22 மார்ச் 2017

இரு செய்திகளுக்கு பின்னாலுள்ள அரசியல்!

இருகுலத்தோர் அரசியல்:

சின்னத்தை மட்டுமல்ல; கட்சிப்பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி, கள்ளர் அணி; மறவர் அணியென இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த போலியான முக்குலத்து சாதி அரசியலில், எப்போதுமே அகமுடையார் தனி என்ற நிலையும் மீண்டும் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக, கள்ளராலும் - மறவராலும் கட்டமைக்கப்பட்ட போலி சாதி கூட்டமைப்பான 'முக்குலத்தோர் அரசியல்' கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகிறது. இத்தனை காலம், மக்கள்தொகைக்கேற்ற உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட அகமுடையார் பேரினம், இனி மெல்ல மெல்ல தன் இருப்பை நிலை நிறுத்துமென நம்பிக்கையும் துளிர்விடுகிறது. மகிழ்ச்சி!

கூத்தாடி அரசியல்:

தமிழரல்லாத ரஜினி, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கூட இருந்துவிட்டு போகட்டும். காலாவதியான அந்த பட்டத்தைப்பற்றியெல்லாம் கவலையேதுமில்லை. ஆனால், அரசியலில் அவர் செல்லாக்காசாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைக்கு போனால் என்ன? போகவிட்டால் என்ன? ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவன அதிபரின் படமான 2.0 வில் நடிப்பதற்காக வாங்கிய கோடி கணக்கான பணத்திற்கான விசுவாசம் அது. அப்படி சுயலாபத்திற்காகவும், தன் படத்தினை புலம்பெயர் தமிழர்களிடம் விளம்பரப்படுத்தவும் தான், ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்பட்டது. அதை எதிர்க்க திருமாவளவன், வைகோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த எதிர்ப்பை வைத்து பாஜகவினர் சிலர் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க மெனக்கெடுகின்றனர். ஆர்.கே.நகரில் ரஜினியே நின்றாலும் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்பதுதான் களநிலவரம். அரசியலில் என்றைக்கோ அடையாளமற்று போன ரஜினிக்காக தொலைக்காட்சிகள் அரசியல் விவாதம் செய்வது ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக