29 ஜனவரி 2017

அமெரிக்கர் எனும் வந்தேறிகள்!

அமெரிக்கா என்ற வந்தேறிகளின் நாட்டில் அகதிகளாக யாரும் வரக்கூடாதென்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஈரான், ஈராக் போன்ற இசுலாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயரவே கூடாதென சொல்லிருப்பது முட்டாள்தனமானது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்கள் சிவப்பிந்தியர்கள் என்ற ஆதித்தமிழர்களே ஆகும். இந்த சிவப்பிந்தியர்களின் உடலமைப்பு, கலாச்சாரம், பண்பாட்டு கூறுகள், இசை, விளையாட்டு, வீரம் போன்ற பாரம்பரிய அம்சங்கள் அனைத்தும் தமிழர்களை ஒத்தே அமைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்களான அவர்களை கொன்றொழித்து, வந்தேறிகள் ஆக்கிரமித்த அமெரிக்காவை விட்டு டொனால்ட் ட்ரம்ப் போன்றோர் தான் வெளியேற வேண்டும். ஏனெனில், ட்ரம்பின் தந்தையே வந்தேறி தான்.

26 ஜனவரி 2017

புறக்கணிக்கப்பட்ட தமிழர்களின் குடியரசு நாள், ஜனவரி 26?



'சிலம்பு செல்வர்' ம.பொ.சி அவர்களால் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாட்டு கொடி. தமிழகம் முழுக்க இக்கொடியை பறக்கவிட வேண்டுமென்ற அவரது ஆசை கடைசிவரை நிறைவேறாமலே போனது. காலம் கனியும் போது, இனி இந்த தமிழர்கொடி எம் தமிழ் மண்ணில் பறக்கும். இது போல, இப்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி ஏதாவது இருக்கிறதா? பெரும்பான்மையான தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான கொடி இருக்கிறதா? திராவிட நாடென சொல்லும் ஆந்திரா/கர்நாடாகாவுக்கு கூட தனிக்கொடி இருக்கிறது; அவர்களின் போராட்டக்களங்களில், கட்சிக்கொடிகளை தவிர்த்து விட்டு, இந்த கொடியைத்தான் பயன்படுத்துகிறார்கள். நாம் ஏன் இன்னமும் கருப்பு கொடியை மட்டும் தூக்கி கொண்டிருக்க வேண்டும்? மங்களகரமாக மண்ணியல் சார்ந்த வண்ணங்களோடு ஒரு கொடியை உருவாக்கலாமே?!


குடிமக்களின் உணர்வுகளையும், அவர்களது பண்பாட்டு கூறுகளையும் மதிக்காமல், ஒரு மொழி, ஓர் இனம் என்ற ஏகாதிபத்தியத்தை திணிக்கும் ஹிந்திய கொள்கைக்கு, குடியரசு நாள் ஒரு கேடா? வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இம்மண்ணின் பெருமைக்குரிய அடையாளம். அதையெல்லாம் மறந்து, எங்களது கலாச்சாரத்தின் கருவறையை சீர்குலைக்கும் ஹிந்தியத்தின், குடியரசு நாளை தமிழ் பெருங்குடியை சேர்ந்தவனாக வெறுக்கிறேன். இதுநாள் வரை இம்மண்ணை அடக்கி ஆளுகின்ற ஆட்சியாளர்களால், இந்த ஜனவரி 26 தேதி என்பது வருடத்தில் மற்றுமொரு நாளே தவிர வேறந்த சிறப்பும் இந்நாளுக்கு இல்லாமலே போனது. ஆனாலும், உங்களின் விருப்பு வெறுப்பை யார் மீதும் திணிக்காமல், மகிழ்வோடு கொண்டாடுங்கள். என்னை பொறுத்தவரை இந்நாளை கருப்பு நாளாகவே அனுசரிக்கிறேன்!

- இரா.ச. இமலாதித்தன்

18 ஜனவரி 2017

ஜல்லிக்கட்டுக்கு பின்புலமுள்ள ஓட்டு அரசியல்!



பீட்டா ஒழிகவென போராட்டம் செய்வதை விட, ஹிந்திய உச்சநீதிமன்றமும், தமிழர்களை அடிமையென நினைத்து தடியடி நடத்தும் காவல்துறையும் ஒழிகவென போரட்டம் செய்தால் தான் இனி விடிவு பிறக்கும். ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் உள்ள பிஜேபி / காங்கிரஸ் காரர்களெல்லாம் உணர்வுள்ளவர்களாக இருக்கும் போது, இங்குள்ள உணர்வற்ற, ஒன்றுக்கும் வக்கற்ற அரசியல்வாதிகளால் தான் இப்படியானது தமிழர் நிலைமை. காளை மாடுகள் வளர்ப்பவர்களை மிரட்டி சிறை பிடிக்கும் காவல்துறையை முதலில் சிறை பிடிக்க வேண்டும். சட்டமும் காவலும் யாருக்காக? மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களுக்கு எதிராக செயல்படுவது, பீட்டா போன்ற தேவடியாத்தனம் செய்யும் அமைப்புகள் மட்டுமல்ல; ஹிந்திய நாட்டின் உச்சநீதிமன்றமும், காக்கி சட்டை அணிந்த அடியாட்கள் அமைப்புகளும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டமும், ஆட்சியும் மக்களுக்கு தான் என்பதை ஹிந்திய ஆட்சியாளர்களுக்கு எப்போது புரிய வைக்க போகிறோம்? வரலாற்ற மானங்கெட்ட வந்தேறிகளின் கட்டுப்பாட்டில் அரசியல் இருப்பதால் தானே, நாம் இந்தளவுக்கு நவீனமுறையில் அடிமைப்பட்டு கிடக்கிறோம். தடையை மட்டுமல்ல; எதிரிகளின் மண்டையையும் உடைக்காத வரை நம்மால் எதையும் மாற்ற முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத திராவிட மாநிலங்களான கேரளா, கர்நாடாகா, ஆந்திரா ஆட்சியையெல்லாம் கலைத்து விட்டார்களா என்ன? என்ற கேள்வியை (சோ கால்டு) தமிழர் ஆட்சி நடத்தும் ஓ.பி.எஸ். என்ற தமிழரிடம் யாராவது சுட்டிக்காட்டுங்கள். தன் சொந்த மாவட்டங்களெல்லாம் கலவர களங்களாகவும், கலச்சாரா விழாவே கருப்புநாளாக மாறிவிட்டதை கூட அறியாமல், கலைவாணர் அரங்கில் பாடல்களை பாடிக்கொண்டிருந்த மாநில முதல்வரை நினைக்கையில் ரொம்பவே பெருமையாக இருக்கிறது.

அடங்க மறு; அத்து மீறு;
திமிரி எழு; திருப்பி அடி!

தமிழ் தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரன் பின்பற்றிய மருதுபாண்டியர்களின் கொரில்லா யுக்தியுடன் கூடிய நேதாஜியின் தீவிரவாத வழியில் இனி பயணித்தால் மட்டுமே, மிச்சமிருக்கும் தமிழர்களின் பண்பாட்டை மீட்டெடுக்க முடியும்.

ஐரோப்பிய, அரபு நாடுகள் உள்பட உலக நாடுகளிலெல்லாம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் புரட்சி வெடித்ததையும், அதனால் பல நாடுகளில் ஆட்சி கவிழ்ந்ததையும் கடந்த சில வருடங்களாக கவனித்து வந்திருந்த ஹிந்திய அதிகார வர்க்கம், அந்த மாதிரியான எழுச்சியெல்லாம் ஹிந்திய கூட்டாட்சிக்குள் வர வாய்ப்பில்லையென்று இறுமாப்போடு நினைத்திருக்க கூடும். ஆனால், இன்று மாட்டுக்காக, தமிழ்நாட்டில் பெரும் புரட்சி வெடித்திருக்கிறது. ”பொங்கல் முடிஞ்சிருச்சு; அதுனால அடுத்த பொழப்பை பார்க்க தமிழனெல்லாம் போய்டுவாங்க!”ன்னு ஹிந்திய அதிகார மையத்தை சேர்ந்தவர்களெல்லாம் நினைத்து கொண்டிருந்த வேளையில், இந்த மாதிரியான ஒரு ட்விஸ்டை கனவில் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்!
ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பிஜேபி அரசாங்கம் ஒன்றும் செய்ய முடியாது. - மோடி

அந்த உச்சநீதிமன்றமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று சொன்னபோது, நதி நீர் இணைப்பையெல்லாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதென இதே மோடி சொன்னது மட்டும் எப்படி? தனக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்திய மக்களை மறந்துவிட்டு, ஒவ்வொரு நாடாக நாடோடி போல திரியும் மோடியும், மிக்சர் தின்று கொண்டு சின்னம்மா காலில் விழுந்து கிடக்கும் பன்னீர்செல்வமும் வாழ்க!

ஹிந்திய அரசியல்:

ஹிந்தியாவின் பெரும்பான்மை மதமென அறியப்படும் ஹிந்துத்வா சார்புள்ள பாஜக தேசபக்தர்களின் ஆட்சி நடக்கிறது. என்னதான் முட்டி மோதினாலும், மோடி இனி பிரதமராக ஆக முடியாது. பாஜக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றவும் முடியாது; தனித்து ஆட்சியமைக்கவும் முடியாது. கிடைத்த அரிய வாய்ப்பின் மீது, மண்ணை அள்ளி போட்டுக்கொண்டு விட்டார்கள். ஏற்கனவே செல்லாக்காசு பிரச்சனையில் சொல்லணாத்துயரத்தில் மக்களெல்லாம் இருக்கிறார்கள். அந்த கோபத்தின் வெளிப்பாட்டை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கே சின்னம்மா என ஜெயலலிதாவிற்கு மாற்றாக, சசிகலாவின் காலடியிலுள்ள செருப்பை நக்கி பிழைக்கும் தமிழர் ஆட்சி நடக்கிறது.


இதுவரைக்கும் வேண்டுமானால் நாங்கள் அரசியல் அநாதையாக இருந்திருக்கலாம். காட்சி மாறும்; ஆட்சியும் மாறும். அன்று, இப்போதைக்கு அதிகார போதையில் இருக்கும் மானங்கெட்ட அரசியல்வாதிகள் அனைவரும் அதிகார பதவிகளெல்லாம் இழந்தவிட்டு, எவ்வித அடையாளமுமற்று அரசியல் அநாதையாக்கப்படுவார்கள்.

ஜல்லிக்கட்டு தொடர்பான சில கேள்விகளும், சந்தேகங்களும்?!

ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பை ஒரு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் சொல்லக்கூடாதென்ற ஹிந்திய அரசாங்கத்தின் நகர்வு என்பது தமிழர்களின் போரட்டத்தை மழுங்கடிக்கும் செயல்;

ஏன் ஒருவேளை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஜல்லிக்கட்டுக்கு எதிராகவே இருக்குமென்பது ஹிந்திய சர்க்காருக்கு முன்கூட்டியே தெரிந்து விட்டதா? ஒருவேளை ஒரு வாரம் கழித்து உச்சநீதிமன்றம் சொல்லும் தீர்ப்பானது, ஜல்லிக்கட்டு எதிராக வந்தால், அதற்குள்ளாக தமிழர்களின் எழுச்சி சிதறடிக்கப்பட்டு விடுமென கணக்கு போடுகிறதா மோடியின் ஹிந்திய சர்க்கார்? போரட்டத்தை கைவிடும்படி ஓ.பி.எஸ். கோரிக்கை வைத்து, இளைஞர்களின் எழுச்சியை நீர்த்து போக செய்ய முயல்வது ஏன்? ஆட்சியை காப்பாற்றி கொள்ளவா?

மிருக வதை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டியது, ஹிந்திய சர்க்கார் தானே தவிர மாநில அரசு அல்ல; எனவே காட்சி பட்டியலில் இருக்கின்ற காளையை நீக்க வேண்டியது ஹிந்திய அரசு தான்; ஆனால், இதை தமிழக அரசிடம் கொடுத்து விட்டு தப்பிக்க பார்க்கும் மோடி சர்க்காரின் நோக்கம் தான் என்ன?

ஏற்கனவே 2009ம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டத்தை இயற்றிய தமிழக அரசின் சட்டத்தை செல்லாது என்று சொல்லி தடை போட்டது கூட இதே உச்சநீதிமன்றம் தானே? அப்படியெனில் இன்றோ/நாளையோ கொண்டு வருகின்ற அவசர சட்டத்தையும் ஹிந்திய உச்சநீதிமன்றம் தடை போடத்தானே செய்யும்?

எனவே, தமிழர்கள் போரட்டத்தை கை விட்டு விடாமல்,

01. காட்சிப்பட்டியலிலுள்ள காளையை ஹிந்திய அரசு உடனே நீக்க வேண்டும்; அதற்காக மிருகவதை சட்டத்தை திருத்தம் கொண்டு வர வேண்டும்.

02. இம்மண்ணின் பாரம்பரியத்திற்கு எதிரான கொள்கைகளை கொண்ட கார்ப்பரேட் கைக்கூலிகளான பீட்டா உள்ளிட்ட அமைப்புகளை உடனே ஹிந்தியாவில் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

03. ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக, மாநில அரசாங்கம் மட்டுமில்லாது, ஹிந்திய அரசாங்கமும் குடியரசு தலைவரின் ஒப்புதலோடு, நாடாளுமன்றத்தில் அவசர சட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.

உள்ளிட்ட முதன்மையான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்னும் வலுவாக போரட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

மெரினா ஒன்றுகூடலுக்கு பிறகான நிகழ்வுகள்:

அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் என்ற முறையில் கலந்து கொள்ளட்டும். ஆனால் அமைச்சர்கள் என்ற முறையில் எந்த கட்சிக்காரனும் எந்தவொரு ஜல்லிக்கட்டு விழாவிலும் கலந்து கொள்ள கூடாது; அங்கேயும் வந்தும் சின்னம்மா புராணம் பாடுவார்கள். ஜல்லிக்கட்டிற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து பல்வேறு வடிவங்களில் போராடும், திரு.ராஜசேகர், திரு.கார்த்திக்கேய சிவசேனாதிபதி, ஹிப்பாப் தமிழா ஆதி போன்றோர்களின் தலைமையில், அந்தெந்த ஊரை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள், ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைப்பதே சரியாக இருக்கும்.

ஆதி போன்றவர்களை கட்டுப்படுத்தியது யார்?

இது இளைஞர்களின் தன்னெழுச்சியான போராட்டம். இதை, எப்படி? எங்கே? எப்போது? முடிப்பது என்பது பற்றி களத்திலுள்ள அவர்களே முடிவு செய்யட்டும். இது தொடர்பாக வேற யாரும் அவர்களுக்கு தயவுசெய்து அறிவுரை கூற வேண்டாம். இந்த போராட்டம் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்து விட்டது. இந்த கூட்டாட்சி நாட்டிலுள்ள பல ஹிந்தியர்களுக்கு இது மறக்க முடியாத எடுத்துக்காட்டாக அமைந்தும் விட்டது. இனிமேல் இந்த வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் எப்படி முடிந்தாலும், அதனால் இளைஞர்களுக்கு எவ்வித தோல்வியும் ஏற்பட போவதில்லை. பாதையை உருவாக்கிய அவர்களே பயணத்தின் தூரத்தையும் நிர்ணயம் செய்து கொள்ளட்டும். மற்றவர்கள் மெளனமாக வேடிக்கை மட்டும் பார்த்திருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மையை நோக்கியே அமையும்.

'ஏறுதழுவுதல் எம் பண்பாட்டின் அடையாளம்; அது பழந்தமிழர் வரலாற்றின் நீட்சி' என்பதை வலியுறுத்தி, மாணவ மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரின் ஆதரவோடு இன்றும் தொடர்கிறது நாகையில் சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டத்தை இயற்றக்கோரிய களப்போராட்டம்!




போராட்டக்களத்தில் ஜெர்சி மாடுகளை தடை செய்ய வேண்டுமென சொல்வதே தவறென்று ஆதி சொல்கிறார். பாரம்பரியமிக்க நாட்டுக்காளைகளை அழித்துவிட்டு, ஜெர்சி மாடுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தானே பீட்டா போன்ற இல்லுமினாட்டி அமைப்புகளின் இலக்கு; அதை தடை செய்யென சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? அதை கூட குறையாக சொல்லும் ஆதியை, விமர்சிக்காமல் புகழவா முடியும்? கடைசியில் ஆதியும் சினிமாக்காரனாகி போனது, கொஞ்சம் வருத்தம் தான். ஆதியின் ஒரேவொரு பாட்டை வைத்துதான் இத்தனை பெரிய போராட்டம் உருவானதா என்ன? மார்ச் 31க்கு அப்பறம் போரட்டம் செய்து கொள்ள சொல்வதன் காரணம் என்ன? Ban Coke, Ban Pepsi, Ban Jersey Cow என தடை சொல்வதை ஏற்க முடியாதென சொல்ல இவர்கள் யார்?

செயலற்ற அரசு:

ஜல்லிக்கட்டு தொடர்பாக யார் வழக்கு தொடர்ந்தாலும் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் அந்த வழக்கில் தீர்ப்பு வழங்க கூடாதென உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நடவடிக்கையை ஏன் இத்தனை நாட்களாக எடுக்கவில்லை? இந்த மாதிரியான யோசனையெல்லாம், தமிழ்நாடு அரசிடம் சட்டவல்லுனர்கள் சொல்லவே இல்லையா? ஒரு சென்சிடிவான விசயத்தை பற்றிய நாடாளுமன்ற விவாதத்தின் போது, 'காஷ்மீர் ப்யூட்டிஃபுல் காஷ்மீர்...' என பாடி காட்டிய பாடிசோடாக்களை அரசு வழக்குரைஞராக வைத்திருந்தது யார் தவறு? மாற்றம் மக்களுக்கு வந்துவிட்டது; ஆனால் அது ஆட்சியாளர்களுக்கு தான் இன்னமும் வரவில்லை.

இளந்தமிழர்களின் வெற்றி:

மாணவர்களும், இளைஞர்களும் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இந்த போராட்டம் மாபெரும் வெற்றிப்பெற மற்றுமொரு காரணம் குடும்பத்தினரும், பெற்றோரும், பெண்களும் துணை நின்றதால் தான். ஒருவேளை இந்த போராட்டத்தை அமைதி வழியிலேயே முடித்திருந்தால் தமிழக மாணவர்களுக்கும் / இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் உளவியல் ரீதியாக அரசியல் போராட்டக்களத்தை முன்னெடுக்க உதவியாக இருந்திருக்கும். அரசாங்கங்கள் தவறிழைத்தால் அதை தட்டிக்கேட்கலாம்; அப்போது கண்டிப்பாக நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை விதைகள் அவர்கள் மனதில் விதைக்கப்பட்டிருக்கும். ஆனால், அந்த விதை இப்போது விதைக்கப்பட்டால், நாளை மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து நிற்கும். அப்போது இதுமாதிரியான சாதி / மத / சிறுபான்மை / பெரும்பான்மை அரசியல் செய்து பிழைப்பை ஓட்ட முடியாது என்ற உண்மையை உணர்ந்த அரசியல் நாய்கள், ஏவிய சூழ்ச்சியால் இன்று மாணவ போராட்டம் ஹிந்திய தேசிய ஊடகங்களால் கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும், மீண்டுமொரு போராட்டக்களம் இம்மண்ணில் வெடிக்கும், அடக்குமுறைக்கு எதிராக...




