08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக