சூப்பர் ஸ்டார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூப்பர் ஸ்டார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஜூன் 2017

சூப்பர் ஸ்டார் விஜய்!






ஏறுதழுவும் காளைகள் பின்புலத்தில் மட்டுமில்லாது படத்தின் தலைப்பிலும் பாய்ந்து கொண்டிருக்கிறது. தந்தையின் உதவியால் 'இளைய தளபதி' விஜயாக சினிமாவுக்குள் வந்தாலும், அதன் பின்னால் தன் உழைப்பால், தன் திறமையால் மட்டுமே உண்மையான 'சூப்பர் ஸ்டார்' விஜயாக வளர்ந்து நின்றாலும், 'தமிழன்' விஜய் என்பது தான் அவருக்கு மிக கச்சிதமாக பொருந்துகிறது. ஹேட்டர்ஸ்களால் எத்தனை விதமான தரக்குறைவான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும், அனைத்தையுமே தனக்கான படிகற்களாக நினைத்து மேலேழுந்து நிற்கும் திரு.விஜயின் திரைவருகைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, எத்தனையோ பிரபலமான அப்பாக்கள் தன் மகனை, சினிமாத்துறையில் நிலை நிறுத்த இன்றளவும் மெனக்கெடுகின்றனர்; ஆனால், யாரும் அவர்களது இலக்கை எட்டியதாக தெரியவில்லை. எத்தனை பெரிய ஜாம்பவான்களால் ஆரம்ப கால வாய்ப்பை மட்டுமே தன் மகனுக்கு உருவாக்கி கொடுக்க முடியும். அதை தொடர்ந்து தன்னை நிரந்தரமாக்க, நிச்சயமாக சுய திறமையும், கடின உழைப்பும், உண்மையான ஈடுபாடும் வேண்டும். அந்த வகையில் 'எங்கள் சூப்பர் ஸ்டார்' விஜய்க்கு நிகர் என்றைக்கும் அவர் மட்டுமே!

(கண்ணாடி பார்வையில் மெர்சல் என்பது விஜய் போல தெரியும். ஆக்கம்: பிரகாஷ் காளீஸ்வரன்)


எங்கள் நாகப்பட்டினத்தில் முதன்முறையாக மாபெரும் அரசியல் அடையாள மாநாடு போட்டு, 'எங்கள் தமிழ் மீனவனை சிங்களவன் தாக்கினால், இங்குள்ள தமிழர்களெல்லாம் ஒன்றிணைந்து இலங்கையையே உலக வரைபடத்திலிருந்து நீக்குவோம்' என உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் சிங்கள இனவாத அரசால் அவரது படம் திரையிடப்படாமல் முடக்கப்பட்டும் கூட, தன் படத்திற்கு தமிழர்களின் அடையாளமான 'புலி' என பெயர் வைக்கும் போதும், 'அகதியான மக்களுக்கு தனி நாடு வேண்டும்' என 'வில்லு' பட காலத்திலேயே பாடல் வரிகளில் தன் விருப்பத்தை சேர்க்கும் போதும், சமீபத்தில் BehindWoods கொடுத்த 'People's most favorite and most popular actor' என்ற விருதை பெற்றுக்கொண்ட நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை பற்றி பேசாமல் விவசாயிகளுக்காக, 'வல்லரசு ஆவதை பிறகு பார்க்கலாம்; விவசாயிகளுக்கான நல்லரசாக இருங்கள்' என அரசாளும் அரசாங்கங்களை எதிர்த்து உணர்வோடு குரல் கொடுக்கும் போதும் தமிழனாக விஜய் பலரது மனங்களுக்கு நெருக்கமாகி விடுவதை எந்தவொரு ஹேட்டர்ஸாலும் தடுத்துவிட முடியாது.

எங்கள் சகோதரர் இயக்குனர் அட்லியின் மெர்சல் திரைப்படம், மெர்சலான வெற்றிபெற்று ஹாட்ரிக் அடிக்க வாழ்த்துகள்! வருங்காலத்தில் நிச்சயமொரு நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியை அலங்கரிக்க போகும், எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு 43ம் அகவை நல் வாழ்த்துகள்!

  ரசிகனாக,
- இரா.ச. இமலாதித்தன்

#IamWaiting 4 #Mersal

22 மார்ச் 2017

இரு செய்திகளுக்கு பின்னாலுள்ள அரசியல்!

இருகுலத்தோர் அரசியல்:

சின்னத்தை மட்டுமல்ல; கட்சிப்பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி, கள்ளர் அணி; மறவர் அணியென இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த போலியான முக்குலத்து சாதி அரசியலில், எப்போதுமே அகமுடையார் தனி என்ற நிலையும் மீண்டும் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக, கள்ளராலும் - மறவராலும் கட்டமைக்கப்பட்ட போலி சாதி கூட்டமைப்பான 'முக்குலத்தோர் அரசியல்' கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகிறது. இத்தனை காலம், மக்கள்தொகைக்கேற்ற உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட அகமுடையார் பேரினம், இனி மெல்ல மெல்ல தன் இருப்பை நிலை நிறுத்துமென நம்பிக்கையும் துளிர்விடுகிறது. மகிழ்ச்சி!

கூத்தாடி அரசியல்:

தமிழரல்லாத ரஜினி, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கூட இருந்துவிட்டு போகட்டும். காலாவதியான அந்த பட்டத்தைப்பற்றியெல்லாம் கவலையேதுமில்லை. ஆனால், அரசியலில் அவர் செல்லாக்காசாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைக்கு போனால் என்ன? போகவிட்டால் என்ன? ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவன அதிபரின் படமான 2.0 வில் நடிப்பதற்காக வாங்கிய கோடி கணக்கான பணத்திற்கான விசுவாசம் அது. அப்படி சுயலாபத்திற்காகவும், தன் படத்தினை புலம்பெயர் தமிழர்களிடம் விளம்பரப்படுத்தவும் தான், ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்பட்டது. அதை எதிர்க்க திருமாவளவன், வைகோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த எதிர்ப்பை வைத்து பாஜகவினர் சிலர் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க மெனக்கெடுகின்றனர். ஆர்.கே.நகரில் ரஜினியே நின்றாலும் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்பதுதான் களநிலவரம். அரசியலில் என்றைக்கோ அடையாளமற்று போன ரஜினிக்காக தொலைக்காட்சிகள் அரசியல் விவாதம் செய்வது ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது.

09 மார்ச் 2017

ஓர் அரசியல்வாதி உருவாகின்றான்!






கொஞ்சம் கூட கூச்சம், வெட்கம் இதெல்லாம் இருக்காதா? தன்னெழுச்சியாக இளையோர் கையிலெடுத்து வெற்றிக்கண்ட ஜல்லிக்கட்டு போரட்டத்தை, தன்னுடைய சுயலாபத்திற்காகவும், புகழ் போதைக்காகவும் சுய இன்பம் செய்து கொள்வது போல கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கும்மியடித்து விட்டால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' ஆகிவிட முடியுமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை போல, 'ஒரு கோடி ரூபாய் தரேன்!' என வாயாலேயே வடை சுட்டுவிட்டால் மக்கள் எல்லாரும் நம்பி விடுவார்களா என்ன? சூப்பர் ஸ்டாரென அடையாளப்படும் ரஜினியையே மக்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஏற்று கொண்டுள்ளனரா என்பதே கேள்விக்குறி தான். தமிழ்நாட்டை பொறுத்த வரை மக்கள் ஏற்று கொண்டுவிட்டால், மாட்டு சாணம் கூட (பிடி பிள்ளையார்) கடவுள் தான். வக்கிருந்தால், சென்னைக்காரன் என பில்டப் கொடுக்கும் லாரன்ஸ், ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மக்கள் சூப்பர் ஸ்டாரென தன்னை நிரூபிக்கட்டும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மானங்கெட்ட பொழப்பு எதற்கு? த்தூ...

01 ஜூன் 2015

சூப்பர் ஸ்டார் ரஜினியெனும் ஒரு முதியவரின் கலைச்சேவை!?

சூப்பர் ஸ்டார் லிஸ்ட்லிருந்து தூக்கியெறியப்பட்ட ரஜினியின் இந்த படமும் ஃப்ளாப் ஆனாதான் ஹிரோவாவே நடிக்கிறதை(?) விட்டு தொலைப்பாருன்னு நினைக்கிறேன். திரும்பவும் ஐஸ்வர்யாராய் தான் ஹிரோயினா வேணும்ன்னு அவர் ஆசைப்படலாம். ஆனால் பாவம் ரஞ்சித்! இப்போது தான் நல்ல இயக்குனரென்று திரையுலகில் அடையாளப்பட்டிருக்கிறார். உடனே, ஓடுற குதிரை மேல பந்தயத்தை கட்டிவிட்டார் இந்த ரஜினி. ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழுக்கும் தமிழர்க்கும் இதுவரையிலும் ஒரு மயிரையும் செய்யாத ரஜினி இந்த படத்துல வாங்குற கோடி கணக்கான கருப்பு வெள்ளை சம்பளத்தை மட்டும் ஏழை எளிய மக்களுக்காக கொடுக்க போறார்? பஞ்ச் டயலாக், நூறு பேரை அடித்து நொறுக்கும் ஆக்‌ஷன் சீக்வன்ஸ், பேத்தி வயசுல உள்ள பொண்ணோட டூயட், ஐம்பது பேரோட சேர்ந்து ஆடாமாலே ஓர் ஓபனிங் சாங், இறக்குமதி செய்யப்பட்ட ஆறடி உயர வில்லன் என மொக்கையான கமர்சியல் மசாலாவை உருவாக்கி, ரஞ்சித்தின் கதைக்களத்தையே குளறுபடி செய்ய சொல்லிருப்பார் ரஜினி. முருகா! போன ரஜினி படத்துக்கு கேட்டதை தான் இந்த தடவையும் கேட்குறேன், இந்த படமும் அட்டு ப்ளாக் ஆகிடணும்! ஏதாவது பார்த்து பண்ணி விடு.
பவர் ஸ்டாருக்கு கூடத்தான் வயசானாலும் படம் 365 நாள் ஓடுது. அதுக்காக அவரை ரஜினியோட கம்பேர் பண்ண முடியுமா? சீனிவாசன் கோவிச்சிக்க மாட்டாரா என்ன? சூப்பர் ஸ்டார்ங்கிற மட்டும் என்ன மொத்தமா ரஜினிக்கு குத்தகைக்கு விட்டுருக்கா என்ன? மக்கள் திலகம் முதல்வர் ஆனார். நடிகர் திலகம் ஒரு கட்சியின் தலைவரானர். ஒன்னுக்குமே வழியில்லையே இவர்கிட்ட. அப்பறமென்ன பட்டம் மட்டும் வாழுதாக்கும்.

வயசான காலத்துல கலைத்துறையை தனியாளா சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிடே ஏன் தூக்கி சுமக்கணும்.தகுதியான ஆளுங்க வந்த பிறகும் அடம்பிடிக்கலாமா? பட்டத்தை கொடுத்தது மக்கள்.அதை பிடுங்கவும், அதை இன்னொருவருக்கு மாற்றி கொடுப்பதும் மக்களிடம் தான் உள்ளது.நான் மட்டும்தான்னு அடம்பிடிக்க கூடாது

- இரா.ச.இமலாதித்தன்