மணிரத்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிரத்னம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 மே 2015

ஓகே காதல்! ஓகே கல்யாணம்! ஓகே கண்மணி!



”ஆதித்யா வரதராஜன், தாரா காலிங்கராயர், கணபதி அங்கிள், பவானி ஆன்ட்டி...” ச்சே என்ன மாதிரியான கதை மாந்தர்கள்? இவர்கள் மட்டுமில்லாமல் இவர்களோடு வரும் இன்னும் சிலரின் சிறுச்சிறு பாத்திரங்களின் நடிப்பும் சான்சே இல்ல.மணிரத்னத்தின் ஃப்ரெஷான கதைக்களத்துடன் கூடிய திரைக்கதை, ஏ.ஆர்.ரஹ்மானின் நேர்த்தியான பின்ணனி / பாடல் இசை, பி.சி.ஸ்ரீராமின் காணொளி உருவாக்கமென எல்லாமும் நச்சுன்னு பொருந்திருக்கு. முதல்நாள் திரையரங்கில் பார்க்கும் போது என்னையும் சேர்த்து ஆக மொத்தம் பத்தே பேர் தான் இருந்தனர். எத்தனை தடவ பார்த்தாலும் அலுப்பே வராத காதல் காவியமான, ஓ காதல் கண்மணி, அடுத்த தலைமுறையினரையும் காலம் கடந்து நிச்சயம் ரசிக்க வைக்கும். என்னை வெகுவாக பாதித்த காதல் திரைப்படங்களில் மெளனராகம், இயற்கை, சங்கமம், அலைபாயுதே, கல்லூரி, நீதானே என் பொன்வசந்தம் போன்றவற்றையெல்லாம் விட, இந்த ஓ காதல் கண்மணி ஒரு படி மேலாகவே மனதை கவர்கிறது. ரஹ்மான், மணிரத்னம், ஸ்ரீராம் என அனைவருமே வயதில் நாற்பத்தந்தை கடந்த பின்னாலும், இன்னமும் இளமையை கொட்டி கொடுப்பதில் தான் அடங்கிருக்கிறது இவர்களின் வெற்றியின் ரகசியம்!

- இரா.ச.இமலாதித்தன்

18 ஏப்ரல் 2015

ஓ காதல் கண்மணி - ஓகே!

வழக்கம் போல ரயிலும், மழையும், சின்ன சின்ன வார்த்தைகளோடு வசனங்களும் வந்து போக, ”ஓ காதல் கண்மணி”யும் மணிரத்னத்தின் மற்றுமொரு சாயல் தான். ஆனால், மெளனராகம், அலை பாயுதே முதல் ஆய்த எழுத்து, கடலென அவர் சொன்ன காதலில் இது புதுசு. ஐடி துறையின் லிவிங் டுகதர் வாழ்க்கையை பதிய பரிமாணத்தில் பதிவு செய்து, பார்பன பிண்ணனியோடு கதையை நகர்த்தியிருப்பது அவரின் நேர்மையுடன் கூடிய நேர்த்தியை காட்டுகிறது. இப்போதுள்ள பெருநகரத்து தலைமுறையினருக்கு கல்யாணம் போன்ற சடங்கு சம்பிரதாயங்களெல்லாம் கசக்கிறது என்பதை படம் நெடுகிலும் சொல்லிருந்தாலும் கூட, மேற்கத்திய மேகத்தால் நம் தாயகத்தில் சில கலச்சார சீர்கேடு வந்தாலும் அதை நம் மூத்தோர் வாழ்வியலோடு ஒப்பிடும்போது, தவறென இளம் தலைமுறை புரிந்து கொண்டு நம் கலச்சார பாரம்பரிய வேர்களோடு விழுதாய் இணைவார்கள் என்பதை திரைக்கதையாக்கி இருக்கிறார் மணிரத்னம். படம் புதுமையா, இளமையா இருக்கு. ராவணன், கடல் என எதிர்பார்ப்பை நிறைவு செய்ய தவறியதற்கு பின்னால், நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்திற்கு ஓகே சொல்லிருக்கும் இந்த ஓ காதல் கண்மணி, நம் மண்ணின் முந்தைய, தற்போதைய கலச்சார இடைவெளியை வெளிச்சம் போட்டு திரையில் காட்டிருக்கிறது. ரஹ்மான், பிசி ஸ்ரீராம், வைரமுத்து என பெரிய ஜாம்பவான்களின் கூட்டணில் ஓ காதல் கண்மணி மணிரத்னத்தின் ஹிட் வரிசையில் சேரும் என நினைக்கிறேன். படம் எனக்கு பிடிச்சிருக்கு. (85/100) கண்டிப்பா, படத்தை தியேட்டர்ல போய் பார்க்கலாம்.

- இரா.ச.இமலாதித்தன்