29 ஜனவரி 2017

அமெரிக்கர் எனும் வந்தேறிகள்!

அமெரிக்கா என்ற வந்தேறிகளின் நாட்டில் அகதிகளாக யாரும் வரக்கூடாதென்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக ஈரான், ஈராக் போன்ற இசுலாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு குடிபெயரவே கூடாதென சொல்லிருப்பது முட்டாள்தனமானது. அமெரிக்காவின் மண்ணின் மைந்தர்கள் சிவப்பிந்தியர்கள் என்ற ஆதித்தமிழர்களே ஆகும். இந்த சிவப்பிந்தியர்களின் உடலமைப்பு, கலாச்சாரம், பண்பாட்டு கூறுகள், இசை, விளையாட்டு, வீரம் போன்ற பாரம்பரிய அம்சங்கள் அனைத்தும் தமிழர்களை ஒத்தே அமைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விசயம் தான். அப்படிப்பட்ட மண்ணின் மைந்தர்களான அவர்களை கொன்றொழித்து, வந்தேறிகள் ஆக்கிரமித்த அமெரிக்காவை விட்டு டொனால்ட் ட்ரம்ப் போன்றோர் தான் வெளியேற வேண்டும். ஏனெனில், ட்ரம்பின் தந்தையே வந்தேறி தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக