29 செப்டம்பர் 2017

அகமுடையாருக்கு பட்டம் தான் முக்கியமா?





முக்குலத்தோர் என்றோ முதலியார் என்றோ எந்தவொரு சாதியும் இல்லாத போது, முப்பது வருடங்களுக்கும் மேலாக அதை மட்டுமே வைத்து அரசியலுக்காக பகடைக்காய் ஆக்கப்பட்டிருந்த அகமுடையார்களெல்லாம், எப்போது இந்த பட்டங்களை கடந்து அகமுடையார்களாக ஒன்றிணைவார்களென உண்மை உணர்ந்த உணர்வாளர்கள் பலரும் ஏங்கிய நாட்கள் உண்டு. இது எவ்வளவு கடினமானது என்ற எதார்த்தத்தை அறிந்து எத்தனையோ பேர் 'அகமுடையார்' என்ற ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தி வெவ்வேறு வழிகளில் அந்த இலக்கை அடையும் நேரத்தில் சிலர் செய்யும் குழப்பங்கள் கோபத்தை மட்டுமே வர வைக்கிறது.


என்னளவில் எனக்கு தந்தை வழியில் தேவர் பட்டம்; தாய் வழியில் பிள்ளை பட்டம். இந்த இரு பட்டங்களை மட்டுமே எல்லா இடங்களிலும் தூக்கி கொண்டிருந்தால் அகமுடையார் என்ற அடையாளத்தோடு எல்லாவற்றிலும் இயங்க முடியாது. ஆனால் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல், தன் சுயபெருமை பேசுவதற்காக மட்டுமே தனிப்பட்ட பட்டங்களை முன்னிறுத்தி அகமுடையார் என்ற எழுச்சியை சிலர் பாழாக்கி கொண்டிருக்கிறார்கள்.

வெண்ணெய் நிரம்பும் நேரத்தில் பானையை உடைத்த கதை போல சிலர் செய்யும் செய்கைகளால், இனி அகமுடையார் சார்ந்த அனைத்து பதிவுகளிலும் தேவன்டா என்றோ, தேவர் என்ற என் பட்டத்தையோ கீழே பதியலாமென இருக்கிறேன். சொந்த வரலாற்றையும் தேடத்தெரியாது. அகமுடையார் யாரென்ற வரலாறும் தெரியாது. தற்போதைய தேவை எதுவென்றும் தெரியாது. ஒற்றுமைக்கான வழியும் தெரியாது. ஆனால், சாதிப்பெயரான அகமுடையார் என்பதை கூட சொல்லிக்கொள்ள வெட்கப்பட்டுக்கொண்டு பட்டத்தை மட்டுமே தூக்கி சுமக்கும் இந்த கூட்டத்தை நம்பி ஒரு மயிரையும் பிடுங்க முடியாது.

- இரா.ச. இமலாதித்தன் தேவர்

#Mukkulathor #Mudaliar #Thevar #Agamudayar


பட்டத்தை மட்டுமே தூக்கி பிடிக்கும் அகமுடையார்கள், இந்த பறையர் இனக்குழுவை சேர்ந்த ஒருவரின் பதிவுக்கு பதில் சொன்னால் மகிழ்ச்சி. போற போக்கை பார்த்தால், அகமுடையார் என்ற இனக்குழுவே வரலாற்றில் இல்லைன்னு சொல்லிடுவாய்ங்க போல.

கோட்டைப்பற்று தேவன்டா! :)

(லிங் கீழே கமென்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக