சித்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 டிசம்பர் 2017

இராமதேவரும் - முகமது நபியும்!

முகமது நபிகளை புகழ்ந்து கொண்டே சித்தர்களை தவறாக விமர்சிக்கும் எண்ணமுள்ளவர்கள் சித்தர்களில் ஒருவரான இராமதேவரின் வரலாற்றை தேடி படித்து உண்மை உணரலாம். எங்கள் நாகப்பட்டினத்திலிருந்து மெக்கா சென்ற மகான் இவர். யாகோபுவாக சிலகாலம் வாழ்ந்து பின்னாட்களில் இராமதேவராகவே அழகர்மலையில் ஜீவசமாதி ஆகிருக்கிறார்.
(நாகப்பட்டினம் - இராமதேவர் - காசி - சட்டநாதர் - மெக்கா - யாகோபு - முகமது நபி - அழகர்மலை...)

08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

11 அக்டோபர் 2017

சித்தர் குணங்குடியார்!




சித்தர்களில் ஒருவரான 'குணங்குடி மஸ்தான் சாகிபு'டைய எழுத்துகளும் - கருத்துகளும் ஆன்மீகத்தில் நமக்கு வேறொரு பரிமாணத்தை காட்டும்.

09 செப்டம்பர் 2017

மகான் சுந்தரானந்த சித்தர் குருபூஜை விழா!





(09.09.2017*)

(*ஆண்டுதோறும் தேதி மாற்றத்திற்குட்பட்டது)

பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை

சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர்மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

13 ஜூலை 2017

மகான் சுந்தரானந்தர் சித்தர்!





பிறப்பு: ஆவணி - ரேவதி / ஆவணி மாதம், ரேவதி நட்சத்திரம் (மூன்றாம் பாதம்)
குலம்: அகமுடையார்
குரு: சட்டை முனி
ஜீவ சமாதி: மதுரை


சுந்தரானந்தர் இயற்றிய சில நூல்கள்:

சுந்தரானந்தர் வாக்கிய சூத்திரம்
சுந்தரானந்தர் சோதிட காவியம்
சுந்தரானந்தர் வைத்திய திரட்டு
சுந்தரானந்தர் விஷ நிஷவாணி
சுந்தரானந்தர் கேசரி
சுந்தரானந்தர் மூப்பு
சுந்தரானந்தர் தண்டகம்
சுந்தரானந்தர் காவியம்
சுந்தரானந்தர் சுத்த ஞானம்
சுந்தரானந்தர் தீட்சா விதி
சுந்தரானந்தர் பூசா விதி
சுந்தரானந்தர் அதிசய காரணம்
சுந்தரானந்தர் சிவயோக ஞானம்

'போகர் 7000' என்ற நூலில் சுந்தரானந்தர் பற்றி போகர் குறிப்பிடபட்டுள்ள சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை;

பாரினிலே யின்னமொரு மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனா னந்தர்தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த நூலில்தாமும் வப்பனே #அகமுடையர் என்னலாகும்
சூரியன்போல் தலைமுறைகள் இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே (5721)

பிறந்தாரே டமரகர் யாரென்றாக்கால் பேரான சுந்தரனார் மைந்தனப்பா
இறந்ததொரு சுந்தரர்க்கு மைந்தனப்பா எழிலான பிள்ளையது ரெண்டாம்பிள்ளை
துறந்ததொரு ஞானியப்பா சைவஞானி சுத்தமுள்ள #வீராதி வீரனப்பா
மறந்ததொரு மார்க்கமெல்லாம் மாந்திரீகத்தால் மகத்தான புத்தியினால் அறிந்தசித்தே (5919)

சித்தான யின்னமொரு மகிமைசொல்வேன் சீர்பாலா புண்ணியனே பகலக்கேளிர்
முத்தான ஞானியிலும் உயர்ந்தஞானி முனையான சுந்தரனார் சித்துதாமும்
புத்தியுள்ள பூபாலன் தான்பிறந்த புகழான மாதமது யாதென்றாக்கால்
சுத்தமுள்ள #ஆவணியாந் திங்களப்பா சுடரான சுந்தரனார் பிறந்தார்தானே (5920)

தானான #ரேவதியாம் மூன்றாங்காலாம் தண்மையுடன் பிறந்ததொரு நாளுமாச்சு
கோனான சுந்தரனார் வுளவுகேட்டால் கொற்றவனே #கிக்கிந்தர் மலையினுச்சி
தேனான #நவகண்ட ரிஷியார்தம்மின் சிறப்பாக யவர்தமக்கு #பேரனாகும்
மானான மகத்துவங்கள் உள்ளசித்து மண்டலத்தில் சிவஞான சித்துபாரே (5921)

பத்தான மகிமையது என்னசொல்வேன் பாங்கான புலிப்பாணி பாலாகேளிர்
செத்துமே சாகாமல் காயங்கொண்டு சேனைநெடுங் காலமது வரையிலப்பா
முத்தான மோட்சவழி பெறுவதற்கு முத்தான பத்துமகா ரிஷியார்தாமும்
சுத்தமுடன் #கிரேதாயி னுகத்திலப்பா சுந்தரனே தவசிருந்து சித்துபாரே (6907)

சுந்தரானந்தர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டர் என்றும், தனது குருவான சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது. இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப் படுகிறது. போகர் தனது நூல்களில் ஒன்றான 'போகர் - 7000' நூலில் பல இடங்களில் சுந்தரானந்தரை பற்றி குறிப்பிடுகிறார். வீராதி வீரனென்றும், அழகானவரென்றும் சுந்தரானந்தரை பற்றி இந்நூலில் போகர் புகழ்ந்து பேசுகிறார்.

மேலும், இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட மகரிஷியின் பேரன் என்றும் போகர் குறிப்பிடுகிறார். தோற்றத்தின் காரணமாக காரணப்பெயராக விளங்கிய சுந்தரானந்த சித்தருக்கு வல்லப சித்தர் என்ற பெயருமுண்டு. இவர் பதின்மூன்றுக்கும் அதிகமான நூல்களையும், வேளாண்மை சார்ந்த சில நுணுக்கமான விஷயங்களையும் ஆருடங்களையும் இயற்றியுள்ளார். பதினெண் சித்தர்களில் ஒருவரான சுந்தரானந்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனி சந்நிதி அமைந்திருக்கிறது. ரேவதி நட்சத்திரத்தை உடையவர்கள், சுந்தரானந்தரை வணங்குவதால் மனமகிழ்வோடு வாழ்வின் உயர்ந்த நிலையை அடையலாம்.

- இரா.ச. இமலாதித்தன்

18 மார்ச் 2017

அரசியலில் ஆன்மிகமும் - அரசாங்கத்தில் ஊழலும்!


# அரசுத்துறை தேர்வுகளில் உள்ள ஊழல்:

டி.என்.பி.எஸ்.சி என்ற தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணைய தேர்வுக்குழுவை நிர்ணயம் செய்ததில் சட்டவிதிமீறல் இருப்பதாக கூறி, அந்த குழுவே ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கலைக்கப்பட்டது. ஆனால், மத்திய தேர்வுக்குழுவில் உள்ள ஊழலை யார் களையெடுப்பது? ஆர்.ஆர்.பி. என்ற ரயில்வே துறை தேர்விலும், தென்னக ரயில்வே வேலைவாய்ப்பிலும் வடக்கத்தியர்கள் தான் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வருகிறது. அதுபோலவே மத்திய தபால்துறை தேர்விலும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதியதிலும் கூட வடக்கத்தியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றிருப்பதாக சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சதியின் பின்னணியிலுள்ள ஊழலை யார் வெளிக்கொண்டு வருவது? சமுதாய பிரச்சனையை வெட்டவெளிச்சம் போட்டு தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களெல்லாம் ஊமையாகி போய்விட, ஆட்சி அதிகாரமோ ஊனமாகி போய்விட்டது. :(  ஏமாளிகள் தமிழர்கள் தான்!


 # உத்ரபிரதேச முதல்வர் தொகுதியின் பின்புலம்:


உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் ஏதோவொரு வகையில் தொடர்பிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ஐந்து முறை கோரக்பூரில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த கோரக்பூரில் தான் பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. கோரக்கரின் ஜீவசமாதியுள்ள அந்த மடத்தை தான், யோகி ஆதித்யாநாத் நிர்வகிக்கிறார். காகபுஜண்டரின் சீடரான கோரக்கர், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சித்தர்களின் ஜீவசமாதி பல இடங்களில் உண்டு. அதுபோலவே, ஒரே சித்தர் பல இடங்களில் ஜீவசமாதி ஆகியிருப்பதும் உண்டு. அப்படியாக, சித்த மருத்துவ ரகசியத்தை மறைபொருள் ஏதுமின்றி மிகவும் எளிமையாக தன் நூல்களில் வெளிக்கொண்டு வந்த கோரக்க சித்தரின் ஜீவசமாதி நாகையிலிருந்து ஆறு மைல் தொலைவிலுள்ள வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கிறது. இவர் எழுதிய பல நூல்களில் சந்திர ரேகை என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

கோரக்க சித்தர் ஜீவசமாதிகள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (மானாமதுரை)
4. வடக்கு பொய்கை நல்லூர் (நாகை)
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (உ.பி)