முதுகில் குத்தும் துரோகிகளே இனி, முன்னை விட எச்சரிக்கையாக இருங்கள். இளையோரும், இணையமும் இணைந்து விட்டார்கள்! முழு வெற்றியோ, அரைகுறை வெற்றியோ... ஆனால், அதை கொண்டாடக்கூட விடக்கூடாதென்ற அரச பயங்கரவாதத்தின் வெற்றியே இது!  ஹிந்திய கூட்டாட்சியில், எப்போதுமே தனிநாடு தமிழ்நாடு தான்! ஹிந்தியர்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிகார மையத்திற்கு அச்சத்தையும் ஏற்படுத்திய தமிழ் காளைகளுக்கு வாழ்த்துகள்!

மக்களாட்சி எனும் கேலிக்கூத்து:

எதையாவது செய்து, ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு நாளை மிகச்சிறப்பாக கொண்டாடிவிட வேண்டுமென்பது தான் ஹிந்திய ஆட்சியாளர்களின் ஒரே எண்ணம். ஜனவரி 26, ஆகஸ்ட் 15 என்ற இந்த இரு நாட்களில் மாநில முதலமைச்சரும், மாநில ஆளுநரும் ஹிந்தியக்கூட்டாட்சியின் கொடியை ஏற்றி உரையாற்றினாலே அதுதான் மக்களாட்சி என நினைக்க வைக்கும் முட்டாள்களின் தேசம் இது.




”மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சித்தான் மக்களாட்சி!” என்பதையெல்லாம் மறந்து, அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், பீட்டாக்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் என கண்டவனுக்கெல்லாம் சேவகம் செய்வதே மக்களாட்சியென நினைக்கும் ஹிந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க வக்கில்லாதவர்களே, தேசபக்தி என்ற முகமூடியில் அவதூறுகளை பரப்புகிறார்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

14 ஜனவரி 2017

பீட்டா மட்டுமா எதிரி?


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநில அரசை நிர்வகிக்கும் அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் ஆதரிக்கின்றன. தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக உள்பட அனைத்து தமிழக கட்சிகளும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றன. இப்போது யார் தான் ஜல்லிக்கட்டை எதிர்க்கிறார்கள்? இந்த கேள்விக்கான பதிலிலுள்ள உள்ளரசியலே நமக்கெல்லாம் தெரியவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

எல்லாரும் பீட்டாவை குறி வைத்து எதிர்ப்பரசியல் செய்கிறார்கள். பீட்டா என்ற ஃபீப் அமைப்பை நிரந்தரமாக தடை செய்வது தான் சரி என்றாலும் கூட, இவற்றிற்கெல்லாம் பீட்டா மட்டுமா காரணமாக இருக்க முடியும்? நிச்சயமாக இல்லை; இதுவொரு கூட்டு சதி; அந்நிய மற்றும் ஹிந்திய களவாணிகளால் அரங்கேற்றப்படும் தமிழினவழிப்புக்கான கூட்டு சதி. இந்த பீட்டா என்கிற பெயரில் உள்ளரசியல் செய்பவர்களின் பின்னணியை தேடிப்பார்த்தாலே ஓரளவுக்கு உண்மை புரிந்து கொள்ளலாம். அதுபோலவே ஹிந்தியாவிற்குள் விலங்குகள் நல ஆர்வலர்களின் அமைப்புகளின் தலைமை யாரென கவனியுங்கள். மேலும் சில உண்மைகள் புரிய வரும்.

நம்மை வைத்து அரசியல் செய்யும் அமைப்பிற்கெல்லாம் இங்குள்ள யாரையும் பகைத்து கொள்ளாத ஒரு எதிரி தேவை. அப்போது தான் போரட்டங்களாலும், எதிர்ப்புகளாலும் ஹிந்தியத்திற்கு உட்பட்ட அதிகார மையங்களை பகையாளி ஆக்காமல் அரசியல் செய்து நம்மை ஏமாற்ற முடியும் என்பது இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு பீட்டா ஒரு பகடைக்காய். நிச்சயமாக, பீட்டா போன்ற கெடுகெட்ட அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க போவதில்லை; அதே வேளையில், அதற்கு பின்புலமாக உள்ள அந்த சூத்திரதாரி கூட்டத்தினையும் தமிழர்களான நாம் அடையாளம் கண்டு, எச்சரிக்கையாக நமக்கான அரசியலை கட்டமைப்பதே, வருங்கால இளந்தமிழ் சந்ததியினருக்கு நாம் செய்யும் ஒரே உருப்படியான செயலாகவும் இருக்க முடியும்.

