11 செப்டம்பர் 2015

மறக்க முடியாத செப்டம்பர் 11 !



அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?

- இரா.ச.இமலாதித்தன்

’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 94ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

சாதியால் அவன் பார்பான் தான்; அகண்ட பிரபஞ்சத்தை தமிழறிவால் பார்பான் தான். தேசியம் - புரட்சி - ஆன்மீகம் - இலக்கியம் என பல பரிமாணங்களில் முத்திரை பதித்த எங்கள் சுப்ரமணிய பாரதியை போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக