30 ஜனவரி 2013

காவல்துறை யாருடைய நண்பன்?


எங்க நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றியது தமிழக அரசின் அடியாட்களான காவல்துறை!

அணைய போற விளக்கு ரொம்ம்ப பிரகாசமா எரியும்ன்னு சொல்லுவாங்க. ல்லாவே எரியு, போறோக்கை பார்த்ால், எம்பி எலக்சன்லியை அணைச்சிடுவங்கன்னு நினைக்கிறேன். மிய அடத் ட்டன்ற எலக்சன்ல அணைச்சுடுவங்கன்னு நினைக்கிறேன்.


சில வருடங்களுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில், தேவர் இனத்தை சார்ந்த மாணவனை நூறு பேர் கொண்ட ரவுடி கும்பல், கல்லூரி வாசலிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்திய போது கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போவரைக்கும் திருட்டு விசிடில விற்பனை செய்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் காவல்துறை, தியேட்டருக்கு தன்னோட காசை கொடுத்து படம் பார்க்க வந்தவனை அடிச்சு விரட்டுறதுக்கு பேருதான் வீரமா?

இப்படி அடியாட்கள் மாதிரி ஓட்டுபோட்ட / ஓட்டு போடப்போகும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதற்குதான் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தருதா? எங்க வரியில தானே அந்த சம்பளம் உங்களுக்கு கிடைக்குது. அதே வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் பணத்தால், காவலர் குடியிருப்பு, அதுஇதுன்னு எல்லாவற்றுக்கும் சலுகைன்னு பேருல சுகபோகத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற நீங்க தானே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அடியாட்கள் மாதிரி செயல்படுறதுதுறது நியாயமா?

காவல்துறை உங்கள் நண்பன்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி நடக்கவும் பழகிக்கணும்.

மதம் என்ன ஊறுகாயா?



"நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சிகள் சில நினைப்பதில்லை. என் தந்தை, தேச விடுதலைக்காக பாடுபட்டவர். எனினும், என்னை இந்தியாவிலிருந்து விரட்டி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட சிலர் துடிக்கின்றனர்'
-
ஷாருக் கான்


இப்படி அறிக்கை விடுறதுனால, பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீது, "இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என, ஷாருக் உணர்ந்தால், பாகிஸ்தான் வந்து விடட்டும்; தேவையான, பாதுகாப்பு வழங்கப்படும்' என அவன் பதிலுக்கு அறிக்கை விடுறான்.

போதாகுறைக்கு,
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக்கும் "ஷாருக் கான் இந்திய குடிமகன்; அவருக்கு சக இந்தியர்கள் போலவே மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதில் எந்த குறைவும் இல்லாத வகையில், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும், ஷாருக்கை தங்கள் நாட்டினர் போலவே கருத வேண்டும்" ன்னு அறிவுரை சொல்றாப்ள.

தேவைப்படுறப்ப மட்டும், சாதி - மதத்தை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிற விசயத்துல
கருணாநிதி மாதிரியே ஷாருக்கானும் இருக்காப்ள. நல்லா வருவீங்க. எங்களுக்கு, சாருக்கான் - சல்மான்கான் - சயித் அலிகான் - ஆர்யா - மும்தாஜ் - அமீர் - ஷாம் ன்னு எல்லாருமே ஒன்னுதான். நாங்க படத்தை படமா மட்டும்தான் பார்க்கிறோம். அதுலேயும் உங்க மத வெறியை சேர்க்க வச்சிடாதீங்க. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சில விசயத்துல வேறுபட்டிருந்தாலும் எங்களுக்கு கமல்ஹாசனும் - வைரமுத்துவும் - இளையராஜாவும் ஒன்னுதேன்! கலைத்துறையில் பார்ப்பன - ஷத்ரிய - சூத்திர வர்ணாசிரமம் எல்லாம் கிடையாது.