- இரா.ச.இமலாதித்தன்

13 ஜனவரி 2017

ரசிகனின் பார்வையில் பைரவா!

திரையில் எம்ஜிஆர், ரஜினி ஃபார்மலா தான் எனக்கு பிடிக்கும். அதே பாணியில் சமகாலத்தில் கமர்சியல் எண்டர்டெயினராக தன்னை வெளிப்படுத்தும் இளையதளபதி விஜயைத்தான் எனக்கு பிடிக்கும்; இந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையெல்லாம் விட இளைய தளபதி என்ற அடையாளமே போதுமென்று விஜயே ஒரு மேடையில் சொல்லிருக்கிறார்; ஆனாலும் அவரை சூப்பர் ஸ்டார் விஜயாகவே பார்க்க விரும்புகிறேன். இது என் தனிப்பட்ட விருப்பம். எம்ஜிஆர் மலையாளி, ரஜினி கன்னட மராத்தியர் என்ற விமர்சனம் அப்போதிலிருந்தே இங்கு உண்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு தமிழன், திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு மிக அருகிலோர் உச்சபட்ச நிலையை தொட்டிருப்பதால், விஜயை ஆதரிக்க வேண்டுமென்ற விருப்பமும் எனக்குண்டு. என்னுடைய இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பவெறுப்பு சம்பந்தபட்டது. அதைப்பற்றியெல்லாம் எப்போதும் கவலைப்பட போவதில்லை.

இப்போது பைரவா பற்றி சிலவற்றை எழுதலாமென்று நினைக்கிறேன். முதலில், எனக்கு பைரவா ரொம்பவே பிடித்திருக்கிறது. துப்பாக்கி + கத்தி + தெறி என்ற கடைசி விஜய் ஹிட்லிஸ்ட் படங்களின் பட்டியலில் இந்த படமும் சேருமென்றே நினைக்கிறேன். காமெடி, ஃபைட், டான்ஸ், குத்துப்பாட்டு, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என்ற ஒரு கமர்சியல் ஃபார்மலா படத்தில், சமூகத்தில் நடக்கின்ற சமகால பிரச்சனையை பற்றிய மெசேஜை பைரவாவில் சொல்லிருக்கும் விதம் பாராட்டுக்குரியது.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதை சுட்டிக்காட்டிய அதே வேளையில், அதே சோசியல் மீடியாவால் தான் சென்னை வெள்ளத்திலிருந்த சென்னையை மீட்க முடிந்ததென்ற உண்மையை திரையில் மிக அழுத்தமாக விஜய் சொல்லிருக்கிறார். கூடவே மீம்ஸ் உருவாக்கி தவறானவர்களை பொதுவெளிக்கு அடையாளப்படுத்த முடியுமென்பதையும் காட்சி படுத்திருக்கிறார் இயக்குனர் பரதன். திரைத்துறையில் வெற்றிப்பெற்றவர்களுக்கே அடுத்த வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கும் வேளையில், விஜய் மீண்டுமொரு வாய்ப்பை பரதனுக்கு கொடுத்ததன் பின்னணி பெருந்தன்மையுடன் கூடிய விஜயின் மனசாட்சிக்கு சம்பந்தப்பட்ட ஒன்று. கிடைத்த அந்த வாய்ப்பையும் பரதன் நேர்மையாகவே பயன்படுத்தி இருக்கிறாரென்று நினைக்கிறேன்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தால் கொல்லப்பட்ட 90க்கும் அதிகமான குழந்தைகள், தாம்பரம் பள்ளி வாகனத்தின் உள்ளேயிருந்த ஓட்டையில் விழுந்து இறந்த மாணவி, கள்ளக்குறிச்சியில் அங்கீகாரமில்லாத செவிலியர் கல்லூரியின் கிணற்றில் விழுந்து தன்னுயிரை விட்ட மூன்று மாணவிகள் என கல்வித்துறையில் நடந்த, நடக்கின்ற அவலங்களையும், அதனை கண்டு கொள்ளாத அரசு நிர்வாகத்தையும் கண்டிக்கும் சமூக அக்கறைக்காகவே இப்படத்தை க்ளாஸ் என வகைப்படுத்தலாம். டயலாக் டெலிவரி, காமெடி, ஆக்‌ஷன் சீக்வென்ஸ், டான்ஸ், ஸ்டைல் என எல்லாவற்றிலும் விஜய், இப்படத்தை மாஸ் ஆக்கிருக்கிறார். சினிமாவின் இலக்கணம் பற்றியெல்லாம் கணக்கீடு செய்யாமல் பாமர ரசிகனாக எனக்கு பைரவா பிடித்திருக்கிறது. உங்களுக்கும் கூட பிடிக்கலாம்; எந்த ரசிகனின் கண்ணாடியையும் அணியாமல் பார்த்தால் உங்களுக்கும் தனியாக வந்த இந்த பைரவாவை பிடிக்கலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

09 ஜனவரி 2017

ஹிந்திய நாட்டிற்குள் அழித்தொழிக்கப்படும் தமிழ் பண்பாடு!

