ட்வீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ட்வீட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மே 2015

ட்வீட் எடு கொண்டாடு! -2

ஆர்.கே.நகரில் யாரை நிறுத்துவதென மூத்த நிர்வாகிகளுடன் கருணாநிதி தீவிர ஆலோசனை

அப்படியே ஓட்டுக்கு எவ்ளோ பணம் கொடுக்கணும்ன்னு ஆலோசனை பண்ணுங்க

-o0o-

2002ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதியான இதே நாளில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார்.
13ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

-o0o-

மத்தவன் பண்றதெல்லாம் தப்புன்னு குறை சொல்லிக்கிட்டு தன்னை யோக்கியன் மாதிரியே எவன் காட்டிக்கிறானோ, அவன் தான் அயோக்கியன்!
- இமலாதித்தவியல்
-o0o-  

சோழதேசம் - நேதாஜி - பிரபாகரன் என கொடியாய் உலகெல்லாம் பறக்கும் ”புலி”யை பிடிக்காதவர் யாருமெண்டோ? கூடவே விஜய்யையும் பிடிக்கும்.
‪#‎WeLovePuli‬

-o0o-  

இங்கே கண்ணகிகளும் உண்டு், மாதவிகளும் உண்டு. கோவலன்கள் தான் குழம்பி நிற்க வேண்டிருக்கு!

-o0o-  

21 மே 1991ல் இழந்த ஒரேவோர் உயிருக்காக, 18 மே 2009ல் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை கொன்றொழிக்க காரணமாக இருந்த ராஜீவ் நினைவுநாள் இன்று.

-o0o-  

வாழ்க்கையை போலவே பெரும்பாலான காதல்களும் உணரும் முன்பாகவே முடிந்து விடுகிறது, வேறொருவரோடு திருமணமாய்...

-o0o-  


வீட்ல கூட்டி பெருக்கி, துணி துவைச்சு, ஏனம் கழுவி, சமையல் செய்றதுக்கு பயந்துகிட்டு புத்தகத்தை புரட்டினதுனால தான்!
‪#‎WhyGirlsGotHighMarks‬

-o0o-  

இந்த பொண்ணுங்களோட வாழ்க்கை டிகிரி படிச்சு கல்யாணம் பண்ணிக்கிறதோட முடிஞ்சிடுது. ஆனா பசங்க வாழ்க்கை கல்யாணத்துக்கு அப்பறம் தான் ஆரம்பிக்குது.

-o0o-  

பரீட்சையில அதிக மார்க் வாங்கினவங்க மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிக்க முடியும்ன்னு இருந்திருந்தா, இந்நேரம் மத்த 90% பேரு தோத்துருக்கணுமே?!

-o0o-  

பத்தாவதுல ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அறிவியலில் நூத்துக்கு நூறு வாங்கிருக்காங்க. வருங்கால சயின்டிஸ்ட்களுக்கு வாழ்த்துகள்!

-o0o-  

”ஒருபக்கம் நாங்கயெல்லாம் பத்தாவது படிக்கும் போது”ன்னு ப்ளாஷ்பேக் ஆரம்பிப்பாங்க. மறுபக்கம் ”டாக்டராகி சேவை செய்வேன்”னு டிவில பொய் சொல்வாங்க.

-o0o-  

டிவிட்டர் ட்ரெண்ட் கூட மோடிமோடின்னு தான் கூவுது. 11பேர் கொண்ட குழுவை பக்காவா வேலை செய்ய சொல்லிட்டு, இவரு உலக மேப்பை பார்த்துகிட்டு இருக்காரு 

-o0o-  

எங்க ஏரியாவுல மக்குபையன் ஒருத்தன் 450மார்க் எடுத்திருக்கான்.அவன் பேப்பரை திருத்தின வாத்தியாரு பேரு குமாரசாமின்னு நினைக்கிறேன்.வாழ்த்துகள்டே! 

-o0o-  

”தம்பி நல்லா படிப்பாப்ள” ன்னு ஊரு உலகமே சொன்னுச்சு.நானும் 450க்கு மேல மார்க் வரும்ன்னு சும்மா அடிச்சு விட்டேன்.ஆனா வாங்குனது என்னவோ 348 தான்

-o0o-  

கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்கமினிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் இங்கெல்லாம் ஜூலை மாதம் நம்ம உலகம் சுற்றும் வாலிபன் மோடி பயணிக்கிறார்

-o0o-  


நிருபரிடம் ”நீங்கள் முதலில் அம்மா என்று சொல்லுங்கள். அவரது பெயரை சொல்லாதீர்கள்”என பார்த்திபன் MP கூறியுள்ளார்.
மரியாதையை கேட்டு வாங்க கூடாது!

-o0o-

வாழும் வேலுநாச்சியாரே! மருதுபாண்டியரின் பேத்தியே! ராஜராஜசோழனின் வாரிசே! ன்னு, இனிமே ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்க அடிமைங்க கிளம்பிடுவாய்ங்க.

-o0o-

மணிரத்னம் படத்துல வர வசனம் போல, சாட் பண்றது கூட நல்லாதான் இருக்கு? என்ன பண்ற? யாரு? ஏன்? அதுதான் எப்படி? எதுக்கு? ஹ்ம்ம். ஓ! சரி அப்படியா?

-o0o-

வாழ்வதற்கென தனி கோட்பாடுகள் ஏதுமில்லை, அதன் போக்கிலேயே சமரசத்தோடு நீயாக இருந்து விடு!
#இமலாதித்தவியல்

-o0o-

"மக்களின் தலைவி"ன்னு அவிங்களே புதுசா ஆரம்பிச்சு விட்ருக்காய்ங்க. அப்போ இனிமே "மக்களின் முதல்வர்" ஓபிஎஸ் தான் போல!

-o0o-

நீ நான் அன்பு குழப்பம்.நான் நீ அன்பு தேடல்.எது நான்?எது நீ?புரிதல் மாயம்.காதல் கொஞ்சும், கடவுள் கொஞ்சம்!மனமே சிவனேன்னு இரு. நீயொரு குரங்கு.

 -o0o-

சாதியை வைத்து கண்ட ஜென்மங்களுக்கு ஜால்ரா அடிப்பவரின் மீசை மயிரானது, மறைவிட மயிருக்கு சமமானது. ஒட்டுமொத்த சாதிக்கும் எவனுமிங்கே தலைவனில்லை.

-o0o- 

உங்க அரசியல் போதைக்கு சாதியென்ற ஊறுகாயை ஏன்டா சின்ன பசங்கள விட்டு வாங்க வைக்கிறீங்க? காறி துப்பி ஏறி மிதிப்பாய்ங்க. வெயிட் பண்ணுங்க.

-o0o-

பவளவிழா காணும் ’காமெடி கிங்’ கவுண்டமணி அண்ணனுக்கு இனிய வாழ்த்துகள்!அடுத்த தலைமுறையும் கவுண்டர் அட்டாக்கை மறக்காது.
‪#‎HappybirthdayGoundamani‬

-o0o- 

பல தலைமுறைகளோடும், நான்கு தமிழக முதலமைச்சர்களோடும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமாக்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்து, எங்க டெல்டாவான மன்னார்குடியில் பிறந்த வீரத்தமிழச்சியான பத்மஸ்ரீ மனோரமா ஆச்சிக்கு இனிய வாழ்த்துகள்!
‪#‎HappyBirthdayManoramaAchi‬

-o0o-  

ஆர்கே நகர் தொகுதியில ஆளுங்கட்சியை எதிர்த்து யாருமே போட்டி போடலைன்னா,ஐநூறு ஆயிரமெல்லாம் கிடைக்காம போய்டுமேன்னு வாக்களர்கள்தான் கவலைப்படுவாங்க

-o0o-  


கருணாநிதிக்கு அன்பழகன்;ஜெயலலிதாவுக்கு பன்னீர்செல்வம். இது மாதிரி சோனியாவுக்கு மன்மோகன்சிங்!
பினாமி அறிக்கையை மன்மோகனும் வெளியிட்டு விட்டார்

-o0o-

ஆரம்பத்துல நம்ம சாட் பண்ற பொண்ணுகிட்ட வேற யாரும் சாட் பண்றாங்கன்னு தெரியும்போது மனசு கஷ்டமாத்தான் இருக்கும்.பொறுமையா இருந்தா அதுவே பழகிடும்

-o0o-

ஈழப்படுகொலைகளை கண்டு குதூகலித்த இசுலாமிய தமிழர்களும், பர்மா படுகொலைகளை கண்டு கூக்குரலிடும் இந்து தமிழர்களும் இங்கே மட்டும் தான் உண்டு.

-o0o-

பள்ளிக்கூடங்களில் வளர்க்க வக்கில்லாமல், திரைப்பட தலைப்புகளில் வளர்க்கிறார்களாம் தமிழை?! தமிழனோட நிலைமை எப்பவுமே மானங்கெட்ட பொழப்பு தான்...

-o0o-

டிச25 வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் கம்யூகாரய்ங்க, சாதிகட்சின்னு சொல்லிட்டு திருமாவை உள்ளே நுழையவிட மாட்டாய்ங்க.இப்போ ரெண்டும் கூட்டணியாம்

-o0o-

நேத்து சரியான மழை. முந்தாநாள் ரமணனோட ஆள்காட்டி விரலை தொட்டு இருப்பாய்ங்களோ?

-o0o-

ட்வீட் எடு கொண்டாடு! -1

இந்த தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த வெற்றி என்று நான் கருதவில்லை.
- ஜெயலலிதா

ஆமா ஆமா, பா.ஜ.க.வுக்கும் கிடைத்த வெற்றி

 -o0o-

பொய் சொல்லியே வாதடுற வக்கிலுங்க தானே, பின்னாடி ஜட்ஜ் ஆகுறாங்க. ஜட்ஜ் ஆன உடனே ஞானோதயமா கிடைச்சிட போகுது?

 -o0o-

பொய்யாக எதையாவது கிறுக்கி கவிதையென நம்ப வைத்து விட முடியும் உலகில், பொய்யாக நடிப்பது தான் சிரமமாய் இருக்கிறது.
- இமலாதித்தவியல்


 -o0o-


இந்த தீர்ப்பை நினைக்கும் போது, பிரபு பாரதி குமார் போன்றோர்களும் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

 -o0o-

உங்க அம்மா விடுதலை ஆயாச்சு. தற்கொலை செய்து கொண்ட (பா)ஆவிகளே உங்களது ஆன்மா இனியாவது சாந்தியடையட்டும்!

 -o0o-

நீதியரசர் குமாரசாமியும் ஒருநாள் தன் சுயசரிதையை எழுதாமலா போய் விடுவார்? அப்போது தெரியும் மிச்ச கதை.

 -o0o-

குற்றம் சாட்டப்பட்டவர்களிலேயே சாந்தன் முருகன் பேரறிவாளன் மட்டும் தான் குற்றவாளிகள் போல.

  -o0o-

இனிமே சட்டம் படிக்கும் போதே, கூட்டல் கழித்தல் கணக்கெல்லாம் தெரியுதான்னு செக் பண்ணிட்டு வக்கில் ஆக்குங்கய்யா!

 -o0o-
 
 +2ல நாலு சப்ஜெக்ட்டுக்கு வாத்தியாரே இல்ல. ட்யூசன்ல குலாம் சார்கிட்ட படிச்சு தான் கணக்குல 120 மார்க் வாங்கினேன். ஜட்ஜ் ஆகிருக்கலாமோ?

  -o0o-

ஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி கொடுப்பான். ஆனால் கடைசியில ‪#‎கணக்கு‬ பண்ணி கை விட்ருவான்!

 -o0o-

ஒருங்கிணைந்த தஞ்சை தரணி பெற்றெடுத்த ஆன்மீக தலைமகனுக்கு நாகப்பட்டினத்து காரனாய் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! ‪#‎HappyBirthdaySriSri‬

 -o0o-

அக்னிநட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, இயற்கையென்ற கடவுளுக்கு தான் என்னவொரு கருணை? இந்த வாரம் முழுக்க மழை!

 -o0o-

வாழ்க்கை என்னவென்று உணரும் தருவாயில் உறவெல்லாம் ஒவ்வொரு மூலைக்கு சென்றுவிட, தனித்து நிற்கிறோம் நம் தாய் தந்தையை இளமையில் உணராததை போலவே!

 -o0o-

ஊர் ஊராக சுற்றி திரிபவர்களை நாடோடின்னும் சொல்லலாம், நரேந்திரமோடின்னும் சொல்லலாம்!

 -o0o-

ஈழத்தை வைச்சு ஒருபக்கம் அரசியல் ப்ரோக்கர்கள் புகழ் தேடிக்கிறாங்க. மறுபக்கம் மீடியாக்கள் டீஆர்பியை கூட்டிக்கிறாங்க. நல்ல பொழப்பு.

 -o0o-

நாயாக தெருவோரம் கூட நிம்மதியாக படுக்க முடியாது சல்மான்கான்கள் நிறைந்த ஊர் இது. நீதி கூட நேர்மையாக கிடைக்காது குமாரசாமிக்கள் நிறைந்த உலகமிது!

 -o0o-

ஆட்சியில இருந்தாலும், இல்லாவிட்டாலும் இத்தனை வருசங்களா தொடர்ச்சியா மீடியாவுக்கு தீனி போடுற அந்த திறமைக்காகவே பிடிக்கும் ‪#‎WhyILikeMK‬

 -o0o-

சமகிருதம், ஹீப்ரு, அரபி மொழிகள் மட்டுமே தெரிந்த கடவுள்கள், இன்றுவரையுமா தன் மொழியறிவை வளர்த்து கொள்ளாமல் இருக்கின்றன? ஓ மை காட்! சோ சேட் 

 -o0o-

மழையில் நனைந்து வருகையில் உரிமையோட தலை துவட்ட, தாய் பாசமின்றி இன்னொரு கை கிடைக்குமென்றால் அதுவும் சொர்க்கம் தான்! ‪#‎IamWaiting‬

 -o0o-

டிவியை ஆஃப் பண்ணினாலும் கூட கல்யாண் ஜூவலர்ஸ் பிரபுவும், அமிர்தா காலேஜ் ராதிகாவும் வந்துவிட்டு போகிறார்கள். டிவி பக்கம் போகவே பயமாயிருக்கு!

 -o0o-

இன்று எகிப்து நாட்டின் முன்னாள் அதிபருக்கு தூக்கு தண்டனையென தீர்ப்பு. இங்கே மாநில முதல்வருக்கு கூட நேர்மையான தீர்ப்பை வழங்க முடியல.

 -o0o-

உன் துக்கத்தை இன்னொருவராலும் உணர முடியுமானால் அதுதான் நிகரற்ற அன்பு! இது காதல் - நட்பு - உறவு என அனைத்துக்கும் பொருந்தும்.

 -o0o-

இறைவனின் திருப்பெயரால் தமிழ்தேசியம் பேசும் போராளி இயக்கங்களை ஆதரிக்கின்ற அனைத்து தோழர்களுக்கும், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை பிடிக்கும்.

  -o0o-

எல்லாம் தெரிஞ்சி வச்சுக்கணும். ஆனால், எதுவுமே தெரியாத மாதிரி கேட்டுக்கணும். அப்போதான் லவ்வும் / லைஃப்பும் நல்லாருக்கும்!

  -o0o-

இனப்படுகொலை மே 18 மட்டுமல்ல. அது காலங்காலமாய் திட்டமிட்டே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் தன் சுயத்தை இழக்கவில்லை எம் தமிழினம்!

  -o0o-

அழகாய் உள்ள பெண்களை விட, நொடிப்பொழுதில் அழத்தெரிந்த பெண்களே அதிர்ஷ்டசாலிகள்! பாவப்பட்ட ஜென்மங்களான சக ஆண்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

  -o0o-

ஓர் உயரிய நோக்கோடு முத்துகுமரனும், செங்கொடியும் உயிர்தியாகம் செய்ய கையாண்ட தீக்குளிப்பை கூட ரத்தத்தின் ரத்தங்கள் களங்கப்படுத்தி விட்டனர்.

  -o0o-

'என்ன பண்ற'ங்கிற வார்த்தை மட்டும் தெரியலைன்னா, சாட்ல எப்படி ஆரம்பிக்கிறதுன்னே தெரியாம முழிக்க வேண்டியது தான்!

  -o0o-

சாயுங்காலமானால் கையெல்லாம் நடுங்கும் குடிகாரன் போல எனக்கும் ஆகிவிடுகிறது, ஆன்லைனில் நீயில்லையென்றால்!
காலம்போன கடைசில கன்றாவியான ஃபீலிங்?!

 -o0o-

Money is Always Ultimate தான். ஆனால் அது நிலையான நிம்மதியையோ, உண்மையான அன்பையோ, எதிர்பார்ப்பில்லா உறவையோ தருவதில்லை. பயத்தை தான் கொடுக்கிறது

  -o0o-

”காசு அதிகமா கொடுத்து வாங்குற போன்ல, பட்டன் கூட வைக்க மாட்டாறாய்ங்களே தம்பி!”ன்னு தெரிஞ்ச ஒருத்தரு ரொம்ப ஃபீல் பண்ணி கேட்டுட்டு போறாரு.
 
 -o0o-