02 டிசம்பர் 2017

சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல்!




சொந்த ஊர் மக்களுக்காக குளம் வெட்டிக் கொடுத்த செய்தியைத் தமது பத்திரிகையில் ‘குளம் வெட்டிய கோ.சி.மணி’ என்ற தலைப்பில் அண்ணா பிரசுரித்த பின்னர், 'கோவிந்தசாமி சிவசுப்ரமணியன்' என்ற இவரது பெயரும் மாறிப்போனது. ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் திமுகவின் தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்தவர். கோவில் நகரமான கும்பகோணத்தை சீரமைத்த சிற்பியாக, அவர் பெயரைக் காலம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளும்.
எல்லா நாட்களிலும் அதிகாலை ஐந்து மணிக்கே தயாராகி மக்களைப் பார்ப்பதற்கு உட்கார்ந்திருப்பார். பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரன் எல்லாரையும் ஒரே மாதிரிதான் சந்திப்பார். அமைச்சராக இருந்த போதும் கூட சனி, ஞாயிறுகளில் தொகுதிக்குள் தான் இருப்பார். இதைச் சுட்டிக்காட்டி, "கோ.சி.மணியைப் போல எல்லா அமைச்சர்களும் இருந்துவிட்டால், தி.மு.க ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும்" என்று ஒருமுறை முரசொலி மாறன் அக்கட்சியின் பொதுக்குழுவில் ஆதங்கப்பட்டார்.
"மிகச்சாதாரண மனிதனும் உழைப்பையும் கொள்கைப்பிடிப்பையும் வைத்துக் கொண்டு அரசியலில் உச்சத்தைத் தொட முடியும் என்பதற்கு கடைசி தலைமுறை உதாரணம் கோ.சி.மணி" என்ற ஆனந்த விகடனும் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறது.
மேக்கிரிமங்கலத்தில் முளைத்த விருட்சமே! சோழநாட்டு அரசியலின் ஆணி வேரே! அரசியல் ஆளுமையால் ஒருங்கிணைந்த தஞ்சையை ஆண்டவரே! அகமுடையார்களின் பெருமைமிகு அடையாளமாக மாறிப்போன, சோழன் கோ.சி.மணி ஐயாவிற்கு முதலாமாண்டு நினைவேந்தல் இன்று. (திசம்பர் 02, 2016)
(நன்றி: கோமல் அன்பரசன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக