பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாரதியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 டிசம்பர் 2015

என் பார்வையில் இந்த வாரம்!

மானை கொன்னா என்ன? மனுசனை கொன்னா என்ன? எல்லா கானும் நிதியை வைத்து நீதியை தான் தினமும் கொல்றாங்க.

‪#‎சல்மான்கான்‬

#

போர்குடிகளுக்கு அடையாளமான முறுக்கிய மீசையின் அழகும் கம்பீரமும், என் பாட்டன் பாரதிக்கும் கச்சிதமாய் பொருந்தியது என்பதுதான் தமிழின் வீரமிகு அடையாளம்! (டிச 11)

#

ஆக்கிரமிப்புகளை குடிசைகளிலிருந்து அகற்ற துவங்கி இருக்கிறீர்கள். துணிச்சலான விசயம். ஆனால், இதை குடிசைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள குடிகாரர்களின் கல்லூரிகளையும் அகற்றுங்கள்! கூடவே, உங்களது ஆணைப்படியோ அல்லது உங்களது உத்தரவுப்படியோ குளம் குட்டைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அரசு அலுவலகங்களையும் அப்புறப்படுத்துங்கள்.

செய்வீர்களா?!

#



குத்திக்காட்டுற நேரமா இது?

ஒட்டுமொத்த ஹிந்துக்களுமா, முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு போன்னு சொன்னாங்க? முஸ்லீம் ஃப்ரெண்ட் இல்லாத ஹிந்துவோ, ஹிந்து ஃப்ரெண்ட் இல்லாத முஸ்லீமோ இங்கே கிடையாது. மாமன் மச்சான்களாகத்தான் நாங்கள் (ஹிந்து + முஸ்லீம்) பழகி வருகிறோம். இதெல்லாம் தேவையில்லாத ஒப்பீடு.

#

தமுமுக, TNTJ, PFI போன்ற இசுலாமிய அமைப்புகளின் அற்பணிப்பில் சற்றும் குறைந்தது இல்லை, RSS போன்ற ஹிந்து அமைப்புகளின் சேவையும்! ஹிந்து அமைப்புகளின் பெயர்களை சொன்னால் தமிழ் தேசியமோ, திராவிடமோ, கம்யூனிசமோ, பெரியாரியமோ, நடுநிலையோ கேள்விக்கு உள்ளாக்கப்படுமென்ற நினைப்பை முதலில் கைவிடுங்கள்.
‪#‎ChennaiRains‬

#

ஊருக்கே சோறு போட்ட சோழநாட்டுக்கும் சோதனையா? எங்க டெல்டா பகுதிகளில் தொடர்ச்சியாக கொட்டி தீர்க்கிறது மழை!

#

கேமரா மேன்கள், பாதுகாப்பு வீரர்கள், படைசூழ ஆட்கள், புதுப்புது உடைகள் என்ற எதுவுமே இல்லாமல் வெள்ள நிவாரண உதவிகளை செய்துவரும் இளைஞர்களின் சேவைக்கு பெயர் தான் உண்மையான 'நமக்கு நாமே'!

11 செப்டம்பர் 2015

மறக்க முடியாத செப்டம்பர் 11 !



அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?

- இரா.ச.இமலாதித்தன்

’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 94ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

சாதியால் அவன் பார்பான் தான்; அகண்ட பிரபஞ்சத்தை தமிழறிவால் பார்பான் தான். தேசியம் - புரட்சி - ஆன்மீகம் - இலக்கியம் என பல பரிமாணங்களில் முத்திரை பதித்த எங்கள் சுப்ரமணிய பாரதியை போற்றுவோம்.

11 செப்டம்பர் 2014

செப்டம்பர் 11 - மறக்க முடியுமா?

அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?

- இரா.ச.இமலாதித்தன்

’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 93ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!