தந்தி டிவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தந்தி டிவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

தந்தி டிவி ஒருங்கிணைத்த கருணா அம்மானின் நேர்காணலில், தலைவர் வே.பிரபாகரனை அவர் புகழ்ந்து பேசியது மனதுக்கு நிறைவாக இருந்தது. வீரம் என்ற குணத்தை எதிரிகள் மட்டுமல்ல துரோகிகளும் மெச்சுவார்கள் என்பதற்கு கருணாவின் பேச்சு ஓர் உதாரணம்.

#

உண்மையான புரட்சி திலகம், சரத்குமார் கிடையாது; கல்யாண் ஜூவல்லர்ஸ் பிரபு தான்!

#

பிரபு - பாரதி - குமார் என்கவுண்டரை ஞாபகப்படுத்துகிறது, சுசீந்திரனின் "பாயும் புலி" ட்ரைலர்.

#

துரோகிகளை தூக்கி வைத்து கொண்டாடும் நண்பர்களும், நிச்சயம் ஒருநாள் துரோகிகளாக மாறும் வாய்ப்பு உண்டு. கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்! துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரர்களின் வரலாறானது கரிகாலபெருவளத்தான், மாமன்னர் மருதுபாண்டியர்கள் முதற்கொண்டு தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் வரையிலும் உண்டு. துரோகிகளை தூரமாக கூட வைக்க கூடாது. அப்பறம் ஏன் தோள் கொடுக்க வேண்டும்? தனித்திரு.

#

புண்ணாக்கு விக்கிறவன், புடலங்காய் விக்கிறவனெல்லாம் வரலாற்று ஆய்வாளர்ன்னு சொல்லிக்கிட்டு மேதை ஆகிடுறானுங்க. எந்த சாதிக்காவது அவங்க போடுற எச்சி துண்டுக்காக ஜால்ரா அடிச்சு ஒரு வரலாறு எழுதினா, அவய்ங்க மெத்த அறிவுஜீவி ஆய்டுறாய்ங்க.

#

மழை வெள்ள பாதிப்புக்காக அரசியல்வாதி என்ற பெயரில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க வரவனுங்க, மடிப்பு கலையாத வெள்ளை சட்டை வேட்டியில தான் வரானுங்க. 'நாங்க ஓட்டு போட்டு தானே நீ வெள்ளையும் சொள்ளையுமா அலையுற?'ன்னு சாமானியன் ஒருவன், வாக்களனாக யோசிக்கும் அடுத்த கணமே அரசியல்வாதி அம்மணமாக்கப்படுகிறான்.

#

தன் உழைப்பில் சேர்த்த பணத்தை கொண்டு நிவாரணமாக அனுப்பிய பொருட்களிலெல்லாம், ஊர் பணத்தில் கொள்ளையடிப்பவர்களின் படத்தை ஒட்டி வினியோகம் செய்யும் இழிபிறவிகளை எதை கொண்டு அடிப்பது? எச்சில் இலைகளை பொறுக்கும் தெரு நாய்களே, இனியாவது திருந்துங்கள்.

#

நான் பிறந்த என் சாதியின் மக்கள்தொகையை மனதில் வைத்து ஆண்ட சாதி பெருமை பேசிய எந்த சாதித்தலைவனும் இந்த மழை வெள்ளத்திற்காக நேரடியாக களத்திற்கு வந்து நிவாரணம் செய்த மாதிரி தெரியவில்லை. வாழும் தேவர், வீர மருதுன்னு அடைமொழி வைத்துகொண்டால் மட்டும் போதாது. வீரத்தையும், விவேகத்தையும், கொடைத்தன்மையையும் இதுமாதிரியான சூழலில் வெளிக்காட்டணும்.

#

வரிப்பணத்தையும், அரசாங்கத்தையும் பற்றி வெளிப்படையாக விமர்சித்த கமல்ஹாசனோட அடுத்த படம், அநேகமாக போயஸ்கார்டன்ல தான் ரிலீஸ்ன்னு நினைக்கிறேன்.

#

அரசாங்கத்தை பற்றி கமல் சொன்னதுல ஒரு வார்த்தைகூட தவறில்லை. ஆனால் அதையும் ஜெ சார்பாக ஓபிஎஸ் காட்டமான தொனியில் பதில் அறிக்கை விட்டிருக்கிறார்.

#

மழை வெள்ள பாதிப்பில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் தருகிறது மத்திய அரசு.
நரேந்திர மோடிக்கு நன்றி!


#

பொம்பள புள்ளைங்க லெக்கின்ஸ் போடுவதை பற்றி விமர்சனம் பண்ணுங்க, தப்பே இல்ல. அதுக்கு முன்னாடி, ஜட்டி தெரியிற மாதிரி லோஹிப் பேண்ட் போடுற ஆம்பள பசங்களையும் திருத்துங்கன்னு தான் சொல்றோம்.

04 டிசம்பர் 2014

தந்தி டிவியின் அதிமுக ஆதரவு!

அ.தி.மு.க.வுக்கு வக்காலத்து வாங்கி ஊடகம் நடத்த கூடாது! - ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., தி.மு.க.
தந்திடிவி விவாதத்தில் ரெஙக்ராஜ் பாண்டேவிடம் ஜெ.அன்பழகன் பின்னி பெடலெடுக்கிறார்.
J Anbazhagan Mla

பொதுவாக நேர்காணல், விவாதம் போன்ற நிகழ்ச்சிகளில் Rangaraj Pandeyவை எனக்கு பிடிக்கும். ஆனால் Thanthi TVயின் அ.தி.மு.க. ஆதரவு கொள்கைக்காக ரெங்கராஜ் பாண்டேவும் சுயமிழந்து தடம் மாறுகிறாரே என்ற வருத்தமும் என்னுள் உண்டு. எந்த சார்புமின்றி நடுநிலையின் பக்கம் மாறுங்க பாஸூ!

13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

27 மார்ச் 2014

ஊடக சாதிவெறி!


தந்தி டிவி முழுக்க முழுக்க தனது நாடார் சாதி பாசத்தை மட்டுமே அடிக்கடி வெளிக்காட்டி கொண்டே இருக்கின்றது. விகடன், தி ஹிந்து, தினமலர் போன்ற பத்திரிக்கைகள் தன்னுடைய பார்பனீய சாதி பாசத்தையே காட்டுகின்றது. ஊடகங்கள் சாதிய நீரோட்டத்தில் கலக்க ஆரம்பித்தால், சமுதாயம் தனித்தனியாக பிரித்தாளப்படும்.

அப்போது மிகப்பெரிய சமூகங்கள் பிரிவை வாஞ்சையோடு உபசரித்து, தமிழர் யென்ற ஒற்றுமையை சீர்குலைக்கும் என்ற எதார்த்தம புரிந்துகொள்ளப்படாத வரை இங்கே சமத்துவம் என்பது எட்டாக்கனியாகவே இருக்கும். பெயரளவில் சமத்துவ மக்கள் கட்சி யென்று வைத்துக்கொண்டு நாடார் சாதிக்கான அடையாள கட்சியாக காட்சிப்படுத்தப்படும் சரத்குமாரின் நிலைமையே அனைத்து தலைவர்களும் கையாளாக்கூடும். அப்போது சாதீயம் அனைத்தையும் தீர்மானிக்கும். திராவிடத்தை முற்றிலுமாக அழிக்க முடியாதபோதே, சாதீயம் தலைதூக்கிவிட்டது. இனி திராவிடம் போலவே சாதீயமும் இன்னும் சிலபல ஆண்டுகள் தமிழகத்தை ஆட்டுவிக்கும். அதுவரை ஏற்ற தாழ்வுகளும் தொடரும்.

ஏனெனில், கல்வி முதற்கொண்டு வேலைவாய்ப்பு வரை எல்லாமும் சாதிபடிநிலைகளில் அளவீடு கொள்ளும் பழையமுறை இன்றைக்கும் கூட மாற்றமடையாதவரை எல்லாமும் இங்கே இனி தலைகீழ் தான்!
- இரா.ச.இமலாதித்தன்