நிவாரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிவாரணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

மானை கொன்னா என்ன? மனுசனை கொன்னா என்ன? எல்லா கானும் நிதியை வைத்து நீதியை தான் தினமும் கொல்றாங்க.

‪#‎சல்மான்கான்‬

#

போர்குடிகளுக்கு அடையாளமான முறுக்கிய மீசையின் அழகும் கம்பீரமும், என் பாட்டன் பாரதிக்கும் கச்சிதமாய் பொருந்தியது என்பதுதான் தமிழின் வீரமிகு அடையாளம்! (டிச 11)

#

ஆக்கிரமிப்புகளை குடிசைகளிலிருந்து அகற்ற துவங்கி இருக்கிறீர்கள். துணிச்சலான விசயம். ஆனால், இதை குடிசைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிகாரர்களின் கல்லூரிகளையும் அகற்றுங்கள்! கூடவே, உங்களது ஆணைப்படியோ அல்லது உங்களது உத்தரவுப்படியோ குளம் குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்களையும் அப்புறப்படுத்துங்கள்.

செய்வீர்களா?!

#



குத்திக்காட்டுற நேரமா இது?

ஒட்டுமொத்த ஹிந்துக்களுமா, முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போன்னு சொன்னாங்க? முஸ்லீம் ஃப்ரெண்ட் இல்லாத ஹிந்துவோ, ஹிந்து ஃப்ரெண்ட் இல்லாத முஸ்லீமோ இங்கே கிடையாது. மாமன் மச்சான்களாகத்தான் நாங்கள் (ஹிந்து + முஸ்லீம்) பழகி வருகிறோம். இதெல்லாம் தேவையில்லாத ஒப்பீடு.

#

தமுமுக, TNTJ, PFI போன்ற இசுலாமிய அமைப்புகளின் அற்பணிப்பில் சற்றும் குறைந்தது இல்லை, RSS போன்ற ஹிந்து அமைப்புகளின் சேவையும்! ஹிந்து அமைப்புகளின் பெயர்களை சொன்னால் தமிழ் தேசியமோ, திராவிடமோ, கம்யூனிசமோ, பெரியாரியமோ, நடுநிலையோ கேள்விக்கு உள்ளாக்கப்படுமென்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள்.
‪#‎ChennaiRains‬

#

ஊருக்கே சோறு போட்ட சோழநாட்டுக்கும் சோதனையா? எங்க டெல்டா பகுதிகளில் தொடர்ச்சியாக கொட்டி தீர்க்கிறது மழை!

#

கேமரா மேன்கள், பாதுகாப்பு வீரர்கள், படைசூழ ஆட்கள், புதுப்புது உடைகள் என்ற எதுவுமே இல்லாமல் வெள்ள நிவாரண உதவிகளை செய்துவரும் இளைஞர்களின் சேவைக்கு பெயர் தான் உண்மையான 'நமக்கு நாமே'!

18 நவம்பர் 2015

தமிழக வெள்ள நிவாரணமாக பா.ஜ.க. ஒரு கோடி!



தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பிற்காக, நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாயை பா.ஜ.க.தலைமை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பின்புலமாக இருந்த, தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவர் திரு. கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி சொல்வதும் நம் கடமையாகிறது.

16 நவம்பர் 2015

வாழ்த்துகள் அகமுடையாரே!






சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பட்டறைபாக்கத்தில், தனியொருவனாக மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, எவ்வித எதிர்பார்ப்புமின்றி, தன் பணி சுமைகளுக்கிடையே தன் சொந்த செலவில் சாப்பாட்டு பொட்டலங்களை தயார் செய்து, நேரடியாக களத்திற்கும் சென்று அன்னதானம் செய்யும் அன்பு சகோதரர். மருது பரணி அகமுடையார் அவர்களின் செயல்களால் பெருமை கொள்கிறோம்.

பெயருக்கு பின்னால் சாதியை போட்டு கொள்வது பெருமையுமல்ல, அவமானமும் அல்ல. ஆனால், நம் செயல்களால் அந்த சாதி பெயருக்கு புகழையும் மரியாதையும் தேடித்தருவதில் தான், உண்மையான பெருமையே அடங்கி இருக்கிறது. வாழ்த்துகள் அகமுடையாரே!

- இரா.ச.இமலாதித்தன்

12 நவம்பர் 2015

நிவாரணம் கேட்டால் அடி உதையா?

சிதம்பரம் அருகே, வெள்ளக்காடான கிராமத்தை சேர்ந்த வீடுகளை இழந்த மக்கள் தன்னெழுச்சியாக நிவாரண பணிகளை விரைவாக செய்யச்சொல்லி ஜனநாயக நாட்டில் சாலை மறியல் மூலமாக அடையாள அறவழி போரட்டத்தை நடத்திய, முதியோர் - பெண்கள் - சிறியோரென அனைவரையும் காவல்துறையினர் கேவலமான முறையில் பேசி, அடித்து விரட்டி ஓடவிடும் காட்சிகளை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது.


மக்களின் வரி பணத்தில் சம்பளம் வாங்கும் மக்கள் சேவை செய்யும், மக்கள் தொகையில் நூறில் ஒரு பங்கு கூட இல்லாத காவல்துறையின் அடக்குமுறை தட்டி கேட்க யாருமே இல்லை. ஏனெனில், காவல்துறை அமைச்சத்தை கையில் வைத்தல்துள்ள தலைமையே, 144 தடையையும், 110 விதியையும் நம்பித்தானே ஆட்சி நடத்தும் அவலம் இங்கே அரங்கேறி கொண்டிருக்கிறது.

- இரா.ச.இமலாதித்தன்