத்கர் ஜெயந்தி' வாழ்த்துகள்!