14 செப்டம்பர் 2017

மாமன்னர் மருதுபாண்டியர்கள்! - ஓர் அலசல்






புலியை அடித்த கொன்ற இடமான 'புலியடி தம்மம்',

மாமன்னர் மருதுபாண்டியரை, ஆங்கிலத்தளபதி வெல்ஷ் ஒப்பீட்டளவில் புகழும் வார்த்தையான கீழ்திசை நாடுகளின் 'நிம்ராட்',

மருதரசர்களின் நினைவுபடுத்தும் தற்போது இடமாற்றிய 'மருத மரம்',

மதுரை தெப்பக்குளக்கரையில் இக்கரைக்கும் அக்கரைக்கும் இலக்கு வைத்து தாக்கி தன்னகத்தே வரும் 'வளரி',

அனைத்தையுமே தனி ஆளாக களம்காணும் யுக்தியான 'வேட்டை',

மருதரசர்கள் வளர்த்த (குதிரையை விற்று வாங்கக்கூடிய அளவுக்கு வீரமிக்க) 'கோம்பை நாய்',

மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்களாக உருவாக்கப்பட்ட சிங்க ரதம், குதிரைப்பயணம் என்ற அனைத்துமே எவ்வித தொடர்புமில்லாமல் போல இருக்கலாம். இவை அனைத்திற்குள்ளும் ஆயிரக்கணக்கான ஆண்டின் வரலாறு புதைந்திருக்கிறது என்பதை ஆய்வு நோக்கில் கவனிக்கும் போது, ஆச்சர்யத்தின் எல்லை முடிவிலியாக விரிகிறது. "இங்குள்ள அனைத்துமே தனித்தில்லை; ஒன்றோடொன்று தொடர்பிலேயே தான் இருக்கின்றன" என்ற என் எண்ணத்தை மேலும் அழுத்தமாக வலுவாக்கிக் கொண்டிருக்கிறது. காலத்தாலும், துரோகத்தாலும் அழிக்க முடியாத மிக நீண்ட வரலாறுக்கு உரிமையானவன் என்ற உண்மையை உணர்ந்த பிரமிப்பில் தேடிக்கொண்டிருக்கிறேன், தொலைத்தவற்றை...

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக