பட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 செப்டம்பர் 2017

அகமுடையாருக்கு பட்டம் தான் முக்கியமா?





முக்குலத்தோர் என்றோ முதலியார் என்றோ எந்தவொரு சாதியும் இல்லாத போது, முப்பது வருடங்களுக்கும் மேலாக அதை மட்டுமே வைத்து அரசியலுக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டிருந்த அகமுடையார்களெல்லாம், எப்போது இந்த பட்டங்களை கடந்து அகமுடையார்களாக ஒன்றிணைவார்களென உண்மை உணர்ந்த உணர்வாளர்கள் பலரும் ஏங்கிய நாட்கள் உண்டு. இது எவ்வளவு கடினமானது என்ற எதார்த்தத்தை அறிந்து எத்தனையோ பேர் 'அகமுடையார்' என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி வெவ்வேறு வழிகளில் அந்த இலக்கை அடையும் நேரத்தில் சிலர் செய்யும் குழப்பங்கள் கோபத்தை மட்டுமே வர வைக்கிறது.


என்னளவில் எனக்கு தந்தை வழியில் தேவர் பட்டம்; தாய் வழியில் பிள்ளை பட்டம். இந்த இரு பட்டங்களை மட்டுமே எல்லா இடங்களிலும் தூக்கி கொண்டிருந்தால் அகமுடையார் என்ற அடையாளத்தோடு எல்லாவற்றிலும் இயங்க முடியாது. ஆனால் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தன் சுயபெருமை பேசுவதற்காக மட்டுமே தனிப்பட்ட பட்டங்களை முன்னிறுத்தி அகமுடையார் என்ற எழுச்சியை சிலர் பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்.

வெண்ணெய் நிரம்பும் நேரத்தில் பானையை உடைத்த கதை போல சிலர் செய்யும் செய்கைகளால், இனி அகமுடையார் சார்ந்த அனைத்து பதிவுகளிலும் தேவன்டா என்றோ, தேவர் என்ற என் பட்டத்தையோ கீழே பதியலாமென இருக்கிறேன். சொந்த வரலாற்றையும் தேடத்தெரியாது. அகமுடையார் யாரென்ற வரலாறும் தெரியாது. தற்போதைய தேவை எதுவென்றும் தெரியாது. ஒற்றுமைக்கான வழியும் தெரியாது. ஆனால், சாதிப்பெயரான அகமுடையார் என்பதை கூட சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக்கொண்டு பட்டத்தை மட்டுமே தூக்கி சுமக்கும் இந்த கூட்டத்தை நம்பி ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்

#Mukkulathor #Mudaliar #Thevar #Agamudayar


பட்டத்தை மட்டுமே தூக்கி பிடிக்கும் அகமுடையார்கள், இந்த பறையர் இனக்குழுவை சேர்ந்த ஒருவரின் பதிவுக்கு பதில் சொன்னால் மகிழ்ச்சி. போற போக்கை பார்த்தால், அகமுடையார் என்ற இனக்குழுவே வரலாற்றில் இல்லைன்னு சொல்லிடுவாய்ங்க போல.

கோட்டைப்பற்று தேவன்டா! :)

(லிங் கீழே கமென்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.)

10 செப்டம்பர் 2015

அகமுடையார் பட்டங்களில் சில!

அகமுடையார் வரலாறு சொன்னால், மற்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அன்று முதல் இன்று வரை எங்களுக்கு புதுப்புது பெயர் கிடையாது பட்டம் தான் வேற வேற. என்றைக்குமே நாங்க அகம்படியர்களே!

தேவர்
சேர்வை
முதலியார்
பிள்ளை
உடையார்
மணியக்காரர்
அதிகாரி
தந்துடையார்
மாவடியார்
பல்லவராயர்
வாணாதிராயர்
நாட்டார்

அம்பலம்
நாயக்கர்

இது போன்ற பட்டங்கள் பல உண்டு. ஆனாலும், என்றைக்குமே அகம்படியர்கள் போர்குடியினரே.

போர்க்குடியில் பிறந்த அனைவருமே ஷத்ரியர்கள் தான். இதுல நாங்க மட்டும் தான் வெள்ளைக்காரனிடமும், பார்பானிடமும் அக்மார்க் சான்றிதழ் வாங்கிய ஷத்ரியர்கள் என்று யாரும் அந்த வீரத்தை குத்தகைக்கு எடுக்க முடியாது.
ஷத்ரிய குல அகம்படியர்கள்! என்று அரசாங்கத்திடம் பெயர் மாற்றம் செய்தால் அந்த கணக்கும் சரியாயிடும்.

11 ஜூன் 2015

தமிழகத்தில் அகமுடையார் ஒரு பார்வை

"வீட்டுக்கு ஓர் அவரைக்கொடியும், நாட்டுக்கு ஓர் அகமுடையார் குடியும் போதும்!" - முதுமொழி

வீட்டில் அவரைச்செடி விரிந்து படர்ந்து வளருமோ அதுபோலவே அகமுடையார் குடியும் நாடெங்கும் செறிந்து பெரும்பான்மையாக வாழ்வார்கள் என்று பொருள் படுகிறது. உண்மையாகவே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனக்குழு பூர்வகுடியாகவே இருக்கின்றது. தென் தமிழகம், டெல்டா, வடதமிழகம் என அனைத்து இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

Surnames:-

வட (பல்லவம்)தமிழகம்: முதலியார், பிள்ளை, உடையார்.
திருச்சியை உள்ளிட்ட (சோழம்) டெல்டா: தேவர், பிள்ளை, தேசிகர், பல்லவராயர்.
தென் (பாண்டியம்) தமிழகம்: சேர்வை, தேவர், பிள்ளை, மணியக்காரர், அதிகாரி.
கொங்கு மண்டலத்தில் அகமுடையார் அனைவருக்கும் பெரும்பான்மையாக தேவர் பட்டமே.

உடையார், பிள்ளை, நாயக்கர், பல்லவராயர், வானவராயன், வல்லவராயன், நாட்டார், மணியக்காரர், தேசிகர், அதிகாரி என 'அகமுடையார்' இனக்குழுவுக்கு தமிழகமெங்கும் பலப் பட்டப்பெயர்கள் (SurNames) இருந்தாலும், சேர்வை, முதலியார், தேவர் என்ற இந்த முப்பெரும் பட்டங்கள் தான் பெரும்பான்மையாக இருக்கின்றது.

திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளில் வீதிகளுக்கே உதாரணத்திற்கு ”சேர்வை மாணிக்க முதலியார் தெரு” என்று பல இருக்கின்றன. பல்லவராயர் பட்டப்பெயர்களோடு திருச்சி திருவெறும்பூருக்கு அருகிலுள்ள சுற்று வட்டார பகுதிகளில் அகமுடையார்கள் வசிக்கின்றனர். நாகையின் கல்வி தந்தை வலிவலம் தேசிகர் பெயரிலேயே கல்வி நிறுவனங்கள் உண்டு. நாட்டார் பட்டம், பேராவூரணி பட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ”புண்ணியரசு நாட்டு” அகமுடையார்களுக்கு உண்டு.

திமுகவின் முன்னாள் அமைச்சரான திரு பொன்முடியின் பட்டமும் உடையார் தான். திருக்கோவிலூர் என்ற நடுநாட்டை சுற்றியுள்ள அகமுடையார்களுக்கு உடையார் பட்டம் பெருமளவுக்கு உண்டு. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திரு கே.வி.தங்கபாலுவின் பட்டமும் கூட அகமுடைய நாயக்கர் தான். தஞ்சைக்கு அருகிலுள்ள கரந்தை தமிழ்வேள் உமாமகேசுவரன் பிள்ளை மட்டும் இல்லையென்றால் இன்றைக்கு அகமுடையார் அனைவரும் ஃபார்வேர்ட் கம்யூனியிட்டிலேயே இருந்திருப்போம். அவரின் முயற்சியால் தான் இன்று அகமுடையார்கள் பிசி பட்டியலில் இருக்கின்றனர். இல்லையென்றால் இந்நேரம் பார்பனர்களோடு முட்டி மோதி கொண்டிருந்திருக்க வேண்டும். பட்டங்கள் இங்கு பல உண்டு. ஆனால் அனைவரும் அகமுடையார் என்ற புரிதலும் வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

பட்டம்: தேவர்
பிரிவு: பதினெட்டு கோட்டை பற்று
இனக்குழு: அகமுடையார்