தமிழர்களின் தேசியத்திருவிழாவான பொங்கல் திருநாளை, கட்டாய விடுமுறை தினத்தில் இருந்து ஹிந்திய அரசு நீக்கியுள்ளது. பல தேசிய இனங்களின் கூட்டாட்சி நாட்டில், சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி. இதற்கு மேலுமா அவமானப்படுத்த வேண்டும்? ஏற்கனவே பல அடிகளை கொடுத்தீங்க. நாங்க என்ன திருப்பி அடித்தாமோ என்ன? எங்களையே ஏன் ஜி அடிக்கிறீங்க? நாங்க ஜெயலலிதா செருப்புக்கு மாற்றாக, தீபாவின் செருப்பா? சசிகலாவின் செருப்பா? என பரபரப்பாக தேடிக்கிட்டு இருக்கும் போது, நீங்க வேற ஏன் ஜி இப்படி பண்றீங்க?

மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர்கள் அரசியல் கட்சிகள்; அதில் பி.ஜே.பி.தான் பி.ஹெச்.டி முடித்திருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு வேண்டுமென்று ஒருமித்து குரல்கொடுக்கும் போது, பொங்கல் திருநாளை கட்டாய விடுமுறையிலிருந்து நீக்குவதாக அறிவித்து இம்முறையும் மக்களை மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். நாளுக்கு நாள், 100 பேருக்கும் மேலான தமிழ்நாட்டு விவசாயிகள் வறட்சி காரணமாக செத்துக்கொண்டிருக்கிறார்கள். வர்தா புயலால் தமிழக தலைநகரமே பாதிக்கப்பட்டு வறட்சி/புயல் நிவாரணம் கேட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடகத்திற்கு வறட்சி நிவாரணமாக பல கோடிகளை ஒதுக்கி இருக்கிறது மோடி சர்க்கார்.

கன்னடத்திற்கு ஆதரவாக காவிரி ஆணையம் தேவையில்லையென சொல்லிவிட்டு, கெளதமியை சந்திக்க நேரம் ஒதுக்கிய மோடியால், தமிழ்நாட்டு விவசாயிகளையோ, எம்.பி.க்களையோ சந்திக்க நேரம் ஒதுக்க முடியாமல் போனதுதான் ஆச்சர்யம். கடைசியாக காவிரி பிரச்சனையின் போது, தனியார் பேருந்துகள், அரசு பேருந்துகள் என பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தி, தமிழ் இளைஞனை கட்டி உதைத்து, பலரது உடைமைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய கன்னட வெறியர்களை பற்றி வாய் திறக்காமல், தமிழர்கள் அத்துமீறி வன்முறை செய்கிறார்கள் என்று சொல்லி, தொடர்ச்சியாக தமிழர் விரோத இனவெறி அரசியலை செய்யும் மோடி சர்க்கார், கனவிலும் கூட ஆட்சி அதிகாரத்திற்கு இனியொரு போதும் வந்துவிட கூடாது என இறைவனை வேண்டுகிறேன். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தாமரைக்கு வாக்கு கேட்டு, பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்ததற்காக வெட்கப்படுகிறேன்.

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஹோலி, ராம நவமி, தசரா, மகாசிவராத்திரி, மஹாவீர் ஜெயந்தி, புத்த பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி, ஹனுமந்த் ஜெயந்தி... இதெல்லாம் ஹிந்திய சட்ட விதிகளின் படி ஒருவகையில் ஹிந்து பண்டிகைகள் தான். எனக்கு ஐயனார் குல தெய்வம்; நானும் ஹிந்து. நீ கடவுள் மறுப்பாளர்; ஆனாலும் நீ ஹிந்து. வாழ்க ஹிந்துத்துவா! வல்லபாய் படேலாலும், இராணுவத்தாலும் கட்டாயப்படுத்தி ஹிந்தியா எனும் கூட்டாட்சி நாட்டில் எங்கள் தமிழ்நாட்டை இணைத்ததையும் ரத்து செய்ய முன்வாருங்கள் வட ஹிந்தியர்களே!

பிஜேபியையோ, நரேந்திர மோடியையோ, போலி ஹிந்துத்வாவையோ பற்றி விமர்சிப்பவரெல்லாம் ஈ.வெ.ரா. ஆட்களென்றோ, இசுலாமிய ஆட்களென்றோ நினைக்கும் பக்தாள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்மீகத்தை பற்றியோ, ஆண்டவன் பற்றியோ ஏதுமறியாமல் அரைகுறை அறிவோடு, நாங்கள் ஹிந்து, நாங்கள் காவியென பெருமை பேசி குருட்டுத்தனமாக ஹிந்திய சர்க்காரின் கொள்கை முடிவுகளை ஆதரிப்பதால் யாருக்கு என்ன பயன்?

இங்கே தன்னை ஹிந்துயென வெளிக்காட்டிக்கொண்டு பெருமை பேசும் அனைத்து முட்டாள்தனமான வெறியர்களை விடவும், அதிகமான ஆன்மீக ஈடுபாடு எனக்குண்டு. அதை பற்றிய ஓரளவிற்கான தெளிவும் எனக்குண்டு. பிஜேபி என்ற கட்சி ஹிந்துத்வ கட்சி என்பதால், அவர்கள் செய்யும் அனைத்தையும் கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டுமா என்ன? போகிற போக்கை பார்த்தால், பிஜேபி மீது விமர்சனம் வைப்பவர்களெல்லாம் ஹிந்துவே இல்லையென சொல்லி விடுவார்கள் போல. நீங்கள் மட்டுமல்ல, யார் சொன்னாலும் சோ கால்டு ஹிந்து என அடையாளப்படுபவர்களில் 90% பேர் ஹிந்துக்களே இல்லை என்பதே உண்மை.

ஈரான் - மத்திய ஆசியாயென பல்வேறு பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதம் ஹிந்துவாக உருமாற்றம் பெற்றுள்ளது. இதன் ஏகபோக உரிமையாளராக, கோவில் கருவறையின் முதலாளிகளான பார்பனர்களே உள்ளனர் என்பது தெரிந்த பின்னாலும், சிந்து நதிக்கரையில் வந்தேறிய கூட்டத்தால் உருவாக்கப்பட்ட மதத்தை தூக்கி பிடிப்பது ஏன்?

”சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.”

- சிவ வாக்கியர் (14)

“கோயிலாவது ஏதடா குளங்கலாவது ஏதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே”

- சிவ வாக்கியர் (35)

”இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும்
பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான்
உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல்
சுருக்கம் அற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே!”

- சிவ வாக்கியர் (38)

”காலை மாலை நீரிலே முழுகும் அந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தி யாகுமே”

- சிவ வாக்கியர் (132)

”மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா”

- சிவ வாக்கியர் (136)

வள்ளலார் உள்பட சித்தர்கள் அனைவரும் கண்டுணர்ந்த மெய்ஞானத்தை விட இங்குள்ள ஹிந்துத்வா பேசும் அறிவுஜீவிகள் நிறையவே உணர்ந்து தெளிந்தவர்களென நினைக்கிறேன். ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

01 ஜனவரி 2017

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை இருந்தாலும், ஆன்மீக ஜோதிடத்தின் நம்பிக்கையாளனாக சித்திரை ஒன்றாம் தேதியை தான் தமிழ் புத்தாண்டாக கொண்டாட தோன்றுகிறது. தையோ, சித்திரையோ, அதுவொரு தேசிய இனத்தின் புத்தாண்டாக மட்டுமே அமைகிறது. ஆனால் உலகமயமாக்கப்பட்ட சமகால சூழலில், இயேசுவின் பிறப்பை மையப்படுத்திய ஆங்கில நாட்காட்டியின் ஜனவரி ஒன்றாம் தேதியையும் இங்கு யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை என்பதே எதார்த்தம். மேலும், உலகின் அனைத்துதரப்பட்ட மக்களின் தொடர்புமொழியாகவும், இரண்டாம் அலுவல் மொழியாகவும் மாறிப்போன ஆங்கில புத்தாண்டை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும் முடியாது.

பச்சையப்பா கல்லூரியில் 1921ம் ஆண்டு எங்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த மறைமலை அடிகளாரின் தலைமையிலான திரு.வி.க. உள்ளிட்ட குழுவினரின் ஆய்வுமுடிவின் படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டை உறுதி செய்தனர். அவர்களது ஆய்வின் படி, இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னதாகவே வள்ளுவர் பிறந்தார் என்பதை வைத்து தனித்துவ நாட்காட்டியும் உருவாக்கப்பட்டது. அதன் தொட்ர்ச்சியாக தமிழக அரசு கி.பி.1972ம் ஆண்டில் திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று, அரசிதழிலும் வெளியிட்டு தமிழக அரசு அலுவலகங்களில் திருவள்ளுவர் ஆண்டு என்ற தமிழர்களுக்கான பொது ஆண்டுமுறையை கடைபிடித்தும் வருகிறது.

இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்னரே பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாட்டு கூறுகளோடு வாழ்ந்த தமிழ் பேரினத்தின் நீட்சியான சமகால தமிழனாக, கி.பி. 2017ம் ஆண்டை மனமகிழ்வோடு வரவேற்கிறேன். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற முன்னோரின் வாக்குப்படி அனைத்து உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்