கவுண்டமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவுண்டமணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 அக்டோபர் 2015

நடிகர் சங்க தேர்தலுக்கு பிறகு...

கமல் - ரஜினிக்கு மாற்றாக தெளிவாக, "நடிகர் சங்கம்ன்னு இருந்தாலே போதும்!"ன்னு சொன்ன கவுண்டமணியும், "தன்னை யாரோ அடிச்சிட்டாங்க!"ன்னு 'கோ' பட அஜ்மல் மாதிரி மீடியாவுக்கு முன்பாக நடித்த விஷாலுக்கு மாற்றாக, "எந்த அசம்பாவிதமும் நடக்கல"ன்னு நேர்மையாக சொன்ன அதே அணியின் கருணாஸூம், திரையின் முன்பு காமெடியன்களாக தோன்றினாலும், திரைக்கு வெளியே பண்பட்ட பேச்சை வெளிப்படுத்தினார்கள்.

'தேவர் மகன்' நாசர், 'சண்டக்கோழி' விஷால், 'பருத்தி வீரன்' கார்த்தி, 'பசும்பொன்' பொன் வண்ணன் என திரையில் தேவர்களாக நடித்தவர்களோடு, கருணாஸ் யென்ற தேவரும் பஞ்ச பாண்டவர்கள் அணி சார்பாக வெற்றி!

22 செப்டம்பர் 2015

ஸ்டாலினின் அரசியல் பிம்பம், சமூக தளங்களால் உடைபடும் நேரம்!

மு.க.ஸ்டாலினுக்கென்று இதுநாள் வரை இருந்து வந்த மாபெரும் அரசியல் தலைமைத்துவத்தை, கடந்த சிலநாட்களாக வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என ஒப்பிட்டு கலாய்ப்பதை பார்க்கையில் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. அவர் சொந்த செலவிலேயே சூனியம் வைத்து கொண்டது போல ஓர் உணர்வு. எல்லாரும் தீணியாக்கப்படும் சோசியல் மீடியாவை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்பதை அடுத்த தலைமுறை அரசியல் தலைமைகள் இனியாவது புரிந்து செயல்பட வேண்டும்.